Skip to main content

Posts

Showing posts from 2020

சுவாசம்

7 - ம் வகுப்பு அறிவியல் - தாவரங்கள் மற்றும் விலங்குகள் சுவாசித்தல்

தாவரங்கள் மற்றும் விலங்குகள் சுவாசித்தல் சுவாசித்தலின் அவசியம் நாம் உண்ணும் உணவு சுவாசித்தலின் போது உயிர்வளியுடன் (ஆக்ஸிஜனுடன்) இணைந்து வேதியியல் மாற்றம் அடைந்து ஆற்றலாக வெளிப்படுகிறது சுவாசித்தலின் போது உயிர்வளி நுரையீரலுக்கு கடத்தப்பட்டு இரத்தத்துடன் கலக்கிறது உயர்வளி கலந்த இரத்தம் உடலின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று அங்குள்ள அனைத்து செல்களுக்கும் சென்றடைகிறது உயிர்வளி செல்களின் உள்ளே சென்றடையும் பொழுது சக்தி பொருள் எரிக்கப்படுகிறது. இது ஆக்சிஜனேற்றம் அடைதல் எனப்படும் ஆக்சிஜனேற்றம் அடையும் பொழுது நீர் மற்றும் கரியமில வாயு கழிவுப்பொருளாக செல்லில் இருந்து வெளியேற்றப்பட்டு உயிர்வளியால் ஆற்றல் வெளிக்கொண்டு வரப்படுகிறது. இது  சுவாசித்தல் அல்லது செல் சுவாசித்தல் எனப்படும் சுவாசித்தலின் வகைகள் 1.காற்றுச் சுவாசம் 2.காற்றில்லாச் சுவாசம் (நொதித்தல்) 1.காற்றுச் சுவாசம் உயிர்வளியின் முன்னிலையில் நடைபெறும் சுவாசம் காற்றுச் சுவாசம் எனப்படும் குளுக்கோஸ் + உயிர்வளி   —>  கரியமில வாயு + நீர் + ஆற்றல் 2.காற்றில்லாச் சுவாசம் சில நுண்ணுயி...

விசை, இயக்கம் மற்றும் ஆற்றல்

             Force, Motion and Energy       விசை, இயக்கம் மற்றும் ஆற்றல் விசை பொருளின் ஓய்வு நிலையையோ அல்லது இயக்க நிலையையோ மாற்ற அதன்மீது செயல்படுத்தப்படும் புறக்காரணி விசை எனப்படும் விசையின் சரியான வரையறையை முதன் முதலில் வகுத்தவர் சர் ஐசக் நியூட்டன் இயற்கையில் அடிப்படையான விசைகள் நான்கு உள்ளன ஈர்ப்பியல் விசை மின்காந்த விசை வலிமைமிக்க அணுக்கரு விசை வலிமை குன்றிய அணுக்கரு விசை 1.ஈர்ப்பியல் விசை அண்டத்தில் உள்ள ஏதேனும் இரு பொருள்களுக்கு இடையே செயல்படுவது ஈர்ப்பியல் விசை ஆகும் நியூட்டனின் ஈர்ப்பியல் விதிப்படி, ஈர்ப்பியல் விசையானது நிறைகளின் பெருக்கற்பலனுக்கு நேர்தகவிலும், அவற்றிற்கிடையேயான தொலைவின் இருமடிக்கு எதிர்தகவிலும் இருக்கும் இது மிகவும் வலிமை குன்றிய விசை ஆகும் 2.மின்காந்த விசை எலக்ட்ரான் போன்ற இரு மின்னூட்டத் துகள்களுக்கு இடையே அல்லது மின்னோட்டம் நிகழும் இரு கடத்திகளுக்கு இடையே செயல்படுவது மின்காந்த விசை ஆகும் எதிர்தகவு இருமடி விதிக்கு உட்படுகிறது ஈர்ப்பியல் விசையுடன் ஒப்பிடும்போது இது வலிமை உடையதாக...

புவியியல் - இயற்கைப் பேரழிவுகள்-பேரிடர் மேலாண்மை

   Natural Calamities - Disaster Management    இயற்கைப் பேரழிவுகள் - பேரிடர்             மேலாண்மை பேரிடர் மேலாண்மை  பேரிடர் மேலாண்மை என்பது தடுத்தல், தணித்தல், தயார்நிலை, எதிர்கொள்ளல் மற்றும் மீட்டல் போன்றவற்றை உள்ளடக்கியது ஆகும்  1.நிலநடுக்கம்   புவித் தட்டுகளின் நகர்வால் புவியின் ஒரு பகுதியில் திடீரென ஏற்படும் நில அதிர்வை நிலநடுக்கம் என்கிறோம் நிலநடுக்கம் புவித் தட்டுகளில் எல்லைகளில் ஏற்படுகிறது  புவியின் உட்புறத்தில் நிலநடுக்கம் தோன்றுமிடத்தை நிலநடுக்க மையம் என்கிறோம் நிலநடுக்க மையத்திற்கு செங்குத்தாக புவியின் மேற்பரப்பில் காணப்படும் இடம் மையப்புள்ளி ஆகும் நிலநடுக்கம் சீஸ்மோக்ராப் என்ற கருவியால் பதிவுசெய்யப்படுகிறது.இது ரிக்டர் அளவையில் அளக்கப்படுகிறது உலகிலேயே அதிக நிலநடுக்கங்கள் ஏற்படும் நாடு இந்தோனேசியா 2.ஆழிப்பேரலை (சுனாமி) நிலநடுக்கம், கடலுக்கு அடியில் ஏற்படும் நிலச்சரிவு, எரிமலை வெடிப்பு மற்றும் குறுங்கோள்கள் போன்றவற்றால் ஏற்படும் தொடர் பெருங்கடல்களின் அலைகளை ஆழிப்பேரலை ஆக...

புவியியல் - மக்கள் தொகை வளர்ச்சி மற்றும் பரவல்

       Population - density and distribution        மக்கள் தொகை வளர்ச்சி மற்றும் பரவல் மக்கள் தொகை வளர்ச்சி பிறப்பு விகிதத்திற்கும், இறப்பு விகிதத்திற்கும் இடையே உள்ள வேறுபாடு மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் என அழைக்கப்படுகிறது பிறப்பு விகிதம் என்பது மொத்த மக்கள் தொகையில் 1000 பெண்களுக்கு ஓராண்டில் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை ஆகும் இறப்பு விகிதம் என்பது மொத்த மக்கள் தொகையில் 1,000 மக்களில் ஓராண்டில் ஏற்படும் இறப்பின் எண்ணிக்கை ஆகும் தமிழ்நாட்டில், மக்கள் தொகையின் ஆண்டு வளர்ச்சி விகிதம் 1.1% ஆகும் மக்கள்தொகை பரவல் புவியில், மக்கள் பரவிக் காணப்படும் நிலையினையே மக்கள்தொகை பரவல் என்கிறோம் தமிழ்நாட்டில் மொத்த மக்கள் தொகையில் அதிக அளவான 6.96% சென்னை மாவட்டம் பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து கோயம்புத்தூர், வேலூர், சேலம் மாவட்டங்கள் அதிக எண்ணிக்கையிலான மக்களைக் கொண்டுள்ளன மிகக்குறைந்த மக்கள்தொகை கொண்ட மாவட்டம் பெரம்பலூர் (.069%) ஆகும் மக்கள் அடர்த்தி மக்கள் அடர்த்தி என்பது ஒரு பரப்பில் உள்ள மக்களின் சராசரி எண்ணிக்கையை அளவிடுவத...

6 - ம் வகுப்பு சமூக அறிவியல் - குடும்பமும் சமுதாயமும்

                     குடும்பமும் சமுதாயமும் குடும்பம் சமுதாயத்தின் அடிப்படை அலகு குடும்பம் ஆகும் ஒரே வீட்டில் வசித்து,ஒரே அடுப்பில் சமைத்துப் பகிர்ந்துண்டு வாழ்கின்ற உறவினர் குழுவிற்கு குடும்பம் என்று பெயர் சமுதாயம் பல சமூகங்கள் ஒன்றோடு ஒன்று சார்ந்தும், சேர்ந்தும் வாழ்வது சமுதாயம் எனப்படும் சமூகம் இன்பம், துன்பம் ஆகிய உணர்வுகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டு சேர்ந்து வாழும் மக்கள் குழு சமூகம் எனப்படும் ஒற்றுமை, கடமை, உரிமை, பங்கேற்பு, பாதுகாப்பு, வளர்ச்சி ஆகியவை சமுதாயத்தின் உயிர்மூச்சு ஆகும்

6 - ம் வகுப்பு அறிவியல் - செல்லின் அமைப்பு

               செல்லின் அமைப்பு செல் செல் என்பது ஒரு உயிரினத்தின் அடிப்படை அமைப்பும், செயல் அலகும் ஆகும் செல்களை நேரடியாக பார்ப்பதற்கு நுண்ணோக்கி என்னும் கருவி பயன்படுகிறது தாவரங்கள், விலங்குகள், மனித உடல் ஆகிய அனைத்தும் செல்களால் ஆனவை செல்லை முதன் முதலில் கண்டறிந்தவர் இராபர்ட் ஹூக் (கி.பி.1665) செல்லின் உட்கருவைக் கண்டறிந்தவர் இராபர்ட் பிரௌன் செல்லின் வகைப்பாடுகள்       1.புரோகேரியாட்டிக் செல்       2.யூகேரியாட்டிக் செல் 1.புரோகேரியாட்டிக் செல் சவ்வினால் சூழப்பட்டுள்ள நுண் உறுப்புகள் இல்லாத தெளிவற்ற உட்கரு மட்டுமே கொண்டுள்ள செல் புரோகேரியாட்டிக் செல் எனப்படும் எடுத்துக்காட்டு: பாக்டீரியா  2.யூகேரியாட்டிக் செல் செல்லின் வெளிச்சுவர் மற்றும் சவ்வினால் சூழப்பட்ட உட்கரு உட்பட அனைத்து நுண்ணுறுப்புகளையும் கொண்டுள்ள செல் யூகேரியாட்டிக் செல் எனப்படும் எடுத்துக்காட்டு: தாவர செல், விலங்கு செல் விலங்கு செல் பிளாஸ்மா படலம் இது செல்லைச் சுற்றி காணப்படும் செல்லுக்கு வடி...

6 - ம் வகுப்பு சமூக அறிவியல் - வரலாற்றுக்கு முற்பட்ட காலம்

            வரலாற்றுக்கு முற்பட்ட காலம் நமக்கு முன்னர் வாழ்ந்த மக்கள் பற்றிய தகவல்களை ஆதாரங்களுடன் தொகுத்து காலவரிசைப்படி கூறுவது வரலாறு எனப்படும் மக்கள் வாழ்ந்த காலம், அக்கால நிகழ்வுகள், உணவு முறை, பண்பாடு, பழக்கவழக்கம், ஆட்சிமுறை, கலை, இலக்கியம் போன்றவற்றைப் பற்றி அறிய உதவும் எழுதப்பட்ட ஆதாரங்கள் மற்றும் பழங்காலப் பொருட்கள் ஆகியவை வரலாற்று ஆதாரங்கள் எனப்படும் வரலாற்றினை இரு காலகட்டங்களாகப் பிரிக்கலாம். அவை 1. வரலாற்றுக் காலம் 2. வரலாற்றுக்கு முற்பட்ட காலம் 1. வரலாற்றுக் காலம் அக்கால மனிதர்கள் குறித்த எழுத்துப்பூர்வமான ஆதாரங்களும், பிற ஆதாரங்களும் கொண்ட காலம் வரலாற்றுக் காலம் எனப்படும் இலக்கியங்கள், வரலாற்றுக் குறிப்புகள், கல்வெட்டுகள், செப்புப் பட்டயங்கள், ஓலைச் சுவடிகள் ஆகியவை எழுத்துப் பூர்வமான ஆதாரங்கள் எனப்படும் 2. வரலாற்றுக்கு முற்பட்ட காலம் அக்காலத்தைச் சார்ந்த பொருட்கள், சிதைவுகள், கற்கள், மரங்கள், விலங்குகளின் கொம்புகள், எலும்புகள், கற்கருவிகள், மண்டை ஓடுகள், படிமங்கள் ஆகியவை வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தை அறிய உதவ...

புவியியல் - சுற்றுச்சூழல் பிரச்சனைகள்

            Social geography             சுற்றுச்சூழல் பிரச்சனைகள் அதிவேகமான மக்கள் தொகை வளர்ச்சி, தொழில்மயமாதல் சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு காரணமாக உள்ளது சுற்றுச்சூழலில் அழிவு, மாசடைதல், காலநிலை மாற்றம் போன்றவற்றை ஏற்படுத்துகின்றன சுற்றுச்சூழல் மாசடைதல் மாசடைதல் வேதியல் பொருட்களோ அல்லது ஒலி, வெப்பம் மற்றும் ஒளி ஆற்றல் மூலமாகவோ ஏற்படலாம்       1.காற்று மாசடைதல்       2.நீர் மாசடைதல்       3.நிலம் மாசடைதல்       4.ஒளியினால் ஏற்படும் மாசு       5.உயிரி-மருத்துவ கழிவுகளால் ஏற்படும்          மாசுக்கள்       6.மின்னியல் கழிவுகளால் ஏற்படும் மாசுக்கள்       7.சுரங்கம் தோண்டுவதால் ஏற்படும் மாசுக்கள் காற்று மாசடைதல் ஒவ்வொரு நாளும் மனிதன் சராசரியாக 2,200 முறை சுவாசிக்கிறான் ஒரு நாள் 16 கிலோ கிராம் காற்றை உள்ளிழுக்கிறான் காற்றிலுள்ள மாசுக்கள் இயற்கையாலும்...

6- ம் வகுப்பு அறிவியல் - தாவரங்களின் உலகம்

                             தாவரங்களின் உலகம் உணவு தொடர்பான தொழில்கள் அனைத்தும் தாவரங்களை நம்பி உள்ளன வற்றல், ஊறுகாய், பொடி தயாரித்தல், ஜாம் தயாரித்தல் என பலவகை தொழில்களும் உணவு தொடர்பானவை ஆகும் உணவுக்கு மட்டும் அல்லாமல் நோய் தீர்க்கும் மருந்தாகவும் தாவரங்கள் பயன்படுகின்றன தமிழ்நாட்டில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆண்டுக்கு 50,000 முதல் 75,000 டன் மாம்பழக்கூழ் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது மூலிகைகளின் பயன்கள் தூதுவளை - சளித் தொல்லை, கோழை அகற்றும், மார்புச் சளி நீக்கும், உடல் பலம் தரும் கீழாநெல்லி - மஞ்சள் காமாலை நோயைத் தீர்க்கும் வேம்பு - கிருமிநாசினி, குளிர்ச்சி தரும், வயிற்றுப் பூச்சியை நீக்கும் நெல்லி - வாய்ப் புண்ணைக் குணப்படுத்தும், குளிர்ச்சி தரும் துளசி - சளி, கோழை அகற்றும், காய்ச்சல் நீக்கும் ஓமவல்லி - வியர்வை பெருக்கும், கோழை அகற்றும், காய்ச்சல் நீக்கும் வசம்பு - வயிறு தொடர்பான நோய்களைத் தீர்க்கும் மஞ்சள் - கிருமிநாசினி, அழகுபடுத்தல் பிரண்டை - பசியைத் தூண்டும், செரிமானமின்மை...

6-ம் வகுப்பு அறிவியல்- பொருள்களைப் பிரித்தல்

              பொருள்களைப் பிரித்தல் திண்மக் கலவைகளை பிரிக்கும் முறைகள் திண்மக் கலவைகளை கையால் தெரிந்தெடுத்தல், தூற்றுதல், சலித்தல் மற்றும் காந்தப் பிரிப்பு முறைகளைப் பயன்படுத்திப் பிரிக்கலாம் கையால் தெரிந்தெடுத்தல் நிறம்,அளவு, வடிவத்தின் அடிப்படையில் பொருள்களைப் பிரித்தல் கையால் தெரிந்தெடுத்தல் எனப்படும் கலவை குறைந்த அளவில் இருந்தால் மட்டுமே கையால் தெரிந்தெடுத்தல் முறையைப் பயன்படுத்த முடியும் தூற்றுதல் விவசாயிகள் பதருடன் கூடிய தானியத்தை காற்றடிக்கும் போது முறத்தில் எடுத்துச் சற்று உயரத்திலிருந்து மெதுவாகக் கொட்டும் போது தானியம் கனமாக இருப்பதால், கீழே விழுந்து குவியலாகச் சேரும். பதர் இலேசானதாக இருப்பதால் காற்றால் அடித்துச் செல்லப்பட்டு சற்றுத் தள்ளி விழும். இவ்வாறு தானியங்களைப் பிரித்தெடுக்கும் முறை தூற்றுதல் எனப்படும் கலவையில் உள்ள பகுதிப் பொருள்கள் இலேசானதாக இருந்தால், அவற்றை தூற்றுதல் முறையில் பிரிக்கலாம் சலித்தல் மாவிலிருந்து அரைபடாத பொருட்கள், குருணை, தவிடு, புழு, வண்டு ஆகியவற்றை சலித்தல் முறையில் பிரித்தெடுக்க...

6 - ம் வகுப்பு சமூக அறிவியல் - பண்டைத் தமிழகம்

                       பண்டைத் தமிழகம் ஆங்கிலேயர் ஆட்சியில் தென்னாட்டின் பெரும்பகுதி சென்னை மாகாணம் என்று அழைக்கப்பட்டது நாடு சுதந்திரம் பெற்ற பின் தமிழ் மொழி பேசப்படும் மாநிலம் தனியாக பிரிக்கப்பட்டது.அதற்கு 1967 - ம் ஆண்டில் முதலமைச்சராக இருந்த அறிஞர் அண்ணா அவர்கள் தமிழ்நாடு என்று பெயர் சூட்டினார் தென்னாட்டின் தென்பகுதியைப் பாண்டியர்களும், மேற்குப்பகுதியை சேரர்களும் ,வடகிழக்குப் பகுதியைச் சோழர்களும் ஆண்டு வந்துள்ளனர் மூன்று சங்கங்கள் பாண்டியர்களின் தலைநகர் தென்மதுரையில் தமிழ் வளர்த்த தலைச்சங்கம் கூடியது கபாடபுரத்தைத் தலைநகராகக் கொண்ட பாண்டிய அரசில், தமிழ் வளர்த்த புலவர்கள் கூடும் இடைச்சங்கம் நடைபெற்றது மதுரை மூதூரில் தமிழ் வளர்த்த புலவர்களின் கடைச்சங்கம் நடைபெற்றது தமிழ் மொழியின் வளத்தைப் பெருக்கும் இலக்கியம் வளர்த்த தலை, இடை, கடைச் சங்கங்கள் மூன்றும் தலைமுறை பலவாகப் பாண்டியர் தலைமையில் நடைபெற்றது வரலாற்றுக் காலம் சங்ககாலம் என்பது கடைச்சங்கத்தில் புலவர்கள் அவ்வப்போது கூடி தமிழ் ஆய்வு செய்த காலம் ஆக...

புவியியல் - இந்தியா-போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு

Transport including surface transport and communication இந்தியா-போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு இந்திய போக்குவரத்து அமைப்பு பொருட்களின் உற்பத்திக்கு தேவையான மூலப் பொருட்களை உற்பத்தி இடத்திற்கும், உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை சந்தைக்கும்  எடுத்துச்செல்ல போக்குவரத்து உதவுகிறது சமுதாய பிணைப்பை முன்னேற்றவும், பொருளாதார செழிப்பை விரைவுபடுத்தவும் நெருக்கமான போக்குவரத்து வழித்தடங்கள் முக்கியமானவை சாலைப் போக்குவரத்து இந்திய சாலை வழிப் போக்குவரத்து 3.314 மில்லியன் கிலோ மீட்டர் நீளம் கொண்டு உலகின் இரண்டாவது பெரிய சாலை போக்குவரத்தாக அமைந்துள்ளது கிராமச் சாலைகள் பல்வேறு கிராமங்களை நகரங்களுடன் இணைக்கும் சாலை ஆகும் கிராம பஞ்சாயத்தால் பராமரிக்கப்படுகிறது இந்தியாவில் 26,50,000 கிலோமீட்டர் நீளமுள்ள கிராமச் சாலைகள் காணப்படுகின்றன மாவட்டச் சாலைகள் கிராமங்களை மாவட்டத்தின் தலைநகரங்களுடன் இணைக்கின்றன மாநகராட்சிகளும், நகராட்சிகளும் பராமரிக்கின்றன இந்தியாவில் மாவட்டச் சாலைகள் 4,67,763 கிலோமீட்டர் நீளத்திற்கு அமைந்துள்ளது மாநில நெடுஞ்சாலைகள்...