Skip to main content

7 - ம் வகுப்பு அறிவியல் - தாவரங்கள் மற்றும் விலங்குகள் சுவாசித்தல்



தாவரங்கள் மற்றும் விலங்குகள் சுவாசித்தல்

சுவாசித்தலின் அவசியம்

  • நாம் உண்ணும் உணவு சுவாசித்தலின் போது உயிர்வளியுடன் (ஆக்ஸிஜனுடன்) இணைந்து வேதியியல் மாற்றம் அடைந்து ஆற்றலாக வெளிப்படுகிறது
  • சுவாசித்தலின் போது உயிர்வளி நுரையீரலுக்கு கடத்தப்பட்டு இரத்தத்துடன் கலக்கிறது
  • உயர்வளி கலந்த இரத்தம் உடலின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று அங்குள்ள அனைத்து செல்களுக்கும் சென்றடைகிறது
  • உயிர்வளி செல்களின் உள்ளே சென்றடையும் பொழுது சக்தி பொருள் எரிக்கப்படுகிறது. இது ஆக்சிஜனேற்றம் அடைதல் எனப்படும்
  • ஆக்சிஜனேற்றம் அடையும் பொழுது நீர் மற்றும் கரியமில வாயு கழிவுப்பொருளாக செல்லில் இருந்து வெளியேற்றப்பட்டு உயிர்வளியால் ஆற்றல் வெளிக்கொண்டு வரப்படுகிறது. இது  சுவாசித்தல் அல்லது செல் சுவாசித்தல் எனப்படும்

சுவாசித்தலின் வகைகள்
1.காற்றுச் சுவாசம்
2.காற்றில்லாச் சுவாசம் (நொதித்தல்)
1.காற்றுச் சுவாசம்

  • உயிர்வளியின் முன்னிலையில் நடைபெறும் சுவாசம் காற்றுச் சுவாசம் எனப்படும்
குளுக்கோஸ் + உயிர்வளி  —> கரியமில வாயு + நீர் + ஆற்றல்
2.காற்றில்லாச் சுவாசம்

  • சில நுண்ணுயிர்கள், ஈஸ்ட், பாக்டீரியா போன்றவை உயிர்வளி அற்ற நிலையில் உணவிலிருந்து ஆற்றலைப் பெறுகின்றன. எனவே உயிர்வளி அற்ற நிலையில் நடைபெறும் சுவாசம் காற்றில்லாச் சுவாசம் எனப்படும். நம் எலும்புத் தசைகளில் காற்றில்லாச் சுவாசம் நடைபெறுகிறது
குளுக்கோஸ்  —> எத்தில் ஆல்கஹால் + கரியமில வாயு + ஆற்றல்
  • பாக்டீரியா மற்றும் பூஞ்சைகள் காற்றில்லா முறையில் சுவாசிப்பதால் சர்க்கரையை ஆல்கஹாலாக மாற்றுகின்றன
  • ஈஸ்ட் என்பது ஒரு செல் பூஞ்சை ஆகும். இது காற்றில்லா சூழ்நிலையில் சுவாசித்து ஆல்கஹாலை உற்பத்தி செய்கிறது. எனவே இது மதுபான தயாரிப்பில் பயன்படுகிறது

மனித சுவாசம்

  • மனித சுவாச மண்டலம் மூக்கு, நாசியறை, மூச்சுக் குழல், மூச்சுக் கிளைக்குழாய் மற்றும் நுரையீரலை உள்ளடக்கியது ஆகும்
  • மார்பறையின் உள்ளே ஓர் இணை நுரையீரல் காணப்படுகிறது
  • மார்பறையில் மார்புத் தசைகள் காணப்படுகிறது. இவற்றின் மூலமாகவே நாம் சுவாசிக்கிறோம்
  • விலா எலும்புக் கூட்டுடன் இணைந்திருக்கும் தசைகள் விலா எலும்புக் கூட்டை உட்புறமாகவும் வெளிப்புறமாகவும் இயக்கப் பயன்படுகிறது
  • நுரையீரலுக்கு கீழே வலிமையான தட்டையான தசைத்தொகுப்பு காணப்படுகிறது. இது உதரவிதானம் எனப்படும்
  • நமது மூக்கில் இரண்டு துவாரங்கள் உள்ளன. இது நாசித்துவாரம் எனப்படும்
  • நாசித்துவாரம் நாசிப்பள்ளத்தில் திறந்து மீண்டும் மூச்சுக்குழலில் திறக்கிறது
  • மூச்சுக்குழல் இரண்டு மூச்சுக் கிளைக்குழல்களில் பிரிகிறது
  • ஒவ்வொரு மூச்சுக் கிளைக் குழலும் நுரையீரலுக்குள் சென்று அங்கு மேலும் பல கிளைகளாகப் பிரிந்து மூச்சுக் கிளை சிறுகுழலாகி காற்று நுண்ணறையில் முடிவடைகிறது
  • நுண்ணறையின் சுவர்களில் இரத்தத் தந்துகிகள் எனப்படும் பல மெல்லிய இரத்தக் குழாய்கள் காணப்படுகின்றன
  • நுரையீரலுக்குள் செல்லும் உயிர்வளி இரத்தத்தில் கலக்கிறது
  • இரத்தத்தில் உள்ள கார்பன் டை ஆக்சைடு நுரையீரலுக்குள் உள்ள நுண்ணறையில் வந்து சேர்கிறது
  • காற்று உள்ளிழுத்தல் மற்றும் வெளியேற்றல் நிகழ்ச்சியே மூச்சு விடுதல் எனப்படும். இது ஒரு தொடர்ச்சியான நிகழ்வு ஆகும். இதுஒரு உயிரினத்தின் வாழ்நாள் முழுவதும் அனைத்து நேரங்களிலும் நடைபெறும் நிகழ்ச்சி ஆகும்


விலங்குகளில் சுவாசம்

  • ஒரு செல் மற்றும் பல செல்கள் கொண்ட சிறு விலங்குகளின் செல்கள் அனைத்தும் சுற்றுப்புறத்தில் உள்ள காற்று அல்லது நீரிலிருந்து உயிர்வளியை எடுத்துக் கொண்டு கரியமில வாயுவைப் பரவல் முறையில் வெளியேற்றுகின்றன
  • எடுத்துக்காட்டு
  • அமீபா, பாரமீசியம்
  • மண்புழு மற்றும் அட்டைப் புழுக்கள், ஈரப்பதம் மற்றும் வழவழப்பான தன்மை கொண்ட தோலின் மூலமாக சுவாசிக்கின்றன
  • தவளை போன்ற விலங்குகள் தோல் மற்றும் நுரையீரல் மூலம் சுவாசிக்கின்றன
  • மீன்கள் செவுள்கள் எனப்படும் சிறப்பு உறுப்புகள் மூலம் நீரில் கரைந்துள்ள உயிர் வளியை உறிஞ்சி சுவாசிக்கின்றன
  • ஊர்வன, பறப்பன மற்றும் பாலூட்டிகள் நுரையீரல் மூலம் சுவாசிக்கின்றன
  • விலங்குகளான பூச்சிகளில் பல சிறு துளைகள் காணப்படும். அவை காற்று துளைகள் எனப்படும். இந்த காற்று துளைகள் மூச்சுக்குழாயில் முடிவடைகிறது. வாயுப்பரிமாற்றம் இந்த காற்று துளைகள் மூலம் நடைபெறுகிறது

தாவரங்களில் சுவாசம்

  • தாவரங்கள் இலைகளில் உள்ள சிறு துளைகள் மூலம் சுவாசிக்கின்றன. இவை இலைத்துளைகள் எனப்படும்
  • தண்டுகளிலும் சிறு துளைகள் காணப்படுகின்றன. இத்துளைகளும் வாயுப் பரிமாற்றத்திற்கு உதவுகின்றன
  • வேர்களும் தனியே சுவாசிக்கின்றன. மண் துகள்களுக்கிடையே உள்ள காற்றறைகளில் உள்ள காற்றை வேர்கள் சுவாசிக்கின்றன







Comments

Popular posts from this blog

6 - ம் வகுப்பு கணிதம் - விகிதம் மற்றும் விகித சமம்

6 - ம் வகுப்பு கணிதம் - விகிதம் மற்றும் விகித சமம் ஓர் அளவினை மற்றோர் அளவின் மடங்காக வெளிப்படுத்தி ஒப்பிடுவது விகிதம் எனப்படும் விகிதத்தைப் பின்னமாகவும் எழுதலாம். விகிதத்தைப் பெரும்பாலும் எளிய வடிவத்தில் எழுத வேண்டும் விகிதங்களின் பண்புகள் விகிதங்களுக்கு அலகு இல்லை. இது ஓர் எண் மதிப்பு. எடுத்துக்காட்டு: 8 கிலோமீட்டர்க்கும் 4 கிலோ மீட்டருக்கும் உள்ள விகிதம் 2 : 1 ஆகும் மற்றும் 2 கி. மீ : 1 கி.மீ அல்ல விகிதங்களின் இரு அளவுகளும் ஒரே அலகுடையதாக இருக்க வேண்டும்.எடுத்துக்காட்டு 4 கிலோ மீட்டர் மற்றும் 400 மீட்டர் ஆகியவற்றிற்கான விகிதம் காணும் போது அவற்றை (4×1000):400 = 4000:400=10:1 எனக் குறிப்பிடலாம் விகிதத்தில் ஒவ்வோர் எண்ணும் உறுப்பு என அழைக்கப்படும் விகிதத்தின் உறுப்புகளின் வரிசையை மாற்றி எழுத முடியாது 20:5 என்ற விகிதத்தை எளிய வடிவில் காண்க 20/5 = 4/1 =4:1 500கி மற்றும் 250 கி க்கும் உள்ள விகிதத்தை எளிய வடிவில் காண்க 500/250 = 2/1 =1 மாதவியும், அன்புவும் இரண்டு மேசைகளை முறையே ரூ.750 மற்றும் ரூ.900 க்கு வாங்குகின்றனர். அன்புவும், மாத...

6 - ம் வகுப்பு தமிழ் - பாடறிந்து ஒழுகுதல்

6 - ம் வகுப்பு தமிழ் - பாடறிந்து ஒழுகுதல் ஆசாரக்கோவை ஆசாரக்கோவை நூலை எழுதியவர் - பெருவாயின் முள்ளியார் இவர் பிறந்த ஊர் கயத்தூர். ஆசாரக்கோவை என்பதற்கு நல்ல ஒழுக்கங்களின் தொகுப்பு என்பது பொருள். இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. இந்நூல் நூறு வெண்பாக்களைக் கொண்டது தமிழர் பெருவிழா பொங்கல் விழா தமிழர் திருநாள் என்றும் போற்றப்படுகிறது கதிரவனுக்கு நன்றி கூறிச் சிறப்பு செய்யும் விழா பொங்கல் விழா. உழவர்கள் ஆடித்திங்களில் விதைப்பர். தைத்திங்களில் அறுவடை செய்து பயன் அடைவர். தைத் திங்களின் முதல் நாளில் பொங்கலிட்டு வழிபடுவர். எனவே இத்திருவிழாவை அறுவடைத் திருவிழா என்றும் அழைப்பர். உழவர்கள் இயற்கைக்கும் தம்முடன் உழைத்த கால்நடைகளுக்கும் இந்நாளில் நன்றி தெரிவித்து மகிழ்கின்றனர். எனவே இவ்விழாவை உழவர் திருநாள் என்றும் கூறுவர். போகித் திருநாள் பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பது ஆன்றோர் மொழி. வீட்டில் உள்ள பயனற்ற பொருள்களை நீக்கி வீட்டைத் தூய்மை செய்யும் நாள் போகித் திருநாள். இது மார்கழி மாதத்தின் இறுதி நாள் ஆகும் வாழ்க்கைக்கு வளம் தரும் மழைக் கடவுளை வழிப...

6 - ம் வகுப்பு கணிதம் - இயல் எண்கள், முழு எண்கள்

        Natural and Whole numbers         இயல் எண்கள், முழு எண்கள் இயல் எண்கள் அல்லது எண்ணும் எண்கள் அல்லது மிகை முழு எண்கள் N = {1,2,3,4,......} முழு எண்கள் அல்லது நிறைவெண்கள் W = {0,1,2,3,4......} எல்லா முழு எண்களுக்கும் தொடரி உண்டு பூஜ்ஜியத்தைத் தவிர எல்லா முழு எண்களுக்கும் முன்னி உண்டு எல்லா முழு எண்களையும் கூட்டவும், பெருக்கவும் முடியும் இயல் எண்ணினை அதைவிட சிறிய இயல் எண் அல்லது அதே எண்ணைக் கொண்டு கழிக்க முடியும் ஒரு பெரிய எண்ணை சிறிய எண்ணால் வகுக்க முடியும் அதிக இலக்கங்கள் உடைய எண்கள் நம் நாட்டில் 10,000            = பத்தாயிரம் 1,00,000         = ஒரு லட்சம் 10,00,000        = பத்து லட்சம் 1,00,00,000     =ஒரு கோடி 1,00,00,00,000 = நூறு கோடி உலகளவில் 10,000             = பத்தாயிரம் 100,000           = நூறாயிரம் 1,000,000        = ஒ...