தாவரங்கள் மற்றும் விலங்குகள் சுவாசித்தல்
சுவாசித்தலின் அவசியம்
- நாம் உண்ணும் உணவு சுவாசித்தலின் போது உயிர்வளியுடன் (ஆக்ஸிஜனுடன்) இணைந்து வேதியியல் மாற்றம் அடைந்து ஆற்றலாக வெளிப்படுகிறது
- சுவாசித்தலின் போது உயிர்வளி நுரையீரலுக்கு கடத்தப்பட்டு இரத்தத்துடன் கலக்கிறது
- உயர்வளி கலந்த இரத்தம் உடலின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று அங்குள்ள அனைத்து செல்களுக்கும் சென்றடைகிறது
- உயிர்வளி செல்களின் உள்ளே சென்றடையும் பொழுது சக்தி பொருள் எரிக்கப்படுகிறது. இது ஆக்சிஜனேற்றம் அடைதல் எனப்படும்
- ஆக்சிஜனேற்றம் அடையும் பொழுது நீர் மற்றும் கரியமில வாயு கழிவுப்பொருளாக செல்லில் இருந்து வெளியேற்றப்பட்டு உயிர்வளியால் ஆற்றல் வெளிக்கொண்டு வரப்படுகிறது. இது சுவாசித்தல் அல்லது செல் சுவாசித்தல் எனப்படும்
சுவாசித்தலின் வகைகள்
1.காற்றுச் சுவாசம்2.காற்றில்லாச் சுவாசம் (நொதித்தல்)
1.காற்றுச் சுவாசம்
- உயிர்வளியின் முன்னிலையில் நடைபெறும் சுவாசம் காற்றுச் சுவாசம் எனப்படும்
குளுக்கோஸ் + உயிர்வளி —> கரியமில வாயு + நீர் + ஆற்றல்
2.காற்றில்லாச் சுவாசம்
- சில நுண்ணுயிர்கள், ஈஸ்ட், பாக்டீரியா போன்றவை உயிர்வளி அற்ற நிலையில் உணவிலிருந்து ஆற்றலைப் பெறுகின்றன. எனவே உயிர்வளி அற்ற நிலையில் நடைபெறும் சுவாசம் காற்றில்லாச் சுவாசம் எனப்படும். நம் எலும்புத் தசைகளில் காற்றில்லாச் சுவாசம் நடைபெறுகிறது
குளுக்கோஸ் —> எத்தில் ஆல்கஹால் + கரியமில வாயு + ஆற்றல்
- பாக்டீரியா மற்றும் பூஞ்சைகள் காற்றில்லா முறையில் சுவாசிப்பதால் சர்க்கரையை ஆல்கஹாலாக மாற்றுகின்றன
- ஈஸ்ட் என்பது ஒரு செல் பூஞ்சை ஆகும். இது காற்றில்லா சூழ்நிலையில் சுவாசித்து ஆல்கஹாலை உற்பத்தி செய்கிறது. எனவே இது மதுபான தயாரிப்பில் பயன்படுகிறது
மனித சுவாசம்
- மனித சுவாச மண்டலம் மூக்கு, நாசியறை, மூச்சுக் குழல், மூச்சுக் கிளைக்குழாய் மற்றும் நுரையீரலை உள்ளடக்கியது ஆகும்
- மார்பறையின் உள்ளே ஓர் இணை நுரையீரல் காணப்படுகிறது
- மார்பறையில் மார்புத் தசைகள் காணப்படுகிறது. இவற்றின் மூலமாகவே நாம் சுவாசிக்கிறோம்
- விலா எலும்புக் கூட்டுடன் இணைந்திருக்கும் தசைகள் விலா எலும்புக் கூட்டை உட்புறமாகவும் வெளிப்புறமாகவும் இயக்கப் பயன்படுகிறது
- நுரையீரலுக்கு கீழே வலிமையான தட்டையான தசைத்தொகுப்பு காணப்படுகிறது. இது உதரவிதானம் எனப்படும்
- நமது மூக்கில் இரண்டு துவாரங்கள் உள்ளன. இது நாசித்துவாரம் எனப்படும்
- நாசித்துவாரம் நாசிப்பள்ளத்தில் திறந்து மீண்டும் மூச்சுக்குழலில் திறக்கிறது
- மூச்சுக்குழல் இரண்டு மூச்சுக் கிளைக்குழல்களில் பிரிகிறது
- ஒவ்வொரு மூச்சுக் கிளைக் குழலும் நுரையீரலுக்குள் சென்று அங்கு மேலும் பல கிளைகளாகப் பிரிந்து மூச்சுக் கிளை சிறுகுழலாகி காற்று நுண்ணறையில் முடிவடைகிறது
- நுண்ணறையின் சுவர்களில் இரத்தத் தந்துகிகள் எனப்படும் பல மெல்லிய இரத்தக் குழாய்கள் காணப்படுகின்றன
- நுரையீரலுக்குள் செல்லும் உயிர்வளி இரத்தத்தில் கலக்கிறது
- இரத்தத்தில் உள்ள கார்பன் டை ஆக்சைடு நுரையீரலுக்குள் உள்ள நுண்ணறையில் வந்து சேர்கிறது
- காற்று உள்ளிழுத்தல் மற்றும் வெளியேற்றல் நிகழ்ச்சியே மூச்சு விடுதல் எனப்படும். இது ஒரு தொடர்ச்சியான நிகழ்வு ஆகும். இதுஒரு உயிரினத்தின் வாழ்நாள் முழுவதும் அனைத்து நேரங்களிலும் நடைபெறும் நிகழ்ச்சி ஆகும்
விலங்குகளில் சுவாசம்
- ஒரு செல் மற்றும் பல செல்கள் கொண்ட சிறு விலங்குகளின் செல்கள் அனைத்தும் சுற்றுப்புறத்தில் உள்ள காற்று அல்லது நீரிலிருந்து உயிர்வளியை எடுத்துக் கொண்டு கரியமில வாயுவைப் பரவல் முறையில் வெளியேற்றுகின்றன
- எடுத்துக்காட்டு
- அமீபா, பாரமீசியம்
- மண்புழு மற்றும் அட்டைப் புழுக்கள், ஈரப்பதம் மற்றும் வழவழப்பான தன்மை கொண்ட தோலின் மூலமாக சுவாசிக்கின்றன
- தவளை போன்ற விலங்குகள் தோல் மற்றும் நுரையீரல் மூலம் சுவாசிக்கின்றன
- மீன்கள் செவுள்கள் எனப்படும் சிறப்பு உறுப்புகள் மூலம் நீரில் கரைந்துள்ள உயிர் வளியை உறிஞ்சி சுவாசிக்கின்றன
- ஊர்வன, பறப்பன மற்றும் பாலூட்டிகள் நுரையீரல் மூலம் சுவாசிக்கின்றன
- விலங்குகளான பூச்சிகளில் பல சிறு துளைகள் காணப்படும். அவை காற்று துளைகள் எனப்படும். இந்த காற்று துளைகள் மூச்சுக்குழாயில் முடிவடைகிறது. வாயுப்பரிமாற்றம் இந்த காற்று துளைகள் மூலம் நடைபெறுகிறது
தாவரங்களில் சுவாசம்
- தாவரங்கள் இலைகளில் உள்ள சிறு துளைகள் மூலம் சுவாசிக்கின்றன. இவை இலைத்துளைகள் எனப்படும்
- தண்டுகளிலும் சிறு துளைகள் காணப்படுகின்றன. இத்துளைகளும் வாயுப் பரிமாற்றத்திற்கு உதவுகின்றன
- வேர்களும் தனியே சுவாசிக்கின்றன. மண் துகள்களுக்கிடையே உள்ள காற்றறைகளில் உள்ள காற்றை வேர்கள் சுவாசிக்கின்றன
Comments
Post a Comment