தாவரங்களின் உலகம்
- உணவு தொடர்பான தொழில்கள் அனைத்தும் தாவரங்களை நம்பி உள்ளன
- வற்றல், ஊறுகாய், பொடி தயாரித்தல், ஜாம் தயாரித்தல் என பலவகை தொழில்களும் உணவு தொடர்பானவை ஆகும்
- உணவுக்கு மட்டும் அல்லாமல் நோய் தீர்க்கும் மருந்தாகவும் தாவரங்கள் பயன்படுகின்றன
- தமிழ்நாட்டில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆண்டுக்கு 50,000 முதல் 75,000 டன் மாம்பழக்கூழ் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது
மூலிகைகளின் பயன்கள்
- தூதுவளை - சளித் தொல்லை, கோழை அகற்றும், மார்புச் சளி நீக்கும், உடல் பலம் தரும்
- கீழாநெல்லி - மஞ்சள் காமாலை நோயைத் தீர்க்கும்
- வேம்பு - கிருமிநாசினி, குளிர்ச்சி தரும், வயிற்றுப் பூச்சியை நீக்கும்
- நெல்லி - வாய்ப் புண்ணைக் குணப்படுத்தும், குளிர்ச்சி தரும்
- துளசி - சளி, கோழை அகற்றும், காய்ச்சல் நீக்கும்
- ஓமவல்லி - வியர்வை பெருக்கும், கோழை அகற்றும், காய்ச்சல் நீக்கும்
- வசம்பு - வயிறு தொடர்பான நோய்களைத் தீர்க்கும்
- மஞ்சள் - கிருமிநாசினி, அழகுபடுத்தல்
- பிரண்டை - பசியைத் தூண்டும், செரிமானமின்மையை நீக்கும்
- இஞ்சி - செரிமானக் கோளாறுகளைத் தீர்க்கும்
- மிளகு - தொண்டைக் கரகரப்பை நீக்கும்
பூக்களும் - வாசனைப் பொருள்களும்
- குளியல் சோப்பு, முகத்துக்குப் பூசும் பவுடர், வாசனை திரவியம் போன்ற அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பு மலர்கள் முக்கிய பங்காற்றுகின்றன
நறுமணப் பொருட்கள்
- உணவு பொருட்களுடன் நறுமணப் பொருட்களை சேர்ப்பதால் உணவுக்கு நறுமணமும், வண்ணமும் கிடைக்கிறது
- நறுமணப் பொருட்கள் உணவு உட்கொள்ளும் அளவினையும், உணவு செரித்தல் வீதத்தையும் அதிகரிக்கின்றன
- சுக்கு, புதினா, வெந்தயம் போன்றவை சாதாரண சளி, காய்ச்சல், வயிற்றுவலி போன்றவற்றிற்கு மருந்தாக பயன்படுகின்றன
- மஞ்சள், கிராம்பு போன்றவை நுண்ணுயிரி எதிர்ப்பொருளாகவும், கிருமி நாசினியாகவும் செயல்படுகின்றன
- இந்தியாவில் நறுமணப் பொருட்களின் தோட்டம் என்று அழைக்கப்படுவது கேரளா
நறுமணப்பொருட்களாகப் பயன்படும் தாவரத்தின் பாகங்கள்
- விதை - வெந்தயம், சோம்பு, கடுகு
- தரைக்கீழ் தண்டு - சுக்கு, இஞ்சி, மஞ்சள்
- காய் - ஏலக்காய்
- பழம் - மிளகு
- மரப்பட்டை - இலவங்கம்
- இலை - புதினா
- பூ மொட்டு - கிராம்பு
ஆடை, சணல், சாக்குப்பை
- ஆடை, பருத்தியில் இருந்து தயாரிக்கப்படுகிறது
- கயிறு, தேங்காய் நாரிலிருந்து கிடைக்கிறது
- சாக்குப்பை தயாரிக்கப் பயன்படும் சணல் ஹெம்ப் என்ற தாவரத்தில் இருந்து கிடைக்கிறது
- ஹெம்ப் என்ற தாவரத்தில் 85% செல்லுலோஸ் உள்ளதால், இவை உயிரி பிளாஸ்டிக் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகின்றன. உயிரி பிளாஸ்டிக் மண்ணில் மக்கும் தன்மை உடையது
- தலையணை, மெத்தை,பாய், விரிப்புகள் போன்றவற்றிலும் நார்த்தாவரங்கள் பயன்படுகின்றன
- நார் என்பது தாவரங்களிலிருந்து பெறப்படும் நீண்ட, மெல்லிய, உறுதியான இழையாகும்
தண்டு நார்கள்
- வாழை நார், சணல் போன்றவை தாவரத்தின் தண்டுப் பகுதியிலிருந்து பெறப்படுபவை ஆகும்
இலை நார்கள்
- கற்றாழை, அன்னாசி போன்ற தாவரங்களின் இலைகளிலிருந்து நார்கள் எடுக்கப்படுகின்றன. அவை இலை நார்கள் எனப்படும்
மேற்புற நார்கள்
- விதையின் மேற்புறத்தில் இருந்து பெறப்படும் நார்கள் மேற்புற நார்கள் எனப்படும்
- எடுத்துக்காட்டு: பருத்தி, தேங்காய், இலவம் பஞ்சு
கட்டுமான வேலையில் தாவரங்கள்
- பல்வேறு வகையான கட்டுமானப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் தாவரப்பகுதிகள் மரப்பட்டை எனப்படும். தாவரத் தண்டின் கருநிறமான மையப்பகுதி வன்கட்டை எனப்படும்
- வன்கட்டை தாவரங்களுக்கு வலிமையையும், கடினத் தன்மையையும், உறுதியையும் அளிக்கிறது
- வன்கட்டையில் பிசின், அரக்கு,ரெசின் மற்றும் எண்ணெய் ஆகியவை காணப்படுவதால், வன்கட்டை கடினத் தன்மையும், பூஞ்சைகளை எதிர்க்கும் தன்மையையும் பெற்றுள்ளன
- தாவரத் தண்டின் மென்மையான வெளிப்பகுதி மென்கட்டை எனப்படும்
- மென்கட்டை தாவரத்தில் நீரினை கடத்த உதவுகிறது
- தேக்கு - கட்டுமானம், மரச்சாமான்கள்
- பலா - கட்டுமானம் மற்றும் பழங்கள்
- யூகலிப்டஸ் - தைலம், காகிதம்
- மா - கட்டுமானம் மற்றும் பழங்கள்
- இலவம் - தீப்பெட்டி, தீக்குச்சி, சிறு பொம்மைகள், பஞ்சு மெத்தை, தலையணை
- தென்னை - கூரை வேய்தல், கட்டுமானம், இளநீர், தேங்காய்
- வில்லோ - விளையாட்டுச் சாமான்கள், கிரிக்கெட் மட்டை
- கருவேலம் - மாட்டு வண்டியின் பாகங்கள்
- சந்தனமரம் - சந்தனம், கலைப் பொருட்கள், மரச்சாமான்கள்
- மல்பரி - டென்னிஸ்,ஹாக்கி மட்டைகள்
- பைன் - ரயில் படுக்கைகள், படகுகள்
Comments
Post a Comment