பொருள்களைப் பிரித்தல்
திண்மக் கலவைகளை பிரிக்கும் முறைகள்
- திண்மக் கலவைகளை கையால் தெரிந்தெடுத்தல், தூற்றுதல், சலித்தல் மற்றும் காந்தப் பிரிப்பு முறைகளைப் பயன்படுத்திப் பிரிக்கலாம்
கையால் தெரிந்தெடுத்தல்
- நிறம்,அளவு, வடிவத்தின் அடிப்படையில் பொருள்களைப் பிரித்தல் கையால் தெரிந்தெடுத்தல் எனப்படும்
- கலவை குறைந்த அளவில் இருந்தால் மட்டுமே கையால் தெரிந்தெடுத்தல் முறையைப் பயன்படுத்த முடியும்
தூற்றுதல்
- விவசாயிகள் பதருடன் கூடிய தானியத்தை காற்றடிக்கும் போது முறத்தில் எடுத்துச் சற்று உயரத்திலிருந்து மெதுவாகக் கொட்டும் போது தானியம் கனமாக இருப்பதால், கீழே விழுந்து குவியலாகச் சேரும். பதர் இலேசானதாக இருப்பதால் காற்றால் அடித்துச் செல்லப்பட்டு சற்றுத் தள்ளி விழும். இவ்வாறு தானியங்களைப் பிரித்தெடுக்கும் முறை தூற்றுதல் எனப்படும்
- கலவையில் உள்ள பகுதிப் பொருள்கள் இலேசானதாக இருந்தால், அவற்றை தூற்றுதல் முறையில் பிரிக்கலாம்
சலித்தல்
- மாவிலிருந்து அரைபடாத பொருட்கள், குருணை, தவிடு, புழு, வண்டு ஆகியவற்றை சலித்தல் முறையில் பிரித்தெடுக்கலாம். மாவு சல்லடைத் துளைகளின் வழியே கீழே சென்று விடும். பெரிய துகள்கள் சல்லடையிலேயே தங்கிவிடும்
- கட்டுமானப் பணிகளின் போது, மணலிலிருந்து கற்களைப் பிரித்தெடுக்க சல்லடையைப் பயன்படுத்தி சலிக்கலாம்
- கலவையில் உள்ள பகுதிப் பொருள்களின் பருமனளவு வேறுபட்டால் மட்டுமே அவற்றை சலித்தல் முறையில் பிரிக்க முடியும்
காந்தப் பிரிப்பு முறை
- காந்தத்தால் கவரப்படும் பொருள்கள் கலவையின் பகுதியாக இருந்தால், அவற்றை காந்தப் பிரிப்பு முறையைப் பயன்படுத்தி பிரித்தெடுக்கலாம்
நீர்மங்களில் கரையாத திண்மப் பொருட்களைப் பிரிக்கும் முறைகள்
- நீரில் கரையாத திண்மப் பொருள்களையும், ஒன்றைவிட மற்றொன்று கனமான பகுதிப் பொருள்களைக் கொண்ட கலவைகளையும் தெளிய வைத்தல், தெளிய வைத்து இறுத்தல், வடிகட்டுதல் ஆகிய முறைகளைப் பயன்படுத்தி பிரிக்கலாம்
தெளிய வைத்தல்
- திண்மப் பொருளும், திரவப்பொருளும் கலந்த கலவையை ஒரு முகவையில் சிறுது நேரம் அசையாமல் வைத்து, திரவத்தின் அடியில் திண்மப் பொருளைப் படியச் செய்யும் முறை தெளிய வைத்தல் எனப்படும்
- மேலே உள்ள திரவம் தெளிந்த திரவம் (supernatant liquid )எனப்படும்
- எடுத்துக்காட்டு: மணலும்,நீரும் சேர்ந்த கலவை
தெளிய வைத்து இறுத்தல்
- தெளிய வைத்த கலவை ஒன்றிலிருந்து, தெளிவான திரவப் பொருளை மட்டும் மற்றொரு கலனுக்கு கண்ணாடிக்குச்சியின் உதவியுடன் மாற்றுதல் தெளிய வைத்து இறுத்தல் எனப்படும்
வடிகட்டுதல்
- தெளிய வைத்து இறுத்தல் முறையில் பிரிக்கப்பட்ட நீரை பருத்தி துணியைப் பயன்படுத்தி வடிகட்டும் போது தெளிந்த நீர் கிடைக்கிறது. ஏனெனில் துணியில் உள்ள இழைகளுக்கு இடையே துளைகள் இருப்பதனால் அதன் வழியாக நீர் கீழே சென்று விடுகிறது. மணல் துகள்கள் துணியிலேயே தங்கிவிடுகின்றன
நீர்மங்களில் கரைந்துள்ள திண்மப் பொருட்களைப் பிரிக்கும் முறைகள்
- நீர்மங்களில் கரைந்துள்ள திண்மப் பொருட்களை ஆவியாதல், ஆவி சுருங்கி நீர்மமாதல் ஆகிய முறைகளைப் பயன்படுத்தி பிரிக்கலாம்
ஆவியாதல்
- வெப்பப்படுத்தும் போது ஒரு நீர்மமானது ஆவியாக மாறும் நிகழ்ச்சி ஆவியாதல் எனப்படும்
- ஒரு லிட்டர் கடல் நீரில் சுமார் 3.5 கிராம் உப்பு கரைந்துள்ளது. கடல்நீரில் நாம் உண்ணும் உப்பு மட்டுமில்லாமல் 50க்கும் மேற்பட்ட கனிமங்கள் உள்ளன
ஆவி சுருங்கி நீர்மமாதல்
- ஒரு பொருளின் ஆவி, குளிர்ச்சி அடையும் போது நீர்மமாக மாறுகிறது. இந்நிகழ்ச்சி ஆவி சுருங்கி நீர்மமாதல் எனப்படும்
- பெட்ரோல், மண்ணெண்ணெயிலிருந்து நாப்தலின் வரை 86 வகையான பொருட்கள் கச்சா எண்ணெய் என்ற கலவையில் இருந்து பிரித்தெடுக்கப்படுகிறது
- காற்று பல வாயுக்கள் சேர்ந்த கலவையாகும்
Comments
Post a Comment