வரலாற்றுக்கு முற்பட்ட காலம்
- நமக்கு முன்னர் வாழ்ந்த மக்கள் பற்றிய தகவல்களை ஆதாரங்களுடன் தொகுத்து காலவரிசைப்படி கூறுவது வரலாறு எனப்படும்
- மக்கள் வாழ்ந்த காலம், அக்கால நிகழ்வுகள், உணவு முறை, பண்பாடு, பழக்கவழக்கம், ஆட்சிமுறை, கலை, இலக்கியம் போன்றவற்றைப் பற்றி அறிய உதவும் எழுதப்பட்ட ஆதாரங்கள் மற்றும் பழங்காலப் பொருட்கள் ஆகியவை வரலாற்று ஆதாரங்கள் எனப்படும்
- வரலாற்றினை இரு காலகட்டங்களாகப் பிரிக்கலாம். அவை
1. வரலாற்றுக் காலம்2. வரலாற்றுக்கு முற்பட்ட காலம்
1. வரலாற்றுக் காலம்
- அக்கால மனிதர்கள் குறித்த எழுத்துப்பூர்வமான ஆதாரங்களும், பிற ஆதாரங்களும் கொண்ட காலம் வரலாற்றுக் காலம் எனப்படும்
- இலக்கியங்கள், வரலாற்றுக் குறிப்புகள், கல்வெட்டுகள், செப்புப் பட்டயங்கள், ஓலைச் சுவடிகள் ஆகியவை எழுத்துப் பூர்வமான ஆதாரங்கள் எனப்படும்
2. வரலாற்றுக்கு முற்பட்ட காலம்
- அக்காலத்தைச் சார்ந்த பொருட்கள், சிதைவுகள், கற்கள், மரங்கள், விலங்குகளின் கொம்புகள், எலும்புகள், கற்கருவிகள், மண்டை ஓடுகள், படிமங்கள் ஆகியவை வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தை அறிய உதவும் ஆதாரங்கள் ஆகும்
- வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தை 4 காலங்களாக வகைப்படுத்தலாம்
1. பழைய கற்காலம் (கி.மு.10,000 ஆண்டுகளுக்கு முன்)2. புதிய கற்காலம் (கி.மு.10,000 - கி.மு.4000)3. செம்புக் கற்காலம் (கி.மு.3000 - கி.மு.1500)4. இரும்புக் காலம் (கி.மு.1500 - கி.மு.600)
- ஆதி மனிதன் பயன்படுத்திய கற்கருவிகளைக் கொண்டு கற்காலத்தை இரண்டாகப் பிரிக்கலாம்
i)பழைய கற்காலம்ii) புதிய கற்காலம்
i)பழைய கற்காலம்
- மனிதன் காடுகளில் வாழ்ந்தான். மரக்கிளைகளிலும், மரப்பொந்துகளிலும் குகைகளிலும் தங்கினான்
- ஆதிமனிதன் சிக்கிமுக்கிக் கற்களைப் பயன்படுத்தி நெருப்பை உண்டாக்கினான்
- ஆதிமனிதன் இலை தழைகள், மரப்பட்டைகள், விலங்குகளின் தோல் ஆகியவற்றை உடையாகப் பயன்படுத்தினான்
- கரடு முரடான கற்கள்,மரக்கிளைகள்,எலும்புகள், விலங்குகளின் கொம்புகள் ஆகியவற்றை கருவிகளாகப் பயன்படுத்தினான்
- ஆதிமனிதன் காடுகளில் கிடைத்த காய்கள், கனிகள், கிழங்குகள், விலங்குகளின் இறைச்சி ஆகியவற்றை உண்டான்
முக்கிய தோற்றங்களின் ஆண்டுகள்
- பூமியின் தோற்றம் - 460 கோடி ஆண்டுகளுக்கு முன்
- மனிதனின் தோற்றம் - 40,000 ஆண்டுகளுக்கு முன்
- வேளாண்மை தோன்றிய காலம் - சுமார் 8000 ஆண்டுகளுக்கு முன்
- நகரங்களின் தோற்றம் - 4700 ஆண்டுகளுக்கு முன்
இந்தியாவில் பழைய கற்காலக் கருவிகள் கிடைக்கப்பெற்றுள்ள இடங்கள்
- மத்திய பிரதேசம் - சோன் ஆற்றுப்படுகை,பிம்பேட்கா,ம்ஹேஸ்வா
- ராஜஸ்தான் - லூனி ஆற்றுச் சமவெளி
- ஆந்திரப் பிரதேசம் - கர்னூல் குகைகள், ரேணிகுண்டா
- தமிழ்நாடு - வடமதுரை, அத்திரம்பாக்கம், பல்லாவரம், காஞ்சிபுரம், வேலூர், திருவள்ளூர்
2. புதிய கற்காலம்
- மனித நாகரிக வளர்ச்சியின் அடுத்த படி நிலையை புதியகற்காலம் எனலாம்
- ஆடு, மாடு, கோழி ஆகியவற்றை வளர்த்தான்
- அக்கால மனிதன் செதுக்கப்பட்ட நயமான, கூர்மையான கற்கருவிகளைப் பயன்படுத்தினான்
- அக்காலத்தில் முக்கிய மாற்றம் உணவு உற்பத்தி ஆகும்
- அக்காலத்தில்தான் சக்கரமும் உருவாக்கப்பட்டது
- முதலில் பயன்படுத்திய உலோகம் செம்பு
- மண் குடிசைகளை அமைத்தான்
- திருநெல்வேலி, தான்றிக்குடி, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, சேலம்
3. செம்புக் கற்காலம்
- செம்பினால் கருவிகள் செய்து பயன்படுத்தியதால் அக்காலம் செம்பு கற்கருவிகள் காலம் என்று குறிப்பிடப்படுகிறது
- ஹரப்பா நகர நாகரிகம் இக்காலத்தைச் சேர்ந்தது
- அக்காலத்தில் மக்கள் பயன்படுத்திய மண்பாண்டங்களின் மேல் வண்ண ஓவியங்கள் வரைந்தனர்
4. இரும்புக் காலம்
- இரும்பினால் கருவிகள் செய்த காலம் இரும்புக் காலம் எனப்படும்
- இக்காலத்தில் வீட்டுச் சாமான்களும், பயிர்த்தொழில் கருவிகளும் இரும்பினால் செய்யப்பட்டன
- வேதகால நாகரிகம் இரும்புக் காலத்தைச் சேர்ந்தது
உலோகக் கலவைகள்
இரும்பு + குரோமியம் = சில்வர்செம்பு + வெள்ளீயம் = வெண்கலம்செம்பு + துத்தநாகம் = பித்தளைஇரும்பு + மாங்கனீசு = எஃகு
Comments
Post a Comment