Skip to main content

புவியியல் - சுற்றுச்சூழல் பிரச்சனைகள்


            Social geography
            சுற்றுச்சூழல் பிரச்சனைகள்


  • அதிவேகமான மக்கள் தொகை வளர்ச்சி, தொழில்மயமாதல் சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு காரணமாக உள்ளது
  • சுற்றுச்சூழலில் அழிவு, மாசடைதல், காலநிலை மாற்றம் போன்றவற்றை ஏற்படுத்துகின்றன


சுற்றுச்சூழல் மாசடைதல்


  • மாசடைதல் வேதியல் பொருட்களோ அல்லது ஒலி, வெப்பம் மற்றும் ஒளி ஆற்றல் மூலமாகவோ ஏற்படலாம்

      1.காற்று மாசடைதல்
      2.நீர் மாசடைதல்
      3.நிலம் மாசடைதல்
      4.ஒளியினால் ஏற்படும் மாசு
      5.உயிரி-மருத்துவ கழிவுகளால் ஏற்படும்          மாசுக்கள்
      6.மின்னியல் கழிவுகளால் ஏற்படும் மாசுக்கள்
      7.சுரங்கம் தோண்டுவதால் ஏற்படும் மாசுக்கள்

காற்று மாசடைதல்


  • ஒவ்வொரு நாளும் மனிதன் சராசரியாக 2,200 முறை சுவாசிக்கிறான்
  • ஒரு நாள் 16 கிலோ கிராம் காற்றை உள்ளிழுக்கிறான்
  • காற்றிலுள்ள மாசுக்கள் இயற்கையாலும், மனிதர்களாலும் உருவாக்கப்படுகின்றன
  • எரிமலை வெடிப்பு, காற்றரிப்பு,மகரந்தம் பரவல், உயிரிகளின் கூட்டுப்பொருள்கள் ஆவியாதலால் உண்டாகும் வாயு மற்றும் அணுக்கதிர்வீச்சு போன்றவைகளால் காற்று மாசுபடுகிறது
  • வாகனங்களிலிருந்து வெளியேறும் கார்பன், அனல்மின் நிலையங்களில் இருந்து வெளியேறும் கார்பன் புகை, தொழிலகங்கள் மற்றும் சுத்திகரிப்பு ஆலைகளில் இருந்து வெளியேறும் கார்பன் இவை அனைத்தும் மனிதர்களால் ஏற்படுத்தப்படும் காற்று மாசுக்கள் ஆகும்
  • காற்று மாசடைதலுக்கு 70% வாகனங்கள் வெளியேற்றும் புகையே காரணம்
  • நிலக்கரியைப் பயன்படுத்தும் மின் நிலையங்களிலிருந்து கந்தக டை ஆக்சைடு வெளியேறுகிறது
  • மோட்டார் வாகனங்களில் இருந்து நைட்ரஜன் ஆக்சைடு வெளியாகிறது
  • கந்தக டை ஆக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடு கார்பன் மோனாக்சைடு மற்றும் அங்கக வேதியல் பொருட்கள் வளிமண்டலத்தில் நுழைகின்றன
  • உலகில் நிகழ்ந்த தொழிலக பேரழிவில், 1984 -ம் ஆண்டு டிசம்பர் போபால் வாயுக் கசிவு மிக மோசமானது. இதில் 8000 மக்கள் உயிரிழந்தனர்
  • காற்றில் உள்ள மாசுக்கள் ரத்தக் குழாய், மூச்சுக் குழல் மூலம் உள்ளே நுழைந்து மனிதர்களுக்கு சுவாச கோளாறு, நுரையீரல் நோய், ஒவ்வாமை ,இதய நோய் போன்றவற்றிற்கு காரணமாகிறது



மாசுக் காற்றினால் ஏற்படும் விளைவுகள்

ஓசோன் அடுக்கு சீரழிவு


  • ஓசோன் வளி மண்டலத்தில் புவியின் மேற்பரப்பிலிருந்து 24 முதல் 40 கிலோ மீட்டர் உயரத்திற்கு மெல்லிய படலமாக காணப்படும்
  • ஓசோன் படலம் தீமை விளைவிக்கும் சூரியனின் புற ஊதாக் கதிர்களை கிரகிக்கிறது
  • குளிர்சாதனப் பெட்டிகளில் பயன்படுத்தும் குளோரோ ஃபுளூரோ கார்பன், ஓசோன் படலத்தை சேதப்படுத்தி வருகிறது
  • 1% ஓசோன் இழப்பு,2% புற ஊதாக் கதிர்வீ சலுக்கு காரணமாகிறது. இதன் விளைவாக நோய் எதிர்ப்பு சக்தி குறைவு, கண் நோய், தோல் புற்றுநோய் ஏற்படுகிறது


உலக வெப்பமயமாதல்


  • பசுமை வீடு வாயுக்கள் என அழைக்கப்படும் கார்பன்-டை-ஆக்சைடு, மீத்தேன், நீராவி, குளோரோ புளூரோ கார்பன் போன்றவற்றால் வளிமண்டலத்தில் வெப்ப தேக்கம் ஏற்படுகிறது. அதிகரித்துக் கொண்டு வரும் வெப்பத்தால் உலகில் பருவ மாற்றங்கள் ஏற்படுகின்றன
  • உலக வெப்பமயமாதல் வேளாண்மையை பாதிக்கிறது


அமில மழை


  • 1852 - ல் முதன்முதலில் அமிலமழை கண்டறியப்பட்டது
  • அமில மழைக்குக் காரணமான வாயுக்கள் கந்தக டை ஆக்சைடு மற்றும் நைட்ரஜன் ஆக்சைடு ஆகும்
  • இவை நீராவியோடு சேர்ந்து ஆக்சிஜன் மற்றும் சூரிய ஒளியால் நீர்த்த கந்தக மற்றும் நைட்ரிக் அமிலமாக மாறுகிறது. இந்த கலவை மழையாகும்போது அமிலமழை எனப்படும்
  • அமில மழையால் கடலில் உள்ள மிக நுண்ணிய உயிரிகளான பிளாங்டன் உயிர் வாழ இயலாது
  • கடல் வெப்பம் அதிகரித்தால் பவளப்பாறைகளின் வளர்ச்சி பாதிக்கப்படும்.பவளப்பாறைகள் கடல் நீரிலுள்ள கார்பனை சுண்ணாம்புக் கட்டுகிறார்கள் மாற்றி கார்பனின் அளவை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கின்றன


நச்சுப்புகை


  • புகையும், மூடுபனியும் கலந்த கலவையே நச்சுப்புகை எனப்படும்
  • நச்சு புகையில் உள்ள மாசுக்கள் கார்பன் மோனாக்சைடு, தூசு, அழுக்குத்துகள்
  • சூரிய ஒளியில் ஹைட்ரோ கார்பன் மற்றும் நைட்ரஜன் ஆக்சைடு சேர்வதால் இது உருவாகிறது
  • நச்சுப் புகையினால் நுரையீரல் நோய், நிமோனியா ஏற்படுகிறது


நீர் மாசடைதல்


  • நீர் மாசடைதல் என்பது வேதியியல், இயற்பியல் அல்லது உயிரியல் மாற்றம் நன்னீரின் தரத்தில் ஏற்படுவதாகும்


மழைநீர் மாசுக்கள்



i)நோய்க்கான காரணிகள்



  • பாக்டீரியா, வைரஸ், புரோட்டோசோவா, ஒட்டுண்ணிகள், புழுக்கள்
  • கழிவுநீர் மூலமும், சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் மூலமும் பரவுகின்றன



ii)ஆக்ஸிஜன் உறிஞ்சும் பாக்டீரியா


  • இவை பொருள்களை அழுகச் செய்வதன் மூலம் ஆக்சிஜனை பெறுகின்றன
  • இவ்வகை பாக்டீரியாக்கள் அதிக அளவில் நீர்நிலைகளில் காணப்படுகின்றன


iii)நீர் மாசுக்கள்


  • அமிலங்கள்,உப்பு, நச்சு உலோகங்கள்
  • எண்ணெய், பிளாஸ்டிக், பூச்சிக்கொல்லி போன்றவைகளால் நீர் மாசுபடுகிறது
  • காரீயம், காட்மியம் ஆகிய மாசுக்களை சிறிய உயிரினங்கள் உணவுடன் சேர்த்து உட்கொள்கின்றன. இந்த உயிரினங்கள் மீன்கள் மற்றும் கூடு மீன்களுக்கு உணவாகின்றன. இவற்றை மனிதர்கள் உண்பதால் வயிறு சம்பந்தமான நோய்களுக்கு ஆளாகின்றனர்


மிகையூட்ட வளமுறுதல்


  • மிகையூட்ட வளமுறுதல் என்பது இயற்கை மற்றும் செயற்கை பொருட்கள் நீர் ஆதாரத்தில் கலப்பதால் ஏற்படுவதாகும்
  • வேதியியல் பொருட்களான பாஸ்பேட்டுகள், உரங்கள், கழிவு நீர் போன்றவை நீர் வாழ் சூழலில் கலப்பதால் நீர் வாழ் சூழியல் பாதிக்கப்படுகின்றது
  • இதன் விளைவாக நீரில் உள்ள குறைந்த வீரியமுள்ள பாக்டீரியா, அதிக வீரியமுள்ள தாகி நீரில் உள்ள ஆக்ஸிஜனை முழுவதுமாக எடுத்துக்கொள்கிறது


3.நிலம் மாசடைதல்


  • நகரக் கழிவுகள் ஓரிடத்தில் கொட்டப்படுவதாலும், சாக்கடை அடைபட்டு, உடைபட்டு இருப்பதாலும், பூச்சிக்கொல்லி பயன்படுத்துவதாலும்,எண்ணெய் மற்றும் எரிபொருள் கொட்டப்படுவதாலும்,தொழிலகக் கழிவுகள் நேரடியாக மண்ணில் கலப்பதாலும் நிலம் மாசடைகிறது


4.ஒலி மாசடைதல்


  • மனிதர்கள் அல்லது இயந்திரங்களினால் ஏற்படும் ஒலி செயல்பாடுகளுக்கு இடையூறாக உள்ளது
  • அதிகமான அழுத்தம், படபடப்பு, கேட்கும் திறன் குறைதல், அதிக மன அழுத்தம் போன்ற தீமைகளை அதிக வலி ஏற்படுகிறது


5.உயிரி மருத்துவக் கழிவுகள்


  • இவை உயிருக்கு ஆபத்தான நோய்களைப் பரப்பக்கூடியது
  • எடுத்துக்காட்டு: கதிரியக்க இயந்திரங்கள்


6.மின்னணுவியல் கழிவுகள்


  • பயன்படுத்த முடியாத மின்னணுவியல் பொருட்கள் மின்னணுவியல் கழிவுகள் எனப்படும்
  • இந்தியாவில் 3,80,000 டன் மின்னணுவியல் கழிவுகள் உற்பத்தியாகின்றன
  • எடுத்துக்காட்டு: தொலைக்காட்சி, கைபேசி, கணினி, குளிர்சாதனப்பெட்டி, அச்சு இயந்திரங்கள்


7. சுரங்கக் கழிவுகள்


  • மகாநதி நிலக்கரிச் சுரங்கங்கள் நாளொன்றுக்கு 25 கோடி லிட்டர் நீரை பிராமனி நதியிலிருந்து எடுத்துப் பயன்படுத்தியபின், ஆயிரக்கணக்கான கேலன் கழிவுநீரை நாதிர் நதியில் விடுகின்றனர்
  • இந்த கழிவுநீரில் சாம்பல், எண்ணெய், கன உலோகங்கள், மசகு எண்ணெய், பாஸ்பரஸ், அமோனியா, யூரியா மற்றும் கந்தக அமிலம் ஆகியவை உள்ளன

Comments

Popular posts from this blog

6 - ம் வகுப்பு கணிதம் - விகிதம் மற்றும் விகித சமம்

6 - ம் வகுப்பு கணிதம் - விகிதம் மற்றும் விகித சமம் ஓர் அளவினை மற்றோர் அளவின் மடங்காக வெளிப்படுத்தி ஒப்பிடுவது விகிதம் எனப்படும் விகிதத்தைப் பின்னமாகவும் எழுதலாம். விகிதத்தைப் பெரும்பாலும் எளிய வடிவத்தில் எழுத வேண்டும் விகிதங்களின் பண்புகள் விகிதங்களுக்கு அலகு இல்லை. இது ஓர் எண் மதிப்பு. எடுத்துக்காட்டு: 8 கிலோமீட்டர்க்கும் 4 கிலோ மீட்டருக்கும் உள்ள விகிதம் 2 : 1 ஆகும் மற்றும் 2 கி. மீ : 1 கி.மீ அல்ல விகிதங்களின் இரு அளவுகளும் ஒரே அலகுடையதாக இருக்க வேண்டும்.எடுத்துக்காட்டு 4 கிலோ மீட்டர் மற்றும் 400 மீட்டர் ஆகியவற்றிற்கான விகிதம் காணும் போது அவற்றை (4×1000):400 = 4000:400=10:1 எனக் குறிப்பிடலாம் விகிதத்தில் ஒவ்வோர் எண்ணும் உறுப்பு என அழைக்கப்படும் விகிதத்தின் உறுப்புகளின் வரிசையை மாற்றி எழுத முடியாது 20:5 என்ற விகிதத்தை எளிய வடிவில் காண்க 20/5 = 4/1 =4:1 500கி மற்றும் 250 கி க்கும் உள்ள விகிதத்தை எளிய வடிவில் காண்க 500/250 = 2/1 =1 மாதவியும், அன்புவும் இரண்டு மேசைகளை முறையே ரூ.750 மற்றும் ரூ.900 க்கு வாங்குகின்றனர். அன்புவும், மாத...

6 - ம் வகுப்பு தமிழ் - பாடறிந்து ஒழுகுதல்

6 - ம் வகுப்பு தமிழ் - பாடறிந்து ஒழுகுதல் ஆசாரக்கோவை ஆசாரக்கோவை நூலை எழுதியவர் - பெருவாயின் முள்ளியார் இவர் பிறந்த ஊர் கயத்தூர். ஆசாரக்கோவை என்பதற்கு நல்ல ஒழுக்கங்களின் தொகுப்பு என்பது பொருள். இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. இந்நூல் நூறு வெண்பாக்களைக் கொண்டது தமிழர் பெருவிழா பொங்கல் விழா தமிழர் திருநாள் என்றும் போற்றப்படுகிறது கதிரவனுக்கு நன்றி கூறிச் சிறப்பு செய்யும் விழா பொங்கல் விழா. உழவர்கள் ஆடித்திங்களில் விதைப்பர். தைத்திங்களில் அறுவடை செய்து பயன் அடைவர். தைத் திங்களின் முதல் நாளில் பொங்கலிட்டு வழிபடுவர். எனவே இத்திருவிழாவை அறுவடைத் திருவிழா என்றும் அழைப்பர். உழவர்கள் இயற்கைக்கும் தம்முடன் உழைத்த கால்நடைகளுக்கும் இந்நாளில் நன்றி தெரிவித்து மகிழ்கின்றனர். எனவே இவ்விழாவை உழவர் திருநாள் என்றும் கூறுவர். போகித் திருநாள் பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பது ஆன்றோர் மொழி. வீட்டில் உள்ள பயனற்ற பொருள்களை நீக்கி வீட்டைத் தூய்மை செய்யும் நாள் போகித் திருநாள். இது மார்கழி மாதத்தின் இறுதி நாள் ஆகும் வாழ்க்கைக்கு வளம் தரும் மழைக் கடவுளை வழிப...

6 - ம் வகுப்பு கணிதம் - இயல் எண்கள், முழு எண்கள்

        Natural and Whole numbers         இயல் எண்கள், முழு எண்கள் இயல் எண்கள் அல்லது எண்ணும் எண்கள் அல்லது மிகை முழு எண்கள் N = {1,2,3,4,......} முழு எண்கள் அல்லது நிறைவெண்கள் W = {0,1,2,3,4......} எல்லா முழு எண்களுக்கும் தொடரி உண்டு பூஜ்ஜியத்தைத் தவிர எல்லா முழு எண்களுக்கும் முன்னி உண்டு எல்லா முழு எண்களையும் கூட்டவும், பெருக்கவும் முடியும் இயல் எண்ணினை அதைவிட சிறிய இயல் எண் அல்லது அதே எண்ணைக் கொண்டு கழிக்க முடியும் ஒரு பெரிய எண்ணை சிறிய எண்ணால் வகுக்க முடியும் அதிக இலக்கங்கள் உடைய எண்கள் நம் நாட்டில் 10,000            = பத்தாயிரம் 1,00,000         = ஒரு லட்சம் 10,00,000        = பத்து லட்சம் 1,00,00,000     =ஒரு கோடி 1,00,00,00,000 = நூறு கோடி உலகளவில் 10,000             = பத்தாயிரம் 100,000           = நூறாயிரம் 1,000,000        = ஒ...