Social geography
சுற்றுச்சூழல் பிரச்சனைகள்
- அதிவேகமான மக்கள் தொகை வளர்ச்சி, தொழில்மயமாதல் சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு காரணமாக உள்ளது
- சுற்றுச்சூழலில் அழிவு, மாசடைதல், காலநிலை மாற்றம் போன்றவற்றை ஏற்படுத்துகின்றன
சுற்றுச்சூழல் மாசடைதல்
- மாசடைதல் வேதியல் பொருட்களோ அல்லது ஒலி, வெப்பம் மற்றும் ஒளி ஆற்றல் மூலமாகவோ ஏற்படலாம்
1.காற்று மாசடைதல்
2.நீர் மாசடைதல்
3.நிலம் மாசடைதல்
4.ஒளியினால் ஏற்படும் மாசு
5.உயிரி-மருத்துவ கழிவுகளால் ஏற்படும் மாசுக்கள்
6.மின்னியல் கழிவுகளால் ஏற்படும் மாசுக்கள்
7.சுரங்கம் தோண்டுவதால் ஏற்படும் மாசுக்கள்
காற்று மாசடைதல்
- ஒவ்வொரு நாளும் மனிதன் சராசரியாக 2,200 முறை சுவாசிக்கிறான்
- ஒரு நாள் 16 கிலோ கிராம் காற்றை உள்ளிழுக்கிறான்
- காற்றிலுள்ள மாசுக்கள் இயற்கையாலும், மனிதர்களாலும் உருவாக்கப்படுகின்றன
- எரிமலை வெடிப்பு, காற்றரிப்பு,மகரந்தம் பரவல், உயிரிகளின் கூட்டுப்பொருள்கள் ஆவியாதலால் உண்டாகும் வாயு மற்றும் அணுக்கதிர்வீச்சு போன்றவைகளால் காற்று மாசுபடுகிறது
- வாகனங்களிலிருந்து வெளியேறும் கார்பன், அனல்மின் நிலையங்களில் இருந்து வெளியேறும் கார்பன் புகை, தொழிலகங்கள் மற்றும் சுத்திகரிப்பு ஆலைகளில் இருந்து வெளியேறும் கார்பன் இவை அனைத்தும் மனிதர்களால் ஏற்படுத்தப்படும் காற்று மாசுக்கள் ஆகும்
- காற்று மாசடைதலுக்கு 70% வாகனங்கள் வெளியேற்றும் புகையே காரணம்
- நிலக்கரியைப் பயன்படுத்தும் மின் நிலையங்களிலிருந்து கந்தக டை ஆக்சைடு வெளியேறுகிறது
- மோட்டார் வாகனங்களில் இருந்து நைட்ரஜன் ஆக்சைடு வெளியாகிறது
- கந்தக டை ஆக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடு கார்பன் மோனாக்சைடு மற்றும் அங்கக வேதியல் பொருட்கள் வளிமண்டலத்தில் நுழைகின்றன
- உலகில் நிகழ்ந்த தொழிலக பேரழிவில், 1984 -ம் ஆண்டு டிசம்பர் போபால் வாயுக் கசிவு மிக மோசமானது. இதில் 8000 மக்கள் உயிரிழந்தனர்
- காற்றில் உள்ள மாசுக்கள் ரத்தக் குழாய், மூச்சுக் குழல் மூலம் உள்ளே நுழைந்து மனிதர்களுக்கு சுவாச கோளாறு, நுரையீரல் நோய், ஒவ்வாமை ,இதய நோய் போன்றவற்றிற்கு காரணமாகிறது
மாசுக் காற்றினால் ஏற்படும் விளைவுகள்
ஓசோன் அடுக்கு சீரழிவு
- ஓசோன் வளி மண்டலத்தில் புவியின் மேற்பரப்பிலிருந்து 24 முதல் 40 கிலோ மீட்டர் உயரத்திற்கு மெல்லிய படலமாக காணப்படும்
- ஓசோன் படலம் தீமை விளைவிக்கும் சூரியனின் புற ஊதாக் கதிர்களை கிரகிக்கிறது
- குளிர்சாதனப் பெட்டிகளில் பயன்படுத்தும் குளோரோ ஃபுளூரோ கார்பன், ஓசோன் படலத்தை சேதப்படுத்தி வருகிறது
- 1% ஓசோன் இழப்பு,2% புற ஊதாக் கதிர்வீ சலுக்கு காரணமாகிறது. இதன் விளைவாக நோய் எதிர்ப்பு சக்தி குறைவு, கண் நோய், தோல் புற்றுநோய் ஏற்படுகிறது
உலக வெப்பமயமாதல்
- பசுமை வீடு வாயுக்கள் என அழைக்கப்படும் கார்பன்-டை-ஆக்சைடு, மீத்தேன், நீராவி, குளோரோ புளூரோ கார்பன் போன்றவற்றால் வளிமண்டலத்தில் வெப்ப தேக்கம் ஏற்படுகிறது. அதிகரித்துக் கொண்டு வரும் வெப்பத்தால் உலகில் பருவ மாற்றங்கள் ஏற்படுகின்றன
- உலக வெப்பமயமாதல் வேளாண்மையை பாதிக்கிறது
அமில மழை
- 1852 - ல் முதன்முதலில் அமிலமழை கண்டறியப்பட்டது
- அமில மழைக்குக் காரணமான வாயுக்கள் கந்தக டை ஆக்சைடு மற்றும் நைட்ரஜன் ஆக்சைடு ஆகும்
- இவை நீராவியோடு சேர்ந்து ஆக்சிஜன் மற்றும் சூரிய ஒளியால் நீர்த்த கந்தக மற்றும் நைட்ரிக் அமிலமாக மாறுகிறது. இந்த கலவை மழையாகும்போது அமிலமழை எனப்படும்
- அமில மழையால் கடலில் உள்ள மிக நுண்ணிய உயிரிகளான பிளாங்டன் உயிர் வாழ இயலாது
- கடல் வெப்பம் அதிகரித்தால் பவளப்பாறைகளின் வளர்ச்சி பாதிக்கப்படும்.பவளப்பாறைகள் கடல் நீரிலுள்ள கார்பனை சுண்ணாம்புக் கட்டுகிறார்கள் மாற்றி கார்பனின் அளவை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கின்றன
நச்சுப்புகை
- புகையும், மூடுபனியும் கலந்த கலவையே நச்சுப்புகை எனப்படும்
- நச்சு புகையில் உள்ள மாசுக்கள் கார்பன் மோனாக்சைடு, தூசு, அழுக்குத்துகள்
- சூரிய ஒளியில் ஹைட்ரோ கார்பன் மற்றும் நைட்ரஜன் ஆக்சைடு சேர்வதால் இது உருவாகிறது
- நச்சுப் புகையினால் நுரையீரல் நோய், நிமோனியா ஏற்படுகிறது
நீர் மாசடைதல்
- நீர் மாசடைதல் என்பது வேதியியல், இயற்பியல் அல்லது உயிரியல் மாற்றம் நன்னீரின் தரத்தில் ஏற்படுவதாகும்
மழைநீர் மாசுக்கள்
i)நோய்க்கான காரணிகள்
- பாக்டீரியா, வைரஸ், புரோட்டோசோவா, ஒட்டுண்ணிகள், புழுக்கள்
- கழிவுநீர் மூலமும், சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் மூலமும் பரவுகின்றன
ii)ஆக்ஸிஜன் உறிஞ்சும் பாக்டீரியா
- இவை பொருள்களை அழுகச் செய்வதன் மூலம் ஆக்சிஜனை பெறுகின்றன
- இவ்வகை பாக்டீரியாக்கள் அதிக அளவில் நீர்நிலைகளில் காணப்படுகின்றன
iii)நீர் மாசுக்கள்
- அமிலங்கள்,உப்பு, நச்சு உலோகங்கள்
- எண்ணெய், பிளாஸ்டிக், பூச்சிக்கொல்லி போன்றவைகளால் நீர் மாசுபடுகிறது
- காரீயம், காட்மியம் ஆகிய மாசுக்களை சிறிய உயிரினங்கள் உணவுடன் சேர்த்து உட்கொள்கின்றன. இந்த உயிரினங்கள் மீன்கள் மற்றும் கூடு மீன்களுக்கு உணவாகின்றன. இவற்றை மனிதர்கள் உண்பதால் வயிறு சம்பந்தமான நோய்களுக்கு ஆளாகின்றனர்
மிகையூட்ட வளமுறுதல்
- மிகையூட்ட வளமுறுதல் என்பது இயற்கை மற்றும் செயற்கை பொருட்கள் நீர் ஆதாரத்தில் கலப்பதால் ஏற்படுவதாகும்
- வேதியியல் பொருட்களான பாஸ்பேட்டுகள், உரங்கள், கழிவு நீர் போன்றவை நீர் வாழ் சூழலில் கலப்பதால் நீர் வாழ் சூழியல் பாதிக்கப்படுகின்றது
- இதன் விளைவாக நீரில் உள்ள குறைந்த வீரியமுள்ள பாக்டீரியா, அதிக வீரியமுள்ள தாகி நீரில் உள்ள ஆக்ஸிஜனை முழுவதுமாக எடுத்துக்கொள்கிறது
3.நிலம் மாசடைதல்
- நகரக் கழிவுகள் ஓரிடத்தில் கொட்டப்படுவதாலும், சாக்கடை அடைபட்டு, உடைபட்டு இருப்பதாலும், பூச்சிக்கொல்லி பயன்படுத்துவதாலும்,எண்ணெய் மற்றும் எரிபொருள் கொட்டப்படுவதாலும்,தொழிலகக் கழிவுகள் நேரடியாக மண்ணில் கலப்பதாலும் நிலம் மாசடைகிறது
4.ஒலி மாசடைதல்
- மனிதர்கள் அல்லது இயந்திரங்களினால் ஏற்படும் ஒலி செயல்பாடுகளுக்கு இடையூறாக உள்ளது
- அதிகமான அழுத்தம், படபடப்பு, கேட்கும் திறன் குறைதல், அதிக மன அழுத்தம் போன்ற தீமைகளை அதிக வலி ஏற்படுகிறது
5.உயிரி மருத்துவக் கழிவுகள்
- இவை உயிருக்கு ஆபத்தான நோய்களைப் பரப்பக்கூடியது
- எடுத்துக்காட்டு: கதிரியக்க இயந்திரங்கள்
6.மின்னணுவியல் கழிவுகள்
- பயன்படுத்த முடியாத மின்னணுவியல் பொருட்கள் மின்னணுவியல் கழிவுகள் எனப்படும்
- இந்தியாவில் 3,80,000 டன் மின்னணுவியல் கழிவுகள் உற்பத்தியாகின்றன
- எடுத்துக்காட்டு: தொலைக்காட்சி, கைபேசி, கணினி, குளிர்சாதனப்பெட்டி, அச்சு இயந்திரங்கள்
7. சுரங்கக் கழிவுகள்
- மகாநதி நிலக்கரிச் சுரங்கங்கள் நாளொன்றுக்கு 25 கோடி லிட்டர் நீரை பிராமனி நதியிலிருந்து எடுத்துப் பயன்படுத்தியபின், ஆயிரக்கணக்கான கேலன் கழிவுநீரை நாதிர் நதியில் விடுகின்றனர்
- இந்த கழிவுநீரில் சாம்பல், எண்ணெய், கன உலோகங்கள், மசகு எண்ணெய், பாஸ்பரஸ், அமோனியா, யூரியா மற்றும் கந்தக அமிலம் ஆகியவை உள்ளன
Comments
Post a Comment