Skip to main content

6 - ம் வகுப்பு சமூக அறிவியல் - பண்டைத் தமிழகம்


        
              பண்டைத் தமிழகம்


  • ஆங்கிலேயர் ஆட்சியில் தென்னாட்டின் பெரும்பகுதி சென்னை மாகாணம் என்று அழைக்கப்பட்டது
  • நாடு சுதந்திரம் பெற்ற பின் தமிழ் மொழி பேசப்படும் மாநிலம் தனியாக பிரிக்கப்பட்டது.அதற்கு 1967 - ம் ஆண்டில் முதலமைச்சராக இருந்த அறிஞர் அண்ணா அவர்கள் தமிழ்நாடு என்று பெயர் சூட்டினார்
  • தென்னாட்டின் தென்பகுதியைப் பாண்டியர்களும், மேற்குப்பகுதியை சேரர்களும் ,வடகிழக்குப் பகுதியைச் சோழர்களும் ஆண்டு வந்துள்ளனர்

மூன்று சங்கங்கள்

  • பாண்டியர்களின் தலைநகர் தென்மதுரையில் தமிழ் வளர்த்த தலைச்சங்கம் கூடியது
  • கபாடபுரத்தைத் தலைநகராகக் கொண்ட பாண்டிய அரசில், தமிழ் வளர்த்த புலவர்கள் கூடும் இடைச்சங்கம் நடைபெற்றது
  • மதுரை மூதூரில் தமிழ் வளர்த்த புலவர்களின் கடைச்சங்கம் நடைபெற்றது
  • தமிழ் மொழியின் வளத்தைப் பெருக்கும் இலக்கியம் வளர்த்த தலை, இடை, கடைச் சங்கங்கள் மூன்றும் தலைமுறை பலவாகப் பாண்டியர் தலைமையில் நடைபெற்றது

வரலாற்றுக் காலம்

  • சங்ககாலம் என்பது கடைச்சங்கத்தில் புலவர்கள் அவ்வப்போது கூடி தமிழ் ஆய்வு செய்த காலம் ஆகும்
  • தற்காலத்தில் சங்க இலக்கியம் என கிடைத்துள்ள நூல்கள் எட்டுத்தொகையும், பத்துப்பாட்டும் ஆகும்.அவற்றில் உள்ள செய்யுட்களை கபிலர், பரணர், ஔவையார், நக்கீரர் போன்ற பல நூறு புலவர்கள் இயற்றியுள்ளனர்.அவற்றின் மூலம் தமிழ் மக்களின் நாகரிகம், பழக்க வழக்கம், பண்பாடு, ஆட்சி முறை போன்றவற்றை அறிந்து கொள்ள முடியும்
  • கடைச்சங்க காலத்திற்கு முன்னரே தோன்றிய இலக்கண நூல் தொல்காப்பியம்
  • சங்க காலத்தில் அனைத்து சமயத்தாரும் வியந்து போற்றும் அளவிற்கு இருந்த நூல் திருக்குறள்
  • தமிழ் மொழி தமிழ் இலக்கண வரம்பு கொண்டு வளர்ந்த தன்மையால் செந்தமிழ் என அழைக்கப்படுகிறது
  • பிற மொழிகளின் துணை தேவையின்றி தமிழ் வளரும் திறன் பெற்றிருப்பதால் தமிழ் உயர்தனிச் செம்மொழி என்றும் அழைக்கப்படுகிறது
  • அக்காலத்தில் புகார் என்னும் காவிரிப்பூம்பட்டினம், கொற்கை, முசிறி, தொண்டி, வஞ்சி முதலான பல துறைமுகங்கள் இருந்தன
  • தமிழ்நாடு,மேற்கிலும் கிழக்கிலும் இருந்த எகிப்து, ரோம், சீனம் போன்ற பல நாடுகளுடன் பண்டமாற்று வணிகம் செய்துவந்தது
  • சங்க காலத்தில் தமிழ் புலவர்கள் நிலத்தை ஐந்து இயற்கைப் பிரிவாகப் பிரித்துள்ளனர்
  1. மலைகளும், அது சார்ந்த நிலமும் குறிஞ்சி எனப்படும்
  2. காடுகளும், அது சார்ந்த நிலமும் முல்லை எனப்படும்
  3. கடலும், கடற்கரைப் பகுதியும் நெய்தல் எனப்படும்
  4. நீர் வளத்துடன் வயல் சூழ்ந்த பகுதி மருதம் எனப்படும்
  5. கடும் வறட்சிக்கு உள்ளாகித் திரிந்த நிலம் பாலை எனப்படும்





Comments

Popular posts from this blog

6 - ம் வகுப்பு கணிதம் - இயல் எண்கள், முழு எண்கள்

        Natural and Whole numbers         இயல் எண்கள், முழு எண்கள் இயல் எண்கள் அல்லது எண்ணும் எண்கள் அல்லது மிகை முழு எண்கள் N = {1,2,3,4,......} முழு எண்கள் அல்லது நிறைவெண்கள் W = {0,1,2,3,4......} எல்லா முழு எண்களுக்கும் தொடரி உண்டு பூஜ்ஜியத்தைத் தவிர எல்லா முழு எண்களுக்கும் முன்னி உண்டு எல்லா முழு எண்களையும் கூட்டவும், பெருக்கவும் முடியும் இயல் எண்ணினை அதைவிட சிறிய இயல் எண் அல்லது அதே எண்ணைக் கொண்டு கழிக்க முடியும் ஒரு பெரிய எண்ணை சிறிய எண்ணால் வகுக்க முடியும் அதிக இலக்கங்கள் உடைய எண்கள் நம் நாட்டில் 10,000            = பத்தாயிரம் 1,00,000         = ஒரு லட்சம் 10,00,000        = பத்து லட்சம் 1,00,00,000     =ஒரு கோடி 1,00,00,00,000 = நூறு கோடி உலகளவில் 10,000             = பத்தாயிரம் 100,000           = நூறாயிரம் 1,000,000        = ஒ...

6 - ம் வகுப்பு கணிதம் - வகுத்திகள், காரணிகள்

                            Divisors and Factors                வகுத்திகள், காரணிகள் கணித மேதைகளின் சக்கரவர்த்தி என அழைக்கப்படுபவர் காஸ்(Gauss) வகுத்திகள் ஓர் எண்ணை மீதியின்றி வகுக்கும் எண்கள் அனைத்தும் அந்த எண்ணின் வகுத்திகள் எனப்படும் 1 மற்றும் அதே எண்ணால் மட்டும் வகுபடும் எண்கள் பகா எண்கள் எனப்படும் பகா எண்களில் ஒரே ஒரு இரட்டைப்படை எண் மட்டுமே உண்டு. அது 2 பகா எண்கள் = 1,2,3,5,7,11,13,....... காரணிகள் ஓர் எண்ணின் வகுத்திகளில், 1 மற்றும் அதே எண்ணைத் தவிர பிற வகுத்திகள் அனைத்தும் காரணிகள் எனப்படும் பகா எண்களுக்கு காரணிகள் இல்லை இரண்டுக்கு மேற்பட்ட வகுத்திகள் கொண்ட எண்கள் பகு எண்கள் எனப்படும் வகுபடுந்தன்மை 2 - ஆல் வகுபடுந்தன்மை 1 - ம் இலக்க எண் 0,2,4,6,8 என்ற இரட்டைப் படை எண்ணாக இருந்தால் மட்டுமே 2 - ஆல் வகுபடும் 5 - ஆல் வகுபடுந்தன்மை 1 - ம் இலக்க எண் பூஜ்ஜியம் அல்லது 5 ஆக இருப்பின் அது 5 ஆல் வகுபடும் 10 - ஆல் வகுபடு...

6 - ம் வகுப்பு கணிதம் - விகிதம் மற்றும் விகித சமம்

6 - ம் வகுப்பு கணிதம் - விகிதம் மற்றும் விகித சமம் ஓர் அளவினை மற்றோர் அளவின் மடங்காக வெளிப்படுத்தி ஒப்பிடுவது விகிதம் எனப்படும் விகிதத்தைப் பின்னமாகவும் எழுதலாம். விகிதத்தைப் பெரும்பாலும் எளிய வடிவத்தில் எழுத வேண்டும் விகிதங்களின் பண்புகள் விகிதங்களுக்கு அலகு இல்லை. இது ஓர் எண் மதிப்பு. எடுத்துக்காட்டு: 8 கிலோமீட்டர்க்கும் 4 கிலோ மீட்டருக்கும் உள்ள விகிதம் 2 : 1 ஆகும் மற்றும் 2 கி. மீ : 1 கி.மீ அல்ல விகிதங்களின் இரு அளவுகளும் ஒரே அலகுடையதாக இருக்க வேண்டும்.எடுத்துக்காட்டு 4 கிலோ மீட்டர் மற்றும் 400 மீட்டர் ஆகியவற்றிற்கான விகிதம் காணும் போது அவற்றை (4×1000):400 = 4000:400=10:1 எனக் குறிப்பிடலாம் விகிதத்தில் ஒவ்வோர் எண்ணும் உறுப்பு என அழைக்கப்படும் விகிதத்தின் உறுப்புகளின் வரிசையை மாற்றி எழுத முடியாது 20:5 என்ற விகிதத்தை எளிய வடிவில் காண்க 20/5 = 4/1 =4:1 500கி மற்றும் 250 கி க்கும் உள்ள விகிதத்தை எளிய வடிவில் காண்க 500/250 = 2/1 =1 மாதவியும், அன்புவும் இரண்டு மேசைகளை முறையே ரூ.750 மற்றும் ரூ.900 க்கு வாங்குகின்றனர். அன்புவும், மாத...