தாவரங்கள் மற்றும் விலங்குகள் சுவாசித்தல் சுவாசித்தலின் அவசியம் நாம் உண்ணும் உணவு சுவாசித்தலின் போது உயிர்வளியுடன் (ஆக்ஸிஜனுடன்) இணைந்து வேதியியல் மாற்றம் அடைந்து ஆற்றலாக வெளிப்படுகிறது சுவாசித்தலின் போது உயிர்வளி நுரையீரலுக்கு கடத்தப்பட்டு இரத்தத்துடன் கலக்கிறது உயர்வளி கலந்த இரத்தம் உடலின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று அங்குள்ள அனைத்து செல்களுக்கும் சென்றடைகிறது உயிர்வளி செல்களின் உள்ளே சென்றடையும் பொழுது சக்தி பொருள் எரிக்கப்படுகிறது. இது ஆக்சிஜனேற்றம் அடைதல் எனப்படும் ஆக்சிஜனேற்றம் அடையும் பொழுது நீர் மற்றும் கரியமில வாயு கழிவுப்பொருளாக செல்லில் இருந்து வெளியேற்றப்பட்டு உயிர்வளியால் ஆற்றல் வெளிக்கொண்டு வரப்படுகிறது. இது சுவாசித்தல் அல்லது செல் சுவாசித்தல் எனப்படும் சுவாசித்தலின் வகைகள் 1.காற்றுச் சுவாசம் 2.காற்றில்லாச் சுவாசம் (நொதித்தல்) 1.காற்றுச் சுவாசம் உயிர்வளியின் முன்னிலையில் நடைபெறும் சுவாசம் காற்றுச் சுவாசம் எனப்படும் குளுக்கோஸ் + உயிர்வளி —> கரியமில வாயு + நீர் + ஆற்றல் 2.காற்றில்லாச் சுவாசம் சில நுண்ணுயி...
TNPSC Center,TNPSC notes in tamil,samaseer kalvi tamil medium notes