Skip to main content

Posts

Showing posts from 2019

6 - ம் வகுப்பு கணிதம் - வகுத்திகள், காரணிகள்

                            Divisors and Factors                வகுத்திகள், காரணிகள் கணித மேதைகளின் சக்கரவர்த்தி என அழைக்கப்படுபவர் காஸ்(Gauss) வகுத்திகள் ஓர் எண்ணை மீதியின்றி வகுக்கும் எண்கள் அனைத்தும் அந்த எண்ணின் வகுத்திகள் எனப்படும் 1 மற்றும் அதே எண்ணால் மட்டும் வகுபடும் எண்கள் பகா எண்கள் எனப்படும் பகா எண்களில் ஒரே ஒரு இரட்டைப்படை எண் மட்டுமே உண்டு. அது 2 பகா எண்கள் = 1,2,3,5,7,11,13,....... காரணிகள் ஓர் எண்ணின் வகுத்திகளில், 1 மற்றும் அதே எண்ணைத் தவிர பிற வகுத்திகள் அனைத்தும் காரணிகள் எனப்படும் பகா எண்களுக்கு காரணிகள் இல்லை இரண்டுக்கு மேற்பட்ட வகுத்திகள் கொண்ட எண்கள் பகு எண்கள் எனப்படும் வகுபடுந்தன்மை 2 - ஆல் வகுபடுந்தன்மை 1 - ம் இலக்க எண் 0,2,4,6,8 என்ற இரட்டைப் படை எண்ணாக இருந்தால் மட்டுமே 2 - ஆல் வகுபடும் 5 - ஆல் வகுபடுந்தன்மை 1 - ம் இலக்க எண் பூஜ்ஜியம் அல்லது 5 ஆக இருப்பின் அது 5 ஆல் வகுபடும் 10 - ஆல் வகுபடு...

இயந்திரவியல் மற்றும் பருப்பொருட்களின் பண்புகள்

         Mechanics and Properties of Matter      இயந்திரவியல் மற்றும் பருப்பொருளின்                                பண்புகள் குறிப்பிட்ட நிறை மற்றும் பருமனை உடைய பொருள் பருப்பொருளாகும் திட, திரவ, வாயு நிலைகளில் பருப்பொருட்கள் காணப்படுகின்றன வெறும் அயனியாக்கப்பட்ட அணுக்கருக்களாலான பருப்பொருளின் நான்காம் நிலை பிளாஸ்மா எனப்படும் பருப்பொருளின் ஒவ்வொரு நிலைக்கும் சில தனிப் பண்புகள் உள்ளன எடுத்துக்காட்டு:        i)திடப்பொருளுக்கு பருமனும்,வடிவமும்,      மீட்சிப்பண்பும் உண்டு      ii)ஒரு வளிமமானது அதனை உள்ளடக்கிய மூடிய கொள்கலனின் பருமனைக் கொண்டிருக்கும்        iii)ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் திரவம் நிலையான பருமனைப் பெற்றிருக்கும். ஆனால் அதற்கு வடிவம் இல்லை இந்த மாறுபட்ட பண்புகளுக்கான காரணிகள்        i)அணுவிடை அல்லது மூலக்கூறிடை விசை       ...

இயற்பியல் - ஒளி

                                     Light                        ஒளி ஒளி என்பது ஆற்றலின் ஒரு வடிவம் ஒளி மின்காந்த அலை வடிவத்தில் செல்கின்றது எதிரொளிப்பு விதிகள் படுகதிர், எதிரொளிப்பு கதிர் மற்றும் படு புள்ளிக்கு வரையப்படும் குத்துக்கோடு ஆகிய இம்மூன்றும் ஒரே தளத்தில் அமைகின்றன படு கோணமும் எதிரொளிப்பு கோணமும் சமம் கோளக ஆடிகள் எதிரொளிக்கும் பகுதி கோளக வடிவில் உள்ள ஆடிகள் கோளக ஆடிகள் எனப்படும் கோளக ஆடியில், எதிரொளிக்கும் பகுதி கோளத்தின் மையத்தை நோக்கி இருந்தால் அவை குழி ஆடிகள் எனப்படும் கோளக ஆடியில், எதிரொளிக்கும் பகுதி வெளிப்பக்கமாக வளைந்திருந்தால் அவை குவி ஆடிகள் எனப்படும் கோளக ஆடி எந்த உள்ளீடற்ற கோளத்தின் ஒரு பகுதியாக அமைகிறதோ, அந்தக் கோளத்தின் மையம் வளைவு மையம் எனப்படும் கோளக ஆடியின் வடிவியல் மையம் ஆடி மையம் எனப்படும் ஆடி மையத்தையும், வளைவு மையத்தையும் இணைக்கும் செங்குத்துக் கோடு முதன்மை அச்...

6 - ம் வகுப்பு சமூக அறிவியல் - சிந்துவெளி நாகரிகம்

                         சிந்துவெளி நாகரிகம் ஆதிமனிதன் கல்லைப் பயன்படுத்திய காலம் கற்காலம் எனப்படும் மனிதனுக்கு முதன்முதலில் தெரிந்த உலோகம் செம்பு (தாமிரம்) ஆதிமனிதன் செம்பு, கல் ஆகிய இரண்டையும் பயன்படுத்திய காலம் செம்புக்கற்காலம் எனப்படும் அக்காலத்தில்தான் இந்தியாவில் மிகத் தொன்மை வாய்ந்த நகர நாகரிகமான சிந்து வெளி(ஹரப்பா) நாகரிகம் உருவானது ஹரப்பா ஹரப்பா என்ற சிந்தி மொழிச் சொல்லுக்குப் புதையுண்ட நகரம் என்று பொருள் சுமார் 4700 ஆண்டுகளுக்கு முன் இந்த நாகரிகம் இந்தியாவில் இருந்ததாக கண்டறியப்பட்டுள்ளது ஹரப்பா நாகரிகத்தைப் போன்ற நகரங்களின் இடிபாடுகள் மொகஞ்சதாரோ, சான்குதாரோ, கலிபங்கன்,லோத்தல் போன்ற வேறு பல இடங்களிலும் கண்டெடுக்கப்பட்டுள்ளன மொஹஞ்சதாரோ என்ற சிந்தி மொழிச் சொல்லுக்கு இடுகாட்டு மேடு என்று பொருள் பெருங்குளம் சிந்துவெளி நகரங்களின் கோட்டைப் பகுதியில் கட்டமைப்பு நுணுக்கங்கள் மிக்க குளம் அமைக்கப்பட்டிருந்தது கட்டடங்கள் வீடுகள் வரிசையாகவும், ஒழுங்காகவும், நேர்த்தியுடனும் கட்டப்பட்டிருந்த...

7 - ம் வகுப்பு சமூக அறிவியல் - வட இந்திய அரசுகள் - இராசபுத்திரர்கள்

 வட இந்திய அரசுகள் - இராசபுத்திரர்கள் வரலாற்றினை எளிய முறையில் புரிந்து கொள்வதற்காக வரலாற்றாளர்கள், வரலாற்றினை, காலத்தின் அடிப்படையில் பண்டைய காலம், இடைக்காலம் மற்றும் நவீன காலம் எனப் பிரித்துள்ளனர் கி.பி.8 - ம் நூற்றாண்டு முதல் கி.பி.18 - ம் நூற்றாண்டு வரை உள்ள காலம் இடைக்காலம் எனப்படும் கி.பி. 8 - ம் நூற்றாண்டு முதல் கி.பி.13 - ம் நூற்றாண்டு வரை உள்ள காலம் இடைக்காலம் எனப்படும் கி.பி.13 - ம் நூற்றாண்டு முதல் கி.பி. 18 - ம் நூற்றாண்டு வரை உள்ள காலம் பிந்தைய இடைக்காலம் எனப்படும் இராசபுத்திரர்கள் காலம் (கி.பி.647 - கி.பி.1200) 36 வகை இராசபுத்திரர்கள் வட இந்தியாவில் ஆட்சி செய்தார்கள். அவர்களில் வலிமை பெற்ற இராசபுத்திரர்கள் 1. அவந்தியை ஆட்சி செய்த பிரதிகாரர்கள் 2. வங்காளத்தை ஆட்சி செய்த பாலர்கள் 3. ஆஜ்மீர், டெல்லியை ஆண்ட சௌகான்கள் 4. டெல்லியை ஆட்சி செய்த தோமர்கள் 5. கனோஜ் பகுதியை ஆட்சி செய்த ரத்தோர்கள் 6. மேவார் பகுதியை ஆட்சி செய்த சிசோதியர்கள் அல்லது குகிலர்கள் 7. பந்தல்கண்டை ஆட்சி செய்த சந்தேலர்கள் 8. மாளவத்தை ஆட்சி செய்த பரமாரர்கள் 9. வங்காளத்...

6 - ம் வகுப்பு சமூக அறிவியல் - சமுதாயமும் பள்ளியும்

           சமுதாயமும் பள்ளியும் சமுதாயத்தின் அனைத்து முன்னேற்றங்களுக்கும் வழிவகுக்கும் அடிப்படை முதலீடு கல்வி ஆகும்.எனவே அனைவருக்கும் கட்டாய இலவச கல்வி திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது சமுதாய முன்னேற்றத்தின் விளைநிலம் பள்ளி ஆகும் பள்ளி சமுதாய நிறுவனங்களுள் ஒன்று பள்ளி சமுதாயத்தின் கல்வி முன்னேற்றத்திற்கு வழி வகுக்கிறது குழந்தைகள் வருங்காலச் சமுதாயத்தின் குடிமக்கள். எனவே பொறுப்பும், ஒழுங்கும் கட்டுப்பாடும் உள்ள இளைஞர்களை உருவாக்க பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன ஒழுங்கு, கட்டுப்பாடு, சமத்துவம், கூட்டுறவு மனப்பான்மை, சேர்ந்து வாழும் முறை, உதவி மனப்பான்மை, ஒத்துணர்வு ஆகிய நல்லொழுக்க நெறிமுறைகளை குழந்தைகளுக்கு பள்ளியிலிருந்து கற்பிக்கப்படுகிறது பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சமுதாயத்தோடு இணைந்து செயல்படும் போது அவர்கள் மாணவர் சமுதாயம் என்றும், வளரிளம் பருவத்தினர் என்றும், இளைஞர் சமுதாயம் என்றும் அழைக்கப்படுகின்றனர்

7 - ம் வகுப்பு சமூக அறிவியல் - தக்காண அரசுகள்

        தக்காண அரசுகள் இந்தியாவின் தெற்குப்பகுதி தக்காணம் அல்லது தட்சணபதம் என அழைக்கப்படுகிறது சாளுக்கியர்கள் (கி.பி. 6 - 12 நூற்றாண்டுகள்) சாளுக்கியர்களின் ஆட்சி காலத்தை மூன்று விதமாகப் பிரிக்கலாம் 1.முற்கால மேலைச் சாளுக்கியர் (கி.பி. 6 - 8 நூற்றாண்டுகள்) 2. பிற்கால மேலைச் சாளுக்கியர் (கிபி 10 - 12 நூற்றாண்டுகள்) 3. கீழைச் சாளுக்கியர் (கி.பி. 7 - 12 நூற்றாண்டுகள்) 1.முற்கால மேலைச் சாளுக்கியர் கி.பி. 6 - ம் நூற்றாண்டில் இன்றைய கர்நாடக மாநிலம் அமைந்துள்ள பகுதியில் சாளுக்கியர்கள் தங்களது அரசாட்சியை ஏற்படுத்தினர் தற்போது பதாமி என்றழைக்கப்படும் பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள வாதாபி அவர்களுடைய தலைநகரமாய் விளங்கியது முதலாம் புலிகேசி (கி.பி. 543 - 566) வாதாபி சாளுக்கிய மரபிற்கு அடித்தளமிட்டவர் 2. பிற்கால மேலைச் சாளுக்கியர்  பிற்கால மேலைச் சாளுக்கிய மரபைத் தொடங்கிய அரசர் இரண்டாம் தைலப்பா (கிபி 973 - 997) 3. கீழைச் சாளுக்கியர் கீழைச் சாளுக்கிய மரபைத் தொடங்கிய மன்னர் விஷ்ணுவர்த்தன் ஆவார் குலோத்துங்கச் சோழன் கீழைச் சாளுக்கிய நாட்டினை...

6 - ம் வகுப்பு சமூக அறிவியல் - பொருளாதாரம்

                        பொருளாதாரம் மனிதன் கண்ட முதல் தொழில் பயிர்த்தொழில் ஆகும் மழை, குளிர், வெயில் ஆகியவற்றிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக குகைகளில் வாழ்ந்த மனிதன் காலப்போக்கில் வீடு கட்டி வாழத்தொடங்கினான். நகரங்களும் உருவாகியது மனிதன் தன் தேவைகளை நிறைவு செய்து கொள்ள ஆடைகள், காலணிகள், மிதிவண்டிகள், மகிழ்வுந்துகள், வானொலி, தொலைக்காட்சிப் பெட்டிகள் போன்ற பல பொருட்களைத் தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்கிறான் உழவர்கள், தொழிலாளர்கள், பணியாளர்கள் ஆகியோர் பங்காற்றி நாட்டின் வருமானத்தைப்  பெருக்குகின்றனர். எனவே இது நாட்டு வருவாய் எனப்படும் தனியாக ஒருவருக்கு மட்டும் கிடைக்கும் வருமானம் தனிநபர் வருமானம் எனப்படும் உற்பத்தி, நுகர்ச்சி, பகிர்வு ஆகிய மூன்றும் பொருளாதாரத்தின் அடிப்படை ஆகும் வாங்குவதும், விற்பதும் நடைபெறும் இடம் சந்தை எனப்படும் மக்கள் சந்தையில் இருந்து பொருட்களை வாங்கி தங்களின் தேவைகளை நிறைவு செய்து கொள்வது நுகர்ச்சி எனப்படும் பொருட்களை வாங்கி விற்பதற்கு வணிகம் என்று பெயர். இத்தொழிலில் ஈடுபடுபவர்கள...

காந்தவியல்

                        Magnetism                        காந்தவியல் காந்தவியல் என்ற சொல் கிரேக்க நாட்டில் உள்ள மக்னீஷியா எனப்படும் தீவில் கண்டெடுக்கப்பட்ட மேக்னடைட் (Fe 3 O 4 ) என்ற இரும்புத் தாதுவின் பெயரிலிருந்து ஏற்பட்டது கிபி.1100 - ம் ஆண்டுகளில் கடல்வழிப் பயணங்களின்போது திசையை அறிய சுழல் காந்த ஊசியினை சீனர்கள் பயன்படுத்தினர் காந்தவியலின் அடிப்படைக் கோட்பாடுகளை நிறுவியவர் கில்பர்ட் புவி மிகப்பெரிய சட்ட காந்தமாகச் செயல்படுகிறது என்ற கருத்தை கூறியவர் கில்பர்ட் இரு வகையான காந்தங்கள் உள்ளன இயற்கைக் காந்தம் செயற்கைக் காந்தம் 1.இயற்கைக் காந்தம் இயற்கையாகவே கிடைக்கக்கூடிய காந்தம் இயற்கைக் காந்தம் எனப்படும்  மேக்னடைட் என்னும் காந்தக்கல்லே மிகவும் வலிமையான இயற்கைக்காந்தம் ஆகும் 2.செயற்கைக் காந்தம் மனிதர்களால் உருவாக்கப்பட்ட காந்தம் செயற்கைக் காந்தம் எனப்படும் செயற்கைக் காந்தங்களை தேவையான வடிவத்திலும், தேவையான வலிமையுடனும் அமைக்க முடியும்...

புவியியல் - இந்தியா-வேளாண் தொழில்

      Agricultural Pattern           இந்தியா-வேளாண் தொழில் வேளாண் தொழிலை நிர்ணயிக்கும் காரணிகள் 1.நிலத்தோற்றம் 2.காலநிலை 3.மண்வகை 4.நீர் 1.நிலத்தோற்றம் மலைகள், சமவெளிகள், பீடபூமிகள் போன்ற பல்வேறு நிலத்தோற்றங்களை நம் நாடு கொண்டுள்ளது வண்டல் மண் நிறைந்த சமவெளிகள் வேளாண்மைக்கு உகந்ததாக உள்ளது எடுத்துக்காட்டு: கங்கை மற்றும் காவிரி ஆற்றுச் சமவெளிகள் 2.காலநிலை இந்தியாவின் பெரும்பகுதி வெப்ப மண்டலத்தில் அமைந்து, வெப்பமண்டல பருவக்காற்று காலநிலையைப் பெற்றுள்ளது கோதுமை பயிருக்கு மித வெப்பம் தேவை. ஆனால் நெற்பயிருக்கு அதிக வெப்பம் தேவை. ஆகையால் பஞ்சாப் மாநிலத்தில் கோதுமையும், தமிழ்நாட்டில் நெல்லும் பயிரிடப்படுகிறது 3.மண் வகைகள் வளமிக்க வண்டல் மண் நெல் மற்றும் கரும்பு விளைச்சலுக்கும், கரிசல் மண் பருத்தி விளைவிக்கவும்  ஏற்றதாக உள்ளது 4.நீர் இந்தியா சமச்சீரற்ற மழையைப் பெறும் பருவக்காற்று நாடு நீர் அதிகம் தேவைப்படும் பயிர்கள், மழை அதிகமாக பெறும் பகுதிகளிலும், வறட்சியைத் தாங்கும் ப...