பொருளாதாரம்
- மனிதன் கண்ட முதல் தொழில் பயிர்த்தொழில் ஆகும்
- மழை, குளிர், வெயில் ஆகியவற்றிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக குகைகளில் வாழ்ந்த மனிதன் காலப்போக்கில் வீடு கட்டி வாழத்தொடங்கினான். நகரங்களும் உருவாகியது
- மனிதன் தன் தேவைகளை நிறைவு செய்து கொள்ள ஆடைகள், காலணிகள், மிதிவண்டிகள், மகிழ்வுந்துகள், வானொலி, தொலைக்காட்சிப் பெட்டிகள் போன்ற பல பொருட்களைத் தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்கிறான்
- உழவர்கள், தொழிலாளர்கள், பணியாளர்கள் ஆகியோர் பங்காற்றி நாட்டின் வருமானத்தைப் பெருக்குகின்றனர். எனவே இது நாட்டு வருவாய் எனப்படும்
- தனியாக ஒருவருக்கு மட்டும் கிடைக்கும் வருமானம் தனிநபர் வருமானம் எனப்படும்
- உற்பத்தி, நுகர்ச்சி, பகிர்வு ஆகிய மூன்றும் பொருளாதாரத்தின் அடிப்படை ஆகும்
- வாங்குவதும், விற்பதும் நடைபெறும் இடம் சந்தை எனப்படும்
- மக்கள் சந்தையில் இருந்து பொருட்களை வாங்கி தங்களின் தேவைகளை நிறைவு செய்து கொள்வது நுகர்ச்சி எனப்படும்
- பொருட்களை வாங்கி விற்பதற்கு வணிகம் என்று பெயர். இத்தொழிலில் ஈடுபடுபவர்கள் வணிகர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்
- பொருட்கள் உற்பத்தியாகும் இடங்களில் இருந்து வணிகர்கள் சந்தைக்கு எடுத்து வந்து விற்கிறார்கள். மொத்தமாக பொருட்களை வாங்கி விற்பவர்கள் பெரும் வணிகர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். சிறிய அளவில் வாங்கி விற்பவர்கள் சிறு வணிகர்கள் அல்லது வியாபாரி என அழைக்கப்படுகின்றனர்
- தேவைகள் அதிகரிக்க அதிகரிக்க உற்பத்தி, நுகர்ச்சி, பகிர்வு ஆகியவையும் பெருகிக்கொண்டே செல்கிறது. இதுவே பொருளாதார வளர்ச்சி எனப்படும்
- நமது நாட்டில் பொருளாதாரத்திற்காக அறிஞர் அமர்த்தியாசென் நோபல் பரிசினைப் பெற்றுள்ளார்
Comments
Post a Comment