தக்காண அரசுகள்
- இந்தியாவின் தெற்குப்பகுதி தக்காணம் அல்லது தட்சணபதம் என அழைக்கப்படுகிறது
- சாளுக்கியர்கள் (கி.பி. 6 - 12 நூற்றாண்டுகள்)
- சாளுக்கியர்களின் ஆட்சி காலத்தை மூன்று விதமாகப் பிரிக்கலாம்
1.முற்கால மேலைச் சாளுக்கியர் (கி.பி. 6 - 8 நூற்றாண்டுகள்)2. பிற்கால மேலைச் சாளுக்கியர் (கிபி 10 - 12 நூற்றாண்டுகள்)3. கீழைச் சாளுக்கியர் (கி.பி. 7 - 12 நூற்றாண்டுகள்)
1.முற்கால மேலைச் சாளுக்கியர்
- கி.பி. 6 - ம் நூற்றாண்டில் இன்றைய கர்நாடக மாநிலம் அமைந்துள்ள பகுதியில் சாளுக்கியர்கள் தங்களது அரசாட்சியை ஏற்படுத்தினர்
- தற்போது பதாமி என்றழைக்கப்படும் பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள வாதாபி அவர்களுடைய தலைநகரமாய் விளங்கியது
- முதலாம் புலிகேசி (கி.பி. 543 - 566) வாதாபி சாளுக்கிய மரபிற்கு அடித்தளமிட்டவர்
2. பிற்கால மேலைச் சாளுக்கியர்
- பிற்கால மேலைச் சாளுக்கிய மரபைத் தொடங்கிய அரசர் இரண்டாம் தைலப்பா (கிபி 973 - 997)
3. கீழைச் சாளுக்கியர்
- கீழைச் சாளுக்கிய மரபைத் தொடங்கிய மன்னர் விஷ்ணுவர்த்தன் ஆவார்
- குலோத்துங்கச் சோழன் கீழைச் சாளுக்கிய நாட்டினை சோழப் பேரரசுடன் இணைத்து சோழ நாட்டு மன்னர் ஆனார்
சாளுக்கியர்களின் பங்களிப்பு
- இரண்டாம் புலிகேசியின் அவைப் புலவரான இரவிகீர்த்தி, ஐஹோலே கல்வெட்டுகளைப் படைத்தவராவார்
- 70க்கும் மேற்பட்ட கோயில்களை ஐஹோலேவில் கட்டினர். இதனால் ஐஹோலே 'இந்தியக் கோயில் கட்டடக்கலையின் தொட்டில்' என சிறப்பிக்கப்படுகிறது
இராட்டிரகூடர்கள் (கி.பி. 8 - 10 ம் நூற்றாண்டுகள்)
- வட இந்தியாவிலிருந்த ரத்தோர்களின் வழிவந்தோரே இராட்டிரகூடர்கள் ஆவார்
- இராட்டிரகூடர் என்னும் சொல்லிற்கு, இராட்டினம் என்னும் (நாட்டின் சிறிய) பகுதியினை ஆளுகை செய்யும் உரிமை பெற்றவர்கள் எனப் பொருளாகும்
- புகழ்பெற்ற எல்லோராவின் கைலாசநாதர் குடைவரைக்கோயிலை உருவாக்கியவர் முதலாம் கிருஷ்ணர்
- மும்பைக்கு அருகில் உள்ள எலிஃபண்டா குகைக்கோயிலைக் கட்டிமுடித்தவர்கள் இராட்டிரகூடர்கள் ஆவர்
- அமோகவர்ஷன் என்ற மன்னர் கன்னட மொழியில் 'கவிராச மார்கம்' என்ற இலக்கியத்தைப் படைத்துள்ளார்
வாரங்கலை ஆண்ட காகத்தியர்(கி.பி. 12 - 14 நூற்றாண்டுகள்)
- கல்யாணியை ஆண்ட மேலைச் சாளுக்கியர்களிடம் குறுநில அரசர்களாக இருந்தவர்கள் காகத்தியர்கள் ஆவர்
தேவகிரியை ஆண்ட யாதவர்கள் (கி.பி. 12 - 14 ம் நூற்றாண்டுகள்)
- தேவகிரியை ஆட்சிசெய்த யாதவர்கள் தங்களை புராண நாயகனான கிருஷ்ண பகவானின் வழி வந்தோர் எனக் கூறிக் கொண்டனர்
Comments
Post a Comment