Skip to main content

7 - ம் வகுப்பு சமூக அறிவியல் - தக்காண அரசுகள்



        தக்காண அரசுகள்



  • இந்தியாவின் தெற்குப்பகுதி தக்காணம் அல்லது தட்சணபதம் என அழைக்கப்படுகிறது
  • சாளுக்கியர்கள் (கி.பி. 6 - 12 நூற்றாண்டுகள்)
  • சாளுக்கியர்களின் ஆட்சி காலத்தை மூன்று விதமாகப் பிரிக்கலாம்

1.முற்கால மேலைச் சாளுக்கியர் (கி.பி. 6 - 8 நூற்றாண்டுகள்)
2. பிற்கால மேலைச் சாளுக்கியர் (கிபி 10 - 12 நூற்றாண்டுகள்)
3. கீழைச் சாளுக்கியர் (கி.பி. 7 - 12 நூற்றாண்டுகள்)
1.முற்கால மேலைச் சாளுக்கியர்

  • கி.பி. 6 - ம் நூற்றாண்டில் இன்றைய கர்நாடக மாநிலம் அமைந்துள்ள பகுதியில் சாளுக்கியர்கள் தங்களது அரசாட்சியை ஏற்படுத்தினர்
  • தற்போது பதாமி என்றழைக்கப்படும் பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள வாதாபி அவர்களுடைய தலைநகரமாய் விளங்கியது
  • முதலாம் புலிகேசி (கி.பி. 543 - 566) வாதாபி சாளுக்கிய மரபிற்கு அடித்தளமிட்டவர்

2. பிற்கால மேலைச் சாளுக்கியர்

  •  பிற்கால மேலைச் சாளுக்கிய மரபைத் தொடங்கிய அரசர் இரண்டாம் தைலப்பா (கிபி 973 - 997)

3. கீழைச் சாளுக்கியர்

  • கீழைச் சாளுக்கிய மரபைத் தொடங்கிய மன்னர் விஷ்ணுவர்த்தன் ஆவார்
  • குலோத்துங்கச் சோழன் கீழைச் சாளுக்கிய நாட்டினை சோழப் பேரரசுடன் இணைத்து சோழ நாட்டு மன்னர் ஆனார்

சாளுக்கியர்களின் பங்களிப்பு

  • இரண்டாம் புலிகேசியின் அவைப் புலவரான இரவிகீர்த்தி, ஐஹோலே கல்வெட்டுகளைப் படைத்தவராவார்
  • 70க்கும் மேற்பட்ட கோயில்களை ஐஹோலேவில் கட்டினர். இதனால் ஐஹோலே 'இந்தியக் கோயில் கட்டடக்கலையின் தொட்டில்' என சிறப்பிக்கப்படுகிறது

இராட்டிரகூடர்கள் (கி.பி. 8 - 10 ம் நூற்றாண்டுகள்)

  • வட இந்தியாவிலிருந்த ரத்தோர்களின் வழிவந்தோரே இராட்டிரகூடர்கள் ஆவார்
  • இராட்டிரகூடர் என்னும் சொல்லிற்கு, இராட்டினம் என்னும் (நாட்டின் சிறிய) பகுதியினை ஆளுகை செய்யும் உரிமை பெற்றவர்கள் எனப் பொருளாகும்
  • புகழ்பெற்ற எல்லோராவின் கைலாசநாதர் குடைவரைக்கோயிலை உருவாக்கியவர் முதலாம் கிருஷ்ணர்
  • மும்பைக்கு அருகில் உள்ள எலிஃபண்டா குகைக்கோயிலைக் கட்டிமுடித்தவர்கள் இராட்டிரகூடர்கள் ஆவர்
  • அமோகவர்ஷன் என்ற மன்னர் கன்னட மொழியில் 'கவிராச மார்கம்' என்ற இலக்கியத்தைப் படைத்துள்ளார்

வாரங்கலை ஆண்ட காகத்தியர்(கி.பி. 12 - 14 நூற்றாண்டுகள்)

  • கல்யாணியை ஆண்ட மேலைச் சாளுக்கியர்களிடம் குறுநில அரசர்களாக இருந்தவர்கள் காகத்தியர்கள் ஆவர்

தேவகிரியை ஆண்ட யாதவர்கள் (கி.பி. 12 - 14 ம் நூற்றாண்டுகள்)

  • தேவகிரியை ஆட்சிசெய்த யாதவர்கள் தங்களை புராண நாயகனான கிருஷ்ண பகவானின் வழி வந்தோர் எனக் கூறிக் கொண்டனர்







    Comments

    Popular posts from this blog

    6 - ம் வகுப்பு கணிதம் - விகிதம் மற்றும் விகித சமம்

    6 - ம் வகுப்பு கணிதம் - விகிதம் மற்றும் விகித சமம் ஓர் அளவினை மற்றோர் அளவின் மடங்காக வெளிப்படுத்தி ஒப்பிடுவது விகிதம் எனப்படும் விகிதத்தைப் பின்னமாகவும் எழுதலாம். விகிதத்தைப் பெரும்பாலும் எளிய வடிவத்தில் எழுத வேண்டும் விகிதங்களின் பண்புகள் விகிதங்களுக்கு அலகு இல்லை. இது ஓர் எண் மதிப்பு. எடுத்துக்காட்டு: 8 கிலோமீட்டர்க்கும் 4 கிலோ மீட்டருக்கும் உள்ள விகிதம் 2 : 1 ஆகும் மற்றும் 2 கி. மீ : 1 கி.மீ அல்ல விகிதங்களின் இரு அளவுகளும் ஒரே அலகுடையதாக இருக்க வேண்டும்.எடுத்துக்காட்டு 4 கிலோ மீட்டர் மற்றும் 400 மீட்டர் ஆகியவற்றிற்கான விகிதம் காணும் போது அவற்றை (4×1000):400 = 4000:400=10:1 எனக் குறிப்பிடலாம் விகிதத்தில் ஒவ்வோர் எண்ணும் உறுப்பு என அழைக்கப்படும் விகிதத்தின் உறுப்புகளின் வரிசையை மாற்றி எழுத முடியாது 20:5 என்ற விகிதத்தை எளிய வடிவில் காண்க 20/5 = 4/1 =4:1 500கி மற்றும் 250 கி க்கும் உள்ள விகிதத்தை எளிய வடிவில் காண்க 500/250 = 2/1 =1 மாதவியும், அன்புவும் இரண்டு மேசைகளை முறையே ரூ.750 மற்றும் ரூ.900 க்கு வாங்குகின்றனர். அன்புவும், மாத...

    6 - ம் வகுப்பு தமிழ் - பாடறிந்து ஒழுகுதல்

    6 - ம் வகுப்பு தமிழ் - பாடறிந்து ஒழுகுதல் ஆசாரக்கோவை ஆசாரக்கோவை நூலை எழுதியவர் - பெருவாயின் முள்ளியார் இவர் பிறந்த ஊர் கயத்தூர். ஆசாரக்கோவை என்பதற்கு நல்ல ஒழுக்கங்களின் தொகுப்பு என்பது பொருள். இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. இந்நூல் நூறு வெண்பாக்களைக் கொண்டது தமிழர் பெருவிழா பொங்கல் விழா தமிழர் திருநாள் என்றும் போற்றப்படுகிறது கதிரவனுக்கு நன்றி கூறிச் சிறப்பு செய்யும் விழா பொங்கல் விழா. உழவர்கள் ஆடித்திங்களில் விதைப்பர். தைத்திங்களில் அறுவடை செய்து பயன் அடைவர். தைத் திங்களின் முதல் நாளில் பொங்கலிட்டு வழிபடுவர். எனவே இத்திருவிழாவை அறுவடைத் திருவிழா என்றும் அழைப்பர். உழவர்கள் இயற்கைக்கும் தம்முடன் உழைத்த கால்நடைகளுக்கும் இந்நாளில் நன்றி தெரிவித்து மகிழ்கின்றனர். எனவே இவ்விழாவை உழவர் திருநாள் என்றும் கூறுவர். போகித் திருநாள் பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பது ஆன்றோர் மொழி. வீட்டில் உள்ள பயனற்ற பொருள்களை நீக்கி வீட்டைத் தூய்மை செய்யும் நாள் போகித் திருநாள். இது மார்கழி மாதத்தின் இறுதி நாள் ஆகும் வாழ்க்கைக்கு வளம் தரும் மழைக் கடவுளை வழிப...

    6 - ம் வகுப்பு கணிதம் - இயல் எண்கள், முழு எண்கள்

            Natural and Whole numbers         இயல் எண்கள், முழு எண்கள் இயல் எண்கள் அல்லது எண்ணும் எண்கள் அல்லது மிகை முழு எண்கள் N = {1,2,3,4,......} முழு எண்கள் அல்லது நிறைவெண்கள் W = {0,1,2,3,4......} எல்லா முழு எண்களுக்கும் தொடரி உண்டு பூஜ்ஜியத்தைத் தவிர எல்லா முழு எண்களுக்கும் முன்னி உண்டு எல்லா முழு எண்களையும் கூட்டவும், பெருக்கவும் முடியும் இயல் எண்ணினை அதைவிட சிறிய இயல் எண் அல்லது அதே எண்ணைக் கொண்டு கழிக்க முடியும் ஒரு பெரிய எண்ணை சிறிய எண்ணால் வகுக்க முடியும் அதிக இலக்கங்கள் உடைய எண்கள் நம் நாட்டில் 10,000            = பத்தாயிரம் 1,00,000         = ஒரு லட்சம் 10,00,000        = பத்து லட்சம் 1,00,00,000     =ஒரு கோடி 1,00,00,00,000 = நூறு கோடி உலகளவில் 10,000             = பத்தாயிரம் 100,000           = நூறாயிரம் 1,000,000        = ஒ...