Skip to main content

புவியியல் - இந்தியா-வேளாண் தொழில்


      Agricultural Pattern    

     இந்தியா-வேளாண் தொழில்


வேளாண் தொழிலை நிர்ணயிக்கும் காரணிகள்

1.நிலத்தோற்றம்
2.காலநிலை
3.மண்வகை
4.நீர்


1.நிலத்தோற்றம்


  • மலைகள், சமவெளிகள், பீடபூமிகள் போன்ற பல்வேறு நிலத்தோற்றங்களை நம் நாடு கொண்டுள்ளது
  • வண்டல் மண் நிறைந்த சமவெளிகள் வேளாண்மைக்கு உகந்ததாக உள்ளது
  • எடுத்துக்காட்டு: கங்கை மற்றும் காவிரி ஆற்றுச் சமவெளிகள்


2.காலநிலை


  • இந்தியாவின் பெரும்பகுதி வெப்ப மண்டலத்தில் அமைந்து, வெப்பமண்டல பருவக்காற்று காலநிலையைப் பெற்றுள்ளது
  • கோதுமை பயிருக்கு மித வெப்பம் தேவை. ஆனால் நெற்பயிருக்கு அதிக வெப்பம் தேவை. ஆகையால் பஞ்சாப் மாநிலத்தில் கோதுமையும், தமிழ்நாட்டில் நெல்லும் பயிரிடப்படுகிறது



3.மண் வகைகள்


  • வளமிக்க வண்டல் மண் நெல் மற்றும் கரும்பு விளைச்சலுக்கும், கரிசல் மண் பருத்தி விளைவிக்கவும்  ஏற்றதாக உள்ளது


4.நீர்


  • இந்தியா சமச்சீரற்ற மழையைப் பெறும் பருவக்காற்று நாடு
  • நீர் அதிகம் தேவைப்படும் பயிர்கள், மழை அதிகமாக பெறும் பகுதிகளிலும், வறட்சியைத் தாங்கும் பயிர்கள், மழை குறைவான பகுதிகளிலும் விளைவிக்கப்படுகின்றன


வேளாண்மையின் வகைகள்


  • நம் நாட்டில் நான்கு வகையான வேளாண் முறை பின்பற்றப்படுகிறது  
      1.பழமையான வேளாண்மை
      2.தன்னிறைவு வேளாண்மை
      3.வணிக வேளாண்மை
      4.தோட்ட வேளாண்மை

1.பழமையான வேளாண்மை


  • அதிக மழைபெறும் காடுகளில் இம்முறை பின்பற்றப்படுகிறது
  • வடகிழக்கு மாநிலங்கள், மத்தியப்பிரதேசம், ஒடிசா, ஆந்திரப் பிரதேசம், கேரளா மாநிலங்களில் சிறிய அளவில் நடைமுறைப் படுத்துகின்றனர்
  • பழமையான வேளாண்முறை, அசாமில் ஜும் எனவும், ஒடிசா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் பொடு எனவும், மத்தியப்பிரதேசத்தில் மாசன் எனவும், கேரளாவில் பொன்னம் எனவும் அழைக்கப்படுகிறது


2.தன்னிறைவு வேளாண்மை


  • இம்முறை வேளாண்மை தீவிர வேளாண்மை எனவும் அழைக்கப்படுகிறது
  • வண்டல் மண் பகுதிகளில் நடைபெறுகிறது
  • வேளாண் பொருட்களின் உற்பத்தியில் சுமார் பாதி அளவு விவசாயிகளின் குடும்பத் தேவையை நிறைவு செய்வதால், மீதி அளவு அருகிலுள்ள சந்தைகளில் விற்கப்படுகிறது
  • நெல் மற்றும் கோதுமை அதிக அளவில் விளைவிக்கப்படுகிறது
  • தென்னிந்தியாவின் முக்கிய உணவான அரிசி 44 மில்லியன் ஹெக்டேர் நிலத்தில் விளைவிக்கப்படுகிறது 
  • 1977 -ம் ஆண்டு அரிசி உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு அடைந்தது
  • வட கங்கை சமவெளி,தென் காவிரி, கிருஷ்ணா, கோதாவரி, மகாநதி சமவெளிகளில் இம்முறை காணப்படுகிறது


3.வணிக வேளாண்மை

  • இம்முறை வேளாண்மை பரந்த வேளாண்மை என்றும் அழைக்கப்படுகிறது
  • தேவை அதிகமாக உள்ள பயிர்களை அதிகளவில் உற்பத்தி செய்து அந்நியச் செலாவணியை ஈட்டித் தருவதற்காக வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன
  • தானியங்கள், பருத்தி, கரும்பு, சணல் விளைவிக்கப்படுகின்றன
  • பஞ்சாப், குஜராத், மகாராஷ்டிரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் பின்பற்றப்படுகிறது

4.தோட்ட வேளாண்மை


  • மிகப் பரந்த நிலத்தில் ஒரே ஒரு பயிர் மட்டும் விளைவிக்கப்படுகிறது
  • எடுத்துக்காட்டு: தேயிலை, காபி, ரப்பர்
  • மலைப்பிரதேசங்களான வடகிழக்கு மாநிலங்களின் குன்றுப் பகுதிகளிலும், மேற்கு வங்காளம் மற்றும் தென்னிந்தியாவில் நீலகிரி, ஆனைமலை, ஏலமலைச் சரிவுகளிலும் பயிரிடப்படுகின்றன


பயிர் சாகுபடி முறைகள்

      1.ஒரு பயிர் சாகுபடி முறை(Mono cropping)
      2.இரு பயிர் சாகுபடி முறை(Dual cropping)
      3.பல பயிர் சாகுபடி முறை(Multiple cropping)
      4.கலப்பு சாகுபடி முறை(Mixed cropping)
      5.பயிர் சுழற்சி முறை(Crop rotation)

1.ஒரு பயிர் சாகுபடி முறை


  • ஒரு பருவத்தில் அல்லது ஒரு வருடத்தில் ஒரே பயிரை விளைவிப்பது ஒரு பயிர் சாகுபடி முறை எனப்படும்


2.இரு பயிர் சாகுபடி முறை


  • ஒரு வருடத்தில் ஒரே நிலத்தில் இருமுறை விளைவிப்பது இரு பயிர் சாகுபடி முறை எனப்படும்


3.பல பயிர் சாகுபடி முறை


  • ஒரு நிலத்தில் பல்வேறு பயிர்களை ஒரே வருடத்தில் விளைவிப்பது பல பயிர் சாகுபடி முறை எனப்படும்


4.கலப்பு சாகுபடி முறை


  • ஒரே நிலத்தில் ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட பயிர்களை விளைவிப்பது கலப்பு சாகுபடி முறை எனப்படும். ஆனால் ஒவ்வொரு பயிருக்கும் அறுவடைக்காலம் மாறுபடும்


5.பயிர் சுழற்சி முறை


  • பல்வேறு பயிரினை ஒரே நிலத்தில் வரிசையாக ஒரே வருடத்தில் பயிரிடுவது பயிர் சுழற்சிமுறை எனப்படும்


இந்திய வேளாண்மையின் பருவகாலங்கள்


  • ஒரு ஆண்டில் மூன்று பயிர்கள் விளைவிக்கப்படுகின்றன


    1.காரிஃப் பயிர்கள்
    2.ராபி பயிர்கள்
    3.சையத் பயிர்கள்

1.காரிஃப் பயிர்கள்


  • விதைக்கும் பருவம்: ஜூன் (பருவமழை தொடங்கும் காலம்)
  • அறுவடைக் காலம்: நவம்பர் மாத துவக்கம்
  • முக்கியப் பயிர்கள்: நெல், சோளம், பருத்தி, சணல், கரும்பு, கடலை


2.ராபி பெயர்கள்


  • விதைக்கும் பருவம்: நவம்பர் (குளிர்காலத் துவக்கம்)
  • அறுவடைக் காலம்: மார்ச் (கோடை ஆரம்பம்)
  • முக்கியப் பயிர்கள்: கோதுமை,புகையிலை, கடுகு, பருப்பு வகை தானியங்கள்


3.சையத் பயிர்கள்


  • விதைக்கும் பருவம்: மார்ச் (கோடை துவக்கம்)
  • அறுவடைக் காலம்: ஜூன் (பருவமழை ஆரம்பம்)
  • முக்கியப் பயிர்கள்: பழங்கள், காய்கறிகள், தண்ணீர் பழம், வெள்ளரிக்காய்


உணவுப் பயிர்கள்

நெல்


  • இந்தியா,உலகின் நெல் உற்பத்தியில் இரண்டாம் இடத்தை வகிக்கிறது
  • சுகந்த்-5, சுக்ரதாரா-1 போன்ற வீரிய கலப்பின விதை வகைகள் ஹரியானா, டெல்லி, ஜம்மு காஷ்மீர், இமாச்சல பிரதேசத்தின் உயர்நிலங்கள், உத்ரகாண்ட் பகுதிகளில் பயிரிடப்படுகிறது
  • இந்திய விவசாய ஆராய்ச்சிக் கழகம்(ICAR) 1929- ம் ஆண்டு தொடங்கப்பட்டது
  • தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் தஞ்சாவூர்
  • நெல் வளர்ச்சிக்கு எடுத்துக்கொள்ளும் காலத்தின் அடிப்படையில் ஒரு ஆண்டில் மூன்று வகைகளில் நெல் உற்பத்தி செய்யப்படுகிறது.அவை

     1.சம்பா
     2.குறுவை
     3.தாளடி

1.சம்பா


  • இது நீண்ட காலப் பயிர் ஆகும்
  • ஐந்து முதல் ஆறு மாதங்கள் வரை வளர்கிறது


2.குறுவை

  • இவை மூன்று முதல் நான்கு மாதங்களுக்குள் வளர்கிறது
3.தாளடி


  • முன்னர் அறுவடை செய்யப்பட்ட நிலத்தில் உள்ள நெல் தாள்களுடன் உழுது பயிர் செய்யும் முறை தாளடி எனப்படும்


கோதுமை


  • இந்தியாவின் வடக்கு மற்றும் வடமேற்கு மாநிலங்களில் குளிர்காலம் மற்றும் வசந்தகால பயிராக பயிரிடப்படுகிறது
  • அதிக அளவில் உற்பத்தி செய்யும் மாநிலங்கள் உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், மகாராஷ்டிரா, குஜராத், ஆந்திரப் பிரதேசம்


தினை வகைகள்


  • சோளம், கம்பு, கேழ்வரகு ஆகியவை தினை வகைகளாகும்
  • செழிப்பற்ற மண்ணில் நன்கு வளரக்கூடியது
  • இவை வறட்சியை தாங்கும் பயிர்கள்
  • நெல் மற்றும் கோதுமைக்கு இடைப்பட்ட பயிராகும்
  • மத்திய பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு, உத்திரப் பிரதேசம், கர்நாடகா, ஒடிசா, பீகார், மகாராஷ்டிரா, குஜராத் போன்ற மாநிலங்களில் உற்பத்தி செய்யப்படுகின்றன


பருப்பு வகைகள்


  • பட்டாணி, துவரை போன்றவை முக்கிய பருப்பு வகைகள் ஆகும். உளுந்து, பச்சைப்பயறு, கொள்ளு போன்றவை இதர பருப்பு வகைகள் ஆகும்
  • மிதமான குளிர் காலநிலை முதல் மிதமான குறைந்த மழைப்பொழிவு பருப்பு விளைய தேவைப்படுகிறது
  • மத்தியபிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப், மகாராஷ்டிரா, குஜராத், ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் பயிரிடப்படுகிறது


பணப்பயிர்கள்

 கரும்பு


  • இது ஒரு வெப்பமண்டலப் பயிர். இது அதிக வெப்பமும், ஈரப்பதமும் கொண்ட காலநிலையில் நன்கு பயிராகின்றது
  • இந்தியா கரும்பு உற்பத்தியின் பிறப்பிடம்
  • உத்தரப் பிரதேசம், தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிரா பீகார், பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்களில் பயிரிடப்படுகிறது


பருத்தி


  • பருத்தி இந்தியாவின் முக்கியமான இழைப்பயிராகும்
  • வெப்ப மற்றும் மிதவெப்ப மண்டல கால நிலையில் நன்றாக வளர்கிறது
  • கரிசல் மண் பருத்தி பயிரிட ஏற்ற மண் ஆகும்
  • பருத்தி உற்பத்தியில் இந்தியா நான்காம் இடத்தை வகிக்கிறது
  • குஜராத், மஹாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம், பஞ்சாப், ஹரியானா ஆகியவை பருத்தி அதிகமாக விளையும் மாநிலங்கள் ஆகும்


சணல் பயிர்


  • சணல் பயிர் தங்க இழைப்பயிர் என்று அழைக்கப்படுகிறது
  • வெப்பமும், ஈரப்பதமும் கொண்ட காலநிலை தேவை
  • சணல் பயிர் வளர ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்கப்படும் வண்டல் மண்ணைக் கொண்டுள்ள வெள்ளச் சமவெளிகளில்  உள்ள மண், நீர் வடியும் செழிப்பான மண்ணாக இருக்க வேண்டும்
  • சாக்குப் பைகள், கம்பளங்கள், கயிறு நூலிழைகள், போர்வைகள்,சணல் துணிகள், தார்பாலின் தயாரிக்க பயன்படுகிறது
  • மேற்கு வங்காளத்தில் உள்ள கங்கா, பிரம்மபுத்திரா சமவெளிகளிலும், பீகார், ஒடிசா, அசாம், மேகாலயா ஆகிய பகுதிகளில் பயிரிடப்படுகிறது


புகையிலை


  • 1508-ம் ஆண்டு போர்ச்சுகீசியரால் முதன்முதலாக இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்டது
  • இந்தியா, புகையிலை உற்பத்தியில் மூன்றாவது இடத்தைப் பெறுகிறது
  • தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பயிரிடப்படுகிறது


எண்ணெய் வித்துக்கள்


  • வெப்ப மற்றும் மிதவெப்ப மண்டலங்களில் விளைவிக்கப்படுகின்றன
  • நிலக்கடலை, எள், கடுகு, சூரியகாந்தி, ஆமணக்கு, தேங்காய், சோயா பீன்ஸ் போன்றவை இந்தியாவில் பயிராகும் எண்ணெய் வித்துக்கள் ஆகும்
  • குஜராத், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், மத்திய பிரதேசம், ஒடிசா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் உற்பத்தி செய்யப்படுகின்றன


தோட்டப்பயிர்கள்

தேயிலை


  • ஆழமுள்ள, செழிப்பான மண்ணுடன் கூடிய வெப்ப மண்டல அல்லது துணை வெப்பமண்டல காலநிலையில் பயிராகிறது
  • 3000 அடி முதல் 4000 அடி வரை உயரங்களுக்கு இடையே உள்ள மலைச் சரிவுகள் தேயிலை வளர ஏற்றவையாகும்
  • அஸ்ஸாம், மேற்கு வங்காளம், கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் உற்பத்தி செய்யப்படுகிறது



காப்பி


  • இந்தியாவில் பயிரிடப்படும் காப்பி தரத்திற்கு புகழ்பெற்றது
  • இந்தியாவின் 60% காப்பி கர்நாடகத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது
  • காப்பி பயிராகும் மற்ற மாநிலங்கள் தமிழ்நாடு மற்றும் கேரளா


ரப்பர்


  • ரப்பர் மரத்திலிருந்து எடுக்கப்படும் பால் போன்ற பொருளிலிருந்து ரப்பர் தயாரிக்கப்படுகிறது
  • ரப்பர் தோட்டங்களின் பரப்பு 95% கேரள மாநிலத்தின் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்திலும், 5% தமிழ்நாடு, கர்நாடகா, அந்தமான் நிக்கோபார் தீவுகளிலும் காணப்படுகிறது


பழங்கள் மற்றும் காய்கறிகள்


  • ஆப்பிள், இமாச்சலப் பிரதேசம்,காஷ்மீர்,உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் உற்பத்தியாகிறது
  • வாழைப்பழம், தமிழ்நாடு, மகாராஷ்டிரா மாநிலங்களில் உற்பத்தியாகிறது
  • ஆரஞ்சுப்பழம், மகாராஷ்டிரா, உத்தரகாண்ட், இமாச்சலப்பிரதேசம், ஜம்மு காஷ்மீர்,ஆந்திர பிரதேசம், தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் உற்பத்தியாகிறது
  • திராட்சை, உத்தரகாண்ட், இமாச்சலப்பிரதேசம், மகாராஷ்டிரா, ஆந்திரப்பிரதேசம், தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் உற்பத்தியாகிறது

Comments

Popular posts from this blog

6 - ம் வகுப்பு கணிதம் - விகிதம் மற்றும் விகித சமம்

6 - ம் வகுப்பு கணிதம் - விகிதம் மற்றும் விகித சமம் ஓர் அளவினை மற்றோர் அளவின் மடங்காக வெளிப்படுத்தி ஒப்பிடுவது விகிதம் எனப்படும் விகிதத்தைப் பின்னமாகவும் எழுதலாம். விகிதத்தைப் பெரும்பாலும் எளிய வடிவத்தில் எழுத வேண்டும் விகிதங்களின் பண்புகள் விகிதங்களுக்கு அலகு இல்லை. இது ஓர் எண் மதிப்பு. எடுத்துக்காட்டு: 8 கிலோமீட்டர்க்கும் 4 கிலோ மீட்டருக்கும் உள்ள விகிதம் 2 : 1 ஆகும் மற்றும் 2 கி. மீ : 1 கி.மீ அல்ல விகிதங்களின் இரு அளவுகளும் ஒரே அலகுடையதாக இருக்க வேண்டும்.எடுத்துக்காட்டு 4 கிலோ மீட்டர் மற்றும் 400 மீட்டர் ஆகியவற்றிற்கான விகிதம் காணும் போது அவற்றை (4×1000):400 = 4000:400=10:1 எனக் குறிப்பிடலாம் விகிதத்தில் ஒவ்வோர் எண்ணும் உறுப்பு என அழைக்கப்படும் விகிதத்தின் உறுப்புகளின் வரிசையை மாற்றி எழுத முடியாது 20:5 என்ற விகிதத்தை எளிய வடிவில் காண்க 20/5 = 4/1 =4:1 500கி மற்றும் 250 கி க்கும் உள்ள விகிதத்தை எளிய வடிவில் காண்க 500/250 = 2/1 =1 மாதவியும், அன்புவும் இரண்டு மேசைகளை முறையே ரூ.750 மற்றும் ரூ.900 க்கு வாங்குகின்றனர். அன்புவும், மாத...

6 - ம் வகுப்பு தமிழ் - பாடறிந்து ஒழுகுதல்

6 - ம் வகுப்பு தமிழ் - பாடறிந்து ஒழுகுதல் ஆசாரக்கோவை ஆசாரக்கோவை நூலை எழுதியவர் - பெருவாயின் முள்ளியார் இவர் பிறந்த ஊர் கயத்தூர். ஆசாரக்கோவை என்பதற்கு நல்ல ஒழுக்கங்களின் தொகுப்பு என்பது பொருள். இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. இந்நூல் நூறு வெண்பாக்களைக் கொண்டது தமிழர் பெருவிழா பொங்கல் விழா தமிழர் திருநாள் என்றும் போற்றப்படுகிறது கதிரவனுக்கு நன்றி கூறிச் சிறப்பு செய்யும் விழா பொங்கல் விழா. உழவர்கள் ஆடித்திங்களில் விதைப்பர். தைத்திங்களில் அறுவடை செய்து பயன் அடைவர். தைத் திங்களின் முதல் நாளில் பொங்கலிட்டு வழிபடுவர். எனவே இத்திருவிழாவை அறுவடைத் திருவிழா என்றும் அழைப்பர். உழவர்கள் இயற்கைக்கும் தம்முடன் உழைத்த கால்நடைகளுக்கும் இந்நாளில் நன்றி தெரிவித்து மகிழ்கின்றனர். எனவே இவ்விழாவை உழவர் திருநாள் என்றும் கூறுவர். போகித் திருநாள் பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பது ஆன்றோர் மொழி. வீட்டில் உள்ள பயனற்ற பொருள்களை நீக்கி வீட்டைத் தூய்மை செய்யும் நாள் போகித் திருநாள். இது மார்கழி மாதத்தின் இறுதி நாள் ஆகும் வாழ்க்கைக்கு வளம் தரும் மழைக் கடவுளை வழிப...

6 - ம் வகுப்பு கணிதம் - இயல் எண்கள், முழு எண்கள்

        Natural and Whole numbers         இயல் எண்கள், முழு எண்கள் இயல் எண்கள் அல்லது எண்ணும் எண்கள் அல்லது மிகை முழு எண்கள் N = {1,2,3,4,......} முழு எண்கள் அல்லது நிறைவெண்கள் W = {0,1,2,3,4......} எல்லா முழு எண்களுக்கும் தொடரி உண்டு பூஜ்ஜியத்தைத் தவிர எல்லா முழு எண்களுக்கும் முன்னி உண்டு எல்லா முழு எண்களையும் கூட்டவும், பெருக்கவும் முடியும் இயல் எண்ணினை அதைவிட சிறிய இயல் எண் அல்லது அதே எண்ணைக் கொண்டு கழிக்க முடியும் ஒரு பெரிய எண்ணை சிறிய எண்ணால் வகுக்க முடியும் அதிக இலக்கங்கள் உடைய எண்கள் நம் நாட்டில் 10,000            = பத்தாயிரம் 1,00,000         = ஒரு லட்சம் 10,00,000        = பத்து லட்சம் 1,00,00,000     =ஒரு கோடி 1,00,00,00,000 = நூறு கோடி உலகளவில் 10,000             = பத்தாயிரம் 100,000           = நூறாயிரம் 1,000,000        = ஒ...