வட இந்திய அரசுகள் - இராசபுத்திரர்கள்
- வரலாற்றினை எளிய முறையில் புரிந்து கொள்வதற்காக வரலாற்றாளர்கள், வரலாற்றினை, காலத்தின் அடிப்படையில் பண்டைய காலம், இடைக்காலம் மற்றும் நவீன காலம் எனப் பிரித்துள்ளனர்
- கி.பி.8 - ம் நூற்றாண்டு முதல் கி.பி.18 - ம் நூற்றாண்டு வரை உள்ள காலம் இடைக்காலம் எனப்படும்
- கி.பி. 8 - ம் நூற்றாண்டு முதல் கி.பி.13 - ம் நூற்றாண்டு வரை உள்ள காலம் இடைக்காலம் எனப்படும்
- கி.பி.13 - ம் நூற்றாண்டு முதல் கி.பி. 18 - ம் நூற்றாண்டு வரை உள்ள காலம் பிந்தைய இடைக்காலம் எனப்படும்
இராசபுத்திரர்கள் காலம் (கி.பி.647 - கி.பி.1200)
- 36 வகை இராசபுத்திரர்கள் வட இந்தியாவில் ஆட்சி செய்தார்கள். அவர்களில் வலிமை பெற்ற இராசபுத்திரர்கள்
1. அவந்தியை ஆட்சி செய்த பிரதிகாரர்கள்2. வங்காளத்தை ஆட்சி செய்த பாலர்கள்3. ஆஜ்மீர், டெல்லியை ஆண்ட சௌகான்கள்4. டெல்லியை ஆட்சி செய்த தோமர்கள்5. கனோஜ் பகுதியை ஆட்சி செய்த ரத்தோர்கள்6. மேவார் பகுதியை ஆட்சி செய்த சிசோதியர்கள் அல்லது குகிலர்கள்7. பந்தல்கண்டை ஆட்சி செய்த சந்தேலர்கள்8. மாளவத்தை ஆட்சி செய்த பரமாரர்கள்9. வங்காளத்தை ஆட்சி செய்த சேனர்கள்10. குஜராத்தை ஆட்சி செய்த சோலங்கிகள்
பிரதிகாரர்கள் (கி.பி 8 -11 நூற்றாண்டுகள்)
- பிரதிகாரர்கள் கூர்ஜர மரபினர். எனவே இவர்கள் கூர்ஜர பிரதிகாரர்கள் என அழைக்கப்படுகின்றனர்
- பிரதிகார மரபைத் தோற்றுவித்தவர் முதலாம் நாகப்பட்டர் (கி.பி 725 - 740)
- பிரதிகார மன்னர்களில் மிகவும் வலிமையுடன் விளங்கியவர் மிகிரபோசர்
- பிரதிகாரர்களின் கடைசி மன்னர் இராஜ்யபாலா ஆவார்
பாலர்கள் (கி.பி 8 - 12 நூற்றாண்டுகள்)
- பாலர் மரபைத் தொடங்கியவர் கோபாலர் (கி.பி 765 - 769)
- பாலர் மரபின் கடைசி மன்னர் கோவிந்தபாலர் ஆவார்
டெல்லியை ஆண்ட தோமர்கள்
- கனோஜ் பகுதியில் இருந்த பிரதிகாரர்களிடம் திறை செலுத்திய அரசர்கள் தோமர்கள் ஆவர்
- பின்னர் இவர்கள் தனியரசை ஏற்படுத்தி டெல்லி நகரை கி.பி.736 ல் நிறுவினார்கள்
டெல்லி மற்றும் ஆஜ்மீர் பகுதியில் ஆட்சி செலுத்திய சௌகான்கள்
- கனோஜ் பகுதியை ஆண்ட பிரதிகாரர்களுக்குத் திறை செலுத்துபவர்களாக இருந்தவர்கள் சௌகான்கள் ஆவர்
கனோஜ் பகுதியை ஆட்சி செய்த ரத்தோர்கள் (கி.பி. 1090 - 1194)
- பிரதிகாரர்களின் வீழ்ச்சிக்குப் பின்னர் கனோஜ் பகுதியில் தெளிவற்ற சூழல் நிலவியது. இதனைப் பயன்படுத்தி ரத்தோர்கள் கனோஜ் அரசைக் கைப்பற்றினர்
பந்தல்கண்ட் பகுதியை ஆட்சி செய்த சந்தேலர்கள்
- பிரதிகாரர்களின் ஆட்சியில் இருந்த பந்தல்கண்ட் பகுதியை கி.பி.9 - ம் நூற்றாண்டில் தனியரசாக சந்தேலர்கள் அமைத்தனர்
- சந்தேலர்களின் கடைசி அரசர் பாரமால்
- கலிஞ்சார் கோட்டை இவர்களது முக்கிய கோட்டையாகும்
- கஜுராஹோவில் பல அழகிய கோயில்களை இவர்கள் கட்டினார்கள். இவைகளுள் கந்தர்ய மகாதேவர் ஆலயம் (கி.பி. 1050) புகழ் பெற்றதாகும்
மேவாரை ஆட்சி செய்த சிசோதியர்கள் அல்லது குகிலர்கள்
- சிசோதிய மரபினைத் தொடங்கியவர் பாபாரவால்
மாளவம் பகுதியை ஆண்ட பரமாரர்கள்
- பரமாரர்கள் கி.பி. 10 - ம் நூற்றாண்டில் தம்மைச் சுதந்திர அரசாக அறிவித்துக் கொண்டனர்
கலை மற்றும் கட்டடக்கலை
- கஜுராஹோ நகரின் ஆலயங்களும், புவனேஸ்வரத்தில் உள்ள லிங்கராஜா கோயிலும், கோனார்க்கில் உள்ள சூரியக்கோயிலும், அபுமலையில் கட்டப்பட்டுள்ள தில்வாரா ஆலயமும் இராசபுத்திரர்களின் கோயில் கட்டிடக் கலையின் சிறப்பான எடுத்துக்காட்டுகளாகும்
- ஜெய்ப்பூர், உதய்பூர் நகர அரண்மனைகளும், சித்தூர், மாண்டு, ஜோத்பூர், குவாலியர் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கோட்டைகளும் இராசபுத்திரர்களின் கட்டிடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டுகள் ஆகும்
Comments
Post a Comment