Skip to main content

6 - ம் வகுப்பு சமூக அறிவியல் - சிந்துவெளி நாகரிகம்


       
                 சிந்துவெளி நாகரிகம்


  • ஆதிமனிதன் கல்லைப் பயன்படுத்திய காலம் கற்காலம் எனப்படும்
  • மனிதனுக்கு முதன்முதலில் தெரிந்த உலோகம் செம்பு (தாமிரம்)
  • ஆதிமனிதன் செம்பு, கல் ஆகிய இரண்டையும் பயன்படுத்திய காலம் செம்புக்கற்காலம் எனப்படும்
  • அக்காலத்தில்தான் இந்தியாவில் மிகத் தொன்மை வாய்ந்த நகர நாகரிகமான சிந்து வெளி(ஹரப்பா) நாகரிகம் உருவானது

ஹரப்பா

  • ஹரப்பா என்ற சிந்தி மொழிச் சொல்லுக்குப் புதையுண்ட நகரம் என்று பொருள்
  • சுமார் 4700 ஆண்டுகளுக்கு முன் இந்த நாகரிகம் இந்தியாவில் இருந்ததாக கண்டறியப்பட்டுள்ளது
  • ஹரப்பா நாகரிகத்தைப் போன்ற நகரங்களின் இடிபாடுகள் மொகஞ்சதாரோ, சான்குதாரோ, கலிபங்கன்,லோத்தல் போன்ற வேறு பல இடங்களிலும் கண்டெடுக்கப்பட்டுள்ளன
  • மொஹஞ்சதாரோ என்ற சிந்தி மொழிச் சொல்லுக்கு இடுகாட்டு மேடு என்று பொருள்

பெருங்குளம்

  • சிந்துவெளி நகரங்களின் கோட்டைப் பகுதியில் கட்டமைப்பு நுணுக்கங்கள் மிக்க குளம் அமைக்கப்பட்டிருந்தது

கட்டடங்கள்

  • வீடுகள் வரிசையாகவும், ஒழுங்காகவும், நேர்த்தியுடனும் கட்டப்பட்டிருந்தன

பயன்பாட்டு அறிவியல்

  • கட்டடத் தொழில், நிலம் தேறுதல்,மனை அளவீடு, கால் கோளுதல், தரமான கட்டுமானப் பொருட்களை தேர்ந்தெடுத்தல், வடிவ கணித அமைப்பு பற்றி அறிதல் ஆகிய பயன்பாட்டு அறிவியல் தொழில்நுட்பங்களை அறிந்திருந்தனர்

சிந்துவெளி மக்களின் வாழ்க்கை முறை

  • மக்கள் கடல்வழி வாணிகம் செய்து உலோகங்கள், விலையுயர்ந்த கற்கள், அணிகலன்கள் மற்றும் பல்வேறு பயன்பாட்டுப் பொருட்களை ஏற்றுமதி, இறக்குமதி செய்தனர்

மண்பாண்டம்

  • சக்கரத்தைப் பயன்படுத்தி சட்டி, பானைகள் செய்யப்பட்டிருந்தன. அவை பளபளப்பாகவும், வண்ணங்கள் பூசப்பட்டும் இருந்தன 

தொழில்

  • சிந்துவெளியில் பயிர்த் தொழிலாளர், கைத்தொழிலாளர், வணிகர், நெசவாளர், மண்பாண்டம் செய்வோர், உலோக வேலை செய்வோர் எனப் பலவகைப்பட்ட மக்கள் காணப்பட்டனர்
  • விவசாயம் மக்களின் முக்கியத் தொழில் ஆகும்
  • கோதுமை, பார்லி போன்றவற்றை விளைவித்தனர். மிஞ்சிய தானியங்களைக் களஞ்சியங்களில் சேமித்து வைத்தனர்

உடைகள்

  • மக்கள் பருத்தி, கம்பளி ஆடைகளை அணிந்தனர்

அணிகலன்கள்

  • தங்கம், வெள்ளி, தந்தம், விலையுயர்ந்த கற்கள் போன்றவற்றை அணிகலன்கள் செய்ய பயன்படுத்தினர்
  • ஏழை மக்கள் கிளிஞ்சல், தாமிரம் போன்றவற்றால் செய்யப்பட்ட அணிகலன்களை அணிந்தனர்

கலைகள்

  • சிந்துவெளி மக்கள் டெராகோட்டா எனப்படும் சுடுமண் பாண்டம் செய்வதில் திறமை மிக்கவர்களாக இருந்தனர்

சமயம்

  • பசுபதி என்ற சிவனையும், பெண் கடவுளையும், லிங்கம், சூலம், மரம் ஆகியவற்றையும் வணங்கினர்







Comments

Popular posts from this blog

6 - ம் வகுப்பு கணிதம் - விகிதம் மற்றும் விகித சமம்

6 - ம் வகுப்பு கணிதம் - விகிதம் மற்றும் விகித சமம் ஓர் அளவினை மற்றோர் அளவின் மடங்காக வெளிப்படுத்தி ஒப்பிடுவது விகிதம் எனப்படும் விகிதத்தைப் பின்னமாகவும் எழுதலாம். விகிதத்தைப் பெரும்பாலும் எளிய வடிவத்தில் எழுத வேண்டும் விகிதங்களின் பண்புகள் விகிதங்களுக்கு அலகு இல்லை. இது ஓர் எண் மதிப்பு. எடுத்துக்காட்டு: 8 கிலோமீட்டர்க்கும் 4 கிலோ மீட்டருக்கும் உள்ள விகிதம் 2 : 1 ஆகும் மற்றும் 2 கி. மீ : 1 கி.மீ அல்ல விகிதங்களின் இரு அளவுகளும் ஒரே அலகுடையதாக இருக்க வேண்டும்.எடுத்துக்காட்டு 4 கிலோ மீட்டர் மற்றும் 400 மீட்டர் ஆகியவற்றிற்கான விகிதம் காணும் போது அவற்றை (4×1000):400 = 4000:400=10:1 எனக் குறிப்பிடலாம் விகிதத்தில் ஒவ்வோர் எண்ணும் உறுப்பு என அழைக்கப்படும் விகிதத்தின் உறுப்புகளின் வரிசையை மாற்றி எழுத முடியாது 20:5 என்ற விகிதத்தை எளிய வடிவில் காண்க 20/5 = 4/1 =4:1 500கி மற்றும் 250 கி க்கும் உள்ள விகிதத்தை எளிய வடிவில் காண்க 500/250 = 2/1 =1 மாதவியும், அன்புவும் இரண்டு மேசைகளை முறையே ரூ.750 மற்றும் ரூ.900 க்கு வாங்குகின்றனர். அன்புவும், மாத...

6 - ம் வகுப்பு தமிழ் - பாடறிந்து ஒழுகுதல்

6 - ம் வகுப்பு தமிழ் - பாடறிந்து ஒழுகுதல் ஆசாரக்கோவை ஆசாரக்கோவை நூலை எழுதியவர் - பெருவாயின் முள்ளியார் இவர் பிறந்த ஊர் கயத்தூர். ஆசாரக்கோவை என்பதற்கு நல்ல ஒழுக்கங்களின் தொகுப்பு என்பது பொருள். இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. இந்நூல் நூறு வெண்பாக்களைக் கொண்டது தமிழர் பெருவிழா பொங்கல் விழா தமிழர் திருநாள் என்றும் போற்றப்படுகிறது கதிரவனுக்கு நன்றி கூறிச் சிறப்பு செய்யும் விழா பொங்கல் விழா. உழவர்கள் ஆடித்திங்களில் விதைப்பர். தைத்திங்களில் அறுவடை செய்து பயன் அடைவர். தைத் திங்களின் முதல் நாளில் பொங்கலிட்டு வழிபடுவர். எனவே இத்திருவிழாவை அறுவடைத் திருவிழா என்றும் அழைப்பர். உழவர்கள் இயற்கைக்கும் தம்முடன் உழைத்த கால்நடைகளுக்கும் இந்நாளில் நன்றி தெரிவித்து மகிழ்கின்றனர். எனவே இவ்விழாவை உழவர் திருநாள் என்றும் கூறுவர். போகித் திருநாள் பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பது ஆன்றோர் மொழி. வீட்டில் உள்ள பயனற்ற பொருள்களை நீக்கி வீட்டைத் தூய்மை செய்யும் நாள் போகித் திருநாள். இது மார்கழி மாதத்தின் இறுதி நாள் ஆகும் வாழ்க்கைக்கு வளம் தரும் மழைக் கடவுளை வழிப...

6 - ம் வகுப்பு கணிதம் - இயல் எண்கள், முழு எண்கள்

        Natural and Whole numbers         இயல் எண்கள், முழு எண்கள் இயல் எண்கள் அல்லது எண்ணும் எண்கள் அல்லது மிகை முழு எண்கள் N = {1,2,3,4,......} முழு எண்கள் அல்லது நிறைவெண்கள் W = {0,1,2,3,4......} எல்லா முழு எண்களுக்கும் தொடரி உண்டு பூஜ்ஜியத்தைத் தவிர எல்லா முழு எண்களுக்கும் முன்னி உண்டு எல்லா முழு எண்களையும் கூட்டவும், பெருக்கவும் முடியும் இயல் எண்ணினை அதைவிட சிறிய இயல் எண் அல்லது அதே எண்ணைக் கொண்டு கழிக்க முடியும் ஒரு பெரிய எண்ணை சிறிய எண்ணால் வகுக்க முடியும் அதிக இலக்கங்கள் உடைய எண்கள் நம் நாட்டில் 10,000            = பத்தாயிரம் 1,00,000         = ஒரு லட்சம் 10,00,000        = பத்து லட்சம் 1,00,00,000     =ஒரு கோடி 1,00,00,00,000 = நூறு கோடி உலகளவில் 10,000             = பத்தாயிரம் 100,000           = நூறாயிரம் 1,000,000        = ஒ...