Skip to main content

7 - ம் வகுப்பு அறிவியல் - மனித உடல் அமைப்பு மற்றும் இயக்கம்


மனித உடல் அமைப்பு மற்றும் இயக்கம்
  • அணுக்கள் மூலக்கூறுகள், செல் நுண்ணுறுப்புகள், செல்கள், திசுக்கள், உறுப்புகள், உறுப்பு மண்டலங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது உயிரினம் ஆகும்

மனித உறுப்பு மண்டலத்தின் அமைப்பு /செயல்பாடுகள்
  • நமது உடலில் பத்து உறுப்பு மண்டலங்கள் காணப்படுகின்றன

1. தோலுறுப்பு மண்டலம்

  • நமது உடலின் மிக கனமான உறுப்பு தோல் ஆகும்.நமது உடல் எடையில் ஏறக்குறைய ஏழு கிலோ தோல் உள்ளது
  • தோல்லுறுப்பு மண்டலத்தில் தோல், உரோமம், நகம், வியர்வைச் சுரப்பிகள் மற்றும் எண்ணெய் சுரப்பிகள் ஆகியவை காணப்படுகின்றன

தோலின் பணிகள்

  • உடலின் உள் உறுப்புகளைப் பாதுகாக்கிறது
  • இது வியர்வையை சுரப்பதன் மூலம் ஒரு கழிவு நீக்க உறுப்பாக செயல்படுகிறது
  • ஒரு உணர் உறுப்பாக செயல்படுகிறது
  • வைட்டமின் D -யை தயாரிக்க உதவுகிறது

2. செரிமான மண்டலம்

  • செரிக்கப்பட்ட உணவு மூலக்கூறுகள் உறிஞ்சப்பட்டு இரத்தத்தின் மூலம் கடத்தப்படுகிறது
  • செரிக்கப்படாத உணவு வெளியேற்றப்படுகிறது

3. சுவாச மண்டலம்

  • வெளியிலிருந்து ஆக்ஸிஜனை எடுத்துக்கொண்டு இரத்த ஓட்டத்தின் மூலம் பல்வேறு பகுதிகளுக்கு கடத்துகிறது
  • உணவுப்பொருள் எரிக்கப்படுவதற்கு ஆக்சிஜன் பயன்படுகிறது. இவ்வினையின் போது கரியமில வாயு வெளியேற்றப்படுகிறது

4. எலும்பு மண்டலம்

  • எலும்பு மண்டலத்தில் எலும்புகள், திசுக்களாலான குருத்தெலும்புகள், தசைநார்கள் ஆகியவை காணப்படுகின்றன
  • நமது உடலில் 206 எலும்புகள் காணப்படுகின்றன

எலும்பு மண்டலத்தின் பணிகள்

  • எலும்பு மண்டலம் நமது உடலிற்கு வடிவத்தை அளிப்பதோடு இயக்கத்திற்கும் உதவுகிறது
  • மூளை, இதயம், நுரையீரல் போன்ற உள் உறுப்புகளைப் பாதுகாக்கிறது
  • இரத்த வெள்ளையணுக்கள், இரத்த சிவப்பணுக்கள் மற்றும் இரத்தத் தட்டுகள்  ஆகியவை எலும்பு மஜ்ஜையில் உருவாக்கப்படுகிறது

5. தசை மண்டலம்

  • தசை மண்டலத்தில் மூன்று வகையான தசைகள் உள்ளன

1. எலும்புத் தசைகள் (வரியுடைத் தசைகள்)
2. மென் தசைகள் (வரியற்ற தசைகள்)
3. இதயத் தசைகள்

  • எலும்புத் தசைகள் எலும்புகளுடன் இணைக்கப்பட்டுள்ளன
  • மென் தசைகள் இரத்த குழாய்களின் சுவர்களிலும்,உள்ளீடற்ற உறுப்புகளான இரைப்பை, குடல் ஆகியவற்றின் சுவர்களிலும் காணப்படுகின்றன
  • இதயத் தசைகள் இதயத்தில் மட்டுமே காணப்படும் ஒரு சிறப்பு தசை ஆகும்

தசை மண்டலத்தின் பணிகள்

  • எலும்புத் தசைகள் உடலுக்கு உருவத்தை அளிக்கவும், உடல் உறுப்புகள் இயங்குவதற்கும் உதவுகிறது
  • நம் உடலின் வெப்பநிலையை சீராக வைத்துக் கொள்ளத் தேவையான வெப்பத்தை உற்பத்தி செய்கிறது
  • பிற தசைகள், உள் உறுப்புகளின் இயக்கத்திற்கு உதவுகிறது

6. இரத்த ஓட்ட மண்டலம்

  • உடலின் பல பகுதிகளுக்குத் தேவையான பொருள்களை இரத்தத்தின் மூலம் கடத்தும் பணியை செய்கிறது
  • இரத்த ஓட்ட மண்டலம் இதயம் மற்றும் ரத்தக் குழாய்களால் ஆனது. இதன் வழியாக இரத்தம் செல்கிறது
  • இதயம் தசை நார்களால் ஆன சுருங்கி விரியும் தன்மை உடைய ஒரு உறுப்பு ஆகும்
  • இதயம் இரத்தத்தை அனைத்து பாகங்களுக்கும் கொண்டு செல்கிறது. மீண்டும் அவை அனைத்து பாகங்களிலிருந்தும் இரத்தத்தைப் பெறுகிறது
  • இரத்த சிவப்பணுக்களில் காணப்படும் சிவப்பு நிறமி ஹீமோகுளோபின் ஆகும். இது இரத்தத்திற்கு சிவப்பு நிறத்தைத் தருகிறது
  • நண்டு, கல் இறால் ஆகியவற்றின் இரத்தம் நீல நிறமாகக் காணப்படும்
  • கரப்பான் பூச்சியின் இரத்தம் நிறமற்றதாக காணப்படும்

இரத்த ஓட்ட மண்டலத்தின் பணிகள்

  • உணவூட்டப் பொருட்கள், உயிர்வளி, கழிவுப் பொருள்கள், ஹார்மோன்களை இரத்தம் கடத்துகிறது
  • உடலின் வெப்பநிலையையும், நீரின் அளவையும் கட்டுப்படுத்துகிறது
  • இரத்தக்குழாய்கள் மூன்று வகைப்படும்

1. தமனிகள்
2. சிரைகள்
3. இரத்தத் தந்துகிகள்
7. நரம்பு மண்டலம்

  • நரம்பு மண்டலம் மூளை, தண்டுவடம் மற்றும் நரம்புகளால் ஆனது
  • நரம்பு மண்டலம் இரு வகைப்படும்

1. மைய நரம்பு மண்டலம்
2. வெளிப்புற நரம்பு மண்டலம்

  • மைய நரம்பு மண்டலம் மூளை, தண்டுவடத்தினால் ஆனது
  • வெளிப்புற நரம்பு மண்டலம் மூளை நரம்புகள், தண்டுவட நரம்புகளால் ஆனது

8. நாளமில்லா சுரப்பி மண்டலம்

  • நாளமில்லா சுரப்பி மண்டலம் சுரக்கும் வேதிப்பொருள் ஹார்மோன்கள் எனப்படும்
  • ஹார்மோன்கள் இரத்தத்தின் மூலம் அவை செயல்படும் இடத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறது
  • ஹார்மோன்கள் உடற்செயலியல் வேலைகளை ஒழுங்குபடுத்துகிறது

9. கழிவு நீக்க மண்டலம்

  • கழிவுப் பொருட்களை வெளியேற்ற உதவும் மண்டலம் கழிவுநீக்க மண்டலம் எனப்படும்
  • கழிவு நீக்க மண்டலத்தில் ஒரு ஜோடி சிறுநீரகம், ஒரு ஜோடி சிறுநீர் நாளம், சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீர்ப்புறவழி ஆகியவை காணப்படுகிறது

10. இனப்பெருக்க மண்டலம்

  • ஆண்களில் காணப்படும் விந்தகங்கள் மற்றும் பெண்களில் காணப்படும் அண்டகங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது இனப்பெருக்க மண்டலம் ஆகும்

இந்திய மருத்துவத்தில் மனித உடல் நலம் பேணல்
சித்த மருத்துவம் (தமிழ் மருத்துவம்)

  • சித்தர்களின் பொதுவான கருத்து உணவே மருந்து மருந்தே உணவு என்பது ஆகும்
  • சித்த மருத்துவத்தின் தந்தை அகத்தியர்
  • சித்த மருந்து தயாரிப்பதற்கு ஏறக்குறைய 1200 மூலிகைகள் பயன்படுகின்றன

ஆயுர்வேத மருத்துவம்

  • நமது உடல் வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்று நாடிகளினால் ஆனது. இவற்றின் சமநிலையில் ஏற்படும் பாதிப்புகளை சீர்படுத்துவது ஆயுர்வேதத்தின் நோக்கமாகும்

நோய்கள், குறைபாடுகள் மற்றும் தடுப்பு முறைகள்
நீரிழிவு நோய்

  • அனைத்து உயிரினங்களுக்கும் தேவையான ஆற்றலை அளிப்பது குளுக்கோஸ் ஆகும்
  • நாம் உண்ணும் உணவு உடைந்து குளுக்கோஸாக மாறுகிறது
  • கணையத்தில் சுரக்கப்படும் இன்சுலின் என்ற ஹார்மோன் குளுக்கோஸின் அளவைக் கட்டுப்படுத்துகிறது
  • இரத்தத்தில் உள்ள குளுக்கோசின் அளவு 80 - 120 மில்லி கிராம் / டெசிபலை விட அதிகமானால் அந்த மனிதனுக்கு நீரிழிவு நோய் உள்ளது என தெரிந்து கொள்ளலாம்
  • நீரிழிவு நோய்க்கு காரணம் உடற்பயிற்சி இல்லாமை, முறையற்ற உணவுப்பழக்கம் மற்றும் இன்சுலின் பற்றாக்குறை ஆகியவை ஆகும்
  • நீரிழிவு நோயால் உயர் இரத்த அழுத்தம், உடல் பருமன், இதய நோய் ஆகியவை ஏற்படுகிறது


உடற்பயிற்சியின் பயன்கள்

  • இதயத் தசைகள், நுரையீரல் உள்ளிட்ட உடலின் பல பாகங்களை வலிமைப்படுத்துகிறது
  • தேவையற்ற கலோரி எரிக்கப்படுவதால் உடல் எடை சீராகிறது. உடல் பருமன் தடுக்கப்படுகிறது
  • இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் குறைக்கிறது
  • இரத்தத்தில் உள்ள கொழுப்பைக் குறைக்கிறது
  • இரத்த அழுத்தத்தை சீராக்குகிறது

உணவு பதப்படுத்துதல்

  • உணவுப் பொருட்களை நீண்ட நாட்களுக்கு கெட்டுப்போகாமல் வைத்திருக்கும் முறை உணவு பதப்படுத்துதல் எனப்படும்

உலர்த்துதல்

  • இம்முறையில் உணவில் உள்ள நீர் உலர வைக்கப்பட்டு வெளியேற்றப்படுகிறது
  • எடுத்துக்காட்டு
  • அறுவடை செய்த தானியங்களை சூரிய ஒளியில் உலர வைத்தல்

வெப்பப்படுத்துதல்

  • இம்முறையில் உணவில் உள்ள நுண்ணுயிர்கள் அழிக்கப்பட்டு, நொதிகளின் இயல்பும் மாற்றப்படுகிறது
  • பாலை 70° C முதல் 75° C வெப்பநிலை வரை குறிப்பிட்ட நேரம் வரை காய்ச்சி பின்பு வேகமாக குளிரச் செய்து சேமித்தல் பாஸ்டியர் முறை எனப்படும்

குளிரூட்டுதல்

  • இறைச்சி, மீன் போன்றவற்றை மிகக் குறைந்த வெப்பநிலைக்கு உட்படுத்தும்போது அதிலுள்ள நீரில் செயல் தடுக்கப்படுகிறது. அதனால் நுண்ணுயிர் வளர்ச்சியும், செயல்பாடும் தடைபடுகிறது

உப்பு சேர்த்தல்

  • உணவுப் பொருட்களில் உப்பு சேர்ப்பதன் மூலம் உணவில் உள்ள நீர் சவ்வூடு பரவல் முறையில் வெளியேறுகிறது
  • இறைச்சி, மீன், நெல்லிக்காய், புளி, மாங்காய், எலுமிச்சை போன்றவை உப்பு சேர்த்தல் மூலம் பதப்படுத்தப்படுகிறது

சர்க்கரை சேர்த்தல்

  • உணவுப்பொருட்களில் சர்க்கரையை சேர்ப்பதன் மூலம் சர்க்கரை நீரில் கரைந்து உணவுப் பொருட்களில் நீரற்ற நிலையை உருவாக்குகிறது

கதிர்வீச்சு முறை

  • X - கதிர்கள் அல்லது காமா கதிர்கள் அல்லது புற ஊதாக் கதிர்கள் மூலம் உணவில் உள்ள பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகளை நீக்கும் முறை கதிர்வீச்சு முறை எனப்படும்








Comments

Popular posts from this blog

6 - ம் வகுப்பு கணிதம் - விகிதம் மற்றும் விகித சமம்

6 - ம் வகுப்பு கணிதம் - விகிதம் மற்றும் விகித சமம் ஓர் அளவினை மற்றோர் அளவின் மடங்காக வெளிப்படுத்தி ஒப்பிடுவது விகிதம் எனப்படும் விகிதத்தைப் பின்னமாகவும் எழுதலாம். விகிதத்தைப் பெரும்பாலும் எளிய வடிவத்தில் எழுத வேண்டும் விகிதங்களின் பண்புகள் விகிதங்களுக்கு அலகு இல்லை. இது ஓர் எண் மதிப்பு. எடுத்துக்காட்டு: 8 கிலோமீட்டர்க்கும் 4 கிலோ மீட்டருக்கும் உள்ள விகிதம் 2 : 1 ஆகும் மற்றும் 2 கி. மீ : 1 கி.மீ அல்ல விகிதங்களின் இரு அளவுகளும் ஒரே அலகுடையதாக இருக்க வேண்டும்.எடுத்துக்காட்டு 4 கிலோ மீட்டர் மற்றும் 400 மீட்டர் ஆகியவற்றிற்கான விகிதம் காணும் போது அவற்றை (4×1000):400 = 4000:400=10:1 எனக் குறிப்பிடலாம் விகிதத்தில் ஒவ்வோர் எண்ணும் உறுப்பு என அழைக்கப்படும் விகிதத்தின் உறுப்புகளின் வரிசையை மாற்றி எழுத முடியாது 20:5 என்ற விகிதத்தை எளிய வடிவில் காண்க 20/5 = 4/1 =4:1 500கி மற்றும் 250 கி க்கும் உள்ள விகிதத்தை எளிய வடிவில் காண்க 500/250 = 2/1 =1 மாதவியும், அன்புவும் இரண்டு மேசைகளை முறையே ரூ.750 மற்றும் ரூ.900 க்கு வாங்குகின்றனர். அன்புவும், மாத...

6 - ம் வகுப்பு தமிழ் - பாடறிந்து ஒழுகுதல்

6 - ம் வகுப்பு தமிழ் - பாடறிந்து ஒழுகுதல் ஆசாரக்கோவை ஆசாரக்கோவை நூலை எழுதியவர் - பெருவாயின் முள்ளியார் இவர் பிறந்த ஊர் கயத்தூர். ஆசாரக்கோவை என்பதற்கு நல்ல ஒழுக்கங்களின் தொகுப்பு என்பது பொருள். இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. இந்நூல் நூறு வெண்பாக்களைக் கொண்டது தமிழர் பெருவிழா பொங்கல் விழா தமிழர் திருநாள் என்றும் போற்றப்படுகிறது கதிரவனுக்கு நன்றி கூறிச் சிறப்பு செய்யும் விழா பொங்கல் விழா. உழவர்கள் ஆடித்திங்களில் விதைப்பர். தைத்திங்களில் அறுவடை செய்து பயன் அடைவர். தைத் திங்களின் முதல் நாளில் பொங்கலிட்டு வழிபடுவர். எனவே இத்திருவிழாவை அறுவடைத் திருவிழா என்றும் அழைப்பர். உழவர்கள் இயற்கைக்கும் தம்முடன் உழைத்த கால்நடைகளுக்கும் இந்நாளில் நன்றி தெரிவித்து மகிழ்கின்றனர். எனவே இவ்விழாவை உழவர் திருநாள் என்றும் கூறுவர். போகித் திருநாள் பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பது ஆன்றோர் மொழி. வீட்டில் உள்ள பயனற்ற பொருள்களை நீக்கி வீட்டைத் தூய்மை செய்யும் நாள் போகித் திருநாள். இது மார்கழி மாதத்தின் இறுதி நாள் ஆகும் வாழ்க்கைக்கு வளம் தரும் மழைக் கடவுளை வழிப...

6 - ம் வகுப்பு கணிதம் - இயல் எண்கள், முழு எண்கள்

        Natural and Whole numbers         இயல் எண்கள், முழு எண்கள் இயல் எண்கள் அல்லது எண்ணும் எண்கள் அல்லது மிகை முழு எண்கள் N = {1,2,3,4,......} முழு எண்கள் அல்லது நிறைவெண்கள் W = {0,1,2,3,4......} எல்லா முழு எண்களுக்கும் தொடரி உண்டு பூஜ்ஜியத்தைத் தவிர எல்லா முழு எண்களுக்கும் முன்னி உண்டு எல்லா முழு எண்களையும் கூட்டவும், பெருக்கவும் முடியும் இயல் எண்ணினை அதைவிட சிறிய இயல் எண் அல்லது அதே எண்ணைக் கொண்டு கழிக்க முடியும் ஒரு பெரிய எண்ணை சிறிய எண்ணால் வகுக்க முடியும் அதிக இலக்கங்கள் உடைய எண்கள் நம் நாட்டில் 10,000            = பத்தாயிரம் 1,00,000         = ஒரு லட்சம் 10,00,000        = பத்து லட்சம் 1,00,00,000     =ஒரு கோடி 1,00,00,00,000 = நூறு கோடி உலகளவில் 10,000             = பத்தாயிரம் 100,000           = நூறாயிரம் 1,000,000        = ஒ...