Skip to main content

Posts

Showing posts from October, 2019

7 - ம் வகுப்பு சமூக அறிவியல் - தென்னிந்திய அரசுகள்

                தென்னிந்திய அரசுகள் பண்டைய தமிழகம், சேர, சோழ, பாண்டிய நாடு என்ற முப்பெரும் அரசியல் பிரிவுகளைக் கொண்டதாக இருந்தது. அக்காலம் சங்க காலம் எனப்படும் பல்லவப் பேரரசு பல்லவ மரபை முற்காலப் பல்லவர்,பிற்காலப் பல்லவர் என பிரித்து வழங்குவர் பல்லவர்களின் தலைநகரம் காஞ்சிபுரம் ஆகும் பிற்காலப் பல்லவர்கள் (கி.பி. 570 - 903) பிற்கால பல்லவ அரசர்களில் முதன்மையானவர் சிம்மவிஷ்ணு இவர் களப்பிரர்களை வீழ்த்தி பல்லவர் ஆட்சியை தொண்டை மண்டலத்தில் தொடங்கி வைத்தார் இவர் அவனிசிம்மன் அதாவது உலகின் சிங்கம் எனப் புகழப்பட்டார் முதலாம் மகேந்திரவர்மன் (கி.பி. 600 - 630) சிம்ம விஷ்ணுவின் மகன் முதலாம் மகேந்திரவர்மன் ஆவார் மகேந்திரவர்மன் தமது ஆட்சியின் தொடக்கத்தில் சமண சமயத்தைப் பின்பற்றினார். பின்னர் சைவக்குரவர் அப்பர் என்பவரால் சைவ சமயத்திற்கு மாற்றப்பட்டார் முதலாம் நரசிம்மவர்மன் (கி.பி.630 - 668) முதலாம் மகேந்திரவர்மனின் மகன் முதலாம் நரசிம்மவர்மன் ஆவார் இவர் மாமல்லன் என்று அழைக்கப்பட்டார். இதற்கு மற்போரில் சிறந்தவன் என்பது...

புவியியல் - நீர் வளம்

                     Water Resources                      நீர்வளம் நீர்வளம் புவியின் மேற்பரப்பில் 97% நீர் கடலாகவும்,3%  நீர் பனிப்பாறைகளாகவும், பனி முகடுகளாகவும், ஆறுகள், ஏரிகள் மற்றும் குளங்களாகவும், நிலத்தடி நீராகவும், காற்றில் நீராவியாகவும் உள்ளது ஆயிரம் ஏரிகளின் நிலம் என்று அழைக்கப்படுகிறது. அங்கு 1,87,888 ஏரிகள் காணப்படுகின்றன வட அரைக்கோளம் 61% நிலப்பரப்பையும்,தென் அரைக்கோளம் 81% நீர்ப்பரப்பையும் கொண்டுள்ளது வட அரைக்கோளம் நில அரைக்கோளம் என்றும் தென் அரைக்கோளம் நீர் அரைக்கோளம் என்றும் அழைக்கப்படுகின்றன கடலின் அடியில் பல்வேறு நிலத்தோற்றங்கள் காணப்படுகின்றன. அவை கண்டத் திட்டு கண்டச் சரிவு கண்ட உயர்ச்சி கடலடி சமவெளிகள் அல்லது அபிசல் சமவெளி கடல் பள்ளம் அல்லது அகழிகள் கடலடி மலைத் தொடர்கள் 1.கண்டத் திட்டு நிலத்திலிருந்து கடலை நோக்கி மென்சரிவுடன் கடலில் மூழ்கியுள்ள ஆழமற்ற பகுதியே கண்டத்திட்டு எனப்படும் கண்டத்திட்டு ஆழமற்ற பகுதியாக இருப்பதினால் சூ...

6 - ம் வகுப்பு தமிழ் - கண்ணெனத்தகும்

    6 - ம் வகுப்பு தமிழ் - கண்ணெனத்தகும் மூதுரை மூதுரையை இயற்றியவர் - ஔவையார் இவர் ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், நல்வழி போன்ற நூல்களையும் இயற்றியுள்ளார். மூதுரை என்னும் சொல்லுக்கு மூத்தோர் கூறும் அறிவுரை என்பது பொருள். இந்நூலில் 31 பாடல்கள் உள்ளன துன்பம் வெல்லும் கல்வி துன்பம் வெல்லும் கல்வி பாடலை இயற்றியவர் - பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் இவர் எளிய தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துக்களை வலியுறுத்திப் பாடியவர். மக்கள் கவிஞர் என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார் கல்விக்கண் திறந்தவர் கல்விக் கண் திறந்தவர் என்று தந்தை பெரியாரால் பாராட்டப் பெற்றவர் காமராசர் காமராசரின் சிறப்புப் பெயர்கள் பெருந்தலைவர் படிக்காத மேதை கர்மவீரர் கறுப்புக் காந்தி ஏழைப்பங்காளர் தலைவர்களை உருவாக்குபவர் காமராசரின் கல்விப் பணிகள் காமராசர் முதலமைச்சராக பதவி ஏற்ற நேரத்தில் ஏறக்குறைய 6000 தொடக்கப் பள்ளிகள் மூடப்பட்டு இருந்தன. அவற்றை உடனடியாக திறக்க ஆணையிட்டார். மாநிலம் முழுக்க அனைவருக்கும் இலவச கட்டாய கல்வி சட்டத்தை இயற்றி தீவிரமாக நடைமுறைப் ...

புவியியல் - நிலக்கோளம்,நீர்க்கோளம்,வளிக்கோளம்

       Lithosphere,Hydrosphere,Atmosphere       நிலக்கோளம்,நீர்க்கோளம்,வளிக்கோளம் புவி புவி தன் அச்சில் 23 1/2° சாய்ந்து தன்னைத் தானே சுற்றிக் கொண்டு நீள்வட்டப்பாதையில் சூரியனையும் சுற்றி வருகிறது புவியின் வட துருவத்திலிருந்து தென் துருவம் வரை புவியின் மையம் வழியாக செல்லும் ஒரு கற்பனைக் கோடு புவியின் அச்சு எனப்படும்.  23 1/2° சாய்வு  புவியின் சுற்று வட்டப்பாதைக்கு 66 1/2° கோணத்தை ஏற்படுத்துகிறது புவி தன்னைத்தானே சுழலும் வேகம் நிலநடுக்கோட்டுப் பகுதியில் 1670 கி. மீ/மணியாகவும்,60 ° வடக்கு அட்சரேகையில் 845 கி.மீ /மணியாகவும் துருவப்பகுதியில் சுழியமாகவும் இருக்கும் புவி சூரியனை வினாடிக்கு 30 கிலோமீட்டர் வேகத்தில் சுற்றி வருகிறது புவி சூரியனை ஒருமுறை சுற்றிவர 365 நாட்கள் ஆகும் புவி சுழலுவதால் இரவு, பகல் ஏற்படுகிறது புவி சூரியனைச் சுற்றி வருவதால் பருவ காலங்கள் ஏற்படுகின்றன புவி உயிர்க்கோளம் என அழைக்கப்படுகிறது நிலக் கோளம் அல்லது பாறைக்கோளம் புவியின் திடமான மேற்பரப்பு நிலக்கோளம் எனப்படும் புவி நிகர் கோள்கள் அனைத்தும் ப...

6 - ம் வகுப்பு அறிவியல் - நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருட்கள்

6 - ம் வகுப்பு அறிவியல் - நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருட்கள் திண்ம, திரவ மற்றும் வாயு நிலைகளைத் தவிர மேலும் இரண்டு நிலைகள் உள்ளன. அவை பிளாஸ்மா மற்றும் போஸ் - ஐன்ஸ்டீன் சுருக்கம் ஆகும் பிளாஸ்மா நிலை என்பது பூமியில் உள்ள பருப்பொருளின் பொதுவான நிலை அல்ல. ஆனால், அது அண்டத்தில் கூடுதலாகக் காணப்படும் ஒரு பொதுவான நிலையாகும். எடுத்துக்காட்டாக சூரியனும் நட்சத்திர மண்டலமும் சேர்ந்த கலப்பு பிளாஸ்மா நிலை ஆகும் போஸ் - ஐன்ஸ்டீன் சுருக்கம் என்பது மிகக் குறைவான தட்பவெப்ப நிலையில் காணப்படும் வாயு நிலை போன்ற பருப்பொருள்களின் நிலை ஆகும். இது 1925 ல் கணிக்கப்பட்டு 1995 ல் உறுதி செய்யப்பட்டது.  இவ்வகை கடுங்குளிர் முறையில் எந்திரங்களில் பயன்படுகிறது பருப்பொருளின் இயற்பியல் தன்மை நிறையுள்ள மற்றும் இடத்தை அடைத்துக் கொள்பவை பருப்பொருள் ஆகும் எல்லாப் பருப்பொருளும் மிகச்சிறிய துகள்களால் ஆனவை பருப்பொருளில் உள்ள இத்தகைய மிகச் சிறிய துகள்கள் அணுக்கள் அல்லது மூலக்கூறுகள் என அழைக்கப்படுகிறது பருப்பொருளின் சிறப்புப் பண்புகள் பருப்பொருளின் துகள்களுக்கு இடையே அதிக இடைவெளி உள்ளது. இது வ...

6 - ம் வகுப்பு தமிழ் - தமிழ்த்தேன்

6 - ம் வகுப்பு தமிழ் - தமிழ்த்தேன் இன்பத்தமிழ் இன்பத்தமிழ் பாடலை எழுதியவர் - பாரதிதாசன் பாரதிதாசனின் இயற்பெயர் சுப்புரத்தினம். பாரதியாரின் கவிதைகள் மீது கொண்ட பற்றின் காரணமாகத் தம் பெயரைப் பாரதிதாசன் என மாற்றிக்கொண்டார். இவரது கவிதைகளில் பெண்கல்வி, கைம்பெண் மறுமணம், பொதுவுடைமை, பகுத்தறிவு முதலான புரட்சிகரமான கருத்துகளை பாடியுள்ளார். எனவே இவர் புரட்சிக்கவி என்று போற்றப்படுகிறார். இவரைப் பாவேந்தர் என்றும் போற்றுவர். தமிழ்க்கும்மி தமிழ்க்கும்மி பாடலை பாடியவர் - பெருஞ்சித்திரனார் பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் மாணிக்கம். இவர் பாவலரேறு என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார். கனிச்சாறு, கொய்யாக்கனி, பாவியக்கொத்து, நூறாசிரியம் முதலான நூல்களை இயற்றியுள்ளார். தென்மொழி, தமிழ்ச்சிட்டு, தமிழ்நிலம் ஆகிய இதழ்களை நடத்தினார். தனித் தமிழையும் தமிழுணர்வையும் பரப்பிய பாவலர் இவர். வளர்தமிழ் உலகில் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட மொழிகள் உள்ளன. இவற்றுள் சில மொழிகள் மட்டுமே பேச்சு வடிவம், எழுத்து வடிவம் இரண்டையும் பெற்றுள்ளன. உலக மொழிகள் பலவற்றுள் இலக்கண, இலக்கிய வளம் பெற்றுத் திகழும் மொழிக...

தாவரவியல் - வாழ்விடங்களின் வகைகள்

தாவரவியல் Classification of living organism வாழ்விடங்களின் வகைகள் வாழிடம் ஒவ்வொரு உயிரினமும் உயிர்வாழவும், இனப்பெருக்கம் செய்யவும் தேவைப்படும் இடமானது அதன் வாழிடம் ஆகும் கடலின் அடி மட்டத்திலிருந்து மலையின் உச்சி வரை தாவரங்கள் மற்றும் விலங்குகளின் வாழ்விடங்களாக உள்ளன வாழ்விடங்களின் வகைகள் 1. நீர் வாழிடம் நீர் வாழிடம் என்பது நிரந்தரமாகவோ அல்லது அவ்வப்போது நீர் சூழ்ந்தோ காணப்படும் இவைகள் இருவகைப்படும் நன்னீர் வாழிடம் கடல்நீர் வாழிடம் நன்னீர் வாழிடம் ஆறுகள், குளங்கள், குட்டைகள் மற்றும் ஏரிகள் இவையாவும் நன்னீர் வாழிடங்கள் ஆகும் ஆகாயத் தாமரை, அல்லி மற்றும் தாமரை ஆகியவை நன்னீரில் காணப்படும் தாவரங்கள் ஆகும் நீர் தாவரங்களின் வேர்கள் வளர்ச்சி குன்றிய வை தண்டிலும், இலைப்பகுதிகளிலும் காற்று அறைகள் அதிகமாக இருப்பதால் இவைகள் நீரில் எளிதில் மிதக்கின்றன உலகில் மிக நீளமான நதி நைல் நதி ஆகும். இது 6650 கிலோ மீட்டர் நீளமுடையது இந்தியாவின் மிக நீளமான நதி கங்கை ஆகும் இது 2525 கிலோ மீட்டர் நீளமுடையது தாமரையின் இலைக் காம்பில் உள்ள காற்று இடைவெளிகள் நீரில் ...

6 - ம் வகுப்பு கணிதம் - எண்கள்

    6 - ம் வகுப்பு கணிதம் - எண்கள் தொடரி மற்றும் முன்னி ஓர் எண்ணுடன் 1ஐக் கூட்டினால் கிடைப்பது அந்த எண்ணின் தொடரி ஆகும் ஓர் எண்ணிலிருந்து 1ஐக் கழித்தால் கிடைப்பது அந்த எண்ணின் முன்னி ஆகும் ஓர் இலட்சத்தில் எத்தனை ஆயிரங்கள் உள்ளன? 100000/1000 = 100 1 இலட்சம் = 100 ஆயிரங்கள் பெரிய எண்களின் இடமதிப்பு 98,47,056 6 - ன் இடமதிப்பு 6×1 = 6 (ஆறு) 5 - ன் இடமதிப்பு 5×10 = 50(ஐம்பது) 0 - ன் இடமதிப்பு 0×100 = 0(பூஜ்யம்) 7  - ன் இடமதிப்பு 7×1000 = 7000(ஏழாயிரம்) 4 - ன் இடமதிப்பு 4×10000 = 40000(நாற்பதாயிரம்) 8 - ன் இடமதிப்பு 8×100000 = 800000(எட்டு இலட்சம்) 9 - ன் இடமதிப்பு 9×1000000 = 9000000(தொண்ணூறு இலட்சம்) 98,47,056 என்ற எண்ணுருவானது தொண்ணூற்று எட்டு இலட்சத்து நாற்பத்து ஏழாயிரத்து ஐம்பத்தாறு என்பதாகும் ஒரு பொருட்காட்சியில் 1வது,2வது,3வது மற்றும் 4வது நாட்களில் விற்ற நுழைவுச் சீட்டுகள் முறையே 1,10,000,75,060,25,700 மற்றும் 30,606. நான்கு நாட்களிலும் மொத்தமாகவிற்பனை செய்யப்பட்ட மொத்த நுழைவுச்சீட்டுகள் எத்தனை? முதல் நாள் ...

6 - ம் வகுப்பு தமிழ் - இயற்கை

6 - ம் வகுப்பு தமிழ் - இயற்கை சிலப்பதிகாரம் சிலப்பதிகாரத்தை இயற்றியவர் - இளங்கோவடிகள் இவர் சேர மன்னர் மரபைச் சேர்ந்தவர் என்று சிலப்பதிகாரப் பதிகம் கூறுகிறது. இவர் காலம் கி.பி இரண்டாம் நூற்றாண்டு என்பர். ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று சிலப்பதிகாரம். இதுவே தமிழின் முதல் காப்பியம். இது முத்தமிழ்க் காப்பியம், குடிமக்கள் காப்பியம் என்று  போற்றப்படுகிறது.சிலப்பதிகாரமும், மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள் என்று அழைக்கப்படுகின்றன. காணி நிலம் காணி நிலம் பாடலைப் பாடியவர் - பாரதியார் பாரதியாரின் இயற்பெயர் சுப்பிரமணியன்.இளமையிலேயே சிறப்பாகக் கவி பாடும் திறன் பெற்றவர். எட்டயபுர மன்னரால் பாரதி என்னும் பட்டம் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டவர்.தம் கவிதையின் வழியாக விடுதலை உணர்வை ஊட்டியவர்.மண் உரிமைக்காகவும்,பெண் உரிமைக்காகவும் பாடியவர். நாட்டுப்பற்றும் மொழிப்பற்றும் மிக்க பாடல்கள் பலவற்றைப் படைத்தவர். பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு, குயில்பாட்டு முதலிய பல நூல்களை இயற்றியுள்ளார். சிறகின் ஓசை பறவைகள் கண்டம் விட்டுக் கண்டம் பறக்கின்றன. அவை பெருங்கடல்களையும் மலைகளையும் கடந்து போகின்றன. குறிப...

புவியியல் - காடுகள் மற்றும் வன வாழ்க்கை

       Forest and wildlife               காடுகள் மற்றும் வன வாழ்க்கை காடுகள் மனித இனத்திற்கு கிடைக்கக் கூடிய சிறந்த இயற்கை வளங்களுள் காடுகளும் ஒன்றாகும் இந்தியாவில் காடுகளின் மொத்த பரப்பளவு சுமார் 68 மில்லியன் ஹெக்டேர் ஆகும் இந்திய இயற்கைத் தாவரங்கள் ஆறு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன         1.வெப்பமண்டல பசுமைமாறாக் காடுகள்         2.வெப்பமண்டல பருவக்காற்று காடுகள்         3.குறுங்காடு மற்றும் முட்புதர் காடுகள்         4.பாலைவனத் தாவரம         5.மாங்ரோவ் காடுகள் (சதுப்பு நிலக்        காடுகள்)         6.மலைக்காடுகள் 1.வெப்ப மண்டல பசுமை மாறாக் காடுகள் ஆண்டு மழைப்பொழிவு 200 செ.மீக்கும் அதிகமான இடங்களில் பசுமைமாறாக் காடுகள் காணப்படுகின்றன மிக அடர்த்தியாக காணப்படுவதுடன் 60 மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய மரங்களைக் கொண்டது ரோஸ் மரம்,எபானி,மகோகனி, இரப்பர்,...

7 - ம் வகுப்பு அறிவியல் - பருப்பொருள்கள் மற்றும் அதன் தன்மைகள்

பருப்பொருள்கள் மற்றும் அதன் தன்மைகள் இயற்பியல் மாற்றங்கள் ஒரு பருப்பொருளின் இயற்பியல் பண்புகளான வடிவம், அளவு, நிறம் ஆகியவற்றில் மட்டும் மாற்றம் நிகழ்வது இயற்பியல் மாற்றம் எனப்படும் திண்மப் பொருளை வெப்பப்படுத்தும் போது திரவமாக மாறாமல் நேரடியாக வாயு நிலைக்கு மாறுவது பதங்கமாதல் எனப்படும் திண்மப் பொருளை வெப்பப்படுத்தும் போது திரவமாக மாறுவது உருகுதல் எனப்படும் எடுத்துக்காட்டு பனிக்கட்டியை வெப்பப்படுத்தும் போது நீராக மாறுவது நீரைத் தொடர்ந்து வெப்பப்படுத்தும் போது நீர் கொதித்து நீராவியாக மாறுவது ஆவியாதல் எனப்படும் நீராவியை குளிரச் செய்தால் அது மீண்டும் நீராக மாறுவது குளிர்வித்தல் எனப்படும் நீரை மீண்டும் குளிர்விக்கும் போது பனிக்கட்டியாக மாறுவது உறைதல் எனப்படும் வேதி மாற்றங்கள் வினைபடு பொருள்கள் வினைபுரிந்து ஒன்றுக்கு மேற்பட்ட வினை விளைப் பொருட்களைத் தருவது வேதி மாற்றம் எனப்படும் வேதி மாற்றங்கள் நடைபெறும் பொழுது, வெப்பத்தையும் ஒளியையும் வெளிவிடும் அல்லது உள்ளிழுக்கும் ஒலியை உண்டாக்கும் நிறம் மாறும் மணம் மாறும் காய்கறிகள் மற்றும் பழங்களின் மணம், நிறம், சுவை ஆகி...

6 - ம் வகுப்பு அறிவியல் - ஆற்றலின் வகைகள்

          6 - ம் வகுப்பு அறிவியல்           ஆற்றலின் வகைகள் வேலை செய்யத் தேவையான திறமையே ஆற்றல் எனப்படும் ஆற்றலின் அலகு ஜூல் ஆற்றலின் வகைகள் இயந்திர ஆற்றல், வேதி ஆற்றல்,ஒளி ஆற்றல், ஒலி ஆற்றல், மின்னாற்றல், வெப்ப ஆற்றல், காற்றாற்றல் ஆகியவை ஆற்றலின் பல்வேறு வகைகள் ஆகும் இயந்திர ஆற்றல் உயரமான இடத்தில் அணைக்கட்டில் தேக்கி வைக்கப்பட்டு இருக்கும் நீர் அதிக ஆற்றலைப் பெற்றிருக்கும். அணையில் இருந்து கீழே விழும் நீரின் ஆற்றலைக் கொண்டு, மின்னாக்கியின் (generator) கம்பிச்சுருளை (turbine) சுழற்றுவதன் மூலம் மின்னாற்றல் உற்பத்தி செய்யப்படுகிறது இயந்திர ஆற்றலின் வகைகள்       1.நிலை ஆற்றல்       2.இயக்க ஆற்றல் 1. நிலை ஆற்றல் ஒரு பொருள் அதன் நிலையை பொறுத்தோ அல்லது வடிவத்தை பொறுத்தோ பெற்றுள்ள ஆற்றல் நிலை ஆற்றல் எனப்படும் அணைக்கட்டில் உள்ள நீர், மேல்நிலைத் தொட்டியில் உள்ள நீர்  போன்றவை சற்று உயரத்தில் நிலையாக இருப்பதனால், அவை நிலை ஆற்றலைப் பெற்றுள்ளன 2. இயக்க ஆற்றல் இயக்கத...