Forest and wildlife
காடுகள் மற்றும் வன வாழ்க்கை
காடுகள்
- மனித இனத்திற்கு கிடைக்கக் கூடிய சிறந்த இயற்கை வளங்களுள் காடுகளும் ஒன்றாகும்
- இந்தியாவில் காடுகளின் மொத்த பரப்பளவு சுமார் 68 மில்லியன் ஹெக்டேர் ஆகும்
- இந்திய இயற்கைத் தாவரங்கள் ஆறு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன
1.வெப்பமண்டல பசுமைமாறாக் காடுகள்
2.வெப்பமண்டல பருவக்காற்று காடுகள்
3.குறுங்காடு மற்றும் முட்புதர் காடுகள்
4.பாலைவனத் தாவரம
5.மாங்ரோவ் காடுகள் (சதுப்பு நிலக் காடுகள்)
6.மலைக்காடுகள்
1.வெப்ப மண்டல பசுமை மாறாக் காடுகள்
- ஆண்டு மழைப்பொழிவு 200 செ.மீக்கும் அதிகமான இடங்களில் பசுமைமாறாக் காடுகள் காணப்படுகின்றன
- மிக அடர்த்தியாக காணப்படுவதுடன் 60 மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய மரங்களைக் கொண்டது
- ரோஸ் மரம்,எபானி,மகோகனி, இரப்பர்,சின்கோனா, மூங்கில்,லயனாஸ் போன்ற மரங்கள் காணப்படுகின்றன
- பசுமை மாறாக்காடுகள் பெரும்பாலும் மேற்கு தொடர்ச்சி மலையின் மேற்குப் பகுதியிலும், அந்தமான் நிக்கோபார் தீவுகளிலும், மலையின் தாழ்ந்த சரிவுகளிலும், அஸ்ஸாம், ஒடிசாவின் சில பகுதிகளிலும் காணப்படுகின்றன
2.வெப்பமண்டல பருவக்காற்று காடுகள்
- 70 செ.மீ முதல் 200 செ.மீ வரை ஆண்டு சராசரி மழை பெறும் பகுதிகளில் வெப்ப மண்டல பருவகாற்று காடுகள் காணப்படுகின்றன
- இக் காடுகளில் உள்ள மரங்கள் வசந்த காலத்திலும், கோடைக்காலத்தின் முற்பகுதியிலும் சுமார் 6 முதல் 8 வாரங்களுக்குள் வறட்சியின் காரணமாக இலைகளை உதிர்த்து விடுகின்றன.எனவே இக்காடுகள் இலையுதிர் காடுகள் என்றும் அழைக்கப்படுகின்றன
- தேக்கு, சால், சிசம், சந்தன மரம்,வேட்டில், வேப்ப மரம் போன்ற மரங்கள் இங்கு காணப்படுகின்றன
- ஈரமான பருவக்காற்று காடுகள் வடகிழக்கு மாநிலங்களிலும், இமய மலையின் அடிவாரங்களிலும், ஜார்கண்ட், மேற்கு ஒடிசா, சட்டீஸ்கர், மேற்கு தொடர்ச்சி மலையின் கிழக்குச் சரிவில் போன்ற பகுதிகளில் காணப்படுகின்றன
- வறண்ட பருவக்காற்று காடுகள் தீபகற்ப பீடபூமியிலும், பீகார் ,உத்தரப் பிரதேசத்தின் சமவெளி ஆகிய பகுதிகளிலும் காணப்படுகின்றன
3.குறுங்காடு மற்றும் முட்புதர்கள்
- 75 செ.மீக்கும் குறைவான சராசரி மழை அளவு டன் நீண்ட வறட்சியான பருவம் கொண்ட பகுதிகளில் காணப்படுகின்றன
- நிலத்தடியில் வெகு ஆழத்தில் உள்ள நீரை உறிஞ்சக்கூடிய நீண்ட வேர்களைக் கொண்ட மரங்கள் இங்கு காணப்படுகின்றன
- நீர் ஆவியாதலை குறைப்பதற்கு அடர்ந்த, சிறிய இலைகளை இம்மரங்கள் கொண்டுள்ளன
- அக்கேசியா, பனை,கள்ளி, கயிர்,பாபூல்,பலாஸ்,கக்ரி,கஜீரி போன்ற மரங்கள் காணப்படுகின்றன
- வடமேற்கு பகுதியிலுள்ளஅரை பாலைவன பகுதிகளான குஜராத், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், உத்திரப் பிரதேசம், தென்மேற்கு பஞ்சாப், மேற்கு ஹரியானா,மேற்கு தொடர்ச்சி மலையின் மழை மறைவு பகுதிகளான மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு ஆகிய பகுதிகளில் இக்காடுகள் காணப்படுகின்றன
4.பாலைவனத் தாவரம்
- மழை அளவு 25 செ.மீக்கும் குறைவாக உள்ள பகுதிகளில் பாலைவனத் தாவரங்கள் காணப்படுகின்றன
- அக்கேசியா, ஈச்சமரம்,பாபுல் போன்ற மரங்கள் இங்கு காணப்படுகின்றன
- இங்குள்ள மரங்கள் 6 முதல் 10 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது
- ஆழமான வேர்களும், கால்நடைகளிடமிருந்து பாதுகாத்துக்கொள்ள கடினமான முட்களையும் கொண்டுள்ளது
- ராஜஸ்தான்,கட்ச், குஜராத்திலுள்ள சௌராஷ்டிரா, தென் மேற்கு பஞ்சாப், தக்காண பீடபூமி போன்ற பகுதிகளில் பாலைவனத் தாவரங்கள் காணப்படுகின்றன
5.மாங்ரோவ் காடுகள் (சதுப்பு நிலக்காடுகள்)
- மாங்குரோவ் காடுகள் கடல் ஓதங்கள் மூலம் நீரைப் பெறும் கடலோரப் பகுதிகளில் காணப்படுகின்றன
- மேற்குவங்காளத்தில் இக்காடுகள் சுந்தரவனக் காடுகள் என அழைக்கப்படுகின்றன
- கங்கை, மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா, காவிரி ஆற்றின் டெல்டா பகுதிகளிலும், அந்தமான் நிக்கோபர் தீவுகளின் கடற்கரை பகுதிகளிலும், மேற்கு கடற்கரையின் சில பகுதிகளிலும் இக்காடுகள் காணப்படுகின்றன
- இக் காடுகளில் உள்ள மரங்கள் கடினமாகவும், வலுவானதாகவும் இருப்பதால் படகுகள் கட்டப் பயன்படுத்தப்படுகின்றன
6.மலைக்காடுகள்
- கடல் மட்டத்திலிருந்து உயரே செல்லச் செல்ல குறையும் வெப்பத்தினால் வளரக்கூடிய மரங்களை மழைக்காடுகள் கொண்டுள்ளன
- மலைக்காடுகள் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது
1.இமய மலைத் தொடரில் உள்ள மலைக் காடுகள்
2.தீபகற்ப பீடபூமி மற்றும் அங்குள்ள மலைத்தொடர்களில் காணப்படும் காடுகள்
1.இமய மலைத்தொடரிலுள்ள மலைக் காடுகள்
- இமயமலைத் தொடரில் 1000 மீ முதல் 2000 மீ உயரம் வரை வளரும் மரங்கள் காணப்படுகின்றன
எ .கா: ஓக்,செஸ்நெட் போன்ற பசுமை மாறாத அகன்ற இலைக்காடுகள்
- 1500 மீட்டர் முதல் 3000 மீட்டர் உயரம் வரை வளரும் பைன்,டியோடர், சில்வர்,ஃபிர், ஸ்பூருஸ்,செடர் போன்ற ஊசியிலை மரங்கள் காணப்படுகின்றன
- 3600 மீ உயரத்திற்கு மேல் ஊசியிலைக் காடுகளையும், புல்வெளிகளையும் தாண்டி ஆல்பைன் தாவரங்கள் காணப்படுகின்றன. இங்கு சில்வர் ஃபிர்,ஜூனிபெர்ஸ்,பைன ,பிர்ச்சஸ் போன்ற மரங்கள் காணப்படுகின்றன
- மிக உயரம் கொண்ட பகுதிகளில் மோசஸ், லிச்சன்ஸ் போன்ற மரங்கள் காணப்படுகின்றன
2.தீபகற்ப பீடபூமியிலுள்ள மலைக் காடுகள்
- இவை மூன்று பகுதிகளில் காணப்படுகின்றன
1.மேற்கு தொடர்ச்சி மலைகள்
2.விந்திய மலைப் பகுதி
3.நீலகிரி மலைப்பகுதி
- நீலகிரியிலுள்ள வெப்பமண்டலக் காடுகள் சோலாஸ் என்றும் அழைக்கப்படுகிறது
- மேக்னோலியா, லாரல்,சின்கோனா,வேட்டில் போன்ற மரங்கள் காணப்படுகின்றன
புல்வெளிகள்
- இந்தியப் புல்வெளிகள் ஈரமான மண் உள்ள தரைப்பகுதிகளிலும், உப்புப்பகுதிகளிலும், சில குன்றுபகுதிகளிலும் காணப்படுகின்றன
- புல்வெளிகளை இருவகைகளாகப் பிரிக்கலாம்
1.தாழ்நிலப் புல்வெளி
2.மேட்டு நிலப் புல்வெளி
1.தாழ்நிலப் புல்வெளி
- 30 செ.மீ முதல் 200 செ.மீ வரை ஆண்டு சராசரி மழையளவும், அதிகமான கோடைக்கால வெப்பமும் கொண்ட பகுதிகளில் வளர்கின்றன
- பஞ்சாப், உத்தரப் பிரதேசம், ஹரியானா, பீகார் வடமேற்கு அஸ்ஸாம் ஆகிய பகுதிகளில் காணப்படுகிறது
2.மேட்டு நிலப் புல்வெளி
- 1000 மீ உயரத்திற்கு மேல் உள்ள இமயமலைப் பகுதிகளிலும், கர்நாடகாவில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் காடுகள் அழிக்கப்பட்ட பகுதிகளில் வளருகின்றன
- தென்னிந்தியாவில் சோலைக்காடுகளின் சிறு பகுதிகளில் காணப்படுகின்றன
காட்டு வளங்கள்
- தாவர மற்றும் விலங்கின வளங்கள் தமிழ்நாட்டில் மலையகப் பகுதிகளிலும், காட்டுப் பகுதிகளிலும் காணப்படுகிறது
- முதுமலையும், ஆனைமலையும் (இந்திரா காந்தி வனவிலங்கு சரணாலயம்) யானைகள், புலிகள், காட்டெருமைகள், குரங்குகள் வாழ்விடமாக உள்ளது
- தமிழ்நாட்டில் 3000-க்கும் மேற்பட்ட தாவர இனங்கள் உள்ளன
- மலேரியா நோயைக் கட்டுப்படுத்த, சின்கோனா மரத்திலிருந்து குனைன் என்ற மருந்துப் பொருள் தயாரிக்கப்படுகிறது
- கபம் மற்றும் உடல் வலியை குணப்படுத்த நீலகிரி மலையில் உள்ள யூகலிப்டஸ் மரத்திலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது
- உலக வன விலங்கு தினம் - அக்டோபர் 4
- உலக காடுகள் தினம் - மார்ச் 21
- உலக நீர் தினம் - மார்ச் 22
Comments
Post a Comment