நடப்பு நிகழ்வுகள் - மே 2019
மே - 1
- சர்வதேச தொழிலாளர் தினம்; மையக்கருத்து:"அனைவருக்கும் நிலையான ஓய்வூதியம்: சமூக பங்குதாரர்களின் பங்கு" "சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்காக தொழிலாளர்களை ஒன்றிணைத்தல்"
- ஒன்பது இந்திய மொழிகளுக்கு எளிதான OCR அமைப்பை ஐஐடி மெட்ராஸ் குழு ஏற்படுத்தியுள்ளது.
- சிக்கிம் மாநில முதல்வர் பவன் சாம்லிங் 1994 டிசம்பர் 12 முதல் தொடர்ந்து ஐந்தாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்
- தட்டம்மை மற்றும் ரூபெல்லா தடுப்பூசி பரப்புரைக்கான நல்லெண்ண தூதராக ஹரியானா மாநில அரசு சர்வதேச துப்பாக்கி சுடுதல் வீராங்கனை கௌரி ஷியோரனை நியமித்துள்ளது
மே - 2
- இந்தியா - பிரெஞ்சு நாடுகளுக்கு இடையேயான கடற்படை பயிற்சி வருணா 19.1 கோவாவில் மே 1 முதல் 10 வரை நடைபெறுகிறது
- இந்தியாவின் மதிப்பீடுகள் மற்றும் ஆராய்ச்சிகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் 2019 - 20 நிதியாண்டில் 7.3 சதவீதமாக குறைந்துள்ளது
- காந்தி: தி ரைட்டர் என்ற புத்தகத்தை பாபாணி பட்டாச்சார்யா எழுதியுள்ளார்
மே - 3
- சர்வதேச பத்திரிக்கை சுதந்திர தினம்: மையக் கருத்து: "ஜனநாயகத்திற்கான ஊடகம்: பத்திரிக்கை மற்றும் தவறான தகவல்களில் தேர்வுகள்"
- இந்திய தொல்பொருள் ஆய்வாளர்கள் தெலுங்கானா சூர்யபீட்டிலுள்ள பனிகிரி என்ற இடத்தில் பௌத்த தளத்திலிருந்து ஸ்டாக்கோ சிற்பத்தை கண்டுபிடித்தனர். இது இந்தியாவில் இருந்து கிடைத்த மிகப்பெரிய ஸ்டாக்கோ சிற்பமாகும்
- இங்கிலாந்து பாராளுமன்றம் ஒரு முன்மாதிரி நடவடிக்கையாக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலைக்காக அவசரநிலைப் பிரகடனத்தை நிறைவேற்ற உள்ளது
- மேக்ஸிலேபோன் கிரிக்கெட் கிளப்பின் முதல் பிரிட்டிஷார் இல்லாத தலைவராக
- இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் குமார் சங்கக்காரா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்
மே - 4
- பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியர் விருது, இஸ்ரோ முன்னாள் தலைவர் ஏ.எஸ். கிரண் குமாருக்கு வழங்கி கௌரவித்துள்ளது
- புல்வாமாவில் BSNL, பாரத் ஃபைபர் என்ற ஆப்டிகல் ஃபைபர் சார்ந்த அதிவேக பிராட்பேண்ட் சேவையை முதன் முதலில் தொடங்கவுள்ளது
- மகளிர் மற்றும் குழந்தைகள் தொடர்பான பிரச்சனைகளை கையாளுவதற்கான, பெண்கள் மட்டுமே கொண்ட போலீஸ் ரோந்து பிரிவான 'ராணி அபாக்கா படையை' மங்களூரு போலீஸ் கமிஷனர் சந்தீபீபால் தொடங்கி வைத்தார்
- ஜப்பானின் 126 வது பேரரசராக நருஹிடோ முடிசூடிக் கொண்டார்
- ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை, ஜெய்ஷ்-இ-முகமதின் தலைவரான மசூத் அஸாரை உலகளாவிய பயங்கரவாதி என்று முடிவு செய்துள்ளது
மே - 5
- அமேசான் நிறுவனம் உலகளாவிய அளவில் நடத்திய தமிழ்மொழிக்கான நெடும் படைப்பு போட்டியில், 'பரங்கிமலை இரயில் நிலையம்' என்ற புதினத்திற்காக செந்தில் பாலன் வெற்றி பெற்றுள்ளார்
- வான்வழி அச்சுறுத்தல்களுக்கு எதிராக தனது திறனை அதிகரிக்க ரஷ்யாவிடமிருந்து காமோ - 31 ஹெலிகாப்டர்களை வாங்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது
- தாய்லாந்தின் பத்தாவது மன்னராக வஜ்ராலங்கரண் முடிசூட்டிக்கொண்டார்
- இந்தியாவின் தலைமை பொருளாதார ஆலோசகர், டாக்டர். கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியம் பதினைந்தாவது நிதிக்குழுவின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்
மே - 6
- ஓசூர் டி.வி.எஸ் தொழிற்சாலையில் 50 ஏக்கர் பரப்பளவில் பறவைகள் சரணாலயம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 120 வகையான பறவைகள் தங்கியுள்ளன
- அமெரிக்காவின் ஹீஸ்டன் பல்கலைக்கழகத்தில் உள்ள கட்டடமொன்றுக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பல்கலைக்கழகப் பேராசிரியர்களான துர்கா அகர்வால் மற்றும் சுசீலா அகர்வால் ஆகியோரின் பெயர் வைக்கப்பட்டுள்ளது
- தேசிய சட்ட தீர்ப்பாய உறுப்பினராக நீதிபதி எம்.வேணுகோபால் நியமிக்கப்பட்டுள்ளார்
- போலந்தில் உள்ள வர்சா நகரில் நடைபெற்ற சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் கவுரவ் சோலங்கி 52 கிலோ பிரிவிலும் , மணீஷ் கவுசிக் 60 கிலோ எடைப் பிரிவிலும் தங்கம் வென்றுள்ளனர்
மே - 7
- உலக தடகள தினம்
- உலக ஆஸ்துமா தினம்
- ஜப்பானின் தனியார் அமைப்பான இன்டர்ஸ்டெல்லர் (Interstellar) டெக்னாலஜி அதனுடைய முதலாம் ஆளில்லா ராக்கெட்டான மோமோ - 3 யை வெற்றிகரமாக விண்ணில் எய்தியுள்ளது
மே - 8
- அனைத்து மாநில போக்குவரத்து துறைகளுக்கும், அனைத்து வகையான பழைய மற்றும் புதிய மின்சார வாகனங்களுக்கும் பச்சை நிறப்பலகைகளை பயன்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது
- தேசிய விமானவியல் மற்றும் விண்வெளி நிறுவனம் (NASA) 2022 ம் ஆண்டு DART(Double Asteroid redirection test) என்னும் விண்கலத்தை கொண்டு டிடிமூன்(Didymoon) அல்லது டிடிமோஸ் - பி(Didymos - B) என்றழைக்கப்படும் குறுங்கோளை தாக்கி அழிக்கவுள்ளது
மே - 9
- அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் டிரம்ப் அந்நாட்டின் மிக உயரிய விருதான சுதந்திரத்திற்கான ஜனாதிபதி பதக்கத்தினை அந்நாட்டின் நட்சத்திர கோல்ஃப் வீரர் டைகர் உட்ஸ் க்கு வழங்கியுள்ளார்
மே - 10
- உலகில் முதல் பூஜ்ய கழிவுகளைக் கொண்ட விமானம், ஆஸ்திரேலியாவில் க்வாண்டாஸால் இயக்கப்பட்ட வர்த்தக விமானமான QF739 விமானம் ஆகும்.இது சிட்னியிலிருந்து அடிலெய்டு வரை செல்கிறது. இதில் கழிவுகள் மறுசுழற்சி மூலம் உரமாக மாற்றப்படுகிறது
மே - 11
- ஐ.நா பொருளாதார மற்றும் சமுதாயக் குழுவின் ஐந்தாண்டுகால சர்வதேச போதை மருந்து தடுப்பு வாரியத்தின் தலைவராக இந்தியாவின் ஜக்ஜித் பவாடியா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்
மே - 12
- சர்வதேச செவிலியர் தினம்
- உலகின் முதலாவது பிராந்திய மகளிர் கிரிக்கெட் பத்திரிக்கை 'CRICZONE' இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ளது. இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா பத்திரிக்கையை தொடங்கி வைத்தார்
- தென் ஆப்பிரிக்காவில் தேசிய காங்கிரஸ் ஆட்சியை தக்க வைத்துள்ளது. சிரில் ராமாபோஸா மீண்டும் அதிபராக பதவியேற்க உள்ளார்
- 57 ஆண்டுகளுக்குப் பிறகு கோவையில் 36 வது தேசிய அளவிலான தேசிய கூடைப்பந்து போட்டி நடைபெறுகிறது
மே - 13
- ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக்கான புதிய தலைவராக பேராசிரியர் டிஜானி முகமது பேன்டி நியமிக்கப்பட்டுள்ளார்
- IPL - 2019 தொடரின் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது
மே - 14
- CEAT ன் கிரிக்கெட் தரவரிசை விருதுகள் - 2019 ல் சர்வதேச கிரிக்கெட்டர் மற்றும் சிறந்த பேட்ஸ்மேன் விருது விராட் கோலிக்கு வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச சிறந்த பந்துவீச்சாளர் விருது ஜாஸ்ரிட் பும்ரா வழங்கப்பட்டுள்ளது
- மகாராஷ்டிராவின் புதிய தலைமைச் செயலாளராக மும்பை நகராட்சி ஆணையர் அஜய்மேத்தா நியமிக்கப்பட்டுள்ளார்
மே - 15
- உலக குடும்ப தினம்
- தமிழக பள்ளிக் கல்வித் துறையின் 'எமிஸ்' இணையதளம் மூலம் வழங்கப்படும் மாற்றுச் சான்றிதழில் சாதியின் பெயர் குறிப்பிடக் கூடாது என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது
- மத்திய அரசின் மருத்துவ காப்பீட்டு திட்டமான 'ஆயுஷ்மான் பாரத்' திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசுக்கு ரூ 293 கோடி மத்திய அரசு ஒதுக்கியுள்ளது
- சர்வதேச கிரிக்கெட் போட்டி நடுவர்கள் குழுவில் முதல் முறையாக இந்தியாவைச் சேர்ந்த G.S. லக்ஷ்மி என்பவரை ஐ.சி.சி நியமித்துள்ளது
- மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்
மே - 16
- ஏஸ் சிறப்பு படைத் தளபதி மற்றும் ஸ்ரீலங்கா போர் வீரரான மேஜர் ஜெனரல் ஏ.கே.தீங்ரா, இந்தியாவின் மூன்று படைகளையும் உள்ளடக்கிய ஒரு சிறப்பு நடவடிக்கை பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்
மே - 17
- லோக்பாலின் இணையதளமான www.lokpal.in என்ற இணையதளத்தை தலைவர் பினாகி சந்திரகோஸ் தொடங்கி வைத்தார்
- 2023 ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஆசிய கோப்பை கால்பந்து போட்டியை சீனா நடத்தவுள்ளது
மே - 18
- உலக உயர் ரத்த அழுத்த தினம்
- சூரியனின் வெளிப்பரப்பை ஆராய 2020 ஆம் ஆண்டு 'மிஷன் ஆதித்யா' என்ற திட்டத்தை இஸ்ரோ செயல்படுத்த உள்ளதாக அதன் தலைவர் கே. சிவன் கூறியுள்ளார்
- உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மலையேற்ற வீராங்கனை ஷீதல் ராஜ் எவரெஸ்ட் மலை சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார்
மே - 19
- ஆஸ்திரேலியாவின் 30 வது பிரதமராக ஸ்காட் மோரிசன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்
- இந்திய கடற்படை எம்.ஆர்.எஸ்.ஏ.எம் ( MRSAM) ஏவுகணைச் சோதனையை வெற்றிகரமாக நடத்தியது
- UNDRR வழங்கும் 2019 ஆம் ஆண்டிற்கான சசக்காவா விருது இந்தியாவின் டாக்டர் P.K. மிஸ்ராவுக்கு வழங்கப்பட்டுள்ளது
மே - 20
- உலக தேனீக்கள் தினம்
- MRDS(Mobile Radiation Detection Systems) என்ற கருவி சென்னை காவல்துறையின் ரோந்து வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ளது. பாபா அணு ஆராய்ச்சி மையம் தயாரித்து வழங்கியுள்ள இந்த கருவி 10 மீட்டரில் இருந்து 15 மீட்டர் சுற்றளவில் ஏதேனும் அணுக்கதிர்வீச்சுடைய பொருள், தடை செய்யப்பட்ட வேதிப்பொருட்கள் இருந்தால் எச்சரிக்கை விடுக்கும்
மே - 21
- துணிவு மற்றும் தலைமைத்துவத்துக்கான மெக்கைன் விருது 2019, நிர்பயா கூட்டு பாலியல் வன்புணர்வு மற்றும் கொலை வழக்கின் விசாரணைக் குழுவிற்கு தலைமை தாங்கிய ஐபிஎஸ் அதிகாரி சாயா சர்மாவிற்கு வழங்கப்பட்டுள்ளது
மே - 22
- சர்வதேச பல்லுயிர் தன்மை தினம்
- இந்தியாவிற்கான பாகிஸ்தான் தூதராக மொயின் உல் - ஹக் நியமிக்கப்பட்டுள்ளார்
மே - 23
- மத்திய பிரதேச மாநிலத்தின் ஹர்தா மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மொத்த பணியையும் பெண்களே செய்ய உள்ளனர்
- ரேடார் இமேஜிங் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான RISAT-2B செயற்கைக் கோளை PSLV - C 46 என்ற விண்கலத்தைப் பயன்படுத்தி இந்தியா வெற்றிகரமாக விண்ணில் ஏவியது
மே - 24
- உலக சுகாதார அமைப்பு(WHO) அல்ஜீரியா மற்றும் அர்ஜென்டினாவை மலேரியா இல்லாத நாடாக அறிவித்துள்ளது
- விமானப்படை லுட்டினன்ட் ஆன பாவன கான்த் இந்திய விமானப் படையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதல் பெண் போர் விமானி ஆவார்
மே - 25
- உலக தைராய்டு தினம்
- ஆசிய வளர்ச்சி வங்கி இந்தியாவின் இரயில் பாதையை மின்மயமாக்கும் திட்டத்திற்கு ஒப்பந்தம் செய்துள்ளது
- தரைவழி தாக்கும் ஏவுகணையான ஷாஹின் - II ஏவுகணை வெற்றிகரமாக பாகிஸ்தானால் சோதனை செய்யப்பட்டுள்ளது
மே - 26
- 17 வது மக்களவை தேர்தலில், நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை ஆட்சி அமைக்க குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அழைப்பு விடுத்துள்ளார். இந்தியாவின் பதினான்காவது பிரதமராக நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்
- வளிமண்டலத்தில் உள்ள கார்பன்டை ஆக்சைடின் அளவு சர்வதேச அளவில் 415 ppm என்ற அளவைக் கடந்துள்ளது
மே - 27
- இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம்(ISRO) தனது புதிய வணிக நிறுவனமான நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிடெட் ஐ பெங்களூரில் தொடங்கவுள்ளது
- மக்கலு மலையை முதன்முதலாக இந்திய பெண் பிரியங்கா மொஹிட்டி ஏறி சாதனை படைத்துள்ளார்
மே - 28
- நுகர்வோர் நுண்ணறிவு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவின் மிகவும் நம்பகமான விளையாட்டு வீரராக விராட் கோலி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்
- ஜெர்மனியில் உள்ள முனிச் நகரில் நடைபெற்று வரும் ISSF உலகக்கோப்பை ரைபிள் போட்டியில், பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் அபூர்வி சாண்டிலா தங்கம் வென்றுள்ளார்
மே - 29
- மத்திய பிரதேசத்தில் உள்ள ஒர்ச்சா நகரம் UNESCO வின் பாரம்பரிய இடங்களின் தற்காலிக பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது
- DRDO ஆல் உருவாக்கப்பட்ட தரையிலிருந்து விண்ணில் தாக்கக்கூடிய ஆகாஷ் ஏவுகணை ஒடிசா கடற்கரையில் பாலசோரில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது
மே - 30
- சீனாவின் நானிங்கில் நடைபெற்ற 2019 ம் ஆண்டின் உலக கலப்பு அணி பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் சுதிர்மேன் கோப்பையை சீனா வென்றுள்ளது
மே - 31
- மரங்களை பாதுகாக்கும் மற்றும் மரங்களை நடும் முயற்சியாக 'மரம் ஆம்புலன்ஸ்' சேவையை சென்னையில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தொடங்கி வைத்தார்
- ஆந்திர மாநிலத்தின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீநகரில் வி.ஆர்.வி. ஆசிய-பசிபிக் உற்பத்தி தொழிற்சாலையில் இந்தியாவின் மிகப்பெரிய திரவ ஹைட்ரஜன் சேமிப்பு தொட்டி இஸ்ரோ தலைவர் கே. சிவன் அவர்களால் தொடங்கப் பட்டுள்ளது
Comments
Post a Comment