Current Affairs - February 2019
நாட்டு நடப்புகள் - பிப்ரவரி 2019
பிப்ரவரி - 1
- கடலோர காவல்படை தினம்
- சேலம் கந்தம்பட்டியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் ரூ.40 கோடி மதிப்பில் 3 புதிய பாலங்களுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்
- அமெரிக்கா, வெனிசுலா நாட்டின் மீது பொருளாதார தடை விதித்துள்ளதால், சர்வதேச கச்சா எண்ணெய் விலை 2% அதிகரித்துள்ளது
- சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழா அணிவகுப்பில்,சிறந்த அணிவகுப்பிற்கான முதல் பரிசு தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்திற்கு கிடைத்துள்ளது.வேளாண் மற்றும் தோட்டக்கலை துறைக்கு இரண்டாவது பரிசும்,சுகாதார துறைக்கு மூன்றாவது பரிசும் கிடைத்துள்ளது
- உலகின் மிக நீளமான எக்ஸ்பிரஸ் சாலையான கங்கா எக்ஸ்பிரஸ் சாலை, உத்திரபிரதேச மாநிலத்தில் 600 கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட உள்ளது
- இந்தியாவின் உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் ஆணையத்தின் 100 நாள் நுகர்வோர் சேவை திட்டமான 'ஸ்வஸ்த் பாரத் யாத்ரா' தேசிய பிரச்சார இயக்கத்தில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு அறிவிக்கப்பட்டுள்ளது
- இலக்கிய மொழி பெயர்ப்பிற்கான 'ரோமைன் ரோலண்ட் புத்தக பரிசானது' ஆண்ட்ரி மேகின் எழுதிய லா வி டி யுன் ஹோம் இன்கோன்னு ( தெரியாத மனிதன் வாழ்க்கை) என்னும் புத்தகத்தின் மொழிபெயர்ப்பிற்கு கிடைத்துள்ளது. இது S.R.கிச்சன மூர்த்தி என்பவரால் மொழி பெயர்க்கப்பட்டது
பிப்ரவரி - 2
- உலக ஈர நிலங்கள் தினம்
- இந்தியாவின் இரண்டாவது துலிப் மலர் பூங்கா உத்ரகாண்ட் மாநிலத்தின் பித்தோராகர் மாவட்டத்தில் 50 ஹெக்டேர் நிலப்பரப்பில் அமைக்கப்பட உள்ளது.இந்தியாவின் முதல் துலிப் மலர் பூங்கா ஜம்மு காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகரில் அமைந்துள்ளது
- புலிகளைப் பாதுகாப்பதற்காக, மாநில புலிகள் பாதுகாப்பு படையை உருவாக்கும் இந்தியாவின் முதல் மாநிலம் தெலுங்கானா ஆகும்
- அமைப்பு சாரா நிறுவனங்களின் தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.3000 ஓய்வூதியம் வழங்குவதற்கான 'பிரதான் மந்திரி ஸ்ராம் யோகி மந்தன்' என்ற திட்டம் தொடங்கப்பட உள்ளது
- தனிம வரிசை அட்டவணை கண்டுபிடிக்கப்பட்டு 150 - வது ஆண்டை நினைவு கூறும் வகையில், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை மற்றும் யுனெஸ்கோ அமைப்பானது, 2019 - ம் ஆண்டை சர்வதேச தனிம வரிசை அட்டவணை ஆண்டாக அறிவித்துள்ளது
- ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகள் இணைந்து அபெர் (Aber) என்ற பொதுவான டிஜிட்டல் நாணயத்தை தொடங்கியுள்ளன
- சிறந்த மினி ரத்னா பொதுத்துறை நிறுவனத்திற்கான விருது, நுமாலிகார்க் சுத்திகரிப்பு நிறுவனத்திற்கு கிடைத்துள்ளது
பிப்ரவரி - 3
- ஐசிசி மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் பேட்டிங் தரவரிசையில் இந்தியாவின் ஸ்மிரிதி மந்தனா முதலிடம் பெற்றுள்ளார்
- கணிணிகளில் விண்டோஸ் 7,8.1,10 இயக்க முறைகளை ரம்பா என்ற வைரஸ் தாக்கி வருகிறது
- இந்திய ராணுவத்திற்கு இன்சாஸ் துப்பாக்கிகளுக்கு பதிலாக, அமெரிக்காவிலிருந்து 73,000 சிக் சவர் துப்பாக்கிகள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது
பிப்ரவரி - 4
- உலக புற்றுநோய் தினம்
- புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்திய புற்றுநோய் சமூகம் சுவஸ்த் நாரி - சக்தி ஹமாரி என்ற பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது
- இரண்டாம் உலக கொங்கு தமிழர் மாநாடு நாமக்கல்லில் நடைபெற்றது
- புதிய மனித விண்வெளி விமான மையத்தை இஸ்ரோ பெங்களூரில் அமைத்துள்ளது
- தமிழக அரசின் 30 - வது சாலை பாதுகாப்பு வார விழா பிப்ரவரி 4 - 10 வரை நடைபெற்றது.இதன் மையக்கருத்து 'சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு'
பிப்ரவரி - 5
- ஜம்மு காஷ்மீரில் உள்ள செனாப் நதியில் கரு நீர்மின் திட்டமும்(624 மெகா வாட் திறன்), ராட்லே நீர்மின் திட்டமும்(850 மெகா வாட் திறன்) தொடங்கப்பட்டுள்ளது
- பல்லவன் - பாண்டியன் ஆகிய இரண்டு வங்கிகளும் இணைக்கப்பட்டு, தமிழ்நாடு கிராம வங்கி என்ற பெயரில் புதிய வங்கி தொடங்கப்பட்டுள்ளது.இதன் தலைமையகம் சேலத்தில் அமைந்துள்ளது
- ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற 17 - வது ஆசிய கோப்பை கால்பந்து போட்டியில் கத்தார் அணி சாம்பியன் பட்டம் வென்றது
பிப்ரவரி - 6
- இஸ்ரோ உருவாக்கியுள்ள 40 - வது தகவல் தொடர்பு செயற்கை கோளான ஜிசாட் - 31, ஐரோப்பிய ராக்கெட்டான ஏரியன் - 5 விஎ 247 மூலம் பிரெஞ்சு கயானா(தென் அமெரிக்கா) விலிருந்து பிப்ரவரி - 6 - ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது
- மாணவர்கள் போட்டித்தேர்வுகளுக்கு பயிற்சிகளை மேற்கொள்வதற்காக தேசிய சோதனை நிறுவனம்(National Testing Agency), NTA students app என்ற மொபைல் செயலியை தொடங்கியுள்ளது
- ஆஸ்திரேலியா நாட்டின் இலக்கியத்திற்கான உயரிய விருதான 'விக்டோரியா விருது - 2019' பெக்ருஸ் பூசானி என்ற ஈரானிய அகதி எழுதிய ' No Friend But the Mountains: Writing from Manus Prison' என்ற புத்தகத்திற்கு கிடைத்துள்ளது
- விவசாயிகளின் குழந்தைகளுக்கு கல்வியை மேம்படுத்துவதற்காக கலியா சத்ரவிருதி யோஜனா என்னும் ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்தை ஒடிசா மாநில அரசு தொடங்கியுள்ளது
- ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நடைபெற்ற WTA (Women's Tennis Assosiation) டென்னிஸ் போட்டி - 2019 - ல், நெதர்லாந்து வீராங்கனை கிக்கி பெர்ட்டன்ஸ் சாம்பியன் பட்டம் வென்றார்
பிப்ரவரி - 7
- பயிர்களில் பூச்சிகளின் தாக்கத்தைத் தடுக்கும் கிளிபோசேட் பூச்சிக்கொல்லி மருந்திற்கு (அமெரிக்காவின் மான்சான்டா நிறுவனத்தின் பூச்சிக்கொல்லி மருந்து) கேரள அரசு தடை விதித்துள்ளது
- தமிழக அரசின், பெண் குழந்தை முன்னேற்றத்திற்கான மாநில விருது கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரக்சனா என்பவருக்கு வழங்கப்பட்டது
- பியாஸ் நதியில் மட்டுமே காணப்படும் சிந்து நதி டால்பின்களை பஞ்சாப் மாநிலத்தின் நீர்வாழ் விலங்காக அம்மாநில முதல்வர் அம்ரீந்தர் சிங் அறிவித்துள்ளார்
- சமூக நீதிக்கான 'மு.வீரமணி விருது' P S.கிருஷ்ணன் என்பவருக்கு வழங்கப்பட்டது.இவர் இந்தியாவில் சமூக விலக்கு மற்றும் நீதி, ஒரு சாலை வரைபடம் ஆகிய புத்தகங்களை எழுதியுள்ளார்
பிப்ரவரி - 8
- அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்களின் விலைகளை கண்காணிக்கும் விலை மதிப்பீடு மற்றும் ஆராய்ச்சி பிரிவை (PMRU - Price Monitoring and Research Unit), கேரள மாநிலம் உருவாக்கியுள்ளது
- இசை மற்றும் நடனத் திருவிழாவான சோபன் - 2019 புதுடெல்லியில் நடத்தப்பட்டது
பிப்ரவரி - 9
- தமிழக அரசின் உழவன் செயலியில் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு நியாயமான விலையில் விவசாய உபகரணங்களை பெறுவதற்கு 'JFarm' என்ற புதிய சேவையை தொடங்கியுள்ளது
- சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் அணுசக்தி என்பதை நோக்கமாகக் கொண்ட 'Parmanu Tech' என்னும் மாநாடு புதுடெல்லியில் நடைபெற்றது
- உலக பெண்கள் முன்னேற்றம் மற்றும் பொருளாதார வளர்ச்சி என்ற திட்டத்தை அமெரிக்கா இந்தியாவில் செயல்படுத்தப்பட உள்ளது.இதன் செயல் தலைவராக இவாங்கா டிரம்ப் நியமிக்கப்பட்டுள்ளார்
- நேட்டோ இராணுவ கூட்டமைப்பின் 30 - வது உறுப்பினராக மாசிடோனியா இணைந்துள்ளது
பிப்ரவரி - 10
- தாய்லாந்தில் நடைபெற்ற இகாட் கோப்பைக்கான சர்வதேச பளுதூக்குதல் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த மீராபாய் சானு 48 கிலோ எடைப்பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்
- 'இலண்டன் நகரத்தின் சுதந்திரம்' என்ற பட்டம் UK - யில் உள்ள SBI வங்கிக்கு கிடைத்துள்ளது
- இந்திய ரிசர்வ் வங்கியின் முதலாவது நிதிக் கொள்கை குழு கூட்டம் மும்பையில் நடைபெற்றது. இதில் ரிசர்வ் வங்கியிடமிருந்து வணிக வங்கிகள் பெறும் கடன்களுக்கான வட்டி விகிதத்தை (Repo rate) 6.5% - லிருந்து 6.25 % - ஆக குறைத்துள்ளது.வணிக வங்கியிடமிருந்து ரிசர்வ் வங்கி பெறும் கடன்களுக்கான வட்டி விகிதத்தை ( Reverse repo rate) 6.25% - லிருந்து 6 % - ஆக குறைத்துள்ளது
- பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (DRDO) உருவாக்கியுள்ள ஹலினா ஏவுகணை ஒடிசாவில் உள்ள சந்திப்பூரில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது
- டி.எம்.எஸ் முதல் வண்ணாரப்பேட்டை வரை 10 கிலோமீட்டர் தூரம் வரை மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் பிப்ரவரி - 10 - ம் தேதி தொடங்கி வைத்தார்
பிப்ரவரி - 11
- பேரிடர் காலங்களில் மீட்பு பணிகளுக்கும், போர்க்காலங்களில் அகதிகளை வெளியேற்றவும், நிவாரண பொருட்களை கொண்டு செல்வதற்கும் அமெரிக்காவின் போயிங் நிறுவனம் 4 சினூக் ரக ராணுவ ஹெலிகாப்டர்களை இந்தியாவிற்கு வழங்கியுள்ளது
- மார்ஷல் தீவு குடியரசு நாட்டின் இந்தியாவின் புதிய தூதராக சஞ்சய் குமார் வர்மா நியமிக்கப்பட்டுள்ளார்
- வாக்காளர்கள் தங்கள் விவரங்களை சரி பார்க்கவும், விவரங்களை மாற்றவும், புதுப்பிப்பதற்கும், திருத்தங்களை மாற்றவும் 'வாக்காளர் சரிபார்ப்பு மற்றும் தகவல் திட்டம்' ஒன்றை இந்திய தேர்தல் ஆணையம் உருவாக்கியுள்ளது. இந்தத் தகவல்களைப் பெறுவதற்கான வாக்காளர் உதவி எண் 1950
பிப்ரவரி -12
- விவசாயிகளுக்கு நிதியுதவி அளிப்பதற்காக 'அன்னதத்தா சுகிபாவா' என்ற திட்டத்தை ஆந்திரப் பிரதேச அரசு தொடங்கியுள்ளது
பிப்ரவரி - 13
- உலக வானொலி தினம்
- முதல் மெகா உணவுப் பூங்கா இமாச்சலப் பிரதேசத்தின் உனா மாவட்டத்தில் அமைய உள்ளது
- உலக அரசின் உச்சிமாநாடு 2019, ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாயில் நடைபெற உள்ளது
- சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி - 2019 - ல் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கோரென்டின் மவுட்டெட் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்
- 'Let's talk on air: Conversation with Radio Presenters' என்ற புத்தகம் ராகேஷ் ஆனந்த் பக்ஷி என்பவரால் எழுதி வெளியிடப்பட்டது
பிப்ரவரி -14
- நாகர்கோவில் மற்றும் ஓசூர் நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.தமிழ்நாட்டில் மொத்த மாநகராட்சிகளின் எண்ணிக்கை 14 ஆகும்
- வானிலை முன்னறிவிப்பு மற்றும் மேக வெடிப்பு நிகழ்வுகளை கண்காணிப்பதற்காக உத்தரகாண்ட் மாநிலத்தின் தெக்ரி் ஹர்வால் மாவட்டத்தில் மேக கண்காணிப்பகம் அமைக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவின் இரண்டாவது மேக கண்காணிப்பகம் ஆகும். இந்தியாவின் முதல் மேக கண்காணிப்பகம் கேரள மாநிலத்தின் மூணாறு பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது
- டேவிட் மல்பாஸ் என்பவரை உலக வங்கியின் தலைவராக அமெரிக்க அதிபர் டிரம்ப் நியமித்துள்ளார்
- சட்டம், நீதி மற்றும் நீதித்துறை அதிகாரம் - நீதிபதி P.N. பகவதியின் அணுகுமுறை (Law Justice and Judicial Power - Justice P.N.Bhagwati's Approach) என்ற புத்தகத்தை பேராசிரியர் மூல்சந்த் ஷர்மா எழுதி வெளியிட்டார்
பிப்ரவரி - 15
- சர்வதேச அளவிலான நவீன கால்நடைப் பூங்கா தமிழ்நாட்டில் சேலம் மாவட்டத்தில் உள்ள தலைவாசலில் 900 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட உள்ளது
- இங்கிலாந்தின் ஜாமி சாட்விக், எம்.ஆர்.எஃப் சேலஞ்ச் பட்டத்தை வென்றுள்ளார்
- இஸ்ரேல் நாட்டின் உயரிய விருதான 'மில்லியன் டாலர் டான் டேவிட் பரிசு' Intercultural encounters between Asian Europeans and People of North and South America during the early modern Era என்ற வரலாற்று ஆராய்ச்சிக்காக, இந்தியாவைச் சேர்ந்த வரலாற்று அறிஞர் சஞ்சய் சுப்பிரமணியம் என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது
- காமன்வெல்த்தின் கற்பதற்கான நல்லெண்ண தூதராக கேரளாவைச் சேர்ந்த கார்த்தியாயினி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்
பிப்ரவரி - 16
- இந்தியாவின் முதல் பெண் விமான பொறியாளராக ஹினா ஜெய்ஸ்வால் நியமிக்கப்பட்டுள்ளார்
- இந்திய அரசு, ஏவுகணை தாக்குதலை தடுக்கும் போயிங் 777 ரக விமானத்தை 190 மில்லியனுக்கு வாங்க உள்ளது. இது ஏர் இந்தியா ஒன் அல்லது இந்தியன் ஏர்போஸ் ஒன் என்று அழைக்கப்படும்
பிப்ரவரி -17
- புல்வாமா தீவிரவாத தாக்குதலை எதிர்த்து பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்கு இறக்குமதியாகும் அனைத்து பொருட்களுக்கும் மத்திய அரசு, 200 சதவீதம் வரி விதித்துள்ளது மற்றும் வர்த்தகத்திற்கு உகந்த நட்புறவு நாடு என்ற அந்தஸ்தையும் ரத்து செய்துள்ளது
- கவுகாத்தியில் நடைபெற்ற 83 - வது தேசிய சீனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் சாய்னா நேவால், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சவுரப் வர்மா சாம்பியன் பட்டம் வென்றனர்
பிப்ரவரி - 18
- குடும்ப கட்டுப்பாடு திட்டத்தைப் பற்றிய விழிப்புணர்வை பரப்புவதற்காக 'சாரதி சந்தேஷ் வாஹினி' என்ற திட்டத்தை உத்திரப்பிரதேச குடும்ப நலத்துறை அறிமுகப்படுத்தியுள்ளது
- 2014 - ராஜ்குமார் சிங்கஜித் சிங், 2015 - சஹாய்னாட், 2016 - ராம் சுடர் வஞ்சி ஆகியோருக்கு 'கலாச்சார நல்லிணக்கத்திற்கான தாகூர் விருது' குடியரசுத் தலைவரால் வழங்கப்பட்டது
- தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 'ஸ்வஸ்த சிறப்பு விருது' சத்தீஸ்கர் மாநிலத்தின் ரைய்கர் மாநகராட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.இரண்டாம் இடம் சத்தீஸ்கரின் அம்பிகாபுர் மாநகராட்சிக்கும், மூன்றாம் இடம் தமிழ்நாட்டின் கும்பகோணத்திற்கும் கிடைத்துள்ளது
- நானக் சிங் என்பவர் எழுதிய கோனி வைசாகி என்ற புத்தகம் தற்போது ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இது 1919 - ல் நடைபெற்ற ஜாலியன் வாலாபாக் படுகொலை பற்றி கூறியதால், 1920 - ல்ஆங்கில அரசால் இப்புத்தகம் தடை செய்யப்பட்டிருந்தது
பிப்ரவரி - 19
- தெலுங்கானாவில் முலுகு மற்றும் நாராயண்பாத் என்ற இரு புதிய மாவட்டங்களை உருவாக்கியுள்ளது. தெலுங்கானாவில் தற்போது உள்ள மொத்த மாவட்டங்களின் எண்ணிக்கை 33
- கத்தார் ஓபன் பெண்கள் சர்வதேச டென்னிஸ் போட்டி - 2019 - ல் பெல்ஜியத்தை சேர்ந்த எலிஸ் மெர்டென்ஸ் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்
- மார்ட்டின் என்னல்ஸ் மனித உரிமைகள் விருது - 2019, அப்துல் அலிஸ் முகமது என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த விருது ஐ.நா அகதிகளுக்காக மனித உரிமை ஆணையத்தின் சார்பாக வழங்கப்படுகிறது
பிப்ரவரி - 20
- உலக நீதி நாள் அல்லது சமூக நீதிக்கான உலக நாள்
- 2018 - ம் ஆண்டிற்கான சித்திரை தமிழ் புத்தாண்டு விருதுகள்:
- தமிழ்த்தாய் விருது - புவனேஸ்வரம் தமிழ் சங்கம்
- கபிலர் விருது - மி.காசுமான்
- இளங்கோவடிகள் விருது - சிலம்பொலி சு.செல்லப்பன்
- உ.வே.சா விருது - நடன.காசிநாதன்
- ஜி.யு.போப் விருது - கோ. சந்திரசேகரன்
- உமறுப்புலவர் விருது - நசீமா பானு
- சொல்லின் செல்வர் விருது - க முருகேசன்
- அம்மா இலக்கிய விருது - உலகநாயகி பழனி
- லாரஸ் உலகின் சிறந்த விளையாட்டு வீரர் - 2019 என்ற விருது செர்பியாவின் நோவக் ஜோகோவிச் என்பவருக்கு வழங்கப்பட்டது
- லாரஸ் உலகின் சிறந்த விளையாட்டு வீராங்கனை 2019 என்ற விருது ஜிம்னாஸ்டிக் வீராங்கனை சைமன் பைல்ஸ் என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது
- இந்தியாவில் முதன் முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட 'கால்பந்து ரத்னா விருது' சுனில் சேத்ரிக்கு வழங்கப்பட்டது.ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற விழாவில் டெல்லி கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் ஷாஜி பிரபாகரன் இந்த விருதை வழங்கினார்
- விளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் 3% இடம் ஒதுக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது
- 'விளையாட்டிற்கான நல்லெண்ண விருது' யுவா அமைப்பிற்கு வழங்கப்பட்டது.இந்த அமைப்பு 2009 - ம் ஆண்டு முதல் ஜார்கண்ட் மாநிலத்தில் கால்பந்து வீராங்கனைகளுக்கு பயிற்சி அளித்து வருகிறது.லாரெஸ் உலக விளையாட்டு அகாடமி விருது வழங்கும் விழாவில் இவ்விருது வழங்கப்பட்டது
- இந்திய வானியல் சொசைட்டியின் முதல் பெண் தலைவராக G.C அனுபமா தேர்வு செய்யப்பட்டுள்ளார்
- பாகிஸ்தானின் உயரிய விருதான 'நிஷான் - இ -பாகிஸ்தானி' என்ற விருது, சவுதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மான் அவர்களுக்கு வழங்கப்பட உள்ளது
பிப்ரவரி - 21
- சர்வதேச தாய்மொழி தினம்
- 40 - வது சர்வதேச பாலைவனத் திருவிழா ராஜஸ்தானில் உள்ள ஜெய்சல்மாரில் நடைபெற்றது
- நீர்வழிப் போக்குவரத்திற்காக லேடிஸ் ( LADIS) என்ற புதிய தளத்தை இந்திய உள்நாட்டு நீர்வழி ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது
- ஸ்பெயின் நாட்டின் மிக உயரிய விருதான 'கிராண்ட் கிராஸ் விருது' இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் - க்கு வழங்கப்பட்டுள்ளது
பிப்ரவரி- 22
- உலக சிந்தனை தினம்
- தென் கொரியா 'சியோல் அமைதி விருதை' பிரதமர் மோடிக்கு பிப்ரவரி 22 - ம் தேதி வழங்கியது
- தேசிய கிராமப்புற பொருளாதார மாற்றத்திற்கான திட்டம் என்ற புதிய திட்டத்தை, தீன்தயாள் அந்தியோதயா யோஜனா என்னும் தேசிய கிராமப்புற வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட உள்ளது
பிப்ரவரி - 23
- மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவராக பிரமோத் சந்திர மோடி (இந்திய வருவாய் பணி அதிகாரி) நியமிக்கப்பட்டுள்ளார்
- உத்திரப்பிரதேச அரசின் பசு பாதுகாப்பு அமைப்பின் தூதராக ஹேமமாலினி நியமிக்கப்பட்டுள்ளார்
- கவுகாத்தியில் நடைபெற்ற யுனெக்ஸ் - சன்ரைஸ் - 2019 - ன் மூத்தோருக்கான 83 - வது தேசிய பேட்மின்டன் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் சவ்ரப் வர்மா சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்
பிப்ரவரி - 24
- இரண்டாவது கடலோர காவல் படை மாவட்ட தலைமையகம் தூத்துக்குடியில் அமைக்கப்பட்டு தமிழக ஆளுநரால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. முதல் கடலோர காவல்படை மாவட்ட தலைமையகம் சென்னையில் அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழ்நாடு 2 கடலோர காவல்படை மாவட்ட தலைமையகங்களைக் கொண்டுள்ளது
- மன்னார் வளைகுடா பகுதியில் கடல் பசுக்களை பாதுகாப்பதற்காக கடற்புற்கள் பாதுகாப்பு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது
- இந்தியாவின் முதல் Fulldome 3d திரையரங்கம் கொல்கத்தாவில் உள்ள அறிவியல் நகரத்தில் மத்திய கலாச்சார அமைச்சர் மகேஷ் சர்மா அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது
பிப்ரவரி - 25
- ஆசியாவின் மிகப்பெரிய விமானக் கண்காட்சி 'ஏரோ இந்தியா - 2019' பெங்களூரில் நடைபெற்றது
- 'உலகளாவிய எதிர்காலத்தின் இயற்கை விருது - 2019' இந்தியாவின் திவ்யா கர்னாட் என்பவருக்கு வழங்கப்பட்டது.இது வன விலங்குகள் மற்றும் தாவரங்களை பாதுகாப்பவர்களுக்கு வழங்கப்படுகிறது
- உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த அபூர்வி சண்டிலா தங்கம் வென்றுள்ளார்
- இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் முதல் ஊழல் விசாரணை அதிகாரியாக உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி டி.கே. ஜெயின் நியமிக்கப்பட்டுள்ளார்
பிப்ரவரி - 26
- படகு ஆம்புலன்ஸ் சேவையை ஒடிசா அரசு தொடங்கியுள்ளது. இச்சேவையின் முதல் படகானது 'நம்பிக்கை வாகனம்' என்ற பெயரில் கேந்தரபரா மாவட்டத்தில் பாடிஹர் என்ற இடத்தில் தொடங்கப்பட்டுள்ளது
- சவுதி அரேபியாவின் முதல் பெண் அமெரிக்க தூதராக ரீமா பின் பந்தர் நியமிக்கப்பட்டுள்ளார்
பிப்ரவரி - 27
- கேன்ஸ் சர்வதேச ஓபன் சதுரங்கப் போட்டியில் இந்தியாவின் அபிஜீத் குப்தா சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்
- கணினி மயமாக்கப்பட்ட தகவலை மக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்த வேலூர் மாவட்டத்திற்கு வெப் ரத்னா தங்க விருது வழங்கப்பட்டுள்ளது
பிப்ரவரி - 28
- அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற 91 - வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில், ரெய்கா ஷேடாப்சி இயக்கிய இந்தியப் பெண்கள் குறித்து எடுக்கப்பட்ட 'Period end of sentence' என்ற குறும்படத்திற்கு சிறந்த ஆவண குறும்படத்திற்கான விருது வழங்கப்பட்டுள்ளது
- 'தரம், அங்கீகாரம் மற்றும் தரவரிசை - இந்திய உயர் கல்வி வழங்குவதில் ஒரு அமைதிப் புரட்சி 'என்ற புத்தகத்தை டாக்டர் H. சதுர்வேதி என்பவரால் பதிப்பித்து குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவால் வெளியிடப்பட்டது
Comments
Post a Comment