Weather, Climate, Monsoon, Rainfall
வானிலை, காலநிலை, பருவக்காற்று, மழைப்பரவல்
வானிலை
- ஒரு குறிப்பிட்ட இடத்தில் 24 மணி நேரத்திற்குள் நிலவும் வளிமண்டலத்தின் நிலை ஆகும்
காலநிலை
- ஒரு நீண்ட காலத்தில் மற்றும் ஒரு பெரும் பரப்பளவில் காணப்படும் வானிலையின் சராசரி ஆகும்
- ஒரு திட்டமான சராசரி காலம் என்பது 30 ஆண்டுகள் ஆகும்
- காலநிலை என்ற சொல் கிளைமா என்ற கிரேக்கச் சொல்லிலிருந்து பெறப்பட்டது. இதன் பொருள் ஒழுங்கிலிருந்து விலகுதல் என்பது ஆகும்
- வெப்பமண்டல பகுதிகளில் முக்கிய பயிர் நெல் ஆகும்
- மிதவெப்ப மண்டலப் பகுதிகளில் பயிரிடப்படும் முக்கிய பயிர் கோதுமை
வானிலை மற்றும் காலநிலைகளை தீர்மானிக்கும் காரணிகள்
1.அட்சரேகை
- நிலநடுக்கோட்டுப் பகுதியில் சூரியனின் வெப்பக்கதிர்கள் நேர் கதிர்களாக விழுகின்றன
- துருவப் பகுதிகளில் சூரியனின் வெப்பக்கதிர்கள் சாய்வு கதிர்களாக விழுகின்றன
- நிலநடுக்கோட்டுப் பகுதியில் துருவப் பகுதிகளை விட வெப்பம் அதிகமாகக் காணப்படுகிறது
2.உயரம்
- உயரமான பகுதிகளில் அமைந்துள்ள இடங்கள் சமவெளி பகுதிகளைவிட குளிர்ந்து காணப்படுகின்றன. இதற்கு காரணம் கீழிருந்து வெப்பம் ஏற்றப்படுவது ஆகும்
- பூமியின் மேற்பரப்பிலிருந்து வெப்பநிலையானது சுமார் ஒவ்வொரு 1000 மீட்டருக்கும் சுமார் 6.5° செல்சியஸ் என்ற விகிதத்தில் குறைகிறது
3.கடலிலிருந்து தூரம்
- கடல் வெப்பம் அடைவதற்கும், கிரகித்த வெப்பத்தை வெளியிடவும் நீண்ட நேரத்தை எடுத்துக் கொள்கிறது
- கடற்கரை பகுதிகளில் குளிர்ந்த ஈரப்பதம் நிறைந்த காற்று ஆண்டு முழுவதும் வீசுவதால் கோடை மற்றும் குளிர் காலங்களில் நிலவும் தட்பவெப்பத்தினை மாற்றியமைக்கின்றன. இவ்வகையான காலநிலை சீரான காலநிலை அல்லது ஆதிக்க காலநிலை எனப்படும்
- நிலப்பரப்பு வேகமாக வெப்பமும் குளிர்ச்சியும் அடைகிறது
- கோடையில் வெப்பம் அதிகமாகவும் குளிர்காலத்தில் குளிர் அதிகமாகவும் காணப்படுகிறது. இவ்வகையான காலநிலை தீவிர காலநிலை அல்லது கண்டக்காலநிலை எனப்படும்
4.கடல் நீரோட்டங்கள்
- கடல் நீரோட்டங்கள் இரு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன
- வெப்ப நீரோட்டங்கள்
- குளிர் நீரோட்டங்கள்
- வெப்ப நீரோட்டங்கள், கடற்கரைப் பகுதிகளை வெப்பத்துடனும் ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்வதோடு கடலில் பனிப்பாறைகள் உருவாகாமல் தடுக்கின்றன
- குளிர் நீரோட்டங்கள், குளிர்ந்த வறண்ட வானிலையோடு கடலில் பனிப்பாறைகளை உருவாக்குகின்றன
- வெப்ப மற்றும் குளிர் நீரோட்டங்கள் சந்திக்கின்ற இடங்கள் முதன்மையான மீன்பிடித்தளங்களாக உள்ளன. இதற்கு காரணம் மீன்களின் உணவான கடல்வாழ் நுண்ணுயிரி வளரத் தக்க சூழ்நிலை உருவாகிறது
5.காற்று ஓட்டங்களின் திசை
- கடல் பகுதிகளில் வீசும் காற்று அதிக ஈரப்பதத்தினை கொண்டிருப்பதால் அவை குளிர்ந்த ஈரமான காற்றாக வீசுகிறது எடுத்துக்காட்டு தென்மேற்கு பருவக்காற்று
- நிலத்தில் இருந்து வீசும் காற்று வெப்பத்துடன் வறண்ட வெப்பக்காற்றாக வீசுகிறது எடுத்துக்காட்டு வடகிழக்குப் பருவக்காற்று
6.வெப்பநிலை
- சூரியனிடமிருந்து வரும் சூரிய கதிர் வீசல் வெப்பம் எனப்படும்
- சூரிய கதிர் வீசல் பூமியின் மேற்பரப்பை வந்தடைய 8 நிமிடங்கள் ஆகும்
- ஒரு நாளில் நிலவும் அதிக அளவு மற்றும் குறைந்த அளவு வெப்ப நிலைக்கு இடையே உள்ள வெப்பநிலை வேறுபாடு நாள் வெப்ப பரவல் எனப்படும்
- சூரியக் கதிர்வீசலில் இருந்து பூமி பெறும் வெப்ப ஆற்றலானது மூன்று வழிகளில் செயல்படுகிறது
- வளிமண்டலத்தில் கதிர்வீசல்
- நிலத்தில் கடத்தல்
- நீரில் வெப்பச்சலனம்
- பூமியின் வளிமண்டலம் சூரியக் கதிர்வீசலை விட புவி கதிர்வீசலால் அதிகம் வெப்பமடைகிறது
- ஒரு வருடத்தின் வெப்பமான மாதத்தின் வெப்ப நிலைக்கும், குளிரான மாதத்தின் வெப்பநிலை க்கும் உள்ள வேறுபாடு ஆண்டு வெப்ப நிலை பரவல் எனப்படும்
- வெப்பநிலையை அளக்க உதவும் கருவி வெப்பமானி ஆகும்
- வரைபடத்தில் ஒரே அளவுடைய வெப்பநிலையைக் கொண்டு இருக்கும் இடங்களை இணைக்கும் கற்பனைக் கோடுகள் சம வெப்ப கோடுகள் எனப்படும்
- வெப்பத்தினை மூன்று அளவைகளில் கணக்கிடுகிறோம்
- செல்சியஸ்
- ஃபாரன்ஹீட்
- கெல்வின்
7.காற்று அழுத்தம்
- பூமியின் மேற்பரப்பில் காற்றினால் ஏற்படும் அழுத்தம் காற்று அழுத்தம் எனப்படும்
- கடல் மட்டத்தில் நிலவும் காற்றழுத்தத்தின் சராசரி அளவு 1013 மில்லி பார்கள் ஆகும்
- வளிமண்டல அழுத்தத்தை அளவிட பயன்படும் கருவி அழுத்தமானி ஆகும்
- அதிக அழுத்த மண்டலங்கள் குறைந்த வெப்பநிலை நிலவும் பகுதிகளில் உருவாகின்றன
- குறைந்த அழுத்த மண்டலங்கள் அதிக வெப்பநிலை நிலவும் பகுதிகளில் உருவாகின்றன
- ஒரே அளவுள்ள காற்றழுத்தத்தை கொண்ட வெவ்வேறு இடங்களை இணைக்கும் கற்பனைக் கோடு சம அழுத்த கோடுகள் எனப்படும்
இந்தியாவின் காலநிலை( Monsoon)
- மான்சூன் என்ற சொல் அரேபிய சொல்லான மௌசிம் என்பதிலிருந்து வந்தது. இதன் பொருள் பருவகாலம்
- கோடை காலத்திற்கும் குளிர் காலத்திற்கும் இடையே தனது திசையை முழுவதும் மாற்றிக்கொண்டு வீசும் காற்று பருவக் காற்று எனப்படும்
- பருவ காற்றினால் இந்தியாவில வெப்பமண்டல பருவக்காற்று காலநிலை நிலவுகிறது
- பருவக்காற்று இரண்டு வகைப்படும்
- தென்மேற்கு பருவக்காற்று
- வடகிழக்கு பருவக்காற்று
- பருவக்காற்று பருவகாலங்களை மாற்றி அமைக்கிறது
- பருவகாலங்கள் நான்காகப் பிரிக்கப்பட்டுள்ளது
- குளிர்காலம் (டிசம்பர் முதல் பிப்ரவரி வரை)
- கோடைக்காலம் (மார்ச் முதல் மே வரை)
- தென்மேற்கு பருவக்காற்று (ஜூன் முதல் செப்டம்பர் வரை)
- வடகிழக்குப் பருவக்காற்று (அக்டோபர் முதல் நவம்பர் வரை)
1.குளிர்காலம்
- சூரியனின் செங்குத்து கதிர்கள் மகரரேகை யின் மீது விழுகிறது
- வட இந்திய நிலப்பகுதி குளிர்வடைந்து சராசரி வெப்பம் 21° செல்சியஸ் குறைந்து காணப்படுகிறது
- வடமேற்கு பகுதியில் குறைந்த வெப்பம் காணப்படுவதால் உயர் அழுத்தம் உருவாகிறது. தென்னிந்தியாவில் அரபிக்கடல் மற்றும் வங்காள விரிகுடா பகுதிகளில் தாழ்வு அழுத்தம் உருவாகிறது. இதனால் காற்று உயரழுத்த பகுதியில் இருந்து தென் இந்தியாவை நோக்கி வீசுகிறது. இந்தக் காற்றுக்கு பின்னடையும் பருவக்காற்று என்று பெயர்
- பின்னடையும் பருவக்காற்று நிலத்திலிருந்து கடலை நோக்கி வீசுவதால் மழை அதிகம் தருவதில்லை
- வங்காள விரிகுடாவை கடக்கும்பொழுது சிறிதளவு ஈரப்பதத்தை பெறுவதால் தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திர பிரதேசத்திற்கு குளிர்கால மழையைத் தருகிறது
- மத்திய தரைக்கடலில் தாழ்வு அழுத்தம் உருவாகி கிழக்கு நோக்கி நகர்ந்து ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தானை கடந்து இந்தியாவை வந்தடைகிறது. இத்தாழ்வு அழுத்தம் மேற்கிந்திய இடையூறு காற்று என அழைக்கப்படுகிறது
2.கோடைக்காலம்
- சூரியனின் செங்குத்துக்கதிர்கள் கடக ரேகையின் மீது விழுகிறது
- வடமேற்கு இந்தியாவில் பகல் நேர வெப்பம் 45° செல்சியஸ் வரை உயர்கிறது
- மாஞ்சாரல் என அழைக்கப்படும் இடியுடன் கூடிய மழை கேரளா மற்றும் கர்நாடக கடற்கரைப் பகுதிகளில் விளையும் மாங்காய்கள் விரைவில் முதிர்வதற்கு உதவுகிறது
- வடகிழக்கு இந்தியப் பகுதிகளில் வீசும் தலக்காற்று நார்வெஸ்டர் என்று அழைக்கப்படுகிறது. இத்தலக்காற்று பஞ்சாப்பில் கால் பைசாகி என அழைக்கப்படுகிறது
- இந்தியாவின் வடக்கு மற்றும் வடமேற்கு பகுதிகளில் கோடைகாலத்தில் பகல் நேரத்தில் வீசும் வலிமையான வெப்பக் காற்று லூ என அழைக்கப்படுகிறது
3.தென்மேற்கு பருவக்காற்று
i) அரபிக்கடல் கிளை
- இந்திய தீபகற்ப அமைப்பால் இரு கிளைகளாக பிரிகிறது
ii) வங்காள விரிகுடா கிளை
i)அரபிக்கடல் கிளை
- அதிக மழைப் பொழிவை தருகிறது
- அரபிக் கடலிலிருந்து வீசும் காற்றின் ஒரு பகுதி முதலில் மேற்கு தொடர்ச்சி மலை மீது மோதுகிறது ஈரப்பதமிக்க இக்காற்று மலைச் சரிவுகளின் வழியே உயரே எழும்பி, குளிர்வடைந்து மேற்கு கடற்கரை பகுதிக்கு பலத்த மழையை தருகிறது
- மேற்கு தொடர்ச்சி மலையின் காற்று மோதும் திசையில் அமைந்துள்ள மும்பை 150 சென்டி மீட்டர் மழையும், மேற்கு தொடர்ச்சி மலையின் மறைவிலுள்ள மழை மறைவுப் பிரதேசத்தில் உள்ள பூனா 50 சென்டிமீட்டர் மழையையும் பெறுகின்றன
- இரண்டாவது பகுதி விந்திய சாத்பூரா மலைகளின் வழியே சென்று ராஜ்மகால் குன்றுகளின் மீது மோதி சோட்டா நாகபுரி பீடபூமிக்கு அதிக மழையை தருகிறது
- மூன்றாவது பகுதி ராஜஸ்தானை நோக்கி நகர்கிறது. அங்கு ஆரவல்லி மலைத்தொடர் காற்று வீசும் திசைக்கு இணையாக உள்ளது .அதனால் இக்காற்று மலை மீது மோத இயலாததால் ராஜஸ்தானுக்கு மழைப்பொழிவை தருவதில்லை
- வங்காள விரிகுடா கிளைக் காற்றுடன் கலக்கிறது. இவை சிவாலிக் குன்றுகளால் தடுக்கப்படுவதால் அவற்றின் மலையடிவாரத்தில் நல்ல மழைப்பொழிவை தருகிறது
ii)வங்காளவிரிகுடா கிளை
- வங்காள விரிகுடாவிலிருந்து வீசும் காற்று ஈரப்பதத்தை தாங்கி வருகிறது. இது காசி, ஜெயந்தியா குன்றுகளின் மீது இந்தியாவிலேயே அதிக மழைபெறும் இடமான மௌசின்ராம்க்கு கன மழையைத் தருகிறது
- இக்காற்றின் ஒரு பகுதி இமயமலைகளால் தடுக்கப்பட்டு மேற்கு நோக்கி நகர்ந்து கங்கைச் சமவெளிக்கு மழையைத் தருகிறது
- இது மேலும் மேற்கு நோக்கி நகர நகர ஈரப்பதத்தை இழப்பதால் பஞ்சாப் மற்றும் ஹரியானாவிற்கு மிகக் குறைந்த அளவு மழையைத் தருகிறது
- இக்காற்று அரபிக்கடல் கிளையுடன் சேர்ந்து இமய மலையின் அடிவாரமான சிவாலிக் குன்று பகுதிகளுக்கு அதிக மழையைத் தருகிறது.
4.வடகிழக்கு பருவக்காற்று
- இது குளிர்ந்த வறண்ட காற்று என்பதால் நிலப்பகுதிக்கு மழையைத் தருவதில்லை
- வங்காள விரிகுடாவைக் கடக்கும்பொழுது ஈரப்பதத்தை உறிஞ்சி சோழமண்டலக் கடற்கரைக்கு கனத்த மழையை தருகிறது. அதனால் ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு குளிர்காலத்தில் நல்ல மழையைப் பெறுகிறது
தமிழ் நாட்டின் காலநிலை
- அயனமண்டல காலநிலை வகையை சார்ந்தது
- ஆண்டுக்கு இருமுறை சூரியனின் செங்குத்தான ஒளிக்கதிர்கள் தமிழ்நாட்டில் விழும்
- தமிழ்நாட்டின் காலநிலையை பாதிக்கும் காரணிகள்
ii)மழையைத் தரும் பருவக்காற்று களினால் உண்டாகும் நேரடி தாக்கம்
- மே மாதம் வெப்பமிகு மாதமாகவும் ஜனவரி மாதம் குளிர் மிகுந்த மாதமாகவும் உள்ளது
- மே மாதத்தில் காற்றின் சராசரி ஈரப்பதம் 68 %
- ஜனவரி மாதத்தில் கார்டின் சராசரி ஈரப்பதம் 82%
மழைப்பரவல்
- இரண்டு காரணிகளால் நிச்சயிக்கப்படுகிறது
ii)மலைகளின் அமைவு
- மழைப் பொழிவின் அடிப்படையில் நம் நாட்டை நான்கு பிரிவுகளாகப் பிரிக்கலாம்
i)மிக அதிக மழைபெறும் பகுதிகள்
- 300 சென்டிமீட்டர்க்கும் அதிகமான மழையைப் பெறும் கிழக்கு இமயமலையின் தெற்கு சரிவு, அஸ்ஸாம், மேற்கு வங்காளம், கொங்கணம் மற்றும் மலபார் கடற்கரை ஆகியவை மிக அதிக மழைபெறும் பகுதிகள் ஆகும்
ii)அதிக மழைபெறும் பகுதிகள்
- 200 சென்டி மீட்டர் முதல் 300 சென்டிமீட்டர் மழையைப் பெறும் மத்திய கங்கை சமவெளி, மேற்கு மலைத்தொடர், கிழக்கு மகாராஷ்டிரா ,மத்திய பிரதேசம், ஒடிசா ஆகியப் பகுதிகள் அதிக மழைபெறும் பகுதிகள் ஆகும்
iii) மிதமான மழை பெறும் பகுதிகள்
- 100 சென்டி மீட்டர் முதல் 200 சென்டிமீட்டர் வரை மழை பெறும் கங்கை பள்ளத்தாக்கு, கிழக்கு ராஜஸ்தான்,பஞ்சாப்,கர்நாடகம்,ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு ஆகிய பகுதிகள் மிதமான மழை பெறும் பகுதிகளாகும்
iv)குறைவான மழை பெறும் பகுதிகள்
- 50 சென்டிமீட்டர் க்கும் குறைவான மழையைப் பெறும் காஷ்மீரின் வட பகுதி, மேற்கு ராஜஸ்தான், தென் பஞ்சாப் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைகளின் மழைமறைவுப் பகுதியில் உள்ள தக்காண பீடபூமி பகுதிகள்
Comments
Post a Comment