Previous Year Question PaperGroup 2A General Tamil - 2017
1.கரிசலாங்கண்ணி என்னும் மூலிகையை குறிக்காத பெயர்
(A)கரி சாலை
(B)கையாந்தகரை
(C)சிங்கவல்லி
(D)தேகராசம்
Ans:(C)சிங்கவல்லி
2.அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.
- இக்குறளில் பயின்று வரும் பொருள்கோள் எது?
(A)நிரல்நிறைப் பொருள்கோள்
(B) ஆற்றுநீர் பொருள்கோள்
(C) மொழிமாற்றுப் பொருள்கோள்
(D) விற்பூட்டுப் பொருள்கோள்
Ans:(A)நிரல்நிறைப் பொருள்கோள்
3.'கேண்மை' - இச்சொல்லின் எதிர்ச்சொல்.
(A)துன்பம்
(B)பகை
(C) நட்பு
(D)வலிமை
Ans:(B)பகை
GR2AT/17 [Turn over
4.'பாலை நிலத்திற்குரிய பறவைகள்' எவை?
(A) கிளி, மயில்
(B) நாரை, அன்னம்
(C)புறா, பருந்து
(D) கடற்காகம்
Ans:(C)புறா, பருந்து
5. துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்
திறந்தாரை எண்ணிக்கொண் டற்று - இதில் அமைந்து வரும் மோனை.
(A) இணை மோனை
(B) பொழிப்பு மோனை
(C)ஒருஉ மோனை
(D) கூழை மோனை
Ans:(B) பொழிப்பு மோனை
6. இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
துன்பம் உறுதல் இலன் - இதில் அமைந்து வரும் தொடைநயம்.
(A) அடி முரண் தொடை
(B) அடி மோனைத் தொடை
(C) அடி இயைபுத் தொடை
(D) எதுவுமில்லை
Ans:(A) அடி முரண் தொடை
7. 'அரியவற்றுள்' - இச்சொல்லை அசைபிரித்து சரியான விடையை எழுதுக.
(A) நிரை நேர் நேர்
(B)நிரை நிரை நேர்
(C) நிரை நேர் நிரை
(D) நேர் நேர் நிரை
Ans:(B)நிரை நிரை நேர்
8. சொல்லுக்கு முதலில் மட்டுமே வரும் ஒளகாரம், எத்தனை மாத்திரை அளவினதாய்க் குறைந்து ஒலிக்கும்
(A) ஒன்றே கால் மாத்திரை
(B) ஒன்றரை மாத்திரை
(C) ஒன்றே முக்கால் மாத்திரை
(D) ஒரு மாத்திரை
Ans:(B) ஒன்றரை மாத்திரை
9."இரட்டைக்கிளவி இரட்டிற் பிரிந்திசையா'' எனக் குறிப்பிடும் நூல்
(A)தொல்காப்பியம்
(B) நன்னூல்
(C)அகப்பொருள்
(D)அகத்தியம்
Ans:(B) நன்னூல்
10. பொருந்தாததை எடுத்து எழுதுக.
(A) அரசன் வந்தது - திணை வழு
(B) கபிலன் பேசினாள் - பால் வழு
(C) குயில்கள் கூவியது - எண் வழு
(D)கமலா சிரித்தாய் - கால வழு
Ans:(D)கமலா சிரித்தாய் - கால வழு
GR2AT/17 [Turn overAns:
11.பொருந்தாததை கண்டறிந்து எழுதுக.
(A) ஐந்து கிலோ - எடுத்தல் அளவை ஆகுபெயர்
(B) நாலு லிட்டர் - முகத்தல் அளவை ஆகுபெயர்
(C) மூன்று மீட்டர் - நீட்டல் அளவை ஆகுபெயர்
(D)இந்தியா வென்றது - உவமையாகுபெயர்
Ans:(D)இந்தியா வென்றது - உவமையாகுபெயர்
12. தொழிற் பெயரைக் கண்டறிக.
'வா ' -
(A)வருதல்
(B) வந்து
(C)வந்தான்
(D)வந்த
Ans:(A)வருதல்
13. அகர வரிசையில் அமைந்துள்ள சொற்களைக் கண்டறிக
(A)காசு, கூறை, கைப்பிடி, கிளி, கேணி
(B)காசு, கிளி, கூறை, கேணி, கைப்பிடி
(C) கிளி, கைப்பிடி, காசு, கூறை, கேணி
(D) கேணி, காசு, கிளி, கூறை, கைப்பிடி
Ans:(B)காசு, கிளி, கூறை, கேணி, கைப்பிடி
14. 'இனிய நண்ப' - இலக்கணக் குறிப்பு தருக
(A) குறிப்புப் பெயரெச்சம்
(B) தெரிநிலை பெயரெச்சம்
(C) எதிர்மறைப் பெயரெச்சம்
(D) குறிப்பு வினையெச்சம்
Ans:(A) குறிப்புப் பெயரெச்சம்
15."எதிரூன்றல் காஞ்சி, எயில் காத்தல் நொச்சி" - இதில் நொச்சி என்பது
(A)மதில் காத்தல்
(B) மதில் வளைத்தல்
(C)மதில் பூச்சூடல்
(D) மதில்வாகை சூடல்
Ans:(A)மதில் காத்தல்
16.சொல்லை பொருளோடு பொருத்துக :
(a) வனப்பு 1.வலிமை
(b) அடவி 2.அழகு
(C) வீறு 3. இனிமை
(d) மதுரம் 4. காடு
(a) (b) (c) (d)
(A) 2 4 1 3
(B) 2 3 1 4
(C) 3 2 4 1
(D) 1 3 2 4
Ans:(A) 2 4 1 3
17.பொருத்துக:
(a) திரிகடுகம் 1.பெருவாயின் முள்ளியார்
(b) ஆசாரக்கோவை 2.நல்லாதனார்
(c)பழமொழி நானூறு 3.காரியாசான்
(d) சிறுபஞ்சமூலம் 4.முன்றுறை அரையனார்
(a) (b) (c) (d)
(A) 2 1 4 3
(B) 2 3 4 1
(C) 3 2 1 4
(D) 3 1 4 2
Ans:(A) 2 1 4 3
18.தமிழ்விடு தூதின் ஆசிரியர் யார்?
(A) கபிலர்
(B) நரிவெரூஉத்தலையார்
(C)அறியப்படவில்லை
(D) ஓதலாந்தையார்
Ans:(C)அறியப்படவில்லை
19. ஐஞ்சிறு காப்பியங்கள் - என்னும் வகைப்பாட்டில் இல்லாத நூல் எது?
(A) நாக குமார காவியம்
(B) நீலகேசி
(C)குண்டலகேசி
(D)சூளாமணி
Ans:(C)குண்டலகேசி
20.'இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே' - எனப் பாடியவர்
(A)பாரதியார்
(B)பாரதிதாசன்
(C) சுரதா
(D)திருவள்ளுவர்
Ans:(B)பாரதிதாசன்
21.கல்லை சேர்த்துக் கட்டிக் கடலில் எறிந்த போது கல்லினை தெப்பமாகக் கொண்டு கரையேறியவர்
(A) பெரியாழ்வார்
(B)அப்பூதியடிகள்
(C)மாணிக்கவாசகர்
(D) அப்பர்
Ans:(D) அப்பர்
22. "ரூபாயத்' என்பதன் பொருள்
(A) மூன்றடிச் செய்யுள்
(B)நான்கடிச் செய்யுள்
(C) இரண்டடிச் செய்யுள்
(D) ஐந்தடிச் செய்யுள்
(C) இரண்டடிச் செய்யுள்
(D) ஐந்தடிச் செய்யுள்
Ans:(B)நான்கடிச் செய்யுள்
23.அணு துளைக்காத கிரெம்ளின் மாளிகையில் வைத்து, திருக்குறளைப் பாதுகாக்கும் நாடு எது?
(A) இங்கிலாந்து
(B)சீனா
(C) உருசிய நாடு
(D) அமெரிக்கா
Ans:(C) உருசிய நாடு
24. வைதோரைக் கூட வையாதே - இந்த
வையமுழுதும் பொய்த்தாலும் பொய்யாதே
- இவ்வரியை பாடியவர்
(A) குடும்பைச் சித்தர்
(B) கடுவெளிச்சித்தர்
(C) திருமூலர்
(D) கவிமணி
Ans:(B) கடுவெளிச்சித்தர்
(D) கவிமணி2 25. 26 முதல் 32 வயது வரை உடைய பருவ மகளிர்
(A) மடந்தை
(B)அரிவை
(C) மங்கை
(D)தெரிவை
Ans: (D)தெரிவை
26.குமரகுருபரர் எம் மொழிகளில் புலமை மிக்கவர்
(A) தமிழ், வடமொழி
(B)தமிழ், வடமொழி, இந்துத்தானி
(C) தமிழ், மலையாளம்
(D) தமிழ், ஆங்கிலம்
Ans: (B)தமிழ், வடமொழி, இந்துத்தானி
27. "உயிரிரக்கமே பேரின்ப வீட்டின் திறவுகோல்” என்று கூறியவர்
(A) கம்பர்
(B) திருவள்ளுவர்
(C) இளங்கோவடிகள்
(D)வள்ளலார்
Ans: (D)வள்ளலார்
28. “இயற்படு பொருளால் கண்டது மறந்து
முயற்கோ டுண்டெனக் கேட்டது தெளிதல்" - இப்பாடல் இடம் பெற்றுள்ள நூல் எது?
(A) சீவகசிந்தாமணி
(B) சிலப்பதிகாரம்
(C)மணிமேகலை
(D) கம்பராமாயணம்
Ans: (C)மணிமேகலை
29. "ஒன்று கொலாம்" என்னும் திருப்பதிகம் பாடியவர் யார்?
(A) சேக்கிழார்
(B)திருநாவுக்கரசர்
(C)இளங்கோவடிகள்
(D)பாரதியார்
Ans: (B)திருநாவுக்கரசர்
GREAT/17 [Turn over
30. தமிழ் மூவாயிரம் எனப்படும் நூல் எது?
(A) தேவாரம்
(B) திருவாசகம்
(C)திருமந்திரம்
(D) திருக்குறள்
Ans: (C)திருமந்திரம்
31. 'உண்பது நாழி உடுப்பவை இரண்டே - என்று பாடிய புறநானூற்றுப் புலவர்
(A)மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்
(B)கணியன் பூங்குன்றனார்
(C)நரிவெரூஉத்தலையார்
(D)ஒளவையார்
Ans: (A)மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்
32. உலகம் முழுவதையும் ஆலிக்கருதுபவர் எதற்காகக் காத்திருக்க வேண்டும்?
(A) படை வரும் வரை
(B)காலம் வரும் வரை
(C)பணம் வரும் வரை
(D)பலம் வரும் வரை
Ans: (B)காலம் வரும் வரை
33.சீறாப்புராணத்தை இயற்றியவர் யார்?
(A) உமறுப்புலவர்
(B) சீதக்காதி
(C) அபுல்காசிம்
(D)திருநாவுக்கரசர்
Ans: (A) உமறுப்புலவர்
34.பொருத்துக :
(a) காகம் 1. கூவும்
(b) குதிரை 2.கரையும்
(C) சிங்கம் 3. கனைக்கும்
(d) குயில் 4. முழங்கும்
(a) (b) (c) (d)
(A) 1 3 4 2
(B) 4 3 1 2
(C) 2 4 1 3
(D) 2 3 4 1
Ans: (D) 2 3 4 1
35. 'மூலன்' என்னும் இயற்பெயரை உடையவர்
(A)திருமூலர்
(B) அப்பர்
(C) சாத்தனார்
(D)தாயுமானவர்
Ans: (A)திருமூலர்
36. "ஒரு நாடு வளமுடன் இருக்க வேண்டுமானால், அந்நாட்டு மக்கள் அனைவரும் ஒத்த ஒழுக்கமுடையவர்களாக இருக்க வேண்டும்” - எனக் கூறியவர் யார்?
(A) பாரதியார்
(B)அம்பேத்கர்
(C)பெரியார்
(D) அறிஞர் அண்ணா
Ans: (C)பெரியார்
37. இந்திய நாட்டை 'மொழிகளின் காட்சி சாலை' என்று கூறியவர்
(A) குமரிலபட்டர்
(B) கால்டுவெல்
(C) ச.அகத்தியலிங்கம்
(D) ஈராஸ் பாதிரியார்
Ans: (C) ச.அகத்தியலிங்கம்
38. 'நவ்வி' - இச்சொல்லின் பொருளை எழுதுக..
(A) மான்
(B)நாய்
(C) புலி
(D) பசு
Ans: (A) மான்
39.''சாதியையும் நிறத்தையும் பார்த்து மனிதனை மனிதன் தாழ்வுபடுத்துவது பெருங்கொடுமை" எனக் கூறியவர்
(A) காந்தியடிகள்
(B) பாரதியார்
(C)பசும்பொன் முத்துராமலிங்கர்
(D) பாரதிதாசன்
Ans: (C)பசும்பொன் முத்துராமலிங்கர்
40.குளிர்பதனப் பெட்டியில் பயன்படுத்தப்படுவது
(A) கார்பன் டை ஆக்சைடு
(B) ஆக்சிஜன்
(C)குளோரோஃபுளுரோ கார்பன்
(D) மீத்தேன்
Ans: (C)குளோரோஃபுளுரோ கார்பன்
41. 'தமிழ் பிறமொழித் துணையின்றி தனித்து இயங்குவது மட்டுமின்றித் தழைத்தோங்கவும் செய்யும்' - எனக் கூறியவர்
(A) டாக்டர் கிரௌல்
(B)கால்டுவெல்
(C) வீரமாமுனிவர்
(D) ஜி.யு. போப்
Ans: (B)கால்டுவெல்
GRZAT/17 [Turn over
42.'தமிழ் ஒன்றே தமிழரைப் பிணைத்து ஒற்றுமைப் படுத்த வல்லது. தமிழ் ஆட்சி மொழியாகவும், கல்வி
மொழியாகவுமானால் தவிரத் தமிழுக்கு எதிர்காலம் இல்லை என நம்பு' - இக்கடிதப் பகுதி யாருடையது?
(A) திரு. வி. கலியாண சுந்தரனார்
(B) மு.வரதராசனார்
(C) பேரறிஞர் அண்ணா
(D) ஜவஹர்லால் நேரு
Ans: (B) மு.வரதராசனார்
43."தேசியம் காத்த செம்மல், எனத் திரு. வி. கல்யாண சுந்தரனாரால் பாராட்டப் பெறுபவர்''.
(A) அம்பேத்கர்
(B) அண்ணா
(C)முத்துராமலிங்கர்
(D) பெரியார்
Ans: (C)முத்துராமலிங்கர்
44.காமராசரின் அரசியல் குரு
(A) காந்தியடிகள்
(B) பேரறிஞர் அண்ணா
(C) நேரு
(D) சத்திய மூர்த்தி
Ans: (D) சத்திய மூர்த்தி
45."பாவலரேறு பெருஞ்சித்திரனார்" எழுதாத நூல் எது?
(A) பாவியக் கொத்து
(B) பள்ளிப் பறவைகள்
(C)கொய்யாக்கனி
(D)குறிஞ்சித் திட்டு
Ans: (D)குறிஞ்சித் திட்டு
46. தமிழ் இலக்கணம் படிக்க படிக்க விருப்பத்தை உண்டாக்குவது என்று கூறியவர்
(A) அம்பேத்கர்
(B) கெல்லட்
(C)கமில் சுவலபில்
(D) முனைவர் எமினோ
Ans: (B) கெல்லட்
47. ஒவ்வொருவரும் தாம் சிறந்ததாகக் கருதும் சமயத்தை கைக் கொண்டு வாழவிடுவதே தருமம் - எனக் கூறியவர்
(A)இராணி மங்கம்மாள்
(B)அஞ்சலையம்மாள்
(C) வள்ளியம்மை
(D)வேலுநாச்சியார்
Ans: (A)இராணி மங்கம்மாள்
48. உன் மானத்தை விட நாட்டின் மானம் பெரியது என்று உணர். உன் உயர்வை விட, நாட்டின் உயர்வு இன்றியமையாதது என்று உணர். உன் நலத்தை விட நாட்டின் நலம் சிறந்தது என்று உணர். நெருக்கடி நேரும் போது உன் நலம், உயர்வு, மானம் ஆகியவற்றை நாட்டுக்காக விட்டுக்கொடு - இக்கூற்று யாருடைய கடிதப்பகுதி?
(A) பேரறிஞர் அண்ணா
(B)அன்னை இந்திராகாந்தி
(C) மு.வரதராசனார்
(D) திரு.வி.க.
Ans: (C) மு.வரதராசனார்
49.சாதுவன் வாணிகம் செய்யும் பொருட்டுக்கடல் கடந்து சென்ற குறிப்பு எந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது?
(A) சிலப்பதிகாரம்
(B)மணிமேகலை
(C)குண்டலகேசி
(D) வளையாபதி
Ans: (B)மணிமேகலை
50.பொருத்துக:
(a) திருவரங்கம் 1. சிதம்பரம்
(b) திருச்சிற்றம்பலம் 2. ஸ்ரீரங்கம்
(C) திருமறைக்காடு 3. மீனாட்சி
(d) அங்கயற்கண்ணி 4.வேதாரணியம்
(a) (b) (c) (d)
(A) 1 3 4 2
(B) 2 1 4 3
(C) 3 2 4 1
(D) 1 4 2 3
Ans: (B) 2 1 4 3
51.மதுரையில் உலகத் தமிழ் மாநாடு எந்த ஆண்டு நடைபெற்றது?
(A)1981
(B) 1982
(C) 1983
(D) 1985
Ans: (A)1981
52.நான் நிரந்தரமானவன் அழிவதில்லை
எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை .
- எனக் கவிதை பாடியவர்.
(A) சுரதா
(B) கண்ணதாசன்
(C) பாரதிதாசன்
(D) மு. மேத்தா
Ans: (B) கண்ணதாசன்
53. எளிமையினால் ஒரு தமிழன் படிப்பில்லை யென்றால்
இங்குள்ள எல்லாரும் நாணிடவும் வேண்டும்.
- எனப் பாடியவர்.
(A)பாரதிதாசன்
(B) பாரதியார்
(C)சுரதா
(D)கண்ண தாசன்
Ans: (A)பாரதிதாசன்
54. மரக்கலத்தை குறிக்கும் நான்கு சொற்களை தேர்ந்தெடுக்க
(A) கலம், தோணி, புணரி, மிதவை
(B) கலம், பரிசில், ஓடம், பரவை
(C)கலம், வங்கம், புணை, அம்பி
(D) கலம், பரிசில், ஆழி. பஃறி
Ans: (C)கலம், வங்கம், புணை, அம்பி
GR2AT/17 [Turn over
55.பிறமொழிச் சொற்களுக்கு ஏற்ற தமிழ்ச் சொற்களைப் பொருத்துக
(a) மீனாட்சி 1. அங்கயற்கண்ணி
(b) மதுரவசனி 2.வாள்நெடுங்கண்ணி
(C) கட்கநேத்ரி 3. நீள்நெடுங்கண்ணி
(d) விசாலாட்சி 4. தேன்மொழிப்பாவை
(a) (b) (C) (d)
(A) 1 4 3 2
(B) 1 4 2 3
(C) 1 3 4 2
(D) 1 2 4 3
Ans: (B) 1 4 2 3
56.பிழையற்றத் தொடரைத் தேர்வு செய்க.
(A) ஓர் மாவட்டத்தில் ஒரு அமைச்சர் அவருடை மகனோடு சுற்றுலா மேற்க்கொண்டார்
(B) ஒரு மாவட்டத்தில் ஓர் அமைச்சர் அவருடைய மகனோடு சுற்றுலா மேற்கொண்டார்
(C)ஒரு மாவட்டத்தில் ஒரு அமைச்சர் அவரது மகனோடு சுற்றுலா மேற்க்கொண்டார்
(D) ஒரு மாவட்டத்தில் ஒரு அமைச்சர் அவரது மகனோடு சுற்றுலா மேற்கொண்டார்
Ans: (B) ஒரு மாவட்டத்தில் ஓர் அமைச்சர் அவருடைய மகனோடு சுற்றுலா மேற்கொண்டார்
57. “மாகதம்” எனப்படுவது
(A) மதுரகவி
(B) சித்திரகவி
(C)வித்தாரகவி
(D) ஆசுகவி
Ans: (C)வித்தாரகவி
58.அகத்திணையின் வகைகள்
(A) ஐந்து
(B) ஆறு
(C) மூன்று
(D)ஏழு
Ans: (D)ஏழு
59.கரணத்தேர் -- எனப் பிரியும்.
(A)கரணம் + தேர்
(B)கரணத்து + ஏர்
(C) கரன் + அத்து + ஏர்
(D) காரணம் + தேர்
Ans: B)கரணத்து + ஏர்
60. மாறியுள்ள சீர்களை முறைப்படுத்தி எழுதுக
(A) இல்லாரை எள்ளுவர் செல்வரை எல்லாரும்
(B)இல்லாரை செல்வரை எல்லாரும் எள்ளுவர்
(C) இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
(D) செல்வரை எல்லாரும் எள்ளுவர் இல்லாரை
Ans: (C) இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
61. மாறியுள்ள சீர்களை முறைப்படுத்தி எழுதுக
(A) குணநலம் நலனே சான்றோர் பிறநலம்
(B)சான்றோர் நலனே குணநலம் பிறநலம்
(C)குணநலம் சான்றோர் நலனே பிறநலம்
(D) சான்றோர் குணநலம் நலனே பிறநலம்
Ans: (C)குணநலம் சான்றோர் நலனே பிறநலம்
GREAT/17 [Turn over
62. பகுபதத்தில் குறைந்தளவு இருக்க வேண்டிய உறுப்புகள்
(A) பகுதி, சந்தி
(B) இடைநிலை, சாரியை
(C) பகுதி, விகுதி
(D) விகுதி, சாரியை
Ans: (C) பகுதி, விகுதி
63. உறுவேனில் - இலக்கணக் குறிப்பு யாது?
(A) வினைத்தொகை
(B) உரிச்சொற்றொடர்
(C) பண்புத்தொகை
(D) வினையெச்சம்
Ans: (B) உரிச்சொற்றொடர்
64. "இறை. செப்பு” என்பன கீழ்க்கண்ட எச்சொல்லுக்கு வழங்கும் வேறு பெயர்கள்
(A) வினா
(B) மொழி
(C) விடை
(D) இறைவன்
Ans: (C) விடை
65. கீழ்க்காணும் தொடரில் சரியான விடையை தேர்வு செய்க.
(A) யானையின் கண் சிறியது
(B) யானையின் கண்கள் சிறியது
(C)யானையின் கண்கள் சிறியன
(D)யானையின் கண் சிறியன
Ans: (C)யானையின் கண்கள் சிறியன
66.ஓடையில் யானையும் யானைக்
______ம் நின்றன.
(A)யானைக் கன்று
(B) யானைக் குட்டி
(C) யானைக் குருளை
(D) யானைப் பிள்ளை
Ans: (A)யானைக் கன்று
67.Refrigerator - என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைத் தேர்ந்தெடுக்க
(A) குளிர்பதனப் பெட்டி
(B) குளிரூட்டும் பெட்டி
(C) குளிர்சாதனப் பெட்டி
(D) குளிர் காக்கும் பெட்டி
Ans: (B) குளிரூட்டும் பெட்டி
68.'கோ' - இச்சொல்லின் உரிய பொருளைக் கண்டறிக
(A) அரசன்
(B) அன்னம்
(C) ஆதவன்
(D) அன்பு
Ans: (A) அரசன்
69.உவமை விளக்கும் பொருளை கண்டறிந்து பொருத்துக:
(a) அத்திப் பூத்தது போல 1. ஒற்றுமை
(b) உயிரும் உடம்பும் போல 2. பயனில்லை
(C) ஆற்றில் கரைத்த புளி 3. வேதனை
(d) இடிவிழுந்த மரம் போல 4. அரிய செயல்
(a) (b) (c) (d)
(A) 3 1 4 2
(B) 2 3 4 1
(C) 4 1 2 3
(D) 4 2 1 3
Ans: (C) 4 1 2 3
GR2AT/17 [Turn over
70. "அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கும்"
- இவ்வரிகள் இடம்பெற்ற நூலின் பெயர்.
(A) தேவாரம்
(B)திருவாசகம்
(C)ஏர் எழுபது
(D) திருக்கோவை
Ans: (B)திருவாசகம்
71."கேழல்' என்பதன் பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக
(A) எருமை
(B) புலி
(C) கரடி
(D)பன்றி
Ans: (D)பன்றி
72. பட்டியல் I ஐ பட்டியல் II டன் பொருத்தி விடை எழுது.
பட்டியல் I பட்டியல் II
(a) திருஞானசம்பந்தர் 1. திருவாதவூர்
(b) திருநாவுக்கரசர் 2.திருவெண்ணெய்நல்லூர்
(C) சுந்தரர் 3. திருவாரூர்
(d) மாணிக்கவாசகர் 4.சீர்காழி
(a) (b) (c) (d)
(A) 4 3 2 1
(B) 4 2 3 1
(C) 2 4 1 3
(D) 2 3 4 1
Ans: (A) 4 3 2 1
73."கொங்குதேர் வாழ்க்கை அஞ்சறைத் தும்பி காமம் செப்பாது கண்டது மொழிமோ” - இவ்வரிகள் இடம்பெற்ற நூல் எது?
(A) நற்றிணை
(B)கலித்தொகை
(C)குறுந்தொகை
(D)புறநானூறு
Ans: (C)குறுந்தொகை
74. "தேம்பாவணி" எத்தனை காண்டங்களை உடையது
(A) இரண்டு
(B)மூன்று
(C) நான்கு
(D) ஐந்து
Ans: (B)மூன்று
75. பொருந்தாத இணையைக் கண்டறிக
(A) மேதி - எருமை
(B) சந்தம் - அழகு
(C)கோதில் - பசு
(D) அங்கணர் - சிவன்
Ans: (C)கோதில் - பசு
76. பொருத்துக : பொருளறிந்து பொருத்துக
(a) நயனம் 1.இருள்
(b) இந்து 2. புன்னகை
(c) முறுவல் 3. கண்கள்
(d) அல் 4. நிலவு
(a) (b) (c) (d)
(A) 3 4 2 1
(B) 3 4 1 2
(C) 4 3 2 1
(D) 3 2 1 4
Ans: (A) 3 4 2 1
77. நற்றிணையைத் தொகுப்பித்தவர் யார்?
(A)பன்னாடு தந்த மாறன் வழுதி
(B) இளம் பெருவழுதி
(C) உக்கிரப் பெருவழுதி
(D) பாண்டியன் மாறன் வழுதி
Ans: (A)பன்னாடு தந்த மாறன் வழுதி
78. உரிய பொருளைத் தேர்ந்தெழுதுக.
புரிசை
(A) வேகம்
(B) வளம்
(C) மதில்
(D) மேகம்
Ans: (C) மதில்
79. சரியான பொருளைத் தேர்ந்தெடுக்க
"உருமு"
(A) இடுப்பு
(B)இடி
(C) மேகம்
(D) கதிரொளி
Ans: (B)இடி
80. குலசேகர ஆழ்வார் இயற்றிய நூல் எது?
(A) நந்திக்கலம்பகம்
(B)நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்
(C)கலித்தொகை
(D)நற்றிணை
Ans: (B)நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்
81.கள்ள வேடம் புனையாதே - பல
கங்கையில் உன்கடம் நனையாதே
- இதில் 'கடம்' என்பதன் பொருள்
(A) உடம்பு
(B)கால்கள்
(C) கைகள்
(D) தலை
Ans: (A) உடம்பு
82. திருஞானசம்பந்தருக்கு தொடர்பில்லாத தொடரை தேர்ந்தெடுக்க
(A) உமையாள் பொற்கிண்ணத்தில் அளித்த ஞானப்பாலை உண்டார்
(B) 220 தலங்கள் வழிபட்டார்
(C)திராவிடச் சிசு என ஆதிசங்கரரால் குறிப்பிடப்பட்டார்
(D)அப்பூதியடிகளின் மூத்த மகளை உயிர் பெற செய்தார்
Ans: (D)அப்பூதியடிகளின் மூத்த மகளை உயிர் பெற செய்தார்
83. உமறுப்புலவர் பாடிய முதுமொழி மாலை என்ற நூலில் உள்ள பாக்கள்
(A) 120 பாக்கள்
(B) 204 பாக்கள்
(C) 80 பாக்கள்
(D) 67 பாக்கள்
Ans: (C)80 பாக்கள்
84. சாலை இளந்திரையன் தமிழக அரசின் "பாவேந்தர் விருது பெற்ற ஆண்டு எது?
(A) 1990
(B) 1991
(C) 1993
(D) 1994
Ans: (B) 1991
85. நந்திக்கலம்பகம் யார் மீது பாடப் பெற்றது
(A) பாண்டிய மன்னன்
(B)குலசேகர ஆழ்வார்
(C)மூன்றாம் நந்திவர்மன்
(D) பல்லவ மன்னன்
Ans: (C)மூன்றாம் நந்திவர்மன்
86. எட்டுத் தொகை நூல்களுள் முதலாவதாக அமைந்த நூல்
(A) குறுந்தொகை
(B) நற்றிணை
(C)ஐங்குறுநூறு
(D)பதிற்றுப்பத்து
Ans: (B) நற்றிணை
87.சடையப்ப வள்ளலால் ஆதரிக்கப் பெற்றவர் யார்?
(A) உமறுப்புலவர்
(B)கம்பர்
(C) நாமக்கல் கவிஞர்
(D) பாரதியார்
Ans: (B)கம்பர்
88. சரியான தொடரைக் கண்டறிக.
இரட்டைக் காப்பியம் என்பன
(A) மணிமேகலையும், சீவக சிந்தாமணியும்
(B) சிலப்பதிகாரமும், வளையாபதியும்
(C)சிலப்பதிகாரமும், மணிமேகலையும்
(D)மணிமேகலையும், வளையாபதியும்
Ans: (C)சிலப்பதிகாரமும், மணிமேகலையும்
89. வெள்ளிப்பிடி அருவா
ஏ! விடலைப் பிள்ளை கை அருவா சொல்லியடிச்ச அருவா - எப்பாடல் வகையை சார்ந்தது .
(A) தொழிற் பாடல்
(B)விளையாட்டுப் பாடல்
(C) ஒப்பாரி பாடல்
(D)சடங்குப் பாடல்
Ans: (A) தொழிற் பாடல்
90. "யாமறிந்த புலவரிலே இளங்கோவைப் போல் - என இளங்கோவைப் புகழ்ந்து பாடியவர் யார்?
(A) வாணிதாசன்
(B) கணியன்
(C)பாரதியார்
(D)பாரதிதாசன்
Ans: (C)பாரதியார்
(D)
91. தமிழ் நாட்டில் நடத்தப்பட்ட முதல் தேசிய சமுதாய நாடகம் எது ?
(A) கதரின் வெற்றி
(B) தேசியக் கொடி
(C) தேச பக்தி
(D) தமிழ்தேசியம்
Ans: (A) கதரின் வெற்றி
92.படித்துப் புரிந்து சரியான விடையைத் தேர்ந்தெடு
1. தலைமை உன்னைத் தேடிக்கொண்டு வந்தால் வரட்டும்
2. நீ அதைத் தேடிக்கொண்டு போய் அலையாதே
3. நீ தேட வேண்டுவது தொண்டு
4. தொண்டுக்கு முந்து, தலைமைக்குப் பிந்து என்பது உன் நெறியாக இருக்கட்டும்
(A) நேரு எழுதிய கடித வரிகள்
(B)மு.வ. எழுதிய கடிதவரிகள்
(C) அண்ணா எழுதிய கடிதவரிகள்
(D) காந்தி எழுதிய கடிதவரிகள்
Ans: (B)மு.வ. எழுதிய கடிதவரிகள்
93. "வட்ட மேசை மாநாடு நடந்த ஆண்டு”
(A)1915
(B)1917
(C) 1930
(D)1932
Ans: (C) 1930
94. 'பகுத்தறிவுக் கவிராயர்' எனத் தமிழக மக்களால் அழைக்கப்படுபவர்
(A) ந. பிச்சமூர்த்தி
(B)உடுமலை நாராயணகவி
(C)சுரதா
(D) வாணிதாசன்
Ans: (B)உடுமலை நாராயணகவி
95. பொருத்துக:
(a) எட்வர்டு மை பிரிட்சு 1. ஒருவர் மட்டும் பார்க்கும்படக்கருவி
(b) எடிசன் 2. இயக்கப் படம்
(C) ஈஸ்ட்மன் 3. ஓடும் குதிரையை வைத்து இயக்கப்படம்
(d) பிரான்சிஸ் சென்கின்சு 4. படசுருள்
(a) (b) (c) (d)
(A) 2 4 3 1
(B) 3 1 4 2
(C) 2 3 1 4
(D) 4 2 3 1
Ans: (B) 3 1 4 2
96. பாவாணர், சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்குநராக பணியமர்த்தப்பட்ட ஆண்டு
(A) 08.05.1974
(B) 05.01.1981
(C) 07.02.1902
(D) 12.04.1976
Ans: (A) 08.05.1974
97.தமிழர் புலம் பெயரக் காரணங்கள்
(A) பஞ்சம். அந்நியர் படையெடுப்பு
(B) வறுமை, மேலை நாட்டின் மோகம்
(C)வாணிகம், தமிழ்நாட்டில் வாழ விருப்பம் இன்மை
(D)வாணிகம், வேலை வாய்ப்பு
Ans: (D)வாணிகம், வேலை வாய்ப்பு
GREAT/17 [Turn over
98. முதன் முதலில் இயக்கப்படமாக எடுக்கப்பட்ட விலங்கு
(A)குதிரை
(B) நாய்
(C)பூனை
(D) மான்
Ans: (A)குதிரை
99.பெரியாரின் பெண் விடுதலைச் சிந்தனைகள்
___________வகைப்படும்.
(A)இரண்டு
(B)மூன்று
(C) நான்கு
(D)ஐந்து
Ans: (A)இரண்டு
100. இந்தியாவில் மட்டுமல்லாமல் _____________, ____________ ஆகிய நாடுகளில் குடியரசுத் தலைவர்களாகவும், தமிழர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்பது தமிழினத்துக்குப் பெருமை சேர்க்கிறது.
(A) சிங்கப்பூர், மலேசியா
(B)சிங்கப்பூர், மொரிசியசு
(C) சிங்கப்பூர், இலங்கை
(D)சிங்கப்பூர், பினாங்கு
Ans: (B)சிங்கப்பூர், மொரிசியசு
Comments
Post a Comment