Current Affairs - April 2019
நடப்பு நிகழ்வுகள் - ஏப்ரல் 2019
ஏப்ரல் - 1
- இந்திய ரிசர்வ் வங்கி(RBI) தொடங்கிய தினம்
- இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம்(ISRO),பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பிற்கு(DRDO) உதவுவதற்காக, மின்னணு உளவுத்துறை செயற்கைக்கோளான எமிசாட் மற்றும் 28 வெளிநாட்டு செயற்கைக்கோள்களை PSLV C - 45 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தியது
- இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கடற்படைகள் பங்கேற்கும் ஆஸி இன்டெக்ஸ் - 19 கூட்டு கடற்படை பயிற்சி ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் வங்கக்கடலில் நடைபெற்றது
- உலகிலேயே மிக நீளமான உப்பு குகை இஸ்ரேல் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு மால்கம் என பெயரிடப்பட்டுள்ளது
- பொதுத்துறை வங்கிகளான விஜயா மற்றும் தேனா வங்கிகள் பேங்க் ஆப் பரோடா வங்கியுடன் இணைக்கப்பட்டுள்ளது
- தைவானில் நடைபெற்று வரும் ஆசிய ஏர்கன் துப்பாக்கி சுடுதல் போட்டியின் 10 மீட்டர் ஏர் ரைபிள் ஆண்கள் பிரிவில் இந்தியாவின் சரப்ஜோட் சிங் தங்கம் வென்றுள்ளார். 10 மீட்டர் ஏர் ரைபிள் பெண்கள் பிரிவில் ஈஷா சிங் தங்கம் வென்றுள்ளார்
- வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு வழங்கப்படும் மிகப்பெரிய விருதான 'பிரவாசி பாரதிய சம்மன் விருது' இராஜேந்திர குமார் ஜோஷி என்பவருக்கும் வழங்கப்பட்டது. இவர் இராஜஸ்தானைப் பூர்வீகமாகக் கொண்ட சுவிட்சர்லாந்து அறிவியல் அறிஞர் ஆவார்
ஏப்ரல் - 2
- சர்வதேச குழந்தைகளின் புத்தக தினம்
- உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம்
- 5G தொழில்நுட்ப முறையைக் கொண்ட உலகின் முதல் மாவட்டமாக சீனாவில் உள்ள ஷாங்காய் அறிவிக்கப்பட்டுள்ளது
- அமெரிக்காவில் நடைபெற்ற மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ரோஜர் ஃபெடரர் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்
ஏப்ரல் - 3
- மக்களவைத் தேர்தலில் தெலுங்கானாவின் நிஜாமாபாத் தொகுதி வாக்காளர்கள் மட்டும் வாக்குப்பதிவு சீட்டு மூலம் வாக்களிக்க உள்ளனர்
- ஜப்பானின் புதிய பேரரசராக இளவரசர் நரு ஹிடோ, 2019 மே 1-ம் தேதி முடிசூட உள்ளார். இவரது ஆட்சிக்காலம் ரெய்வா சகாப்தம் என அழைக்கப்படுகிறது. ஜப்பானின் தற்போதைய சகாப்தம் ஹெய்சேய் ஆகும். இதன் பொருள் சமாதானத்தை அடைதல் என்பதாகும்
- 2019 - ம் ஆண்டிற்கான பீபாடி தொழில்சார் சாதனையாளர் விருதினை ரீட்டா மோரேனா என்பவர் பெற்றுள்ளார்
ஏப்ரல் - 4
- சர்வதேச சுரங்க நடவடிக்கைக்கான விழிப்புணர்வு தினம்
- இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோக்லமேஸ்வர் கிராமத்தில் சிந்து நதியின் குறுக்கே 260 அடி நீளமுள்ள தொங்கு பாலத்தை 40 நாட்களில் அமைத்து சாதனை படைத்துள்ளது. இதற்கு மைத்ரி பாலம் என பெயரிடப்பட்டுள்ளது
- தமிழக லோக் ஆயுக்தாவின் முதல் தலைவராக பி. தேவதாஸ் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்
- ஒடிசாவைச் சேர்ந்த கந்தமால் ஹால்டி என்ற மஞ்சள் வகைக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது
- சென்னை இந்திய தொழில் நுட்ப நிறுவனத்தின்(IIT - Madras) குழுவானது, பெட்ரோலியத்தின் கழிவுப்பொருளான டொலுவினை பென்சாயிக் அமிலமாக மாற்றியமைத்துள்ளது
- 'Modi Again: Modi is right for India, An Ex - Communist Manifesto' என்ற புத்தகம் அப்பாஸ் மால்டா ஹையர் என்பவரால் எழுதப்பட்டு, கருடா பிராசன் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது
ஏப்ரல் - 5
- தேசிய கடல்சார் தினம்
- கடலுக்கு அடியில் இருக்கும் நீர்மூழ்கி கப்பல்களை கண்டுபிடித்து தாக்கி அழிக்கும் 'எம்.ஹெச்.60ஆர்.ஷீஹாக்' ரக நவீன ஹெலிகாப்டர்களை இந்தியாவிற்கு வழங்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது
- ஐக்கிய அரபு அமீரகத்தின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான 'சயத் பதக்கம்' இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டு அதிபர் ஷேக் கலிஃபா பின் சயத் அல் நக்யான் என்பவரால் வழங்கப்பட்டது
- 'Saffron Sword: Centuries of Indic Resistance to Invaders' என்ற புத்தகம் மனோஷி சின்ஹா ராவல் என்பவரால் எழுதப்பட்டு கருடா பிராசன் லிமிடெட் மூலம் வெளியிடப்பட்டது
ஏப்ரல் - 6
- சர்வதேச விளையாட்டு மேம்பாடு மற்றும் அமைதி தினம்
- இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை .25 புள்ளிகள் குறைத்து 6 சதவீதமாக நிர்ணயித்துள்ளது
- உலகிலேயே 5G அதிவேக இணைய சேவையை தொடங்கியுள்ள முதலாவது நாடு தென் கொரியா ஆகும்
- சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு தரவரிசைப் பட்டியலில் இந்திய கால்பந்து அணி 101 - வது இடத்தைப் பிடித்துள்ளது.இப்பட்டியலில் பெல்ஜியம் அணி முதலிடத்திலும், பிரான்ஸ் அணி இரண்டாம் இடத்திலும் உள்ளது
- 'புவி நாள் அமைப்பு நட்சத்திர விருது' நாகலாந்தின் வனக்காவலரான அலெம்பா
- இம்சுங்கர் என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது
ஏப்ரல் - 7
- உலக சுகாதார தினம்
- இந்தியாவின் முதல் 'கார்பன் நேர்மறை குடியேற்ற கிராமம்' என்ற குறியீட்டை மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த பாயெங் கிராமம் (phayeng) பெற்றுள்ளது
- கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக, ஹைதராபாத்தின் தலைமை நீதிபதியாக பணியாற்றிய T.B.N. இராதாகிருஷ்ணன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்
ஏப்ரல் - 8
- உலக பாரம்பரிய தினம்
- ESPN அமைப்பின் சிறந்த விளையாட்டு வீரருக்கான 2019 - ம் ஆண்டிற்கான விருது நிராஜ் சோப்ரா விற்கு வழங்கப்பட்டது.சிறந்த விளையாட்டு வீராங்கனைக்கான விருது பி.வி. சிந்து விற்கு வழங்கப்பட்டது
- உலக வங்கியின் புதிய தலைவராக டேவிட் மல்பாஸ் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்
ஏப்ரல் - 9
- மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்ற மலேசிய ஓபன் பேட்மிண்டன் - 2019 போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சீனாவின் லின் டான் என்பவர் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.பெண்கள் ஒற்றையர் பிரிவில் தைவானின் டாய் சூ- யிங் என்பவர் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்
ஏப்ரல் - 10
- உலக ஹோமியோபதி தினம்
- மெக்சிகோவின் மான்டெர்ரி நகரில் நடைபெற்ற மான் டெர்சி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி - 2019 ல் பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயினின் கார்பின் முகுருஜா சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்
ஏப்ரல் - 11
- தேசிய பாதுகாப்பான தாய்மை தினம்
- இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியானது 2019 - 20 ம் ஆண்டில் 7.3 சதவீதமாகவும், 2020 - 21 ம் ஆண்டில் 7.5 சதவீதமாகவும் இருக்கும் என சர்வதேச நிதியம் அமைப்பு கணித்துள்ளது
- இந்திய ரயில்வேயின் கௌகாத்தி ரயில் நிலையம் தேசிய பசுமை தீர்ப்பாயத்திலிருந்து ISO சான்றிதழைப் பெற்றுள்ளது
ஏப்ரல் - 12
- மனித விண்வெளிப் பயணத்திற்கான சர்வதேச தினம்
- CRPF (Central Reserve Police Force) வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு அரசின் அனைத்து நல உதவிகளும் கிடைத்திட CRPF Veer Parivar என்ற மொபைல் செயலியை இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிமுகப்படுத்தியுள்ளார்
- இங்கிலாந்தைச் சேர்ந்த விஸ்டன் பத்திரிக்கை 2018 - ம் ஆண்டிற்கான உலகின் சிறந்த முன்னணி கிரிக்கெட் வீரர் விருது இந்தியாவின் விராட் கோலிக்கு வழங்கப்பட்டது. சிறந்த முன்னணி டி - 20 வீரர் விருது ஆப்கானிஸ்தானின் ரஷித் கானுக்கு வழங்கப்பட்டது. சிறந்த முன்னணி வீராங்கனை விருது இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா விற்கு வழங்கப்பட்டது
- தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக இரா.பழனிசாமி என்பவர் பொறுப்பேற்றுள்ளார். தமிழக தேர்தல் அதிகாரியாக (Electro Officer) சத்யவிரத சாஹீ என்பவர் உள்ளார்
- உலக வங்கியின் இடப்பெயர்வு மற்றும் வளர்ச்சி என்ற அறிக்கையின்படி, 2019 - ம் ஆண்டில் வெளிநாட்டில் வாழ்பர்கள் தமது சொந்த நாட்டிற்கு அதிகப்படியான பணத்தை அனுப்பும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது
ஏப்ரல் - 13
- 1919 - ம் ஆண்டு ஏப்ரல் 13 அன்று நிகழ்ந்த ஜாலியன் வாலாபாக் படுகொலையின் 100 - வது நினைவு தினத்தை முன்னிட்டு பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் அந்நாட்டு பிரதமர் தெரசா மே, இந்தியாவுடனான பிரிட்டனின் கடந்த கால வரலாற்றில் துயரத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு உதாரணம் என வருத்தம் தெரிவித்தார்
- இந்தியாவின் முதல் வாக்காளர் பூங்காவானது ஹரியானா மாநிலத்தின் குருகிராமில் அமைக்கப்பட்டுள்ளது
- உலக சுகாதார அமைப்பு(WHO) வெளியிட்டுள்ள உலகின் மிக மாசு படிந்த நகரங்களின் பட்டியலில் இந்தியாவின் உத்திரப்பிரதேச மாநிலத்தின் கான்பூர் முதலிடத்தில் உள்ளது
- கே.கே.பிர்லா அறக்கட்டளை சார்பில் வழங்கப்படும் எழுத்தாளருக்கான 'சரஸ்வதி சம்மன் விருது 2018' தெலுங்கு எழுத்தாளர் K.சிவா ரெட்டி என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது
ஏப்ரல் - 14
- பங்குகளின் மதிப்பில் ஜப்பானை பின்னுக்குத் தள்ளி ஹாங்காங் பங்குச் சந்தை உலகின் மூன்றாவது மிகப்பெரிய பங்குச் சந்தையாக உருவெடுத்துள்ளது
- பாரா ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற முதலாவது இந்திய பெண் தீபா மாலிக்கிற்கு நியூசிலாந்து பிரதம அமைச்சரின் 2019 - ம் ஆண்டிற்கான எட்மண்ட் ஹில்லாரி தோழமை விருது கிடைத்துள்ளது
- ரஷ்ய நாட்டின் மிக உயர்ந்த விருதான 'செயின்ட் ஆண்ட்ரூ தி அப்போஸ்தல் ஆர்டர்' என்ற விருது இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டுள்ளது
ஏப்ரல் - 15
- திருநங்கைகள் தினம்
- 2019 ஆம் ஆண்டிற்கான கடற்படை முதலீட்டு விழா மும்பையின் மேற்கு கடற்படையின் ஹெலிகாப்டர் கப்பல் தளமான ஐஎன்எஸ் ஷிக்ராவில் நடைபெற்றது
ஏப்ரல் - 16
- ஐ.நா வெளியிட்டுள்ள 2019 - ம் ஆண்டிற்கான உலகின் மிகவும் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் பின்லாந்து முதலிடத்தில் உள்ளது
- அமெரிக்காவில் செயற்கைகோளை விண்ணிற்கு செலுத்தும் வகையில் உலகின் மிகப்பெரிய விமானமான ஸ்ட்ரடோலாஞ்ச்(Stratolaunch) விமானத்தை உருவாக்கி உள்ளது
- சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் - 2019 ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜப்பானின் கென்டோ மோமோட்டா சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.பெண்கள் ஒற்றையர் பிரிவில் தைவானின் டாய் சு யிங் என்பவர் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்
- செவ்வாய் கிரகத்தின் நிலத்தடி பாறையில் துளையிட்டு அதன் மாதிரிகளை அமெரிக்காவின் கியூரியாசிட்டி ஆய்வுக்கலம் சேகரித்துள்ளது
- அண்டவெளியில் மேசியர் - 87 என்ற பால்வெளி மண்டலத்தில் உள்ள அதிக ஈர்ப்பு விசை கொண்ட M - 87 எனப்படும் கருந்துளையை விஞ்ஞானிகள் முதன்முறையாக படம் பிடித்துள்ளனர்
ஏப்ரல் - 17
- உலக இரத்த உறையாமை தினம்
- நீரிலும் நிலத்திலும் சென்று ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் 'மரைன் லிசார்ட்' என்ற படகை சீனா வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளது
- நெதர்லாந்தின் வாட்டரின் ஜென்னில் நடைபெற்ற டச்சு ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் ஹர்ஷீல் டேனி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்
- இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சுமார் 300 கிலோ வெடிபொருட்களை நீண்ட தூரம் எடுத்து சென்று தாக்கி அழிக்கும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின் 'நிர்பாய்' ஏவுகணை ஒடிசா மாநிலத்தின் சந்திப்பூரில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது
ஏப்ரல் - 18
- தெரு குழந்தைகள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் நல்லெண்ணத் தூதுவராக மிதாலி ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்
- 'AIMA(All India Management Association) மேலாண் இந்திய விருது - 2019' இந்திய எண்ணெய் கழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது
ஏப்ரல் - 19
- உலகத்தரம் வாய்ந்த இந்தியாவின் முதல் உல்லாச கப்பல் 'கர்னிகா' தனது முதல் பயணத்தை நிறைவு செய்துள்ளது. இந்த கப்பலில் சுமார் 2,700 பேர் பயணம் செய்யலாம். இது 250 மீட்டர் நீளம் மற்றும் 14 மாடிகளைக் கொண்டது
ஏப்ரல் - 20
- இலங்கையின் முதலாவது செயற்கைக்கோளான 'ராவனா -1' என்ற செயற்கைக்கோள் அமெரிக்காவின் நாசாவின் உதவியுடன் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது
- லண்டனில் உள்ள 'ராயல் சமூகத்தின் உறுப்பினராக' ககன்தீப் காங் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்
ஏப்ரல் - 21
- தேசிய குடிமைப்பணிகள் தினம்
- பொருளாதார நிலைத்தன்மையை மேம்படுத்துவதற்கான G - 20 மாநாடு, 2020 - ம் ஆண்டில் சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தில் நடைபெற உள்ளது
- மொஹாலியில் உள்ள சண்டிகர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 4 - வது அப்துல்கலாம் புத்தாக்க மாநாட்டில் டாக்டர் A.K.சிங் என்பவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது
ஏப்ரல் - 22
- உலக புவி நாள்
- ஜப்பானைச் சேர்ந்த பார்வையற்ற மாலுமி இவாமோட்டா என்பவர் முதன்முறையாக பசிபிக் கடல் பயணத்தை 2 மாதத்தில் வெற்றிகரமாக முடித்துள்ளார்
- மான்டே கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் இத்தாலி வீரர் பேபியோ போக்னி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்
ஏப்ரல் - 23
- உலக புத்தக தினம்
- இந்தியா முழுவதும் பயன்படுத்தப்படும் ஒரே அவசர உதவி எண் 112 என்ற அமைப்பில் 20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இணைந்துள்ளது
- இந்திய கடற்படை மும்பையில் உள்ள மசகான் கப்பல் கட்டும் தளத்தில் ஏவுகணையை தாக்கி அழிக்கும் ஐ.என்.எஸ். இம்பால் என்ற போர்க்கப்பலை அறிமுகப்படுத்தியுள்ளது
- 'தேசிய அறிவுசார் சொத்துரிமை விருது - 2019' கேரள வேளாண் பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது
- 'சம்விதான் காவ்யா' என்ற புத்தகத்தை எழுதிய சுனில்குமார் கௌதம் என்பவருக்கு 'பண்டிட் கோவிந்த் பலாப்பாண்ட் விருது' வழங்கப்பட்டுள்ளது
ஏப்ரல் - 24
- கத்தரில் உள்ள டோகாவில் நடைபெற்ற 23 வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய வீராங்கனை கோமதி தங்கப்பதக்கம் வென்றுள்ளார்
- சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் வி.ஜி.பி பொழுதுபோக்கு பூங்காவில், சுரங்க மீன் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது
- டுவிட்டர் (சுட்டுரை) நிறுவனத்தின் இந்தியப் பிரிவு மேலாண்மை இயக்குனராக மணிஷ் மகேஸ்வரி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்
- ஜாலியன் வாலாபாக் படுகொலை பற்றிய நானக் சிங் கால் எழுதப்பட்ட 'கூனி வைசாகி' என்னும் நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு அபுதாபியில் வெளியிடப்பட்டது.இந்த புத்தகத்தை ஐக்கிய அமீரகத்திற்கான இந்திய தூதரான நவ்தீப் சிங் சூரி என்பவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்
ஏப்ரல் - 25
- சர்வதேச மலேரியா விழிப்புணர்வு தினம்
- கத்தரில் உள்ள டோகாவில் நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை பி.யு.சித்ரா 1500 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்றுள்ளார்
- சீனாவின் ஸியான் நகரில் நடைபெற்ற ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் அமித் தன்கர் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்
ஏப்ரல் - 26
- உலக அறிவுசார் சொத்து தினம்
- மின்சாரத்தினால் இயங்கும் கார்களை வாங்க ஊக்குவிக்கும் வகையில் எஸ்.பி.ஐ வங்கி பசுமை கார் கடன் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது
- சீன தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அஞ்சும் மௌத்கில், திவ்யன்ஷ் சிங் தங்கப்பதக்கம் வென்றுள்ளனர். மேலும் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மனு பாக்கர்,சௌரப் சௌதரி தங்கப் பதக்கம் வென்றுள்ளனர்
ஏப்ரல் - 27
- 'இரவீந்திரநாத் தாகூர் இலக்கிய விருது - 2019' 2010 - ம் ஆண்டு எழுதப்பட்ட சோலோ என்னும் நாவலின் ஆசிரியர் ராணா தாஸ்குப்தா என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது
ஏப்ரல் - 28
- உலகத் தொழிலாளர்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பிற்கான தினம்
- பெய்ஜிங்கில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவின் அபிஷேக் வர்மா தங்கம் வென்றுள்ளார்
ஏப்ரல் - 29
- சர்வதேச நடன தினம்
- தமிழ்நாட்டின் விளையாட்டு பத்திரிக்கையாளர்களின் சங்கம் மற்றும் இந்தியா சிமெண்ட்ஸ் ஆகியோரால் நடத்தப்பட்ட வருடாந்தர விருதுகள் மற்றும் ஸ்காலர்ஷிப் விழாவில்,ஏஸ் டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் என்பவருக்கு 2019 - ம் ஆண்டிற்கான சிறந்த விளையாட்டு வீரர் விருது வழங்கப்பட்டுள்ளது
ஏப்ரல் - 30
- இந்தியாவில் முதல் அயல்நாட்டு பறவைகள் பூங்காவான 'எஸல் உலக பறவை பூங்கா' மும்பையில் தொடங்கப்பட்டது
Comments
Post a Comment