6 - ம் வகுப்பு அறிவியல் - தாவரங்கள் வாழும் உலகம்
தாவரத்தின் அமைப்பு மற்றும் செயல்கள்
- பூக்கும் தாவரங்கள் இரண்டு முக்கிய பாகங்களைக் கொண்டுள்ளன
1.வேர்த்தொகுப்பு2.தண்டுத் தொகுப்பு
1.வேர்த் தொகுப்பு
- வேர் என்பது நிலத்துக்கு கீழே காணப்படும் தாவரத்தின் முக்கிய அச்சாகும்
- வேர்களில் கணுக்களும், கணுவிடைப் பகுதிகளும் இல்லை
- வேர் மூடி, அதன் நுனிப் பகுதியில் உள்ளது
- வேர் நுனிக்குச் சற்று மேற்பகுதியில் வேர்த்தூவிகள் ஒரு கற்றையாக காணப்படுகிறது
- வேர்கள் நேர் புவி நாட்டம் உடையவை
- தாவரங்களின் வேர்த்தொகுப்பு இரண்டு வகைப்படும்
1.ஆணிவேர்த் தொகுப்பு2.சல்லி வேர்த்தொகுப்பு
1. ஆணிவேர்த் தொகுப்பு
- முளைவேர் தொடர்ந்து வளர்ந்து ஆணிவேரை உண்டாக்குகின்றது
- முளைவேர் தடித்த முதல் நிலை வேராக வளர்கிறது
- இதிலிருந்து துணை வேர்களான இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை வேர்கள் தோன்றுகின்றன
- பொதுவாக இரு வித்திலைத் தாவரங்களிலும் இவ்வகை வேர் காணப்படுகிறது எடுத்துக்காட்டு: அவரை, மா, வேம்பு
2. சல்லி வேர்த்தொகுப்பு
- தாவரத்தின் கணுவில் இருந்து ஏராளமான மெல்லிய சம பருமன் உள்ள வேர்கள் கொத்தாகத் தோன்றி வளர்கின்றன
- பெரும்பாலும் ஒரு வித்திலைத் தாவரங்களில் இவ்வேர்த்தொகுப்பு காணப்படுகிறது
- எடுத்துக்காட்டு: நெல், புல், மக்காச்சோளம்
வேரின் பணிகள்
- வேர்கள் தாவரத்தை பூமியில் நிலைநிறுத்துகின்றன.மண்ணை இறுக பற்றிக் கொள்ள உதவுகிறது
- மண்ணில் உள்ள நீரையும், கனிமச்சத்துக்களையும் உறிஞ்சி தாவரத்தின் பிற பாகங்களுக்கு அனுப்புகின்றன
- சில தாவரங்கள் தான் தயாரித்த உணவைத் தங்களின் வேர்களில் சேமிக்கின்றன எடுத்துக்காட்டு: கேரட் , பீட்ரூட்
தண்டுத் தொகுப்பு
தண்டு
- நிலத்தின் மேற்பரப்பில் வளர்கின்ற பகுதிக்கு தண்டுத் தொகுப்பு என்று பெயர். இதன் மைய அச்சு தண்டு என அழைக்கப்படும்
- தண்டுத் தொகுப்பானது தண்டு, இலைகள், மலர்கள் மற்றும் கனிகளைக் கொண்டுள்ளது
- தண்டு பூமியின் மேற்பரப்பில் சூரியனை நோக்கி வளர்கிறது
- தண்டில் கணுக்களும், கணுவிடைப் பகுதிகளும் உள்ளன
- தண்டில் இலைகள் தோன்றும் பகுதிக்கு கணு என்று பெயர்
- இரண்டு கணுக்களுக்கு இடையே உள்ள தூரம் கணுவிடைப் பகுதி என்று அழைக்கப்படுகிறது
- தண்டின் நுனியில் தோன்றும் மொட்டு நுனி மொட்டு என்றும், தண்டின் இலையின் கோணத்தில் தோன்றும் மொட்டு கோண மொட்டு என்றும் அழைக்கப்படுகிறது
தண்டின் பணிகள்
- தண்டானது கிளைகள், இலைகள், மலர்கள் மற்றும் கனிகள் ஆகியவற்றைத் தாங்குகின்றது
- வேரினால் உறிஞ்சப்பட்ட நீர் மற்றும் தனிமங்கள் தண்டின் வழியாக தாவரத்தின் மற்ற பாகங்களுக்குக் கடத்தப்படுகிறது
- இலையினால் தயாரிக்கப்பட்ட உணவு தண்டின் வழியாக மற்ற தாவரத்தின் பாகங்களுக்கு கடத்தப்படுகின்றன
- சில தாவரங்கள் உணவைச் சேமித்து வைக்கின்றன. எடுத்துக்காட்டு: கரும்பு
இலை
- தண்டின் கணுவின் மேல் விரிந்த தட்டையான பசுமை நிறத்தில் தோன்றும் புற அமைப்பு இலை ஆகும்
இலையின் அமைப்பு
- தண்டையும், இலையையும் இணைக்கும் காம்புப் பகுதியே இலைக்காம்பு எனப்படும்
- பசுமையான தட்டையான பகுதிக்கு இலைத்தாள் அல்லது இலைப்பரப்பு என்று பெயர்
- இலையின் மையத்தில் உள்ள முக்கிய நரம்பிற்கு மைய நரம்பு என்று பெயர்
- மைய நரம்பிலிருந்து கிளை நரம்புகள் தோன்றுகின்றன
- தண்டு அல்லது கிளையுடன் இணைக்கப்பட்டுள்ள இலையின் பகுதி இலையடிப்பகுதி எனப்படும்
- இலையடிப் பகுதியில் இரண்டு சிறிய பக்கவாட்டு வளரிகள் உள்ளன. அதற்கு இலையடிச் செதில்கள் என்று பெயர்
- இலைகள் பசுமை நிறத்தில் உள்ளன. அதற்கு காரணம் அவற்றில் உள்ள பச்சை நிறமிகளான பச்சையம் ஆகும்
- இலையின் அடிப்பகுதியில் காணப்படும் நுண்ணிய துளைகள் இலைத்துளைகள் எனப்படும்
இலையின் அமைப்பு
இலையின் பணிகள்
- ஒளிச்சேர்க்கையின் மூலம் உணவைத் தயாரிக்கிறது
- சுவாசித்தலுக்கு உதவுகிறது
- இலைத்துளை வழியே நீராவிப்போக்கு நடைபெறுகிறது
- நீரில் வாழும் விக்டோரியா அமேசோனிக்கா என்ற தாவரத்தின் இலைகள் 3 மீட்டர் விட்டம் வரையில் வளரும். நன்கு வளர்ச்சி அடைந்த இலையின் மேற்பரப்பு 45 கிலோ கிராம் எடையோ அல்லது அதற்கு இணையான ஒருவரைத் தாங்கும் தன்மை கொண்டது
தாவரங்களை வகைப்படுத்துதல்
1. பூவின் அடிப்படையில் - தாவரங்களை இரு வகைகளாகப் பிரிக்கலாம்
1.பூக்கும் தாவரங்கள்2.பூவாத் தாவரங்கள்
2. விதை அமைந்திருக்கும் தன்மையில் - தாவரங்களை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்
1. ஆஞ்சியோஸ்பெர்ம்கள் (மூடிய விதைத் தாவரங்கள்)எடுத்துக்காட்டு: மா2. ஜிம்னோஸ்பெர்ம்கள் (திறந்த விதைத் தாவரங்கள்)எடுத்துக்காட்டு: சைகஸ்
வாழிடம்
- ஒவ்வொரு உயிரினமும் உயிர்வாழவும், இனப்பெருக்கம் செய்யவும் தேவைப்படும் இடமானது அதன் வாழிடம் ஆகும்
- கடலின் அடி மட்டத்திலிருந்து மலையின் உச்சி வரை தாவரங்கள் மற்றும் விலங்குகளின் வாழ்விடங்களாக உள்ளன
வாழ்விடங்களின் வகைகள்
1. நீர் வாழிடம்
- நீர் வாழிடம் என்பது நிரந்தரமாகவோ அல்லது அவ்வப்போது நீர் சூழ்ந்தோ காணப்படும்
- இவைகள் இருவகைப்படும்
நன்னீர் வாழிடம்கடல்நீர் வாழிடம்
நன்னீர் வாழிடம்
- ஆறுகள், குளங்கள், குட்டைகள் மற்றும் ஏரிகள் இவையாவும் நன்னீர் வாழிடங்கள் ஆகும்
- ஆகாயத் தாமரை, அல்லி மற்றும் தாமரை ஆகியவை நன்னீரில் காணப்படும் தாவரங்கள் ஆகும்
- நீர் தாவரங்களின் வேர்கள் வளர்ச்சி குன்றிய வை
- தண்டிலும், இலைப்பகுதிகளிலும் காற்று அறைகள் அதிகமாக இருப்பதால் இவைகள் நீரில் எளிதில் மிதக்கின்றன
- உலகில் மிக நீளமான நதி நைல் நதி ஆகும். இது 6650 கிலோ மீட்டர் நீளமுடையது
- இந்தியாவின் மிக நீளமான நதி கங்கை ஆகும் இது 2525 கிலோ மீட்டர் நீளமுடையது
- தாமரையின் இலைக் காம்பில் உள்ள காற்று இடைவெளிகள் நீரில் மிதக்க உதவுகின்றன
கடல்நீர் வாழிடம்
- பூமியின் மேற்பரப்பானது 70% கடல் நீரினால் சூழப்பட்டுள்ளது. தாவரங்கள் கடல் நீரிலும் வாழ்கின்றன
- பூமியின் மொத்த ஒளிச்சேர்க்கையில் சுமார் 40% கடல்வாழ் தாவரங்களில் நடைபெறுகிறது. எ.கா:கடல் பாசிகள், கடல் புற்கள், நில ஈரத்தாவரங்கள், புற்கள் மற்றும் தாவர மிதவைகள் (தனித்து நீரில் மிதக்கும் பாசிகள்)
2.நில வாழிடம்
- நில வாழிடங்கள் காடுகள், புல்வெளிகள் மற்றும் பாலைவனங்கள் என மூவகைப்படும்
- பண்ணைகள், நகரங்கள், மாநகரங்கள் ஆகியவை மனிதனால் உருவாக்கப்பட்ட சில நில வாழிடங்கள் ஆகும்
- உலகில் 28 சதவீதம் நிலவாழிடங்கள் உள்ளன எடுத்துக்காட்டு: இரப்பர் மரம் ,தேக்கு மரம் மற்றும் வேம்பு
- 470 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் உருவான நில வாழ் தாவரங்கள், மாஸ்கள் மற்றும் லிவர்வோர்ட்ஸ்
- தென் அமெரிக்காவில் உள்ள அமேசான் மலைக்காடுகள் உலகிற்கான ஆக்சிஜன் தேவையில் பாதியைக் கொடுக்கிறது
i.பாலைவன வாழிடம்
- நீரின் அளவு மிகக்குறைவாக உள்ள இடத்தை பாலைவனம் என்கிறோம். இவைகள் பூமியில் மிகவும் வறண்ட பகுதிகள் ஆகும்
- ஆண்டின் சராசரி 25 சென்டி மீட்டர் க்கும் குறைவாக மழை பெய்யும்
- பூமியில் சுமார் 20% பாலைவனம் உள்ளன
- பாலைவனத் தாவரங்கள் நீரையும், கனிம உப்புக்களையும் இலையில் சேமித்து வைப்பதால் இலைகள் தடிமனாக உள்ளன
- கள்ளித் தாவரங்களில் நீரை தண்டில் சேமித்து வைக்கின்றன. அதன் இலைகள் முட்களாக மாற்றமடைந்துள்ளன
- இவைகள் நன்கு வளர்ச்சி அடைந்த நீளமான வேர்கள் கொண்டுள்ளதால் மண்ணின் மிக ஆழத்திற்குச் சென்று நீரை உறிஞ்சுகின்றன
- எடுத்துக்காட்டு: சப்பாத்திக்கள்ளி,அகேவ், சோற்றுக்கற்றாழை, பிரையோபில்லம்
வகைகள்
1.வெப்ப, வறட்சிப் பாலைவனங்கள்2.மிதவெப்ப பாலைவனங்கள்3.கடல் சார்ந்த பாலைவனங்கள்4.குளிர் பாலைவனங்கள்
- மணல் குன்றுகளால் ஆன மிகப்பெரிய இந்திய பாலைவனமான தார் பாலைவனம் இந்திய துணைக் கண்டத்தில் உள்ளது.இதன் பகுதிகள் ராஜஸ்தான் மாநிலத்திலும், வடமேற்கு இந்தியாவிலும், பஞ்சாபிலும், சிந்து மாகாணத்திலும் மற்றும் கிழக்கு பாகிஸ்தானிலும் விரிந்துள்ளது
ii.புல்வெளி வாழிடம்
- இவ்வகை வாழ்விடத்தில் அதிகமாக புற்கள் காணப்படுகிறது
- இவை மிகச்சிறியன முதல் உயரமான புற்களைக் கொண்டதாக இருக்கும்
- எடுத்துக்காட்டு: புல்வெளிகள்
iii.காடுகள்
- காடுகள் மிகப் பரந்த நிலப்பரப்பில் அதிகமாக மரங்களைக் கொண்டுள்ளன
- இவை வெப்பமண்டல காடுகள், குளிர் பிரதேச காடுகள் மற்றும் மலைக்காடுகள் என வகைப்படுத்தலாம்
- இங்கு ஆண்டு சராசரி மழை அளவு 25 - 200 சென்டிமீட்டர் ஆக இருக்கும்
- வளரும் பருவ நிலையில் அதி வேகமாக வளரக்கூடிய தாவரம் மூங்கில் ஆகும்
- அக்டோபர் மாதம் முதல் திங்கட்கிழமை உலக வாழிட நாளாக அனுசரிக்கப்படுகிறது
தாவரங்களின் தகவமைப்புகளும் மாற்றுருக்களும்
- தாவரங்கள் தாங்கள் வளரும் சூழ்நிலைக்கு ஏற்ப தகவமைத்துக் கொண்டு பல ஆண்டுகள் வாழ்கின்றன
- எடுத்துக்காட்டு:பற்றுக்கம்பி,ஏறு கொடி, முட்கள். இவ்வகைத் தகவமைப்புகள் நிலத்தாவரங்கள் மற்றும் பாலைவனத் தாவரங்களில் காணப்படுகின்றன
- பட்டாணி, பாகற்காய் போன்ற மெலிந்த தண்டு உடைய தாவரங்கள் பற்றுக் கம்பியைப் பெற்றுள்ளன
- எ.கா:
இனிப்பு பட்டாணி ------->சிற்றிலைகள் பற்று கம்பிகளாக மாறியுள்ளனபாகற்காய் -------->கோண மொட்டு பற்றுக் கம்பிகளாக மாற்றமடைந்து அவைகள் மேலே ஏறுவதற்கு உதவுகின்றன
2.பின்னு கொடி
- நீண்ட, மெலிந்த வளையும் தன்மையுடைய தண்டுகளால் நேராக நிலைத்து நிற்கும் தன்மை அற்றவை. எனவே அருகிலுள்ள ஆதாரத்தைப் பற்றிக் கொண்டு வளர்கின்றன. எடுத்துக்காட்டு: சங்குப்பூ, மல்லிகை
3. முட்கள்
- சில தாவரங்களின் இலைகள் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ கூரிய முட்களாக அல்லது சிறிய முட்களாக மாறுகின்றன. இவை பாதுகாப்பிற்கு உதவுகின்றன
- எ.கா:
1.அகேவ் (ரயில் கற்றாழை) - இந்த வகைக் கற்றாழையில் இலையின் நுனிப்பகுதி மற்றும் விளிம்புகள் முட்களாக மாறுபாடு அடைந்துள்ளது2. சப்பாத்திக்கள்ளி - சப்பாத்திக்கள்ளியில் இலைகள் சிறுமுட்களாக மாறியுள்ளன3. காகிதப்பூ (போகன்வில்லியா) - தண்டில் கூர்மையான முட்கள் காணப்படுகின்றன
Comments
Post a Comment