Skip to main content

Current Affairs நடப்பு நிகழ்வுகள் - March 2019



                                                  Current Affairs - March 2019
                                              நடப்பு நிகழ்வுகள் - மார்ச் 2019

மார்ச் - 1

  • பொதுக் கணக்கு தினம் (Civil Accounts Day)
  • பாகிஸ்தான் பிடியில் இருந்த இந்திய விமானப் படை அதிகாரி அபிநந்தன் வர்த்தமான் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அட்டாரி - வாகா எல்லையில் பாதுகாப்பு படை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்
  • இந்தியாவின் 18 - வது இரயில்வே மண்டலமாக ஆந்திராவின் தெற்கு கடற்கரை இரயில்வே மண்டலத்தை மத்திய இரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்துள்ளார். இதன் தலைமையிடம் விசாகப்பட்டினம் ஆகும்
  • தொழில்துறை பட்டதாரிகளுக்கு தொழிற்பயிற்சி வாய்ப்புகளை வழங்குவதற்காக தேசிய இளைஞர் ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ், உயர்கல்வி பயின்ற இளைஞர்களுக்கு 'ஷிரியாஸ்' (SHREYAS - Scheme For Higher Education Youth in Apprenticeship and Skills) என்ற திட்டத்தை மத்திய மனிதவளத்துறை அமைச்சகம் தொடங்கியுள்ளது
  • புதுடெல்லியில் நடைபெற்ற உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சவுரவ் சவுத்ரி மற்றும் மானு பேக்கர் ஜோடி தங்கம் வென்றுள்ளனர்
  • அறிவியல், தொழில்நுட்பத் துறையில் சிறந்து விளங்குவோர்க்கு வழங்கப்படும் விருதான 'சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது 2018' - ம் ஆண்டிற்கான மருத்துவத்துறை பிரிவில் டாக்டர் .கணேசன் வெங்கடசுப்பிரமணியன் என்பவருக்கு வழங்கப்பட்டது

மார்ச் - 2

  • பின்லேடனின் மகன் ஹம்சா பின்லேடனை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கருப்பு பட்டியலில் சேர்த்துள்ளது
  • ஈரான் நாட்டின் சாபஹாரில் நடைபெற்ற மக்ரான் கோப்பைக்கான குத்துச்சண்டை போட்டியின் இறுதிச்சுற்றில் 47 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் தீபக் சிங் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்

மார்ச் - 3

  • உலக வனவிலங்கு நாள்
  • 2019 பொதுத் தேர்தலுக்காக தமிழகத்தின் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாஹீ, நான்கு மொபைல் செயலிகளை அறிவித்துள்ளார்
1.C - VIGIL(Citizen's vigil) -தேர்தல் நன்னடத்தை விதி மீறல் குறித்த அதிகாரப்பூர்வமான தகவல்களை அளிப்பதற்காக உருவாக்கப்பட்டது
2.Voters helpline - வாக்காளர் பட்டியலில் வாக்காளர்கள் தங்களது நிலையை அறிவதற்காக உருவாக்கப்பட்டது
3.Suvidha - தேர்தல் பணிகளுக்காக வேட்பாளர்களுக்கு பல்வேறு அனுமதிகளுக்காக உருவாக்கப்பட்டது
4.PWD செயலி - மாற்றுத்திறனாளிகளுக்கு வாக்காளர் அடையாளம் மற்றும் பதிவிடும் முறைகளை எளிதாக்குவதற்காக உருவாக்கப்பட்டது
  • தண்ணீரை வீணாக்காமல் பாதுகாப்பதற்கான முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர்த்துவதற்காக 'ஜல் அம்ருதா' என்ற திட்டத்தை கர்நாடக அரசு தொடங்கியுள்ளது
  • முதலாவது 'P.V நரசிம்மராவ் தேசிய தலைமை மற்றும் வாழ்நாள் சாதனையாளர் விருது' முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியால் வழங்கப்பட்டது

மார்ச் - 4
  • தேசிய பாதுகாப்பு தினம்
  • புதுடெல்லியில் நடைபெற்ற கட்டுமான தொழில் நுட்பம் குறித்த கண்காட்சி மற்றும் மாநாட்டில் பிரதமர் மோடி ஏப்ரல் 2009 முதல் மார்ச் 2020 வரை கட்டுமான தொழில்நுட்ப ஆண்டாக அறிவித்துள்ளார்
  • மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு மையம் மத்தியப் பிரதேசத்தில் உள்ள குவாலியரில் அமைக்கப்பட உள்ளது
  • தேசிய புத்தக அறக்கட்டளையின் புதிய தலைவராக கோவிந்த் பிரசாத் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்
  • துபாயில் நடைபெற்ற ஆண்களுக்கான துபாய் சர்வதேச டென்னிஸ் போட்டியில் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ரோஜர் ஃபெடரர் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்

மார்ச் - 5

  • நிதி ஆயோக் அமைப்பு வெளியிட்டுள்ள டெல்டா தரவரிசை அறிக்கையின்படி, அசாமின் ஹைலகாண்டி மாவட்டம் செயல்திறன் அடிப்படையில் முதலிடத்தைப் பிடித்துள்ளது
  • உயிரி எரிபொருள் மற்றும் பயோ எத்தனால் ஆகியவற்றை பயன்படுத்தி நிதி உதவி அளிக்கும் வகையில் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு அமைச்சகம் 'பிரதான் மந்திரி ஜீவன் யோஜனா' என்ற திட்டத்தைத் தொடங்கியுள்ளது
  • கிராமப்புறங்களில் உணவு வீணாவதை தடுப்பதற்காக இந்தியாவின் உணவு பதப்படுத்தும் அமைச்சகம் 'கிராம சம்ரிதி யோஜனா' என்ற உணவுப் பதப்படுத்தும் திட்டத்தைத் தொடங்கியுள்ளது
  • பல்கேரியா சர்வதேச மல்யுத்த போட்டி 2019 - ல் ஆடவர் 65 கிலோ ஃபிரீஸ்டைல் பிரிவில் இந்திய வீரர் பஜ்ராங் புனியா தங்கப்பதக்கம் வென்றுள்ளார்
  • மிக் - 21 விமானத்தைக் கொண்டு பாகிஸ்தானின் எப் - 16 விமானத்தை சுட்டு வீழ்த்திய அபிநந்தன் வர்த்தமன் என்பவருக்கு பகவான் மகாவீர் அஹிம்சர் விருது வழங்கப்பட்டுள்ளது

மார்ச் - 6

  • நெகிழி கழிவுகளற்ற இந்தியாவிற்கான கீதமானது மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புவி அறிவியல், சுற்றுச்சூழல் வனம் மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான அமைச்சர் ஹர்ஷவர்த்தன் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. இது 7 மொழிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
  • அம்மா சமுதாய வானொலி என்ற சேவையை தமிழக முதலமைச்சர் தொடங்கி வைத்தார்
  • மகாராஷ்டிரா மாநிலத்தின் பல்கார் மாவட்டத்தில் நிலநடுக்கமானி ஏற்படுத்தப்படும் என்று தேசிய நிலநடுக்கவியல் மையம் மற்றும் இந்திய வானிலை ஆய்வு துறை அறிவித்துள்ளது
  • 2022 - ம் ஆண்டு சீனாவின் ஹாங்ஷீ நகரில் நடைபெற உள்ள ஆசிய போட்டியில் முதன் முறையாக ஓசேனியா நாடுகள் சேர்க்கப்பட்டுள்ளது
  • தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத் தலைவராக பகவான் லால் சஷினி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்
  • சென்னை மத்திய இரயில் நிலையத்திற்கு தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி. இராமச்சந்திரனின் பெயர் சூட்டப்பட உள்ளதாக இந்திய பிரதமர் அறிவித்துள்ளார்
  • ஈரோட்டில் தயாரிக்கப்படும் மஞ்சளுக்கு புவியியல் குறியீடு வழங்கப்பட்டது

மார்ச் - 7

  • NGO Green Peace என்ற அமைப்பு வெளியிட்டுள்ள உலகளவில் காற்று மாசு அதிகம் உள்ள நகரங்களின் பட்டியல் 2018 இல் இந்தியாவின் ஹரியானாவில் உள்ள குருகிராம் முதலிடத்திலும், உத்தரப்பிரதேசத்தில் உள்ள காசியாபாத் இரண்டாம் இடத்திலும் உள்ளது
  • அமெரிக்க வானியல் மற்றும் விண்வெளியியல் நிறுவனம் 'ஏவுகணை அமைப்புகள் விருது - 2019' பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் தலைவர் G.சதீஷ் ரெட்டி அவர்களுக்கு வழங்கியுள்ளது
  • தமிழக விவசாயிகள் சாகுபடி செய்த பயிர் விவரங்களை பதிவேற்றம் செய்வதற்காக இ - அடங்கல் என்ற மொபைல் செயலியை தமிழக வருவாய் துறை அமைச்சகம் ஏற்படுத்தியுள்ளது

மார்ச் -8

  • சர்வதேச மகளிர் தினம்
  • சர்வதேச மகளிர் தினத்தையொட்டி,பாகிஸ்தானின் நாடாளுமன்ற மேலவையின் ஒருநாள் தலைவராக ஹிந்து தலித் பெண் எம்.பி கிருஷ்ண குமாரி கோலி நியமிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார்
  • 'தேசிய ஸ்டெம்(STEM - Science, Technology, Engineering and Maths) கல்வி விருது 2019' அமெரிக்காவைச் சேர்ந்த இந்திய வம்சாவளி காவ்யா கோப்பராப்பு என்பவருக்கு வழங்கப்பட்டது

மார்ச் - 9

  • மத்திய அரசு 20 ரூபாய் நாணயத்தை வெளியிட்டுள்ளது. இது 12 முனைகளைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது
  • உலக வங்கியிடம் இருந்து அதிக கடன் பெறும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது

மார்ச் - 10

  • தேசிய நோய்த்தடுப்பு நாள்
  • ஐ.நா சபையின் உணவு மற்றும் விவசாயத்துறை, உலகில் இயற்கை உணவுகள் அதிகமாக உள்ள மாநிலங்களின் பட்டியலில் சிக்கிம் (இந்தியா) மாநிலம் 100% இயற்கை உணவுகள் உள்ள மாநிலமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது
  • உலகின் மிக நீண்ட நடை தொங்குபாலமான யோரப், மத்திய ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தின் விஸ்ப் மாவட்டத்திலுள்ள ராண்டாவின் ஜெர்மேட் மற்றும் கிரேசேன் என்ற இரு மலைகளை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இது 278 அடி உயரத்தில் 1620 அடி நீளம் மற்றும் 2 அடி அகலத்தில் அமைக்கப்பட்டுள்ளது
  • கோவையில் நடைபெற்ற ஹீரோ கால்பந்து தொடரில் சென்னை சிட்டி அணி சாம்பியன் பட்டம் வென்றது

மார்ச் - 11

  • பிரதமர் நரேந்திர மோடியின் செயலராக பாஸ்கர் குல்பே மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

மார்ச் - 12

  • உத்திரப்பிரதேச மாநிலத்தின் கிரேட்டர் நொய்டா நகரில், பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா தொல்லியல் நிறுவனம் இந்திய பிரதமரால் திறந்து வைக்கப்பட்டது
  • பின்லாந்தில் நடைபெற்ற ஜி.பி சர்வதேச குத்துச்சண்டை போட்டியில், ஆடவர் 56 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த கவிந்தர் சிங் பிஷ்ட் தங்கம் வென்றுள்ளார்

 மார்ச் - 13

  • தேசிய புகைப்பிடித்தல் இல்லாத நாள்
  • பிரதமரின் சில தேர்ந்தெடுக்கப்பட்ட உரைகளை உள்ளடக்கிய 'சப்கா சாத் சப்கா விகாஸ்' என்ற புத்தகம் நிதியமைச்சர் அருண் ஜெட்லி அவர்களால் வெளியிடப்பட்டது

மார்ச் - 14

  • உலக சிறுநீரக தினம் (மார்ச் இரண்டாவது வியாழன்)
  • தஞ்சாவூர் மாவட்டம் திருப்புவனத்தில் வடிவமைக்கப்பட்ட தயாரிக்கப்படும் திருபுவனம் பட்டு சேலைகளுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது
  • கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த உத்திரகாண்டா மாவட்டத்தில் விளையக்கூடிய சிர்சி சுப்பாரி என்ற பாக்கு வகைக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது
  • மகாராஷ்டிரா மாநிலத்தால் வழங்கப்படும் 'யஸ்வந்த் ராவ் சவான் தேசிய விருது' முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது

மார்ச் -15

  • உலக நுகர்வோர் உரிமைகள் தினம்
  • பல்வேறு அலைநீளம் கொண்ட விண்வெளி ஆய்வகமான ஆஸ்ட்ரோநாட்டிக்ஸ் - ஐப் பயன்படுத்தி கோள வடிவ  நட்சந்திரங்களான NGC 2808 - ல் உள்ள புதிய புற ஊதா நட்சத்திரக் கூட்டங்களை திருவனந்தபுரம் மற்றும் மும்பையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்
  • உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானியாக டாக்டர். சௌமியா சுவாமிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்
  • 'Tiger Woman' என்ற புத்தகம் பெங்காலி நாவலாசிரியர் சிர்ஷோ பந்தோபதியா என்பவரால் எழுதி வெளியிடப்பட்டது. இது அருணாவா சின்ஹா என்பவர் எழுதிய 'Shardul Sundari' என்ற புத்தகத்தின் மொழிபெயர்ப்பாகும்

மார்ச் -16

  • தேசிய தடுப்பூசி தினம்
  • இராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் 'கீர்த்தி சக்ரா விருது' மேஜர் துஷார் கௌபா மற்றும் ராஜேந்திர குமார் நயன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது
  • பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் இயக்குநராக டாக்டர் ஏ.கே. மொகந்தி நியமிக்கப்பட்டுள்ளார்

மார்ச் - 17

  • 17 வயதிற்கு உட்பட்ட பெண்களுக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2020 - ம் ஆண்டில் இந்தியாவில் நடத்தப்பட உள்ளது
  • அமெரிக்காவைச் சேர்ந்த கணிதப் பேராசிரியை காரன் உலென்பெக் கணிதத் துறையில் உயர்ந்த விருதான 'ஏபல் பரிசு' பெறும் முதல் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றுள்ளார்
  • 2018 - ம் ஆண்டிற்கான சிறந்த பெண் பத்திரிகையாளர்களுக்கான 'சாமிலி தேவி ஜெயின் விருது' பிபிசி பத்திரிக்கையாளர் பிரியங்கா துபே என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது

மார்ச் - 18

  • உலகளாவிய மறுசுழற்சி தினம்
  • 'சிறந்த வணிக மாற்றுவதற்கான ஆண்டு விருது ' ஜிஎஸ்டி வரியை நடைமுறைப்படுத்தியதற்காக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லிக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களால் வழங்கப்பட்டது
  • DD மகிளா கிஷான் விருது ஸ்வாதி ஷிங்கடே என்பவருக்கு வழங்கப்பட்டது

மார்ச் - 19

  • சென்னையில் அமைந்துள்ள புவிசார் குறியீட்டு பதிவகம் ஐந்து வகையான காபிகளுக்கு புவிசார் குறியீடுகளை அளித்துள்ளது. அவை
1.வயநாடு ராபஸ்டா காபி - கேரளா
2.கூர்க் அராபிகா காபி - கர்நாடகா
3.சிக்மகலூர் அராபிகா காபி - கர்நாடகா
4.பாபாபுடங்கிரிஸ் அராபிகா காபி - கர்நாடகா 5.அரக்கு பள்ளத்தாக்கு அராபிகா காபி - ஆந்திரப் பிரதேசம்
  • ஹாங்காங்கில் நடைபெற்ற ஆசிய இளையோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி 2019 - ல் ஆண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தமிழக வீரர் மகேஷ் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்

மார்ச் - 20

  • உலக சிட்டுக்குருவிகள் தினம்
  • கோவாவின் புதிய முதலமைச்சராக பிரம்மோத் சாவந்த் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்

மார்ச் - 21

  • சர்வதேச காடுகள் தினம்
  • 2019 - ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் முதன்முறையாக ஓட்டு போட இருக்கும் வாக்காளர்கள் எண்ணிக்கையில் மேற்கு வங்காளம் முதலிடத்தில் உள்ளது

மார்ச் - 22

  • உலக தண்ணீர் தினம்
  • கஸகஸ்தான் நாட்டின் தலைநகர் அஸ்தானா என்பதை நுர்சுல்தான் என மாற்றியுள்ளது
  • உலகளவில் மிகக் குறைந்த விலையில் மொபைல் டேட்டா வழங்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது
மார்ச் - 23
  • உலக வானியல் தினம்
  • கேரளாவில் தயாரிக்கப்படும் மாராயூர் ஜாக்கரிக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது
  • உலகின் மிக நீளமான உப்பு குகை மால்ஹாம் இஸ்ரேல் நாட்டிலுள்ள மவுண்ட் சோதோம் மற்றும் சாக்கடல் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது 10 கிலோமீட்டர் நீளத்திற்கும் அதிகமாக உள்ளது

மார்ச் - 24

  • சர்வதேச சாதனையாளர்கள் தினம்
  • உலக காசநோய் தினம்
  • தமிழ்நாட்டின் தேர்தல் செலவினங்களின் சிறப்பு கண்காணிப்பாளராக முன்னாள் இந்திய வருவாய் பணி அதிகாரியான மது மகாஜன் என்பவரை இந்திய தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது
  • 'The great disappointment: How Narendra modi squandered unique opportunity to transform the Indian economy' என்ற புத்தகத்தை பொருளாதார, அரசியல் விமர்சகர் சல்மான் அனீஸ் சோஸ் என்பவரால் எழுதி வெளியிடப்பட்டது

மார்ச் - 25

  • சினூக் கனரக ஹெலிகாப்டர் CH47 F(I) இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டது
  • இந்திய கிராமங்களில் உள்ள குழந்தைகளின் வாசிப்புத் திறனை வளர்ப்பதற்காக கூகுள் நிறுவனம் போலோ மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது

மார்ச் - 26

  • உலகளாவிய ஆசிரியர் பரிசு - 2019 பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பீட்டர் தபிசி என்பவருக்கு வழங்கப்பட்டது
  • இந்தியாவின் தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்த நவின் சாவ்லா அவர்களால் எழுதப்பட்ட 'அனைத்து ஓட்டுகளும் எண்ணப்படும்' என்ற புத்தகம் முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் ஹமீது அன்சாரி அவர்களால் வெளியிடப்பட்டது

மார்ச் - 27

  • உலக திரையரங்கு தினம்
  • இந்தியா மிஷன் சக்தி என்ற செயற்கைக்கோளை தாக்கி அழிக்கும் சோதனையை டாக்டர் அப்துல்கலாம் தீவில் நடத்தியது. இதில் 380 கிலோ மீட்டர் உயரத்தில் இருந்த செயற்கைக்கோளை ஏசாட் ஏவுகணை மூலம் 3 நிமிடங்களில் சுட்டு வீழ்த்தியது

மார்ச் - 28

  • மின் மற்றும் மின்னணு உபகரணங்கள், குளிர்சாதன வாயுக்கள் ஆகியவற்றை மறுசுழற்சி செய்வதற்காக உலகின் மிகப்பெரிய மின்கழிவு மறுசுழற்சி மையம் துபாயில் உள்ள துபாய் தொழில்துறை பூங்காவில் அமைக்கப்பட்டுள்ளது
  • குரேஷியா நாட்டின் உயரிய விருதான 'Grand order of the king of Thomislav' என்ற விருது இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது

மார்ச் - 29

  • இமாச்சல பிரதேசத்தின் மாண்டி மக்களவைத் தொகுதியில் உள்ள டாஷிகங் வாக்குச்சாவடி உலகின் மிக உயர்ந்த பகுதியில் அமைந்த வாக்குச்சாவடி ஆகும்
  • 'இந்தியாவின் பசுமை கட்டட விருது' விஜயவாடா இரயில் நிலையத்திற்கு வழங்கப்பட்டுள்ளது
  • 'சபரிமலையும் பெண்களும்' என்ற புத்தகத்தை லட்சுமி ராஜீவ் என்பவர் எழுதியுள்ளார்

மார்ச் - 30

  • உலக இட்லி தினம்
  • உலகின் சிறந்த விமான நிலையமாக சிங்கப்பூரின் சான்கி விமான நிலையம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.இந்த விமான நிலையம் தொடர்ந்து ஏழாவது முறையாக இவ்விருதை பெற்றுள்ளது

மார்ச் - 31

  • பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில உயர் நீதிமன்றம் முதல் தகவல் அறிக்கையில்(FIR) சாதியைக் குறிப்பிடுவதற்கு தடை விதித்துள்ளது





Comments

Popular posts from this blog

6 - ம் வகுப்பு கணிதம் - விகிதம் மற்றும் விகித சமம்

6 - ம் வகுப்பு கணிதம் - விகிதம் மற்றும் விகித சமம் ஓர் அளவினை மற்றோர் அளவின் மடங்காக வெளிப்படுத்தி ஒப்பிடுவது விகிதம் எனப்படும் விகிதத்தைப் பின்னமாகவும் எழுதலாம். விகிதத்தைப் பெரும்பாலும் எளிய வடிவத்தில் எழுத வேண்டும் விகிதங்களின் பண்புகள் விகிதங்களுக்கு அலகு இல்லை. இது ஓர் எண் மதிப்பு. எடுத்துக்காட்டு: 8 கிலோமீட்டர்க்கும் 4 கிலோ மீட்டருக்கும் உள்ள விகிதம் 2 : 1 ஆகும் மற்றும் 2 கி. மீ : 1 கி.மீ அல்ல விகிதங்களின் இரு அளவுகளும் ஒரே அலகுடையதாக இருக்க வேண்டும்.எடுத்துக்காட்டு 4 கிலோ மீட்டர் மற்றும் 400 மீட்டர் ஆகியவற்றிற்கான விகிதம் காணும் போது அவற்றை (4×1000):400 = 4000:400=10:1 எனக் குறிப்பிடலாம் விகிதத்தில் ஒவ்வோர் எண்ணும் உறுப்பு என அழைக்கப்படும் விகிதத்தின் உறுப்புகளின் வரிசையை மாற்றி எழுத முடியாது 20:5 என்ற விகிதத்தை எளிய வடிவில் காண்க 20/5 = 4/1 =4:1 500கி மற்றும் 250 கி க்கும் உள்ள விகிதத்தை எளிய வடிவில் காண்க 500/250 = 2/1 =1 மாதவியும், அன்புவும் இரண்டு மேசைகளை முறையே ரூ.750 மற்றும் ரூ.900 க்கு வாங்குகின்றனர். அன்புவும், மாத...

6 - ம் வகுப்பு தமிழ் - பாடறிந்து ஒழுகுதல்

6 - ம் வகுப்பு தமிழ் - பாடறிந்து ஒழுகுதல் ஆசாரக்கோவை ஆசாரக்கோவை நூலை எழுதியவர் - பெருவாயின் முள்ளியார் இவர் பிறந்த ஊர் கயத்தூர். ஆசாரக்கோவை என்பதற்கு நல்ல ஒழுக்கங்களின் தொகுப்பு என்பது பொருள். இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. இந்நூல் நூறு வெண்பாக்களைக் கொண்டது தமிழர் பெருவிழா பொங்கல் விழா தமிழர் திருநாள் என்றும் போற்றப்படுகிறது கதிரவனுக்கு நன்றி கூறிச் சிறப்பு செய்யும் விழா பொங்கல் விழா. உழவர்கள் ஆடித்திங்களில் விதைப்பர். தைத்திங்களில் அறுவடை செய்து பயன் அடைவர். தைத் திங்களின் முதல் நாளில் பொங்கலிட்டு வழிபடுவர். எனவே இத்திருவிழாவை அறுவடைத் திருவிழா என்றும் அழைப்பர். உழவர்கள் இயற்கைக்கும் தம்முடன் உழைத்த கால்நடைகளுக்கும் இந்நாளில் நன்றி தெரிவித்து மகிழ்கின்றனர். எனவே இவ்விழாவை உழவர் திருநாள் என்றும் கூறுவர். போகித் திருநாள் பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பது ஆன்றோர் மொழி. வீட்டில் உள்ள பயனற்ற பொருள்களை நீக்கி வீட்டைத் தூய்மை செய்யும் நாள் போகித் திருநாள். இது மார்கழி மாதத்தின் இறுதி நாள் ஆகும் வாழ்க்கைக்கு வளம் தரும் மழைக் கடவுளை வழிப...

6 - ம் வகுப்பு கணிதம் - இயல் எண்கள், முழு எண்கள்

        Natural and Whole numbers         இயல் எண்கள், முழு எண்கள் இயல் எண்கள் அல்லது எண்ணும் எண்கள் அல்லது மிகை முழு எண்கள் N = {1,2,3,4,......} முழு எண்கள் அல்லது நிறைவெண்கள் W = {0,1,2,3,4......} எல்லா முழு எண்களுக்கும் தொடரி உண்டு பூஜ்ஜியத்தைத் தவிர எல்லா முழு எண்களுக்கும் முன்னி உண்டு எல்லா முழு எண்களையும் கூட்டவும், பெருக்கவும் முடியும் இயல் எண்ணினை அதைவிட சிறிய இயல் எண் அல்லது அதே எண்ணைக் கொண்டு கழிக்க முடியும் ஒரு பெரிய எண்ணை சிறிய எண்ணால் வகுக்க முடியும் அதிக இலக்கங்கள் உடைய எண்கள் நம் நாட்டில் 10,000            = பத்தாயிரம் 1,00,000         = ஒரு லட்சம் 10,00,000        = பத்து லட்சம் 1,00,00,000     =ஒரு கோடி 1,00,00,00,000 = நூறு கோடி உலகளவில் 10,000             = பத்தாயிரம் 100,000           = நூறாயிரம் 1,000,000        = ஒ...