Current Affairs - March 2019
நடப்பு நிகழ்வுகள் - மார்ச் 2019
மார்ச் - 1
- பொதுக் கணக்கு தினம் (Civil Accounts Day)
- பாகிஸ்தான் பிடியில் இருந்த இந்திய விமானப் படை அதிகாரி அபிநந்தன் வர்த்தமான் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அட்டாரி - வாகா எல்லையில் பாதுகாப்பு படை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்
- இந்தியாவின் 18 - வது இரயில்வே மண்டலமாக ஆந்திராவின் தெற்கு கடற்கரை இரயில்வே மண்டலத்தை மத்திய இரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்துள்ளார். இதன் தலைமையிடம் விசாகப்பட்டினம் ஆகும்
- தொழில்துறை பட்டதாரிகளுக்கு தொழிற்பயிற்சி வாய்ப்புகளை வழங்குவதற்காக தேசிய இளைஞர் ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ், உயர்கல்வி பயின்ற இளைஞர்களுக்கு 'ஷிரியாஸ்' (SHREYAS - Scheme For Higher Education Youth in Apprenticeship and Skills) என்ற திட்டத்தை மத்திய மனிதவளத்துறை அமைச்சகம் தொடங்கியுள்ளது
- புதுடெல்லியில் நடைபெற்ற உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சவுரவ் சவுத்ரி மற்றும் மானு பேக்கர் ஜோடி தங்கம் வென்றுள்ளனர்
- அறிவியல், தொழில்நுட்பத் துறையில் சிறந்து விளங்குவோர்க்கு வழங்கப்படும் விருதான 'சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது 2018' - ம் ஆண்டிற்கான மருத்துவத்துறை பிரிவில் டாக்டர் .கணேசன் வெங்கடசுப்பிரமணியன் என்பவருக்கு வழங்கப்பட்டது
மார்ச் - 2
- பின்லேடனின் மகன் ஹம்சா பின்லேடனை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கருப்பு பட்டியலில் சேர்த்துள்ளது
- ஈரான் நாட்டின் சாபஹாரில் நடைபெற்ற மக்ரான் கோப்பைக்கான குத்துச்சண்டை போட்டியின் இறுதிச்சுற்றில் 47 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் தீபக் சிங் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்
மார்ச் - 3
- உலக வனவிலங்கு நாள்
- 2019 பொதுத் தேர்தலுக்காக தமிழகத்தின் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாஹீ, நான்கு மொபைல் செயலிகளை அறிவித்துள்ளார்
1.C - VIGIL(Citizen's vigil) -தேர்தல் நன்னடத்தை விதி மீறல் குறித்த அதிகாரப்பூர்வமான தகவல்களை அளிப்பதற்காக உருவாக்கப்பட்டது2.Voters helpline - வாக்காளர் பட்டியலில் வாக்காளர்கள் தங்களது நிலையை அறிவதற்காக உருவாக்கப்பட்டது3.Suvidha - தேர்தல் பணிகளுக்காக வேட்பாளர்களுக்கு பல்வேறு அனுமதிகளுக்காக உருவாக்கப்பட்டது4.PWD செயலி - மாற்றுத்திறனாளிகளுக்கு வாக்காளர் அடையாளம் மற்றும் பதிவிடும் முறைகளை எளிதாக்குவதற்காக உருவாக்கப்பட்டது
- தண்ணீரை வீணாக்காமல் பாதுகாப்பதற்கான முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர்த்துவதற்காக 'ஜல் அம்ருதா' என்ற திட்டத்தை கர்நாடக அரசு தொடங்கியுள்ளது
- முதலாவது 'P.V நரசிம்மராவ் தேசிய தலைமை மற்றும் வாழ்நாள் சாதனையாளர் விருது' முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியால் வழங்கப்பட்டது
மார்ச் - 4
- தேசிய பாதுகாப்பு தினம்
- புதுடெல்லியில் நடைபெற்ற கட்டுமான தொழில் நுட்பம் குறித்த கண்காட்சி மற்றும் மாநாட்டில் பிரதமர் மோடி ஏப்ரல் 2009 முதல் மார்ச் 2020 வரை கட்டுமான தொழில்நுட்ப ஆண்டாக அறிவித்துள்ளார்
- மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு மையம் மத்தியப் பிரதேசத்தில் உள்ள குவாலியரில் அமைக்கப்பட உள்ளது
- தேசிய புத்தக அறக்கட்டளையின் புதிய தலைவராக கோவிந்த் பிரசாத் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்
- துபாயில் நடைபெற்ற ஆண்களுக்கான துபாய் சர்வதேச டென்னிஸ் போட்டியில் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ரோஜர் ஃபெடரர் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்
மார்ச் - 5
- நிதி ஆயோக் அமைப்பு வெளியிட்டுள்ள டெல்டா தரவரிசை அறிக்கையின்படி, அசாமின் ஹைலகாண்டி மாவட்டம் செயல்திறன் அடிப்படையில் முதலிடத்தைப் பிடித்துள்ளது
- உயிரி எரிபொருள் மற்றும் பயோ எத்தனால் ஆகியவற்றை பயன்படுத்தி நிதி உதவி அளிக்கும் வகையில் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு அமைச்சகம் 'பிரதான் மந்திரி ஜீவன் யோஜனா' என்ற திட்டத்தைத் தொடங்கியுள்ளது
- கிராமப்புறங்களில் உணவு வீணாவதை தடுப்பதற்காக இந்தியாவின் உணவு பதப்படுத்தும் அமைச்சகம் 'கிராம சம்ரிதி யோஜனா' என்ற உணவுப் பதப்படுத்தும் திட்டத்தைத் தொடங்கியுள்ளது
- பல்கேரியா சர்வதேச மல்யுத்த போட்டி 2019 - ல் ஆடவர் 65 கிலோ ஃபிரீஸ்டைல் பிரிவில் இந்திய வீரர் பஜ்ராங் புனியா தங்கப்பதக்கம் வென்றுள்ளார்
- மிக் - 21 விமானத்தைக் கொண்டு பாகிஸ்தானின் எப் - 16 விமானத்தை சுட்டு வீழ்த்திய அபிநந்தன் வர்த்தமன் என்பவருக்கு பகவான் மகாவீர் அஹிம்சர் விருது வழங்கப்பட்டுள்ளது
மார்ச் - 6
- நெகிழி கழிவுகளற்ற இந்தியாவிற்கான கீதமானது மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புவி அறிவியல், சுற்றுச்சூழல் வனம் மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான அமைச்சர் ஹர்ஷவர்த்தன் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. இது 7 மொழிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
- அம்மா சமுதாய வானொலி என்ற சேவையை தமிழக முதலமைச்சர் தொடங்கி வைத்தார்
- மகாராஷ்டிரா மாநிலத்தின் பல்கார் மாவட்டத்தில் நிலநடுக்கமானி ஏற்படுத்தப்படும் என்று தேசிய நிலநடுக்கவியல் மையம் மற்றும் இந்திய வானிலை ஆய்வு துறை அறிவித்துள்ளது
- 2022 - ம் ஆண்டு சீனாவின் ஹாங்ஷீ நகரில் நடைபெற உள்ள ஆசிய போட்டியில் முதன் முறையாக ஓசேனியா நாடுகள் சேர்க்கப்பட்டுள்ளது
- தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத் தலைவராக பகவான் லால் சஷினி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்
- சென்னை மத்திய இரயில் நிலையத்திற்கு தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி. இராமச்சந்திரனின் பெயர் சூட்டப்பட உள்ளதாக இந்திய பிரதமர் அறிவித்துள்ளார்
- ஈரோட்டில் தயாரிக்கப்படும் மஞ்சளுக்கு புவியியல் குறியீடு வழங்கப்பட்டது
மார்ச் - 7
- NGO Green Peace என்ற அமைப்பு வெளியிட்டுள்ள உலகளவில் காற்று மாசு அதிகம் உள்ள நகரங்களின் பட்டியல் 2018 இல் இந்தியாவின் ஹரியானாவில் உள்ள குருகிராம் முதலிடத்திலும், உத்தரப்பிரதேசத்தில் உள்ள காசியாபாத் இரண்டாம் இடத்திலும் உள்ளது
- அமெரிக்க வானியல் மற்றும் விண்வெளியியல் நிறுவனம் 'ஏவுகணை அமைப்புகள் விருது - 2019' பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் தலைவர் G.சதீஷ் ரெட்டி அவர்களுக்கு வழங்கியுள்ளது
- தமிழக விவசாயிகள் சாகுபடி செய்த பயிர் விவரங்களை பதிவேற்றம் செய்வதற்காக இ - அடங்கல் என்ற மொபைல் செயலியை தமிழக வருவாய் துறை அமைச்சகம் ஏற்படுத்தியுள்ளது
மார்ச் -8
- சர்வதேச மகளிர் தினம்
- சர்வதேச மகளிர் தினத்தையொட்டி,பாகிஸ்தானின் நாடாளுமன்ற மேலவையின் ஒருநாள் தலைவராக ஹிந்து தலித் பெண் எம்.பி கிருஷ்ண குமாரி கோலி நியமிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார்
- 'தேசிய ஸ்டெம்(STEM - Science, Technology, Engineering and Maths) கல்வி விருது 2019' அமெரிக்காவைச் சேர்ந்த இந்திய வம்சாவளி காவ்யா கோப்பராப்பு என்பவருக்கு வழங்கப்பட்டது
மார்ச் - 9
- மத்திய அரசு 20 ரூபாய் நாணயத்தை வெளியிட்டுள்ளது. இது 12 முனைகளைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது
- உலக வங்கியிடம் இருந்து அதிக கடன் பெறும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது
மார்ச் - 10
- தேசிய நோய்த்தடுப்பு நாள்
- ஐ.நா சபையின் உணவு மற்றும் விவசாயத்துறை, உலகில் இயற்கை உணவுகள் அதிகமாக உள்ள மாநிலங்களின் பட்டியலில் சிக்கிம் (இந்தியா) மாநிலம் 100% இயற்கை உணவுகள் உள்ள மாநிலமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது
- உலகின் மிக நீண்ட நடை தொங்குபாலமான யோரப், மத்திய ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தின் விஸ்ப் மாவட்டத்திலுள்ள ராண்டாவின் ஜெர்மேட் மற்றும் கிரேசேன் என்ற இரு மலைகளை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இது 278 அடி உயரத்தில் 1620 அடி நீளம் மற்றும் 2 அடி அகலத்தில் அமைக்கப்பட்டுள்ளது
- கோவையில் நடைபெற்ற ஹீரோ கால்பந்து தொடரில் சென்னை சிட்டி அணி சாம்பியன் பட்டம் வென்றது
மார்ச் - 11
- பிரதமர் நரேந்திர மோடியின் செயலராக பாஸ்கர் குல்பே மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
மார்ச் - 12
- உத்திரப்பிரதேச மாநிலத்தின் கிரேட்டர் நொய்டா நகரில், பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா தொல்லியல் நிறுவனம் இந்திய பிரதமரால் திறந்து வைக்கப்பட்டது
- பின்லாந்தில் நடைபெற்ற ஜி.பி சர்வதேச குத்துச்சண்டை போட்டியில், ஆடவர் 56 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த கவிந்தர் சிங் பிஷ்ட் தங்கம் வென்றுள்ளார்
மார்ச் - 13
- தேசிய புகைப்பிடித்தல் இல்லாத நாள்
- பிரதமரின் சில தேர்ந்தெடுக்கப்பட்ட உரைகளை உள்ளடக்கிய 'சப்கா சாத் சப்கா விகாஸ்' என்ற புத்தகம் நிதியமைச்சர் அருண் ஜெட்லி அவர்களால் வெளியிடப்பட்டது
மார்ச் - 14
- உலக சிறுநீரக தினம் (மார்ச் இரண்டாவது வியாழன்)
- தஞ்சாவூர் மாவட்டம் திருப்புவனத்தில் வடிவமைக்கப்பட்ட தயாரிக்கப்படும் திருபுவனம் பட்டு சேலைகளுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது
- கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த உத்திரகாண்டா மாவட்டத்தில் விளையக்கூடிய சிர்சி சுப்பாரி என்ற பாக்கு வகைக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது
- மகாராஷ்டிரா மாநிலத்தால் வழங்கப்படும் 'யஸ்வந்த் ராவ் சவான் தேசிய விருது' முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது
மார்ச் -15
- உலக நுகர்வோர் உரிமைகள் தினம்
- பல்வேறு அலைநீளம் கொண்ட விண்வெளி ஆய்வகமான ஆஸ்ட்ரோநாட்டிக்ஸ் - ஐப் பயன்படுத்தி கோள வடிவ நட்சந்திரங்களான NGC 2808 - ல் உள்ள புதிய புற ஊதா நட்சத்திரக் கூட்டங்களை திருவனந்தபுரம் மற்றும் மும்பையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்
- உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானியாக டாக்டர். சௌமியா சுவாமிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்
- 'Tiger Woman' என்ற புத்தகம் பெங்காலி நாவலாசிரியர் சிர்ஷோ பந்தோபதியா என்பவரால் எழுதி வெளியிடப்பட்டது. இது அருணாவா சின்ஹா என்பவர் எழுதிய 'Shardul Sundari' என்ற புத்தகத்தின் மொழிபெயர்ப்பாகும்
மார்ச் -16
- தேசிய தடுப்பூசி தினம்
- இராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் 'கீர்த்தி சக்ரா விருது' மேஜர் துஷார் கௌபா மற்றும் ராஜேந்திர குமார் நயன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது
- பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் இயக்குநராக டாக்டர் ஏ.கே. மொகந்தி நியமிக்கப்பட்டுள்ளார்
மார்ச் - 17
- 17 வயதிற்கு உட்பட்ட பெண்களுக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2020 - ம் ஆண்டில் இந்தியாவில் நடத்தப்பட உள்ளது
- அமெரிக்காவைச் சேர்ந்த கணிதப் பேராசிரியை காரன் உலென்பெக் கணிதத் துறையில் உயர்ந்த விருதான 'ஏபல் பரிசு' பெறும் முதல் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றுள்ளார்
- 2018 - ம் ஆண்டிற்கான சிறந்த பெண் பத்திரிகையாளர்களுக்கான 'சாமிலி தேவி ஜெயின் விருது' பிபிசி பத்திரிக்கையாளர் பிரியங்கா துபே என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது
மார்ச் - 18
- உலகளாவிய மறுசுழற்சி தினம்
- 'சிறந்த வணிக மாற்றுவதற்கான ஆண்டு விருது ' ஜிஎஸ்டி வரியை நடைமுறைப்படுத்தியதற்காக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லிக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களால் வழங்கப்பட்டது
- DD மகிளா கிஷான் விருது ஸ்வாதி ஷிங்கடே என்பவருக்கு வழங்கப்பட்டது
மார்ச் - 19
- சென்னையில் அமைந்துள்ள புவிசார் குறியீட்டு பதிவகம் ஐந்து வகையான காபிகளுக்கு புவிசார் குறியீடுகளை அளித்துள்ளது. அவை
1.வயநாடு ராபஸ்டா காபி - கேரளா2.கூர்க் அராபிகா காபி - கர்நாடகா3.சிக்மகலூர் அராபிகா காபி - கர்நாடகா4.பாபாபுடங்கிரிஸ் அராபிகா காபி - கர்நாடகா 5.அரக்கு பள்ளத்தாக்கு அராபிகா காபி - ஆந்திரப் பிரதேசம்
- ஹாங்காங்கில் நடைபெற்ற ஆசிய இளையோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி 2019 - ல் ஆண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தமிழக வீரர் மகேஷ் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்
மார்ச் - 20
- உலக சிட்டுக்குருவிகள் தினம்
- கோவாவின் புதிய முதலமைச்சராக பிரம்மோத் சாவந்த் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்
மார்ச் - 21
- சர்வதேச காடுகள் தினம்
- 2019 - ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் முதன்முறையாக ஓட்டு போட இருக்கும் வாக்காளர்கள் எண்ணிக்கையில் மேற்கு வங்காளம் முதலிடத்தில் உள்ளது
மார்ச் - 22
- உலக தண்ணீர் தினம்
- கஸகஸ்தான் நாட்டின் தலைநகர் அஸ்தானா என்பதை நுர்சுல்தான் என மாற்றியுள்ளது
- உலகளவில் மிகக் குறைந்த விலையில் மொபைல் டேட்டா வழங்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது
மார்ச் - 23
- உலக வானியல் தினம்
- கேரளாவில் தயாரிக்கப்படும் மாராயூர் ஜாக்கரிக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது
- உலகின் மிக நீளமான உப்பு குகை மால்ஹாம் இஸ்ரேல் நாட்டிலுள்ள மவுண்ட் சோதோம் மற்றும் சாக்கடல் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது 10 கிலோமீட்டர் நீளத்திற்கும் அதிகமாக உள்ளது
மார்ச் - 24
- சர்வதேச சாதனையாளர்கள் தினம்
- உலக காசநோய் தினம்
- தமிழ்நாட்டின் தேர்தல் செலவினங்களின் சிறப்பு கண்காணிப்பாளராக முன்னாள் இந்திய வருவாய் பணி அதிகாரியான மது மகாஜன் என்பவரை இந்திய தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது
- 'The great disappointment: How Narendra modi squandered unique opportunity to transform the Indian economy' என்ற புத்தகத்தை பொருளாதார, அரசியல் விமர்சகர் சல்மான் அனீஸ் சோஸ் என்பவரால் எழுதி வெளியிடப்பட்டது
மார்ச் - 25
- சினூக் கனரக ஹெலிகாப்டர் CH47 F(I) இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டது
- இந்திய கிராமங்களில் உள்ள குழந்தைகளின் வாசிப்புத் திறனை வளர்ப்பதற்காக கூகுள் நிறுவனம் போலோ மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது
மார்ச் - 26
- உலகளாவிய ஆசிரியர் பரிசு - 2019 பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பீட்டர் தபிசி என்பவருக்கு வழங்கப்பட்டது
- இந்தியாவின் தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்த நவின் சாவ்லா அவர்களால் எழுதப்பட்ட 'அனைத்து ஓட்டுகளும் எண்ணப்படும்' என்ற புத்தகம் முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் ஹமீது அன்சாரி அவர்களால் வெளியிடப்பட்டது
மார்ச் - 27
- உலக திரையரங்கு தினம்
- இந்தியா மிஷன் சக்தி என்ற செயற்கைக்கோளை தாக்கி அழிக்கும் சோதனையை டாக்டர் அப்துல்கலாம் தீவில் நடத்தியது. இதில் 380 கிலோ மீட்டர் உயரத்தில் இருந்த செயற்கைக்கோளை ஏசாட் ஏவுகணை மூலம் 3 நிமிடங்களில் சுட்டு வீழ்த்தியது
மார்ச் - 28
- மின் மற்றும் மின்னணு உபகரணங்கள், குளிர்சாதன வாயுக்கள் ஆகியவற்றை மறுசுழற்சி செய்வதற்காக உலகின் மிகப்பெரிய மின்கழிவு மறுசுழற்சி மையம் துபாயில் உள்ள துபாய் தொழில்துறை பூங்காவில் அமைக்கப்பட்டுள்ளது
- குரேஷியா நாட்டின் உயரிய விருதான 'Grand order of the king of Thomislav' என்ற விருது இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது
மார்ச் - 29
- இமாச்சல பிரதேசத்தின் மாண்டி மக்களவைத் தொகுதியில் உள்ள டாஷிகங் வாக்குச்சாவடி உலகின் மிக உயர்ந்த பகுதியில் அமைந்த வாக்குச்சாவடி ஆகும்
- 'இந்தியாவின் பசுமை கட்டட விருது' விஜயவாடா இரயில் நிலையத்திற்கு வழங்கப்பட்டுள்ளது
- 'சபரிமலையும் பெண்களும்' என்ற புத்தகத்தை லட்சுமி ராஜீவ் என்பவர் எழுதியுள்ளார்
மார்ச் - 30
- உலக இட்லி தினம்
- உலகின் சிறந்த விமான நிலையமாக சிங்கப்பூரின் சான்கி விமான நிலையம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.இந்த விமான நிலையம் தொடர்ந்து ஏழாவது முறையாக இவ்விருதை பெற்றுள்ளது
மார்ச் - 31
- பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில உயர் நீதிமன்றம் முதல் தகவல் அறிக்கையில்(FIR) சாதியைக் குறிப்பிடுவதற்கு தடை விதித்துள்ளது
Comments
Post a Comment