Skip to main content

தாவரவியல் - வாழ்விடங்களின் வகைகள்



தாவரவியல்

Classification of living organism

வாழ்விடங்களின் வகைகள்

வாழிடம்

  • ஒவ்வொரு உயிரினமும் உயிர்வாழவும், இனப்பெருக்கம் செய்யவும் தேவைப்படும் இடமானது அதன் வாழிடம் ஆகும்
  • கடலின் அடி மட்டத்திலிருந்து மலையின் உச்சி வரை தாவரங்கள் மற்றும் விலங்குகளின் வாழ்விடங்களாக உள்ளன


வாழ்விடங்களின் வகைகள்
1. நீர் வாழிடம்

  • நீர் வாழிடம் என்பது நிரந்தரமாகவோ அல்லது அவ்வப்போது நீர் சூழ்ந்தோ காணப்படும்
  • இவைகள் இருவகைப்படும்

நன்னீர் வாழிடம்
கடல்நீர் வாழிடம்

நன்னீர் வாழிடம்

  • ஆறுகள், குளங்கள், குட்டைகள் மற்றும் ஏரிகள் இவையாவும் நன்னீர் வாழிடங்கள் ஆகும்
  • ஆகாயத் தாமரை, அல்லி மற்றும் தாமரை ஆகியவை நன்னீரில் காணப்படும் தாவரங்கள் ஆகும்
  • நீர் தாவரங்களின் வேர்கள் வளர்ச்சி குன்றிய வை
  • தண்டிலும், இலைப்பகுதிகளிலும் காற்று அறைகள் அதிகமாக இருப்பதால் இவைகள் நீரில் எளிதில் மிதக்கின்றன

  • உலகில் மிக நீளமான நதி நைல் நதி ஆகும். இது 6650 கிலோ மீட்டர் நீளமுடையது
  • இந்தியாவின் மிக நீளமான நதி கங்கை ஆகும் இது 2525 கிலோ மீட்டர் நீளமுடையது

  • தாமரையின் இலைக் காம்பில் உள்ள காற்று இடைவெளிகள் நீரில் மிதக்க உதவுகின்றன

கடல்நீர் வாழிடம்

  • பூமியின் மேற்பரப்பானது 70% கடல் நீரினால் சூழப்பட்டுள்ளது. தாவரங்கள் கடல் நீரிலும் வாழ்கின்றன
  • பூமியின் மொத்த ஒளிச்சேர்க்கையில் சுமார் 40% கடல்வாழ் தாவரங்களில் நடைபெறுகிறது. எ.கா:கடல் பாசிகள், கடல் புற்கள், நில ஈரத்தாவரங்கள், புற்கள் மற்றும் தாவர மிதவைகள் (தனித்து நீரில் மிதக்கும் பாசிகள்)

2.நில வாழிடம்

  • நில வாழிடங்கள் காடுகள், புல்வெளிகள் மற்றும் பாலைவனங்கள் என மூவகைப்படும்
  • பண்ணைகள், நகரங்கள், மாநகரங்கள் ஆகியவை மனிதனால் உருவாக்கப்பட்ட சில நில வாழிடங்கள் ஆகும்
  • உலகில் 28 சதவீதம் நிலவாழிடங்கள் உள்ளன எடுத்துக்காட்டு: இரப்பர் மரம் ,தேக்கு மரம் மற்றும் வேம்பு

  • 470 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் உருவான நில வாழ் தாவரங்கள், மாஸ்கள் மற்றும் லிவர்வோர்ட்ஸ்
  • தென் அமெரிக்காவில் உள்ள அமேசான் மலைக்காடுகள் உலகிற்கான ஆக்சிஜன் தேவையில் பாதியைக் கொடுக்கிறது


i.பாலைவன வாழிடம்

  • நீரின் அளவு மிகக்குறைவாக உள்ள இடத்தை பாலைவனம் என்கிறோம். இவைகள் பூமியில் மிகவும் வறண்ட பகுதிகள் ஆகும்
  • ஆண்டின் சராசரி 25 சென்டி மீட்டர் க்கும் குறைவாக மழை பெய்யும்
  • பூமியில் சுமார் 20% பாலைவனம் உள்ளன
  • பாலைவனத் தாவரங்கள் நீரையும், கனிம உப்புக்களையும் இலையில் சேமித்து வைப்பதால் இலைகள் தடிமனாக உள்ளன
  • கள்ளித் தாவரங்களில் நீரை தண்டில் சேமித்து வைக்கின்றன. அதன் இலைகள் முட்களாக மாற்றமடைந்துள்ளன
  • இவைகள் நன்கு வளர்ச்சி அடைந்த நீளமான வேர்கள் கொண்டுள்ளதால் மண்ணின் மிக ஆழத்திற்குச் சென்று நீரை உறிஞ்சுகின்றன
  • எடுத்துக்காட்டு: சப்பாத்திக்கள்ளி,அகேவ், சோற்றுக்கற்றாழை, பிரையோபில்லம்


வகைகள்
1.வெப்ப, வறட்சிப் பாலைவனங்கள்
2.மிதவெப்ப பாலைவனங்கள்
3.கடல் சார்ந்த பாலைவனங்கள்
4.குளிர் பாலைவனங்கள்

  • மணல் குன்றுகளால் ஆன மிகப்பெரிய இந்திய பாலைவனமான தார் பாலைவனம் இந்திய துணைக் கண்டத்தில் உள்ளது.இதன் பகுதிகள் ராஜஸ்தான் மாநிலத்திலும், வடமேற்கு இந்தியாவிலும், பஞ்சாபிலும், சிந்து மாகாணத்திலும் மற்றும் கிழக்கு பாகிஸ்தானிலும் விரிந்துள்ளது


ii.புல்வெளி வாழிடம்

  • இவ்வகை வாழ்விடத்தில் அதிகமாக புற்கள் காணப்படுகிறது
  • இவை மிகச்சிறியன முதல் உயரமான புற்களைக் கொண்டதாக இருக்கும்
  • எடுத்துக்காட்டு: புல்வெளிகள்



iii.காடுகள்

  • காடுகள் மிகப் பரந்த நிலப்பரப்பில் அதிகமாக மரங்களைக் கொண்டுள்ளன
  • இவை வெப்பமண்டல காடுகள், குளிர் பிரதேச காடுகள் மற்றும் மலைக்காடுகள் என வகைப்படுத்தலாம்
  • இங்கு ஆண்டு சராசரி மழை அளவு 25 - 200 சென்டிமீட்டர் ஆக இருக்கும்

  • வளரும் பருவ நிலையில் அதி வேகமாக வளரக்கூடிய தாவரம் மூங்கில் ஆகும்

  • அக்டோபர் மாதம் முதல் திங்கட்கிழமை உலக வாழிட நாளாக அனுசரிக்கப்படுகிறது



தாவரங்களின் தகவமைப்புகளும் மாற்றுருக்களும்

  • தாவரங்கள் தாங்கள் வளரும் சூழ்நிலைக்கு ஏற்ப தகவமைத்துக் கொண்டு பல ஆண்டுகள் வாழ்கின்றன
  • எடுத்துக்காட்டு:பற்றுக்கம்பி,ஏறு கொடி, முட்கள். இவ்வகைத் தகவமைப்புகள் நிலத்தாவரங்கள் மற்றும் பாலைவனத் தாவரங்களில் காணப்படுகின்றன


1.பற்றுக்கம்பி(ஏறு கொடிகள்)

  • பட்டாணி, பாகற்காய் போன்ற மெலிந்த தண்டு உடைய தாவரங்கள் பற்றுக் கம்பியைப் பெற்றுள்ளன
  • எ.கா:
இனிப்பு பட்டாணி ------->சிற்றிலைகள் பற்று கம்பிகளாக மாறியுள்ளன
பாகற்காய் -------->கோண மொட்டு பற்றுக் கம்பிகளாக மாற்றமடைந்து அவைகள் மேலே ஏறுவதற்கு உதவுகின்றன

2.பின்னு கொடி

  • நீண்ட, மெலிந்த வளையும் தன்மையுடைய தண்டுகளால் நேராக நிலைத்து நிற்கும் தன்மை அற்றவை. எனவே அருகிலுள்ள ஆதாரத்தைப் பற்றிக் கொண்டு வளர்கின்றன. எடுத்துக்காட்டு: சங்குப்பூ, மல்லிகை


3. முட்கள்

  • சில தாவரங்களின் இலைகள் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ கூரிய முட்களாக அல்லது சிறிய முட்களாக மாறுகின்றன. இவை பாதுகாப்பிற்கு உதவுகின்றன
  • எ.கா:
1.அகேவ் (ரயில் கற்றாழை) - இந்த வகைக் கற்றாழையில் இலையின் நுனிப்பகுதி மற்றும் விளிம்புகள் முட்களாக மாறுபாடு அடைந்துள்ளது
2. சப்பாத்திக்கள்ளி -  சப்பாத்திக்கள்ளியில் இலைகள் சிறுமுட்களாக மாறியுள்ளன
3. காகிதப்பூ (போகன்வில்லியா) - தண்டில் கூர்மையான முட்கள் காணப்படுகின்றன

Comments

Popular posts from this blog

6 - ம் வகுப்பு கணிதம் - விகிதம் மற்றும் விகித சமம்

6 - ம் வகுப்பு கணிதம் - விகிதம் மற்றும் விகித சமம் ஓர் அளவினை மற்றோர் அளவின் மடங்காக வெளிப்படுத்தி ஒப்பிடுவது விகிதம் எனப்படும் விகிதத்தைப் பின்னமாகவும் எழுதலாம். விகிதத்தைப் பெரும்பாலும் எளிய வடிவத்தில் எழுத வேண்டும் விகிதங்களின் பண்புகள் விகிதங்களுக்கு அலகு இல்லை. இது ஓர் எண் மதிப்பு. எடுத்துக்காட்டு: 8 கிலோமீட்டர்க்கும் 4 கிலோ மீட்டருக்கும் உள்ள விகிதம் 2 : 1 ஆகும் மற்றும் 2 கி. மீ : 1 கி.மீ அல்ல விகிதங்களின் இரு அளவுகளும் ஒரே அலகுடையதாக இருக்க வேண்டும்.எடுத்துக்காட்டு 4 கிலோ மீட்டர் மற்றும் 400 மீட்டர் ஆகியவற்றிற்கான விகிதம் காணும் போது அவற்றை (4×1000):400 = 4000:400=10:1 எனக் குறிப்பிடலாம் விகிதத்தில் ஒவ்வோர் எண்ணும் உறுப்பு என அழைக்கப்படும் விகிதத்தின் உறுப்புகளின் வரிசையை மாற்றி எழுத முடியாது 20:5 என்ற விகிதத்தை எளிய வடிவில் காண்க 20/5 = 4/1 =4:1 500கி மற்றும் 250 கி க்கும் உள்ள விகிதத்தை எளிய வடிவில் காண்க 500/250 = 2/1 =1 மாதவியும், அன்புவும் இரண்டு மேசைகளை முறையே ரூ.750 மற்றும் ரூ.900 க்கு வாங்குகின்றனர். அன்புவும், மாத...

6 - ம் வகுப்பு தமிழ் - பாடறிந்து ஒழுகுதல்

6 - ம் வகுப்பு தமிழ் - பாடறிந்து ஒழுகுதல் ஆசாரக்கோவை ஆசாரக்கோவை நூலை எழுதியவர் - பெருவாயின் முள்ளியார் இவர் பிறந்த ஊர் கயத்தூர். ஆசாரக்கோவை என்பதற்கு நல்ல ஒழுக்கங்களின் தொகுப்பு என்பது பொருள். இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. இந்நூல் நூறு வெண்பாக்களைக் கொண்டது தமிழர் பெருவிழா பொங்கல் விழா தமிழர் திருநாள் என்றும் போற்றப்படுகிறது கதிரவனுக்கு நன்றி கூறிச் சிறப்பு செய்யும் விழா பொங்கல் விழா. உழவர்கள் ஆடித்திங்களில் விதைப்பர். தைத்திங்களில் அறுவடை செய்து பயன் அடைவர். தைத் திங்களின் முதல் நாளில் பொங்கலிட்டு வழிபடுவர். எனவே இத்திருவிழாவை அறுவடைத் திருவிழா என்றும் அழைப்பர். உழவர்கள் இயற்கைக்கும் தம்முடன் உழைத்த கால்நடைகளுக்கும் இந்நாளில் நன்றி தெரிவித்து மகிழ்கின்றனர். எனவே இவ்விழாவை உழவர் திருநாள் என்றும் கூறுவர். போகித் திருநாள் பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பது ஆன்றோர் மொழி. வீட்டில் உள்ள பயனற்ற பொருள்களை நீக்கி வீட்டைத் தூய்மை செய்யும் நாள் போகித் திருநாள். இது மார்கழி மாதத்தின் இறுதி நாள் ஆகும் வாழ்க்கைக்கு வளம் தரும் மழைக் கடவுளை வழிப...

6 - ம் வகுப்பு கணிதம் - இயல் எண்கள், முழு எண்கள்

        Natural and Whole numbers         இயல் எண்கள், முழு எண்கள் இயல் எண்கள் அல்லது எண்ணும் எண்கள் அல்லது மிகை முழு எண்கள் N = {1,2,3,4,......} முழு எண்கள் அல்லது நிறைவெண்கள் W = {0,1,2,3,4......} எல்லா முழு எண்களுக்கும் தொடரி உண்டு பூஜ்ஜியத்தைத் தவிர எல்லா முழு எண்களுக்கும் முன்னி உண்டு எல்லா முழு எண்களையும் கூட்டவும், பெருக்கவும் முடியும் இயல் எண்ணினை அதைவிட சிறிய இயல் எண் அல்லது அதே எண்ணைக் கொண்டு கழிக்க முடியும் ஒரு பெரிய எண்ணை சிறிய எண்ணால் வகுக்க முடியும் அதிக இலக்கங்கள் உடைய எண்கள் நம் நாட்டில் 10,000            = பத்தாயிரம் 1,00,000         = ஒரு லட்சம் 10,00,000        = பத்து லட்சம் 1,00,00,000     =ஒரு கோடி 1,00,00,00,000 = நூறு கோடி உலகளவில் 10,000             = பத்தாயிரம் 100,000           = நூறாயிரம் 1,000,000        = ஒ...