தாவரவியல்
Classification of living organism
வாழ்விடங்களின் வகைகள்
வாழிடம்
- ஒவ்வொரு உயிரினமும் உயிர்வாழவும், இனப்பெருக்கம் செய்யவும் தேவைப்படும் இடமானது அதன் வாழிடம் ஆகும்
- கடலின் அடி மட்டத்திலிருந்து மலையின் உச்சி வரை தாவரங்கள் மற்றும் விலங்குகளின் வாழ்விடங்களாக உள்ளன
வாழ்விடங்களின் வகைகள்
1. நீர் வாழிடம்
- நீர் வாழிடம் என்பது நிரந்தரமாகவோ அல்லது அவ்வப்போது நீர் சூழ்ந்தோ காணப்படும்
- இவைகள் இருவகைப்படும்
நன்னீர் வாழிடம்கடல்நீர் வாழிடம்
நன்னீர் வாழிடம்
- ஆறுகள், குளங்கள், குட்டைகள் மற்றும் ஏரிகள் இவையாவும் நன்னீர் வாழிடங்கள் ஆகும்
- ஆகாயத் தாமரை, அல்லி மற்றும் தாமரை ஆகியவை நன்னீரில் காணப்படும் தாவரங்கள் ஆகும்
- நீர் தாவரங்களின் வேர்கள் வளர்ச்சி குன்றிய வை
- தண்டிலும், இலைப்பகுதிகளிலும் காற்று அறைகள் அதிகமாக இருப்பதால் இவைகள் நீரில் எளிதில் மிதக்கின்றன
- உலகில் மிக நீளமான நதி நைல் நதி ஆகும். இது 6650 கிலோ மீட்டர் நீளமுடையது
- இந்தியாவின் மிக நீளமான நதி கங்கை ஆகும் இது 2525 கிலோ மீட்டர் நீளமுடையது
- தாமரையின் இலைக் காம்பில் உள்ள காற்று இடைவெளிகள் நீரில் மிதக்க உதவுகின்றன
கடல்நீர் வாழிடம்
- பூமியின் மேற்பரப்பானது 70% கடல் நீரினால் சூழப்பட்டுள்ளது. தாவரங்கள் கடல் நீரிலும் வாழ்கின்றன
- பூமியின் மொத்த ஒளிச்சேர்க்கையில் சுமார் 40% கடல்வாழ் தாவரங்களில் நடைபெறுகிறது. எ.கா:கடல் பாசிகள், கடல் புற்கள், நில ஈரத்தாவரங்கள், புற்கள் மற்றும் தாவர மிதவைகள் (தனித்து நீரில் மிதக்கும் பாசிகள்)
2.நில வாழிடம்
- நில வாழிடங்கள் காடுகள், புல்வெளிகள் மற்றும் பாலைவனங்கள் என மூவகைப்படும்
- பண்ணைகள், நகரங்கள், மாநகரங்கள் ஆகியவை மனிதனால் உருவாக்கப்பட்ட சில நில வாழிடங்கள் ஆகும்
- உலகில் 28 சதவீதம் நிலவாழிடங்கள் உள்ளன எடுத்துக்காட்டு: இரப்பர் மரம் ,தேக்கு மரம் மற்றும் வேம்பு
- 470 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் உருவான நில வாழ் தாவரங்கள், மாஸ்கள் மற்றும் லிவர்வோர்ட்ஸ்
- தென் அமெரிக்காவில் உள்ள அமேசான் மலைக்காடுகள் உலகிற்கான ஆக்சிஜன் தேவையில் பாதியைக் கொடுக்கிறது
i.பாலைவன வாழிடம்
- நீரின் அளவு மிகக்குறைவாக உள்ள இடத்தை பாலைவனம் என்கிறோம். இவைகள் பூமியில் மிகவும் வறண்ட பகுதிகள் ஆகும்
- ஆண்டின் சராசரி 25 சென்டி மீட்டர் க்கும் குறைவாக மழை பெய்யும்
- பூமியில் சுமார் 20% பாலைவனம் உள்ளன
- பாலைவனத் தாவரங்கள் நீரையும், கனிம உப்புக்களையும் இலையில் சேமித்து வைப்பதால் இலைகள் தடிமனாக உள்ளன
- கள்ளித் தாவரங்களில் நீரை தண்டில் சேமித்து வைக்கின்றன. அதன் இலைகள் முட்களாக மாற்றமடைந்துள்ளன
- இவைகள் நன்கு வளர்ச்சி அடைந்த நீளமான வேர்கள் கொண்டுள்ளதால் மண்ணின் மிக ஆழத்திற்குச் சென்று நீரை உறிஞ்சுகின்றன
- எடுத்துக்காட்டு: சப்பாத்திக்கள்ளி,அகேவ், சோற்றுக்கற்றாழை, பிரையோபில்லம்
வகைகள்
1.வெப்ப, வறட்சிப் பாலைவனங்கள்2.மிதவெப்ப பாலைவனங்கள்3.கடல் சார்ந்த பாலைவனங்கள்4.குளிர் பாலைவனங்கள்
- மணல் குன்றுகளால் ஆன மிகப்பெரிய இந்திய பாலைவனமான தார் பாலைவனம் இந்திய துணைக் கண்டத்தில் உள்ளது.இதன் பகுதிகள் ராஜஸ்தான் மாநிலத்திலும், வடமேற்கு இந்தியாவிலும், பஞ்சாபிலும், சிந்து மாகாணத்திலும் மற்றும் கிழக்கு பாகிஸ்தானிலும் விரிந்துள்ளது
ii.புல்வெளி வாழிடம்
- இவ்வகை வாழ்விடத்தில் அதிகமாக புற்கள் காணப்படுகிறது
- இவை மிகச்சிறியன முதல் உயரமான புற்களைக் கொண்டதாக இருக்கும்
- எடுத்துக்காட்டு: புல்வெளிகள்
iii.காடுகள்
- காடுகள் மிகப் பரந்த நிலப்பரப்பில் அதிகமாக மரங்களைக் கொண்டுள்ளன
- இவை வெப்பமண்டல காடுகள், குளிர் பிரதேச காடுகள் மற்றும் மலைக்காடுகள் என வகைப்படுத்தலாம்
- இங்கு ஆண்டு சராசரி மழை அளவு 25 - 200 சென்டிமீட்டர் ஆக இருக்கும்
- வளரும் பருவ நிலையில் அதி வேகமாக வளரக்கூடிய தாவரம் மூங்கில் ஆகும்
- அக்டோபர் மாதம் முதல் திங்கட்கிழமை உலக வாழிட நாளாக அனுசரிக்கப்படுகிறது
தாவரங்களின் தகவமைப்புகளும் மாற்றுருக்களும்
- தாவரங்கள் தாங்கள் வளரும் சூழ்நிலைக்கு ஏற்ப தகவமைத்துக் கொண்டு பல ஆண்டுகள் வாழ்கின்றன
- எடுத்துக்காட்டு:பற்றுக்கம்பி,ஏறு கொடி, முட்கள். இவ்வகைத் தகவமைப்புகள் நிலத்தாவரங்கள் மற்றும் பாலைவனத் தாவரங்களில் காணப்படுகின்றன
- பட்டாணி, பாகற்காய் போன்ற மெலிந்த தண்டு உடைய தாவரங்கள் பற்றுக் கம்பியைப் பெற்றுள்ளன
- எ.கா:
இனிப்பு பட்டாணி ------->சிற்றிலைகள் பற்று கம்பிகளாக மாறியுள்ளனபாகற்காய் -------->கோண மொட்டு பற்றுக் கம்பிகளாக மாற்றமடைந்து அவைகள் மேலே ஏறுவதற்கு உதவுகின்றன
2.பின்னு கொடி
- நீண்ட, மெலிந்த வளையும் தன்மையுடைய தண்டுகளால் நேராக நிலைத்து நிற்கும் தன்மை அற்றவை. எனவே அருகிலுள்ள ஆதாரத்தைப் பற்றிக் கொண்டு வளர்கின்றன. எடுத்துக்காட்டு: சங்குப்பூ, மல்லிகை
3. முட்கள்
- சில தாவரங்களின் இலைகள் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ கூரிய முட்களாக அல்லது சிறிய முட்களாக மாறுகின்றன. இவை பாதுகாப்பிற்கு உதவுகின்றன
- எ.கா:
1.அகேவ் (ரயில் கற்றாழை) - இந்த வகைக் கற்றாழையில் இலையின் நுனிப்பகுதி மற்றும் விளிம்புகள் முட்களாக மாறுபாடு அடைந்துள்ளது2. சப்பாத்திக்கள்ளி - சப்பாத்திக்கள்ளியில் இலைகள் சிறுமுட்களாக மாறியுள்ளன3. காகிதப்பூ (போகன்வில்லியா) - தண்டில் கூர்மையான முட்கள் காணப்படுகின்றன
Comments
Post a Comment