6 - ம் வகுப்பு தமிழ் - இன்னுயிர் காப்போம்
ஆசிய ஜோதி
ஆசிய ஜோதியை இயற்றியவர் - கவிமணி தேசிக விநாயகனார்
தேசிய விநாயகனார் இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த கவிஞர். முப்பத்தாறு ஆண்டுகள் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியவர். கவிமணி என்னும் பட்டம் பெற்றவர்
மனித நேயம்
வள்ளலார்
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்று கூறியவர் வள்ளலார்.
வள்ளலார் மக்களின் பசிப்பிணியைக் கண்டு உள்ளம் வாடினார். அதனை நீக்க விரும்பினார். தம் பெருமுயற்சியால் வடலூரில் சத்திய தருமச்சாலையை தொடங்கி எல்லாருக்கும் உணவளித்தார்
அன்னை தெரசா
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல மற்றவர் மனதில் நீ வாழும் வரை என்று கூறியவர் - அன்னை தெரசா
இவர் மக்களுக்கு செய்யும் பணியே இறைவனுக்குச் செய்யும் பணி என்று வாழ்ந்தார். இதனால் அமைதிக்கான நோபல் பரிசையும் பெற்றார்
கைலாஷ் சத்யார்த்தி
அன்னை தெரசாவிற்கு அடுத்து அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற இந்தியர் கைலாஷ் சத்யார்த்தி.
இவர் குழந்தைகளைப் பாதுகாப்போம் என்னும் இயக்கத்தை தொடங்கினார். அந்த இயக்கத்தின் மூலம் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கப் பாடுபட்டு வருகிறார்.உலக குழந்தைகள் கல்வி உரிமைக்காக 103 நாடுகளில் 80 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் நடைப்பயணம் சென்றுள்ளார்.
குழந்தைகளைத் தொழிலாளர்களாக மாற்றுவது மனிதத் தன்மைக்கு எதிரான குற்றம். உலகத்தைக் குழந்தைகளின் கண் கொண்டு பாருங்கள். உலகம் அழகானது என்று கூறியவர் - கைலாஷ் சத்யார்த்தி
அணி இலக்கணம்
அணி என்பதற்கு அழகு என்பது பொருள். கவிஞர் தமது கருத்தைச் சுவையோடு சொல்வதற்கு உதவுவது அணி. மருந்தைத் தேனில் கலந்து கொடுப்பது போல் கருத்துகளைச் சுவைபடக் கூறுவது அணியாகும்.
இயல்பு நவிற்சி அணி
ஒரு பொருளின் இயல்பை உள்ளது உள்ளபடியே அழகுடன் கூறுவது இயல்பு நவிற்சி அணி ஆகும். இதனைத் தன்மை நவிற்சி அணி என்றும் கூறுவர்
உயர்வு நவிற்சி அணி
ஒரு பொருளின் இயல்பை மிகைப்படுத்தி அழகுடன் கூறுவது உயர்வு நவிற்சி அணி ஆகும்
Comments
Post a Comment