Current Affairs: நடப்பு நிகழ்வுகள் - ஜுன் 2019
ஜுன் - 1
- இந்தியாவின் 10-வது தேசிய அறிவியல் திரைப்பட திருவிழா திரிபுராவில் உள்ள அகார்பாலாவில் 2020- ம் ஆண்டு நடைபெற உள்ளது
- இராஜஸ்தான் அரசு மின் சிகரெட் உற்பத்தி, விநியோகம், விளம்பரம் மற்றும் விற்பனையை தடை செய்துள்ளது
- புகையிலை தடுப்பிற்காக உலக சுகாதார அமைப்பின் விருது இராஜஸ்தான் மாநில சுகாதார பிரிவிற்கு கிடைத்துள்ளது
ஜுன் - 2
- தெலுங்கானா இந்தியாவின் 29 வது மாநிலமாக அறிவிக்கப்பட்ட நாள்
- தமிழகத்தில் செயல்படும் சமூக நலத்திட்டங்களில் பயன்பெறுவதற்கான குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு இருபத்து நான்காயிரத்திலிருந்து எழுபத்தி இரண்டாயிரமாக உயர்த்தியுள்ளது
- இந்தியாவின் முதல் பெண் போர் விமானி மோகனா சிங்
- இந்தியாவிற்கு வழங்கி வந்த வர்த்தக முன்னுரிமை நாடுகள் என்ற அந்தஸ்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் தடை செய்துள்ளார்
ஜுன் - 3
- உலக மிதிவண்டி தினம்
- மெக்சிகோவின் உயரிய விருதான 'ஆர்டன் மெக்ஸிகனா டெல் அகுலா அஸ்டெகா' என்ற விருது முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது
ஜுன் - 4
- டெல்லி மெட்ரோ ரயில், அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்
- பஞ்சாப்பில் உள்ள பெண்களுக்கு எல்.கே.ஜி. முதல் பி.எச்.டி. வரை இலவச கல்வி வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் அம்ரிந்தர் சிங் அறிவித்துள்ளார்
ஜுன் - 5
- உலக சுற்றுச்சூழல் தினம்
- யூதப்படுகொலையின் நினைவாக சுவீடன் 2020 அக்டோபரில் யூதப்பகைமைக்கு எதிரான ஒரு சர்வதேச மாநாட்டை நடத்த உள்ளது
- UEFA - 2019 சாம்பியன்ஷிப்பை லிவர்பூல் அணி வென்றுள்ளது
- ஜப்பானில் நடைபெற உள்ள ஜி- 20 நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கிகளின் ஆளுநர்களின் உச்சி மாநாட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொள்ளவுள்ளார்
ஜுன் - 7
- உலக உணவு பாதுகாப்பு தினம்
- ஒடிசாவில் சாந்திபூரில் இருந்து பிரம்மோஸ் சூப்பர்சோனிக் கப்பல் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது
- ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 74 - வது அமர்வின் தலைவராக நைஜீரியாவின் ஐ.நா. தூதுவர் டிஜானி முகமது பந்தே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்
ஜுன் - 8
- குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபனி மகோசாகர் மாவட்டத்தின் பாலசினூரில் உள்ள ரெயியோலி கிராமத்தில் நாட்டின் முதல் மற்றும் உலகின் மூன்றாவது டைனோசர் அருங்காட்சியகம் மற்றும் பூங்காவை திறந்து வைத்தார்
- நிதி ஆயோக்கின் துணைத் தலைவராக ராஜீவ் குமார் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்
- டெல்லி மெட்ரோ இரயிலில் கழிவுப் பொருட்களில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் இந்தியாவில் முதன் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
ஜுன் - 9
- பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி மகளிர் ஒற்றையர் பிரிவில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆஸ்லி பர்டி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்
- மாலத்தீவின் பெரிய விருதான ரூல் ஆஃப் நிஷான் இஸீத்தீன் விருது பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டுள்ளது
ஜுன் - 10
- திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் தேசிய நெல் திருவிழா நடைபெற்றது
ஜுன் - 11
- மத்தியப்பிரதேச அரசு இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை 14 சதவீதத்திலிருந்து 27 சதவீதமாக உயர்த்தியுள்ளது
- சன்டோங் மாகாணத்தின் மஞ்சள் கடலில் நகரக்கூடிய ஏவு தளத்திலிருந்து 'லாங் மார்ச் - 11' என்ற ஏவு வாகனத்தை சீனா ஏவியுள்ளது
ஜுன் - 12
- மேகாலயா முதலமைச்சர் கான்ராட் கே.சங்மா தலைமையிலான தேசிய மக்கள் கட்சிக்கு இந்திய தேர்தல் ஆணையம் தேசிய கட்சியின் நிலையை வழங்கியது
- குஜராத்தில் உள்ள லோதாலில் உள்ள பண்டைய ஹரப்பா நாகரிகத்திற்கு அருகில் கடல்சார் அருங்காட்சியகம் அமைய போர்ச்சுகலுடன் இந்தியா ஒப்பந்தமிட்டுள்ளது
ஜுன் - 13
- 2024 -ம் ஆண்டு அனைத்து குடிமக்களுக்கும் சுத்தமான குடிநீர் வழங்க மத்திய அரசு உறுதி அளித்துள்ளது என்று ஜல் சக்தி மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவாத் அறிவித்துள்ளார்.இதற்காக ஜல் சக்தி அமைச்சகத்தால் நல் சி ஜல் என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது
- டாம் டாம் நிறுவனம் 'Traffic Index - 2018' என்ற தலைப்பில் நடத்திய ஆய்வில், நெரிசல் அளவு 65 சதவீதத்துடன் மும்பை முதலிடத்தில் உள்ளது.புது டெல்லி 58 சதவீதத்துடன் 4 - வது இடத்தில் உள்ளது
- 2019 - ம் ஆண்டிற்கான புனைவுக் கதைக்கான பெண்கள் பரிசு அமெரிக்க எழுத்தாளரான தயாரி ஜோன்ஸ் என்பவருக்கு 'An American Marriage' என்னும் புதினத்திற்காக கிடைத்துள்ளது
ஜுன் - 14
- இந்திய இரயில்வே நிலையம் மேம்பாட்டுக் கழகம் (IRSDC) இந்தியாவில் இரயில்வே நிலையம் மேம்பாட்டுத் திட்டத்தை ஆதரிப்பதற்காக பிரெஞ்சு தேசிய இரயில்வே (SNCF)& AFD என்ற பிரெஞ்சு மேம்பாட்டு நிறுவனத்துடன் முத்தரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது
- 2018 - ம் ஆண்டிற்கான ஞானபீட விருது ஆங்கில எழுத்தாளரான அமிதவ் கோஷ் என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது
ஜுன் - 15
- உலக காற்று தினம்
- மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளை முன்னிட்டு, சவூதி அரேபியாவில் உள்ள இந்திய தூதரகம், ரியாத்தில் அமைதிக்கான காந்தி சைக்கிள் பேரணியை நடத்தியது
ஜுன் - 16
- சர்வதேச வீட்டு வேலை தொழிலாளர் தினம்
- 2024-ம் ஆண்டிற்குள் இந்தியாவை ரூ.350 லட்சம் கோடி பொருளாதார சக்தியாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்
- ஆசிய தொடர்பு மற்றும் நம்பிக்கையை வளர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அமைப்பான CICA- வின் உச்சி மாநாடு தஜிகிஸ்தானில் நடைபெற்றது.இதில் இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்டார்
- எப்.ஐ.எச். ஆடவர் ஹாக்கி இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது
ஜுன் - 17
- உலகம் பாலைவனமாதல் மற்றும் வறட்சி ஒழிப்பு தினம்
- சென்னை வானிலை ஆய்வு மையத்திற்கு உலக அளவிலான அங்கீகாரத்தை உலக வானிலை ஆய்வு நிறுவனம் வழங்கியுள்ளது
- இஸ்ரயேல் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ' கோலன் ஹைட்ஸ்' என்ற யூதர்கள் குடியிருக்கும் குக்கிராமத்தின் பெயர் 'ரமத் டிரம்' என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது
- சீனியர் தேசிய ஸ்குவாஷ் போட்டியில் ஜோஸ்னா சின்னப்பா சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்
- 2019- ம் ஆண்டிற்கான 'மிஸ் இந்தியா' அழகி பட்டத்தை சுமன் ராவ் வென்றுள்ளார்
ஜுன் - 18
- மத்தியப் பிரதேச மாநிலத்தின் பேதுல் மாவட்டத்தில் உள்ள பாஞ்சா கிராமம் சூரிய சமையலறையை மட்டுமே கொண்டுள்ள இந்தியாவின் முதல் கிராமம் ஆகும்
- காணாமல் போன செல்போன்கள் மற்றும் இருசக்கர வாகனங்களை கண்டுபிடிக்க DIGICOP Version 2 என்ற செயலி சென்னை பெருநகர காவல் துறையினரால் தொடங்கி வைக்கப்பட்டது
ஜுன் - 19
- பேஸ்புக் தனது லிப்ரா என்ற டிஜிட்டல் நாணயத்தை அறிவித்துள்ளது
- இந்தியாவின் சூறாவளி மனிதர் மிருத்ஞ்செய் இந்திய வானிலை ஆய்வுத் துறையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்
ஜுன் - 20
- திருவள்ளுவர் மாவட்டத்தில் உள்ள ஆவடி சிறப்பு நிலை நகராட்சி 15-வது மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது
- சரக்கு சேவை வரி (ஜி.எஸ்.டி) கவுன்சில் கூட்டம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது
ஜுன் - 21
- சர்வதேச யோகா தினம்
- 2030 க்கு பிறகு மின்சார வாகனங்கள் மட்டுமே விற்கப்பட வேண்டும் என நிதி ஆயோக் முன்மொழிந்துள்ளது
- மத்திய சாலைப் பாதுகாப்பு மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம், வாகன ஓட்டுநர்களுக்கான குறைந்தபட்ச கல்வித் தகுதியை நீக்க முடிவு செய்துள்ளது
- பெண்கள் டென்னிஸ் மன்றத்தின் தரவரிசை பட்டியலில் ஜப்பானைச் சேர்ந்த நோமி ஒசாகா முதலிடத்தில் உள்ளார்
ஜுன் - 22
- கிம்பர்லி செயல்முறை சான்றளிப்புத் திட்டத்தின் 2019 - ம் ஆண்டிற்கான தலைவராக இந்தியா உள்ளது.துணைத்தலைவராக இரஷ்ய கூட்டமைப்பு உள்ளது
- 2030- ம் ஆண்டிற்குள் இந்திய விண்வெளி ஆய்வு மையம் தனக்கென சொந்தமாக விண்வெளி நிலையத்தை அமைக்கும் என இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் தலைவர் டாக்டர்.கே. சிவன் அறிவித்துள்ளார்
- வாட்ஸ்அப் ல் உள்ள பிழையைக் கண்டுபிடித்ததற்காக மணிப்பூரைச் சேர்ந்த கட்டடப் பொறியாளர் சோனல் சௌகைஜாம் பேஸ்புக்கால் கௌரவிக்கப்பட்டுள்ளார்
ஜுன் - 23
- சர்வதேச ஒலிம்பிக் தினம்
- ஐ.நா. பொது சேவை தினம்
- கிராம ஊராட்சிகளில் 53% இட ஒதுக்கீடு ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது
- பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10% இட ஒதுக்கீட்டை கோவா மாநில அரசு நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது
- உலக கோப்பை கிரிக்கெட்டில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி இந்திய வீரர் முகமது ஷமி சாதனை புரிந்துள்ளார்
ஜுன் - 24
- புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்திய விமானப் படை மிராஜ் 2000 ரக போர் விமானங்களைப் பயன்படுத்தி பாலகோட்டில் தாக்குதல் நடத்தியது.இந்த பாலகோட் தாக்குதலுக்கு இந்திய விமானப் படை பந்தர் நடவடிக்கை என பெயரிடப்பட்டுள்ளது
- அமெரிக்கா, ஈரான் மீது கடுமையான பொருளாதார தடையை விதித்துள்ளது
- இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய செயற்குழு இயக்குநராக ரபி மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார்
ஜுன் - 25
- UNICEF அமைப்பின் குழந்தைகள் உரிமைக்கான நல்லெண்ண தூதரான பிரியங்கா சோப்ராவிற்கு டிசம்பர் 3 அன்று நியூயார்க்கில் நடைபெற உள்ள விருது வழங்கும் விழாவில்,டேனி கே மனிதாபிமான விருது வழங்கப்பட உள்ளது
- அடுத்த 5 ஆண்டுகளில் 10 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் திட்டத்தை தொடங்க மகாராஷ்டிரா மாநில அரசு முடிவு செய்துள்ளது
ஜுன் - 26
- பள்ளி கல்விக்கான ஒருங்கிணைந்த திட்டமாக சமக்ராசிஷா என்னும் திட்டத்தை மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் வரும் பள்ளி கல்வி மற்றும் எழுத்தறிவு துறையால் தொடங்கப்பட்டுள்ளது
- 17-வது மக்களவையின் சபாநாயகராக இராஜஸ்தான் மாநிலத்தின் கோட்டா பகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ஜ.க. கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஓம் பிர்லா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்
- QS உலக பல்கலைக்கழக தர வரிசைகளின் பட்டியலில் அமெரிக்காவில் உள்ள மாசாசுசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் முதலிடத்தில் உள்ளது
ஜுன் - 27
- சர்வதேச விதை சோதனை கழக மாநாட்டின் 32 - வது பதிப்பை தெலுங்கானா தொடங்கியுள்ளது.இது ஆசியாவில் நடைபெற்ற ISTA (International Seed Testing Association Congress) மாநாட்டின் முதல் பதிப்பாகும்
- எலோன் மஷ்கினின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அதிக எடை கொண்ட பால்கன் விண்கலத்தை விண்ணிற்குச் செலுத்தியுள்ளது
ஜுன் - 28
- நாசாவின் செவ்வாயில் உள்ள க்யூரியாசிட்டி வாகனம், இதுவரை அக்கோளில் அளவிடப்படாத மிக அதிக அளவிலான மீத்தேனைக் கண்டறிந்துள்ளது
- ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில், டாக்டர்.பிஜூ இயக்கிய வெயில் மரங்கள் மிகச்சிறந்த கலை சாதனை விருதைப் பெற்றுள்ளது
- இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் நரிந்தர் பாத்ரா சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்
ஜுன் - 29
- தேசிய புள்ளியியல் தினம்
- 2020 மார்ச் மாதத்திற்குள் அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும் இணையவசதி செய்து தரப்படும் என மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவித்துள்ளார்
- ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மேலும் 6 மாதத்திற்கு குடியரசு தலைவர் ஆட்சியை உள்துறை அமைச்சகம் நீடித்துள்ளது
- சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 20,000 ரன்களை அதிவேகமாக கடந்த வீரர் என்ற சாதனையை இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி படைத்துள்ளார்
- மணிப்பூர் மாநிலத்தின் கூடுதல் ஆளுநராக P.B.ஆச்சார்யா நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் தற்போது நாகலாந்து மாநில ஆளுநராக உள்ளார்
- இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரியா செரரா ஆஸ்திரேலியா நாட்டின் மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்றுள்ளார்
ஜுன் - 30
- தமிழ்நாடு அரசின் புதிய தலைமைச் செயலாளராக க.சண்முகம் நியமிக்கப்பட்டுள்ளார்
- நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து செலுத்தப்படும் ஏவுகணை JL- 3 யை சீனா வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது
- தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக பிசிசிஐ டிராவிட்டை நியமித்துள்ளது
- தமிழக காவல் துறை சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி. யாக J.K. திரிபாதி நியமிக்கப்பட்டுள்ளார்
- முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பற்றிய 'A Prime Minister to Remember Memories of a Military Chief' என்ற புத்தகம் சுஷில் குமார் அவர்களால் எழுதி வெளியிடப்பட்டுள்ளது
Comments
Post a Comment