நடப்பு நிகழ்வுகள் (ஜனவரி 2019)
- ஜனவரி-1-ம் தேதி உலகிலேயே அதிக அளவில் குழந்தைகள் பிறந்த நாடு இந்தியா என்று யூனிசெஃப் தெரிவித்துள்ளது (69,944 குழந்தைகள்)
- 2018ம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீராங்கனை மற்றும் ஒரு நாள் கிரிக்கெட்டின் சிறந்த வீராங்கனை என ஸ்மிருதி மந்தனாவை ஐ.சி.சி. தேர்வு செய்துள்ளது
- 12-வது உலகளாவிய உடல் நல சுகாதார மாநாடு (GHS-Global Health Care Summit-2018) மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடைபெற்றது
ஜனவரி 2
- பிளாஸ்டிக் கழிவுகளை உற்பத்தி செய்வதில் சென்னை முதலிடத்தில் உள்ளது
- பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து முதல்வர் பழனிசாமி 2018, ஜூன் 5-ம் தேதி, சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் அறிவித்தார். தமிழ்நாட்டில் இந்த தடை ஜனவரி- 1 முதல் அமலுக்கு வந்தது
- நம் நாட்டில் முதன்முறையாக பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்த மாநிலம்- சிக்கிம்
- இந்தியா சிமெண்ட்ஸ்-ன் துணைத் தலைவர் N. சீனிவாசனைப் பற்றிய 'Defying the paradigm N.Srinivasan:Fifty years of an extraordinary journey' என்ற புத்தகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் டிசம்பர் 28, 2018 அன்று வெளியிட்டார்
- 'Early Indians: The story of our ancestors and where we came from' என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டார்
ஜனவரி 3
- தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் வழங்கப்படும், ஸ்வட்ச் சர்வேக்ஷன் விருதில் மாநில அளவில் திடக்கழிவு மேலாண்மையில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது
- சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள குடிசைகளை மேம்படுத்த 'வாழ்விட மேம்பாட்டு திட்டம்' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
- இந்திய அறிவியல் மாநாடு -2019, ஜனவரி -3 -ல் பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் பிரதமர் தொடங்கிவைத்தார். இதன் கருப்பொருள் எதிர்கால இந்தியா அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
- இந்தியாவில் நுழைவதற்கு அல்லது வெளியேறுவதற்கு வசதியாக ஒரு அதிகாரபூர்வமான குடியேற்றத்திற்கான சோதனைச் சாவடியாக போர்ட்பிளேயர் விமான நிலையத்தை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது
- சூரியனை மிக நீண்ட தொலைவில் சுற்றி வரும் அல்ட்டிமா துலே என்ற நுண்கோளின் அருகே அமெரிக்காவில் நியூ ஹொரைசன் என்ற விண்கலம் சென்றுள்ளது
- கதக் எனும் நடனத்தை உலகளவில் பரப்பியதற்காக அமெரிக்க கதக் நடனக் கலைஞரான, அனின்தித்தா அனாம் என்பவருக்கு தேசிய நிருத்ய சிரோமணி - 2019 என்னும் விருது வழங்கப்பட்டது
- ஹைதராபாத்தில் பெண்கள் பாதுகாப்பு கருதி women on wheels போலிஸ் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது
- பிரதான் மந்திரி உஜ்ஜவ்லா யோஜனா திட்டத்தின் கீழ் ஆறு கோடி பயனாளிகள் இலவச எரிவாயு இணைப்பு பெற்றுள்ளனர்
- சென்னை மியூசிக் அகாடமியில் 13 - வது ஆண்டு விழா ஜனவரி 3-ல் தொடங்கியது. இதில் பிரபல நாட்டிய கலைஞரான சாந்தா தனஞ்செயனுக்கு நிருத்ய கலாநிதி விருது வழங்கப்பட்டது
ஜனவரி 4
- விபத்தில்லாத ரயில் பயணத்தை இலக்காகக் கொண்ட இந்திய ரயில்வேயின் திட்டம் 'Missions Zero Accident' திட்டம்
- மதுரை -சென்னை இடையே தேஜஸ் என்ற அதிவேக ரயில் விரைவில் இயக்கப்பட உள்ளது
- நிலவின் இருண்ட பகுதியில் சீனாவின் Chang e-4 என்ற விண்கலம் தரையிறங்கி சாதனை படைத்துள்ளது. இது டிசம்பர் 8ல் விண்ணில் ஏவப்பட்டது
ஜனவரி 5
- தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப கவுன்சில் துணைத் தலைவராக இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை நியமிக்கப்பட்டுள்ளார்
- ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் சதம் அடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்
ஜனவரி 6
- டாட்டா ஓபன் ஏடிபி டென்னிஸ் போட்டியின் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் போபண்ணா-திவிஜ் சரண் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது
- ஹாஃப்மேன் கோப்பை டென்னிஸ் போட்டியில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் - பெலிண்டா ஜோடி பட்டம் வென்றது
- ஆசிய கோப்பை கால்பந்து போட்டி 2019,UAE- ல் நடைபெற்றது
- புரோ கபடி லீக் ஆறாவது சீசனில் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது பெங்களூரு அணி
- 27 வது உலக புத்தக கண்காட்சி புதுடெல்லியில், பிரகதி மைதானத்தில் நடைபெற்றது
ஜனவரி 7
- உலகளாவிய ஆன்லைன் தொகை செலுத்தும் இணைய தளமாகிய 'Remit 2 India' - விற்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்
- பழமையான முத்திரைகள் மற்றும் கல்வெட்டுக்கள் கண்டெடுக்கப்பட்ட ஒடிசாவில் உள்ள பழமையான புத்த மத குடியேற்றப் பகுதியான லலித்கிரி தற்போது அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது
- திரைத்துறையில் ஆஸ்கருக்கு அடுத்த உயரிய விருதான கோல்டன் குளோப் விருது போஹேமியன் ராப்சோடி (Bohemian Rhapsody) என்ற திரைப்படத்துக்கு கிடைத்தது
ஜனவரி 8
- ஆந்திர மாநிலத்தில் கோதாவரி ஆற்றில் மத்திய மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் போலாவரம் திட்டத்தின் கீழ் அணையில் 10,872 சதுர அடி பரப்பளவில் 24 மணி நேரத்தில் கான்கிரீட் பணிகள் செய்து கின்னஸ் சாதனை படைக்கப்பட்டது
- மகாராஷ்டிராவில் ஆர்யமான் தாத்ரா (13 வயது) எழுதிய 'ஸ்னோ பிளேக்ஸ்' கவிதை தொகுப்பு புத்தகம் வெளியிடப்பட்டது
ஜனவரி 9
- தமிழ்நாட்டின் 33-வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி அறிவிக்கப்பட்டது.இது விழுப்புரம் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டது
- உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் கட்டப்பட்டு வருகிறது. தற்போதைய உலகில் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம், ஆஸ்திரேலியா
ஜனவரி 10
- 13 ஆவது சர்வதேச சுகாதார உச்சி மாநாடு -2019 ,ஹைதராபாத்தில் நடைபெற்றது
- ஜி எம் எப் எனப்படும் சர்வதேச நாணய நிதியம் அமைப்பின் தலைமை பொருளாதார நிபுணராக மைசூரைச் சேர்ந்த கீதா கோபிநாத் நியமிக்கப்பட்டுள்ளார் (இந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் மற்றும் இரண்டாவது இந்தியர்)
- டிஜிட்டல் பரிவர்த்தனையை கண்காணிக்க நந்தன் நிலேகனி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது
ஜனவரி 11
- இந்தியாவின் மிக நீண்ட ஒற்றை பாதை கேபிள் பாலமான பியொருங் பாலம்(BYORUNG bridge), அருணாச்சலப் பிரதேசத்தின் சியாங் நதியின் குறுக்கே கட்டப்பட்டு, அம்மாநில முதல்வர் பீமா காண்ட்-ல் திறந்து வைக்கப்பட்டது
ஜனவரி 12
- ஜனவரி 12, தேசிய இளைஞர் தினம்
- 'We are displaced' என்ற புத்தகம் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா யூசப்-ல் எழுதப்பட்டு வெளியிடப்பட்டது
ஜனவரி 13
- 'சங்கீத சாம்ராட் விருது' கர்நாடக இசைக்கலைஞர் பிரமிளா குருமூர்த்திக்கு வழங்கப்பட்டது
- ராஜஸ்தான் மாநிலம் பீகானீரில் சர்வதேச ஒட்டக விழா நடைபெற்றது
- பத்தாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, அமெரிக்காவின் சிகாகோவில் ஜூலை 4 முதல் ஜூலை 7 வரை நடக்கவிருக்கிறது
- சிட்னி சர்வதேச டென்னிஸ் போட்டி 2019-ல் செக்குடியரசின் பெட்ரா குவிடோவா சாம்பியன் பட்டம் வென்றார்
- நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள 2019-ல் உலகில் காண வேண்டிய சிறந்த இடங்களின் பட்டியலில், கர்நாடகாவில் உள்ள ஹம்பி நகரம் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது (52 இடங்களில் இந்தியாவில் இடம் பிடித்த ஒரே இடம் இதுவாகும்)
ஜனவரி 14
- தமிழ்நாடு எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவுற்றது.1969 ஜனவரி 14 சென்னை மாகாணம், தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது
- உலக வங்கி வெளியிட்டுள்ள தொழில் தொடங்க உகந்த நாடுகள் பட்டியல் 2019-ல் இந்தியா 77 வது இடம் பிடித்துள்ளது
- சந்திரிகா சுப்பிரமணியம் எழுதிய 'இணைய குற்றங்களும் இணையவெளிச் சட்டங்களும்' என்ற நூல் டாக்டர் அப்துல்கலாம் தொழில்நுட்ப விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது
- விழுப்புரம் மாவட்டம் திருக்கோயிலூருக்கு அருகே உள்ள வீர சோழ புரத்தில் பாண்டியர் கால கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது
- நூரம்பர்க் சுற்றில் நடந்த FIA ஃபார்முலா 3 ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டியில் வென்ற முதல் இந்தியர் சஹாரா போர்ஸ் இந்தியா அகாடமியை சேர்ந்த ஜெகன் தர்வாலா
ஜனவரி 15
- இந்திய ராணுவத்திற்கு இந்தியரே முதல் இந்திய ராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கரியப்பா பதவி ஏற்ற ஜனவரி 15 இந்திய ராணுவ தினமாக கொண்டாடப்படுகிறது
- 'நாஞ்சில்நாடன்' விருது தமிழில் இயல் ஆய்வாளர் ப.சரவணனுக்கு வழங்கப்பட்டது
- பிலிப்கோட்லர் விருது' பிரதமர் மோடிக்கு வழங்கப்படுகிறது
- நவீன கால சந்தைப்படுத்துதலின் தந்தை பிலிப்கோட்லர்
- நிலவின் மறுபக்கத்திற்கு சீனா அனுப்பிய விண்கலத்தில் இருந்த பருத்தி விதை முளைக்கத் தொடங்கி உள்ளது
- கேலோ இந்தியா யூத் போட்டிகளில் துப்பாக்கி சுடுதலில் தமிழக வீராங்கனை ஜி.வர்ஷா தங்கப்பதக்கம் வென்றார்
- கேரள பிரவாசி பாரதீய திவாஸ் அமைப்பு நடப்பாண்டில் சிறந்த மனிதருக்கான விருதுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு. க. ஸ்டாலினை தேர்வு செய்துள்ளது
ஜனவரி 16
- Beti Bachao Beti Padhao (பெண் குழந்தைகளை பாது காப்போம் கற்பிப்போம்) என்ற திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய மாவட்டமாக திருவண்ணாமலை மாவட்டத்திற்கு விருது வழங்கப்பட்டுள்ளது
- 2019 ஆம் ஆண்டுக்கான ஆப்பிரிக்கா கப் ஆப் நேஷன்ஸ் போட்டிகளை எகிப்து நடத்த உள்ளது என்று ஆப்பிரிக்க கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் அஹமத் தெரிவித்துள்ளார்
- ஹாட் ஸ்டார் நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி அஜித் மோகன் முகநூல்(Facebook) இந்தியா நிறுவனத்தின் புதிய துணை தலைவராகவும், மேலாண் இயக்குனராகவும் பதவி ஏற்றுள்ளார்
ஜனவரி 17
- டெல்லியில் நடைபெற்ற 17-வது டெல்லி சர்வதேச ஓபன் செஸ் போட்டியில், சென்னையைச் சேர்ந்த சிறுவன் குகேஷ் (வயது 12) சாம்பியன் பட்டம் வென்றார். இதன்மூலம் உலகின் 2-ம்இளம்செஸ் கிராண்ட் மாஸ்டர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்
- கடந்த 100 ஆண்டுகளில், 2018 மிகவும் வெப்பமான ஆண்டு என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
ஜனவரி 18
- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறை நெல் ஆய்வு நிலையத்தில் ஆடுதுறை - 53 (ADT-53) என்ற புதிய நெல் ரகம் அறிமுகப்படுத்தப்பட்டது
ஜனவரி 19
- தேசிய சீனியர் ஹாக்கி போட்டியில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக அணி சாம்பியன் பட்டம் வென்றது
- புனேயில் நடைபெற்ற கேலோ இந்தியா யூத் கேம்ஸ் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் தமிழக வீரர் சுரேஷ் குமார் மணிஷ் தங்கம் வென்றார்
- புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் 1353 காளைகள் மற்றும் சுமார் 500 மாடுபிடி வீரர்கள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு கின்னஸ் சாதனையில் இடம் பெற்றது
- அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழிலதிபர் குரிந்தர் சிங் கால்சாவுக்கு, 'ரோசா பார்க்ஸ் டிரைல்பிளேசர்' என்ற விருது வழங்கப்பட்டது
ஜனவரி 20
- இந்தியாவின் இரண்டாவது பாதுகாப்பு தளவாடங்கள் கண்டுபிடிப்பு மையம் நாசிக் (மஹாராஷ்டிரா) நகரில் அமைய உள்ளது
- இரண்டாவது உலக ஆரஞ்சு திருவிழா மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடைபெற்றது
ஜனவரி 21
- ஆசியா மற்றும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், லாரெஸ் world sports awards-க்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்
- சீனாவில் தடுப்புக்காவலில் உள்ள சீன வழக்கறிஞர் யூ வென்செங், 2019ம் ஆண்டில் 'பிராங்கோ- ஜெர்மன் மனித உரிமைகள்' விருதை பெற்றுள்ளார்
- 'தந்தைபெரியார்' விருது அதிமுக அமைப்பு செயலாளர் சி. பொன்னையன் அவர்களுக்கு தமிழக முதல்வரால் வழங்கப்பட்டது
- அயர்லாந்தில் நடைபெற்ற குதிரைப் பந்தய போட்டியில் மைக்கேல் ஸ்வீனே முதலிடத்தை பெற்றார்
- சர்வதேச முகவாண்மை நிறுவனமான பி.டபிள்யூ.சி வெளியிட்டுள்ள பட்டியலில் உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சியில் இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளது அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது
- சர்வதேச உரிமை குழுவான ஆக்ஸ்பாம் வெளியிட்டுள்ள அறிக்கையில் உலகம் முழுவதும் பெண்கள் தங்கள் வீடுகளில் பார்க்கும் வேலையிலன் மதிப்பு,ஆப்பிள் நிறுவன ஆண்டு வருமானத்தை விட 43 மடங்கு அதிகம் என கண்டறியப்பட்டுள்ளது
ஜனவரி 22
- ஐசிசி 2018-ன் சிறந்த டெஸ்ட் வீரர், ஐசிசி 2018-ன் சிறந்த ஒரு நாள் வீரர், ஆண்டின் சிறந்த வீரருக்கான கேரி சோபர்ஸ் விருது ஆகிய மூன்று விருதுகளுக்கும் விராட் கோலி தேர்வாகியுள்ளார்
ஜனவரி 23
- புனே (மகாராஷ்டிரா) நகரில் நடைபெற்ற இரண்டாவது கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டியில் மகாராஷ்டிர மாநிலம் 85 தங்கம் உட்பட மொத்தம் 228 பதக்கங்கள் பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது
- நகர்ப்புற சூழலில் கட்டிடக்கலை பாரம்பரியத்தை பாதுகாக்கும் நகரம் குறித்த ஆய்வு பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் கட்டிடக்கலையின் உலக தலைநகராக யுனெஸ்கோ அறிவித்துள்ளது
- 'சன்சத் ரத்னா' விருது பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அனுராக் தாகூருக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வழங்கினார்
- Line on Fire:Cease Fire Violation and India- Pakistan Escalation Dynamics என்ற புத்தகம் ஹேப்பிமேன் ஜேகப் என்பவரால் எழுதப்பட்டு வெளியிடப்பட்டது
ஜனவரி 24
- ஜனவரி 24 தேசிய பெண் குழந்தைகள் தினம்
- பயங்கரவாதியாக இருந்து மனம் திருந்தி சரணடைந்த பின் ராணுவத்தில் சேர்ந்து, பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் உயிர்நீத்த நசீர் வானிக்கு 'அசோக் சக்ரா' விருது வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
ஜனவரி 25
- ஜனவரி 25 தேசிய வாக்காளர் தினம்
- 'சுபாஷ் சந்திரபோஸ் அப்தா பிரபந்தன் புரஸ்கார்' என்ற வருடாந்திர விருதை அரசு ஏற்படுத்தி உள்ளது
ஜனவரி 26
- ஜனவரி 26 சர்வதேச சுங்க தினம்
- டெல்லியில் நடைபெற்ற இந்திய குடியரசு தினத்தின் ஆண்கள் பிரிவில் அணிவகுப்புக்கு முதன்முறையாக பாவனா கஸ்தூரி என்ற பெண் தலைமை தாங்கினார்
- இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சாய்னா நேவால் பட்டம் வென்றார்
- ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் ஜப்பான் வீராங்கனை நயோமி ஒசாகா சாம்பியன் பட்டம் வென்றார்
- வீர தீர செயல் புரிந்த சூரியகுமார், ஸ்ரீதர், ரஞ்சித் குமார் ஆகிய மூன்று இளைஞர்களுக்கும் 'அண்ணா விருது' தமிழக முதல்வரால் வழங்கப்பட்டது
- அமெரிக்காவை அடிப்படையாகக் கொண்ட இந்திய கவிஞர் ரஞ்சனா முரளிக்கு 'மகளிருக்கான குரல்' விருது வழங்கப்பட்டது
- புகழ்பெற்ற இந்திய அறிவியலாளரான CNR.ராவ் ஐக்கிய அரபு அமீரகத்தின் மேம்படுத்தப்பட்ட பொருட்களுக்கான மையத்தின் 'முதலாவது ஷேக் சாத் மூலப்பொருட்கள் மீதான ஆராய்ச்சிக்கான சர்வதேச விருதுக்கு' தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்
ஜனவரி 27
- 1264 ரூபாய் கோடியில் கட்டப்பட்டுள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம் (எய்ம்ஸ் மருத்துவமனைக்கு) பிரதமர் அடிக்கல் நாட்டினார்
- டெல்லி - வாரணாசி இடையிலான அதிவேக ரயிலுக்கு 'வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்' என பெயரிடப்பட்டுள்ளது
- டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழா அணிவகுப்பில் இசைப்பதற்காக சங்நாதம் என்ற பெயரில் புதிய கீதம் உருவாக்கப்பட்டது
- பூமியின் பழமையான பாறை நிலவில் கண்டுபிடிக்கப்பட்டது
- யோகாவில் 14 உலக சாதனைகளை படைத்துள்ள நெல்லையை சேர்ந்த பிரியா(9 வயது)-க்கு ஜெருசலேம் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது
ஜனவரி 28
- குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்ற ஊர்திகளில் சிறப்பான காட்சியமைப்புக்கான முதல் பரிசு திரிபுராவிற்கு கிடைத்தது
- பிரான்ஸ் நாட்டின் யுனெஸ்கோ அரங்கில் நடைபெற்ற மொழிகள் மற்றும் பண்பாடுகள் அழிவதை தடுப்பதற்கான உலகளாவிய கருத்தரங்கில், 2019ஆம் ஆண்டு 'உள்நாட்டு மொழி ஆண்டாக' அறிவித்துள்ளது
- சர்வதேச அளவில் பயணிகள் வருகை அதிகம் உள்ள விமான நிலையங்களில், ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் சர்வதேச விமான நிலையம் தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக முதலிடத்தில் உள்ளது
- இத்தாலியில் நடைபெற்ற சர்வதேச கார் பந்தயத்தில் பிரான்ஸ் நாட்டு வீரர் செபாஸ்டியன் ஓஜிர் வெற்றி பெற்றார்
ஜனவரி 29
- உலக சுகாதார அமைப்பின் (WHO) , தென்கிழக்கு ஆசியாவின் பிராந்திய இயக்குனராக டாக்டர்.பூனம் கெத்ரபால் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்
- Transparency International என்ற அமைப்பு வெளியிட்டுள்ள உலகம் முழுவதும் ஊழல் மிகுந்த 170 நாடுகள் பட்டியலில் இந்தியா 78 -வது இடத்தில் உள்ளது
- டெல்லியில் இந்திய அளவிலான ஆரோக்கிய பாரத பயணம் நிறைவு விழா நிகழ்ச்சியில் தமிழ்நாட்டுக்கு சிறந்த மாநிலத்திற்கான விருது வழங்கப்பட்டது
- பாகிஸ்தானில் சிவில் கோர்ட்டு நீதிபதியாக முதல்முறையாக இந்து மதத்தை சேர்ந்த சுமன் குமாரி என்ற பெண் நியமிக்கப்பட்டுள்ளார்
- அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் உயரிய 'கர்நாட் விருது' ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலுக்கு வழங்கப்பட்டது
- ரஷ்யாவின் ஜிஎம் மேக்சிம் லுகோவ்ஸ்காய்-ஐ தோற்கடித்து, ஜார்ஜியாவின் லெவன் பன்சுலையா, 11-வது சென்னை ஓபன் சர்வதேச சதுரங்க போட்டித் தொடரை வென்றார்
ஜனவரி 30
- 70 ஆவது குடியரசு தினத்தில் பாதுகாப்பு அமைச்சகம் 'RDP இந்தியா - 2019' என்னும் கைபேசி சேவை தொடங்கி உள்ளது
- 552 காரட் எடை கொண்ட உலகில் பெரிய வைரங்களில் ஒன்றான மஞ்சள் வைரம் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
- பாகிஸ்தானில் கரும்புச்சாற்றை தேசிய பானமாக அறிவித்துள்ளது
- போக்குவரத்தை ஒழுங்குபடுத்த சென்னையை அடுத்து சேலத்தில் ரோபோ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
- தமிழகத்தின் முதல் பிபா சர்வதேச தரத்திலான செயற்கை புல்தரை கால்பந்து மைதானத்தை சென்னை துரைப்பாக்கத்தில் எப்.சி.மெட்ராஸ் கிளப் அமைத்துள்ளது
- சீனாவில் ஸ்வாட் (SWAT) எனப்படும் தீவிரவாத எதிர்ப்பு கமாண்டோ படையில் பெண்கள் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு 'பால்கன் கமாண்டோ யூனிட்' என்று பெயரிடப்பட்டுள்ளது
ஜனவரி 31
- 2020 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள், பாரா ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற உள்ளன
- 2018ம் ஆண்டின் 'தெற்காசிய இலக்கியத்திற்கான DSC விருது' ஜெயிந்த் கய்கினி எழுதிய புத்தகத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'No Presents Please' என்ற நாவலுக்கு கிடைத்துள்ளது
- உலகின் நீளமான முப்பரிமான முறையில் அச்சிடப்பட்ட கான்கிரீட் பாலம் சீனாவில் திறப்பு பட்டு உள்ளது. இது ஷாங்காய் நகரில் உள்ள வென்சாபேங்க் நதியின் மீது அமைந்துள்ளது. இதனை சீனாவிலுள்ள ஷிங்குவா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் சீ வெய்கு என்பவர் வடிவமைத்தார்
- மலேசியாவின் 16-வது அரசராக, சுல்தான் அப்துல்லா இப்னி சுல்தான் அகமது ஷா- வை அறிவித்துள்ளது
- கைவினைஞர்கள் மற்றும் கைவினைப் பொருட்கள் தயாரித்து உள்ளூர் தயாரிப்புகளை மேம்படுத்துவதற்காக நாட்டின் முதல் புவியியல் குறியீடு (GI) நிலையத்தை,கோவாவின் டபோலிம் சர்வதேச விமான நிலையத்தில் தொடங்கப்பட்டுள்ளது
Comments
Post a Comment