6 - ம் வகுப்பு தமிழ் - கண்ணெனத்தகும்
மூதுரை
மூதுரையை இயற்றியவர் - ஔவையார்
இவர் ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், நல்வழி போன்ற நூல்களையும் இயற்றியுள்ளார். மூதுரை என்னும் சொல்லுக்கு மூத்தோர் கூறும் அறிவுரை என்பது பொருள். இந்நூலில் 31 பாடல்கள் உள்ளன
துன்பம் வெல்லும் கல்வி
துன்பம் வெல்லும் கல்வி பாடலை இயற்றியவர் - பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
இவர் எளிய தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துக்களை வலியுறுத்திப் பாடியவர். மக்கள் கவிஞர் என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார்
கல்விக்கண் திறந்தவர்
கல்விக் கண் திறந்தவர் என்று தந்தை பெரியாரால் பாராட்டப் பெற்றவர் காமராசர்
காமராசரின் சிறப்புப் பெயர்கள்
பெருந்தலைவர்
படிக்காத மேதை
கர்மவீரர்
கறுப்புக் காந்தி
ஏழைப்பங்காளர்
தலைவர்களை உருவாக்குபவர்
காமராசரின் கல்விப் பணிகள்
காமராசர் முதலமைச்சராக பதவி ஏற்ற நேரத்தில் ஏறக்குறைய 6000 தொடக்கப் பள்ளிகள் மூடப்பட்டு இருந்தன. அவற்றை உடனடியாக திறக்க ஆணையிட்டார். மாநிலம் முழுக்க அனைவருக்கும் இலவச கட்டாய கல்வி சட்டத்தை இயற்றி தீவிரமாக நடைமுறைப் படுத்தினார். மாணவர்கள் பசியின்றி படிக்க மதிய உணவு திட்டத்தைக் கொண்டு வந்தார். பள்ளிகளில் ஏற்றத்தாழ்வின்றி குழந்தைகள் கல்வி கற்க சீருடைத் திட்டத்தை அறிமுகம் செய்தார். பள்ளிகளின் வசதிகளைப் பெருக்க பள்ளிச் சீரமைப்பு மாநாடுகள் நடத்தினார். தமிழ்நாட்டில் பல கிளை நூலகங்களைத் தொடங்கினார். மாணவர்கள் உயர்கல்வி பெற பொறியியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், கால்நடை மருத்துவக் கல்லூரிகள், ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் ஆகியவற்றைப் புதிதாக தொடங்கினார். இவ்வாறு கல்விப் புரட்சிக்கு வித்திட்டவர் காமராசரே ஆவார்
காமராசருக்குத் தமிழக அரசு செய்த சிறப்புகள்
- மதுரைப் பல்கலைக்கழகத்திற்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகம் எனப் பெயர் சூட்டப்பட்டது
- நடுவண் அரசு 1976 ல் பாரத ரத்னா விருது வழங்கியது
- காமராசர் வாழ்ந்த சென்னை இல்லம் மற்றும் விருதுநகர் இல்லம் ஆகியன அரசுடமையாக்கப்பட்டு நினைவு இல்லங்களாக மாற்றப்பட்டன
- சென்னை மெரினா கடற்கரையில் சிலை நிறுவப்பட்டது
- சென்னையில் உள்ள உள்நாட்டு விமான நிலையத்திற்கு காமராசர் பெயர் சூட்டப்பட்டுள்ளது
- கன்னியாகுமரியில் காமராசருக்கு மணிமண்டபம் 2 - 10 - 2000 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது
நூலகம் நோக்கி
ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய நூலகம் - அண்ணா நூற்றாண்டு நூலகம்
ஆசியக் கண்டத்திலேயே மிகப்பெரிய நூலகம் சீனாவில் உள்ளது
இந்திய நூலக அறிவியலின் தந்தை என்று அழைக்கப்படுபவர் - முனைவர் இரா.அரங்கநாதன். இவர்தான் நூலக விதிகளை உருவாக்கியவர்
சிறந்த நூலகர்களுக்கு டாக்டர். எஸ். ஆர். அரங்கநாதன் விருது வழங்கப்படுகிறது
இன எழுத்துக்கள்
சில எழுத்துக்களுக்கு இடையே ஒலிக்கும் முயற்சி, பிறக்கும் இடம் ஆகியவற்றில் ஒற்றுமை உண்டு. ஒற்றுமை உள்ள எழுத்துக்கள் இன எழுத்துகள் ஆகும்.ஆறு வல்லின மெய் எழுத்துகளும், ஆறு மெல்லின எழுத்துகளும் இன எழுத்துக்கள் ஆகும். உயிரெழுத்துக்களில் குறிலுக்கு நெடிலும்,நெடிலுக்குக் குறிலும் இன எழுத்துக்கள் ஆகும்
Comments
Post a Comment