6 - ம் வகுப்பு தமிழ் - இயற்கை
சிலப்பதிகாரம்
சிலப்பதிகாரத்தை இயற்றியவர் - இளங்கோவடிகள்
இவர் சேர மன்னர் மரபைச் சேர்ந்தவர் என்று சிலப்பதிகாரப் பதிகம் கூறுகிறது. இவர் காலம் கி.பி இரண்டாம் நூற்றாண்டு என்பர். ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று சிலப்பதிகாரம். இதுவே தமிழின் முதல் காப்பியம். இது முத்தமிழ்க் காப்பியம், குடிமக்கள் காப்பியம் என்று போற்றப்படுகிறது.சிலப்பதிகாரமும், மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
காணி நிலம்
காணி நிலம் பாடலைப் பாடியவர் - பாரதியார்
பாரதியாரின் இயற்பெயர் சுப்பிரமணியன்.இளமையிலேயே சிறப்பாகக் கவி பாடும் திறன் பெற்றவர். எட்டயபுர மன்னரால் பாரதி என்னும் பட்டம் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டவர்.தம் கவிதையின் வழியாக விடுதலை உணர்வை ஊட்டியவர்.மண் உரிமைக்காகவும்,பெண் உரிமைக்காகவும் பாடியவர். நாட்டுப்பற்றும் மொழிப்பற்றும் மிக்க பாடல்கள் பலவற்றைப் படைத்தவர். பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு, குயில்பாட்டு முதலிய பல நூல்களை இயற்றியுள்ளார்.
சிறகின் ஓசை
பறவைகள் கண்டம் விட்டுக் கண்டம் பறக்கின்றன. அவை பெருங்கடல்களையும் மலைகளையும் கடந்து போகின்றன. குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு புறப்பட்ட இடத்திற்கே வந்து சேர்கின்றன. இவ்வாறு பறவைகள் இடம் பெயர்தலை வலசை போதல் என்பர்.
உணவு, இருப்பிடம், தட்ப வெப்பநிலை மாற்றம், இனப்பெருக்கம் ஆகியவற்றிற்காகவே பறவைகள் இடம் பெயர்கின்றன. நிலவு, விண்மீன், புவியீர்ப்புப் புலம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே பறவைகள் இடம் பெயர்கின்றன. பொதுவாக வடக்கிலிருந்து தெற்கு நோக்கியும், மேற்கிலிருந்து கிழக்கு நோக்கியும் பறவைகள் வலசை செல்கின்றன.
வலசையின் போது பறவையின் உடலில் ஏற்படும் மாற்றங்கள்
- தலையில் சிறகு வளர்தல்
- இறகுகளின் நிறம் மாறுதல்
- உடலில் கற்றையாக முடி வளர்தல்
தமிழகத்திற்கு வெளிநாட்டுப் பறவைகள் வலசை வருவது பற்றி இலக்கியங்களிலும் செய்திகள் உள்ளன. ஏறத்தாழ 1500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சத்திமுத்தப் புலவர் "நாராய் நாராய் செங்கால் நாராய்" என்ற பாடலை எழுதியுள்ளார்.அப்பாடலில் உள்ள "தென்திசைக் குமரிஆடி வடதிசைக்கு ஏகுவீர் ஆயின்" என்னும் அடிகள் பறவைகள் வலசை வந்த செய்தியைக் குறிப்பிடுகின்றன.
சிறகடிக்காமல் கடலையும் தாண்டிப் பறக்கும் பறவை கப்பல் பறவை ஆகும். இது தரையிறங்காமல் 400 கிலோ மீட்டர் வரை பறக்கும். இது கப்பல் கூழைக்கடா, கடற்கொள்ளைப் பறவை என்றும் அழைக்கப்படுகிறது.
இந்தியாவின் பறவை மனிதர் - டாக்டர் சலீம் அலி
உலகிலேயே நெடுந்தொலைவு 22,000 கிலோ மீட்டர் பயணம் செய்யும் பறவையினம் - ஆர்டிக் ஆலா
பறவை பற்றிய படிப்பு ஆர்னித்தாலஜி எனப்படும்
உலகச் சிட்டுக்குருவிகள் நாள் மார்ச் - 20
முதலெழுத்தும் சார்பெழுத்தும்
எழுத்துக்கள் இரண்டு வகைப்படும்
1.முதல் எழுத்து
2.சார்பு எழுத்து
1. முதல் எழுத்து
உயிர் எழுத்துக்கள் 12 மெய் எழுத்துக்கள் 18 ஆகிய முப்பது எழுத்துகளும் முதல் எழுத்துகள் ஆகும்
2. சார்பு எழுத்துகள்
முதலெழுத்துகளைச் சார்ந்து வரும் எழுத்துக்கள் சார்பெழுத்துக்கள் ஆகும். இவை பத்து வகைப்படும்
- உயிர்மெய்
- ஆய்தம்
- உயிரளபெடை
- ஒற்றளபெடை
- குற்றியலிகரம்
- குற்றியலுகரம்
- ஐகாரக் குறுக்கம்
- மகரக்குறுக்கம்
- ஔகாரக் குறுக்கம்
- ஆய்தக்குறுக்கம்
உயிர்மெய்
மெய் எழுத்துக்களும் உயிரெழுத்துக்களும் ஒன்றுடன் ஒன்று சேர்வதால் உயிர் மெய் எழுத்துக்கள் தோன்றுகின்றன
ஆய்தம்
மூன்று புள்ளிகளை உடைய தனித்த வடிவம் பெற்றது
முப்புள்ளி, முப்பாற்புள்ளி, தனிநிலை என்ற வேறு பெயர்களும் உண்டு
தனக்கு முன் ஒரு குறில் எழுத்தையும் தனக்குப் பின் ஒரு வல்லின உயிர்மெய் எழுத்தையும் பெற்றுச் சொல்லின் இடையில் மட்டுமே வரும்
திருக்குறள்
திருக்குறளை இயற்றியவர் - திருவள்ளுவர்
திருவள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவர். வான்புகழ் வள்ளுவர், தெய்வப்புலவர், பொய்யில் புலவர் முதலிய பல சிறப்பு பெயர்கள் இவருக்கு உண்டு.
திருக்குறள் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என மூன்று பிரிவுகளைக் கொண்டது. பதினெண் கீழ்கணக்கு நூல்களுள் ஒன்று. திருக்குறள் 133 அதிகாரங்களில் 1330 குறள்பாக்களைக் கொண்டுள்ளது.திருக்குறளுக்கு உலகப்பொதுமறை, வாயுறை வாழ்த்து முதலிய பல சிறப்பு பெயர்கள் வழங்கப்படுகின்றன
Comments
Post a Comment