6 - ம் வகுப்பு தமிழ் - பாடறிந்து ஒழுகுதல்
ஆசாரக்கோவை
ஆசாரக்கோவை நூலை எழுதியவர் - பெருவாயின் முள்ளியார்
இவர் பிறந்த ஊர் கயத்தூர். ஆசாரக்கோவை என்பதற்கு நல்ல ஒழுக்கங்களின் தொகுப்பு என்பது பொருள். இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. இந்நூல் நூறு வெண்பாக்களைக் கொண்டது
தமிழர் பெருவிழா
பொங்கல் விழா தமிழர் திருநாள் என்றும் போற்றப்படுகிறது
கதிரவனுக்கு நன்றி கூறிச் சிறப்பு செய்யும் விழா பொங்கல் விழா. உழவர்கள் ஆடித்திங்களில் விதைப்பர். தைத்திங்களில் அறுவடை செய்து பயன் அடைவர். தைத் திங்களின் முதல் நாளில் பொங்கலிட்டு வழிபடுவர். எனவே இத்திருவிழாவை அறுவடைத் திருவிழா என்றும் அழைப்பர்.
உழவர்கள் இயற்கைக்கும் தம்முடன் உழைத்த கால்நடைகளுக்கும் இந்நாளில் நன்றி தெரிவித்து மகிழ்கின்றனர். எனவே இவ்விழாவை உழவர் திருநாள் என்றும் கூறுவர்.
போகித் திருநாள்
பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பது ஆன்றோர் மொழி. வீட்டில் உள்ள பயனற்ற பொருள்களை நீக்கி வீட்டைத் தூய்மை செய்யும் நாள் போகித் திருநாள். இது மார்கழி மாதத்தின் இறுதி நாள் ஆகும்
வாழ்க்கைக்கு வளம் தரும் மழைக் கடவுளை வழிபடும் நோக்கில் அக்காலத்தில் போகிப் பண்டிகை இந்திர விழாவாகக் கொண்டாடப்பட்டது
பொங்கல் திருநாள்
தை மாதத்தின் முதல் நாள் பொங்கல் திருநாள் ஆகும்
பொங்கல் என்பதற்கு பொங்கிப் பெருகி வருவது என்று பொருள்
தை முதல் நாளில் திருவள்ளுவர் ஆண்டு தொடங்குகிறது. தை இரண்டாம் நாள் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுகிறது
மாட்டுப் பொங்கல்
பொங்கலுக்கு அடுத்த நாள் மாட்டுப் பொங்கல். மாடுகள் உழவர்களின் செல்வமாக மதிக்கப்படுகின்றன. மாடு என்ற சொல்லுக்கு செல்வம் என்னும் பொருளும் உண்டு. உழவுக்கும் உழவருக்கும் உற்ற துணையாக மாடுகள் விளங்குகின்றன. அவற்றிற்கு நன்றி செலுத்தும் வகையில் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது
அறுவடைத் திருநாள் ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மகர சங்கராந்தி என்று கொண்டாடப்படுகிறது. பஞ்சாப் மாநிலத்தில் லோரி என்று கொண்டாடப்படுகிறது. குஜராத், இராஜஸ்தான் மாநிலத்தில் உத்தராயன் என்று கொண்டாடப்படுகிறது
மனம் கவரும் மாமல்லபுரம்
சிற்பக்கலை நான்கு வகைப்படும்
குடைவரைக் கோயில்கள்
ஒற்றைக்கல் கோயில்கள்
கட்டுமானக் கோயில்கள்
புடைப்புச் சிற்பங்கள்
இந்த நான்கு வகைகளும் காணப்படும் ஒரே இடம் மாமல்லபுரம்
மயங்கொலிகள்
உச்சரிப்பில் சிறிதளவு மட்டுமே வேறுபாடு உள்ள ஒலிகள் மயங்கொலிகள் எனப்படும்
ண,ன,ந
ல,ழ,ள
ர,ற
ஆகிய எட்டும் மயங்கொலி எழுத்துக்கள் ஆகும்
சொற்களில் ண,ன இடம் பெறும் வகை
ட என்னும் எழுத்துக்கு முன் ண் வரும். எடுத்துக்காட்டு: கண்டம், வண்டி, நண்டு
ற என்னும் எழுத்துக்கு முன் ன் வரும். எடுத்துக்காட்டு: மன்றம், நன்றி, கன்று
பொருள் அறிக:
வாணம் - வெடி
வானம் - ஆகாயம்
பணி - வேலை
பனி - குளிர்ச்சி
விலை - பொருளின் மதிப்பு
விளை - உண்டாக்குதல்
விழை - விரும்பு
இலை - செடியின் இலை
இளை - மெலிந்து போதல்
இழை - நூல் இழை
ஏரி - குளம்
ஏறி - மேலே ஏறி
கூரை - வீட்டின் கூரை
கூறை - புடவை
Comments
Post a Comment