தென்னிந்திய அரசுகள்
- பண்டைய தமிழகம், சேர, சோழ, பாண்டிய நாடு என்ற முப்பெரும் அரசியல் பிரிவுகளைக் கொண்டதாக இருந்தது. அக்காலம் சங்க காலம் எனப்படும்
பல்லவப் பேரரசு
- பல்லவ மரபை முற்காலப் பல்லவர்,பிற்காலப் பல்லவர் என பிரித்து வழங்குவர்
- பல்லவர்களின் தலைநகரம் காஞ்சிபுரம் ஆகும்
பிற்காலப் பல்லவர்கள் (கி.பி. 570 - 903)
- பிற்கால பல்லவ அரசர்களில் முதன்மையானவர் சிம்மவிஷ்ணு
- இவர் களப்பிரர்களை வீழ்த்தி பல்லவர் ஆட்சியை தொண்டை மண்டலத்தில் தொடங்கி வைத்தார்
- இவர் அவனிசிம்மன் அதாவது உலகின் சிங்கம் எனப் புகழப்பட்டார்
முதலாம் மகேந்திரவர்மன் (கி.பி. 600 - 630)
- சிம்ம விஷ்ணுவின் மகன் முதலாம் மகேந்திரவர்மன் ஆவார்
- மகேந்திரவர்மன் தமது ஆட்சியின் தொடக்கத்தில் சமண சமயத்தைப் பின்பற்றினார். பின்னர் சைவக்குரவர் அப்பர் என்பவரால் சைவ சமயத்திற்கு மாற்றப்பட்டார்
முதலாம் நரசிம்மவர்மன் (கி.பி.630 - 668)
- முதலாம் மகேந்திரவர்மனின் மகன் முதலாம் நரசிம்மவர்மன் ஆவார்
- இவர் மாமல்லன் என்று அழைக்கப்பட்டார். இதற்கு மற்போரில் சிறந்தவன் என்பது பொருளாகும்
- சாளுக்கியர் தலைநகரான வாதாபிக்குப் படையெடுத்துச் சென்று வென்றதால் இவர் வாதாபி கொண்டான் எனவும் புகழப்பட்டார்
- நரசிம்மவர்மன் ஆட்சியின் போதுதான் சீனப் பயணி யுவான் சுவாங் தலைநகர் காஞ்சிக்கு வருகை தந்தார்
இரண்டாம் நரசிம்மவர்மன் (இராஜசிம்மன்) (கி.பி. 691 - 728)
- முதலாம் பரமேஸ்வரவர்மனின் மகன் இரண்டாம் நரசிம்மவர்மன் ஆவார்
- இவரது ஆட்சிக் காலத்தில் பல்லவ நாடு அமைதியும், வளமும் கொண்டு விளங்கியது
- காஞ்சிபுரத்தில் கைலாசநாதர் கோயில், மாமல்லபுரத்தில் கடற்கரைக் கோயில், பனைமலையில் தாளகிரீஸ்வரர் கோயில் போன்ற பல ஆலயங்களைக் கட்டியுள்ளார்
இரண்டாம் பரமேஸ்வரவர்மன் (கி.பி 728 - 731)
- இரண்டாம் நரசிம்மவர்மனின் மகன் இரண்டாம் பரமேஸ்வரவர்மன் ஆவார்
- கங்கர்களோடு நடைபெற்ற போரில் பரமேஸ்வரவர்மன் கொல்லப்பட்டார்
- இவரது மரணத்துக்குப் பிறகு இவரின் மகன்கள் ஆட்சிக்கு வராத காரணத்தினால் சிம்மவிஷ்ணுவால் தொடங்கப்பட்ட பிற்கால பல்லவ மரபு முடிவடைந்தது
இரண்டாம் நந்திவர்மன் (கி.பி. 731 - 796)
- இரண்டாம் பரமேஸ்வரனின் இறப்பிற்குப் பிறகு சிம்மவிஷ்ணுவின் தம்பியும், இரண்யவர்மனின் மகனுமான இரண்டாம் நந்திவர்மன் என்பவரை பல்லவ அமைச்சர்கள், கடிகைகளின் (கல்வி நிலையங்கள்) உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரால் பல்லவ அரசராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்
- பல்லவ மன்னர்களில் குறிப்பிடத்தக்க மற்றொரு மன்னர் மூன்றாம் நந்திவர்மன் (கி.பி. 847 - 870)
- இவர் தெள்ளாறு என்னுமிடத்தில் நடந்த போரில் பாண்டிய மன்னன் ஸ்ரீவல்லபனை வென்றதால் தெள்ளாறு எறிந்த நந்திவர்மன் என நந்திக்கலம்பகம் புகழ்கிறது
பல்லவப் பேரரசின் வீழ்ச்சி
- கடைசி பல்லவ அரசன் அபராஜிதனை (கி.பி. 885 - 903) சோழ மன்னர் ஆதித்தன் தோற்கடித்தார்
- அபராஜித்தனுக்குப் பிறகு தொண்டை மண்டலத்தில் பல்லவர்கள் ஆட்சி முடிவுற்றது
பல்லவர்களின் நிர்வாகம்
- பல்லவ நாடு ராஷ்டிரம் எனப்படும் பல மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டது
- மண்டலங்கள் பல விஷயங்களாகவும் (கோட்டங்களாகவும்), விஷயங்கள் பல நாடுகளாகவும், நாடுகள் பல ஊர்களாகவும் பிரிக்கப்பட்டன
- நிர்வாகத்தின் அடிப்படை அலகு கிராமமாகும்
- கிராமத்தை நிர்வகிக்க ஊர் அவை இருந்தது
இலக்கியம்
- முதலாம் மகேந்திரவர்மன் மத்தவிலாச பிரகாசனம், பகவத்வியூகம் ஆகிய நூல்களை எழுதினார்
- பாரவி கீதார்ஜுனியம் என்ற நூலை எழுதினார்
- தண்டி என்பவர் அவந்தி சுந்தரி கதாசாரம் என்னும் நூலையும், பெருந்தேவனார் பாரத வெண்பாவையும் எழுதினார்
பல்லவர் கால கலைகள்
- முதலாம் மகேந்திரவர்மன் இசையில் வல்லவராய் திகழ்ந்ததால் சங்கீரணஜாதி என்றும், அவரது ஓவிய ஆற்றலால் சித்திரக்காரப்புலி என்றும் புகழப்பட்டார்
- பல்லவர் காலத்து அழகிய ஓவியங்கள் காஞ்சி கைலாசநாதர் கோயிலில் காணப்படுகின்றன
சோழப் பேரரசு
- சங்க காலத்தில் சோழர்கள் திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர் ஆகிய பகுதிகளை ஆட்சி செய்துள்ளனர். அவர்களது தலைநகர் உறையூர்
- முற்காலச் சோழர்களில் கரிகால சோழன் புகழ் பெற்றவர்
- இவர் நிலங்களை அளந்து விதித்ததோடு சுங்க வரியை நீக்கி வணிகத்தை எளிமை படுத்தியதால் சுங்கம் தவிர்த்த சோழன் என போற்றப்பட்டார்
- இவர் காவிரி ஆற்றின் குறுக்கே கல்லணையை கட்டினார்
பிற்காலச் சோழர்கள்
- விஜயாலயச் சோழன் (கி.பி. 850 - 871) முத்தரையர்களிடமிருந்து தஞ்சாவூரைக் கைப்பற்றினார். இதுவே பிற்கால சோழர்கள் ஆட்சி அமைக்க அடித்தளமாக அமைந்தது
- தஞ்சாவூர் இவர்களின் தலைநகரமானது
- ஆதித்திய சோழனின் மகன் முதலாம் பராந்தகன் (கி.பி. 907 - 955) பாண்டிய நாட்டின் மீது படையெடுத்து, அதன் தலைநகரான மதுரையை வென்றதால் மதுரை கொண்டான் என புகழப்பட்டார்
- முதலாம் பராந்தகனுக்குப் பிறகு ஆட்சி செய்தவர்கள்
1. கண்டராதித்தன் (கி.பி. 949 - 957)
2. அரிஞ்சயன் (கி.பி. 956 - 957)
3. இரண்டாம் பராந்தகன் (கி.பி. 956 - 973)
4. ஆதித்தன் (கி.பி. 956 - 966)
5. உத்தமச்சோழன் (கி.பி. 965 - 985)
முதலாம் இராஜராஜசோழன் (கி.பி. 985 - 1014)
- சோழ மரபில் ஆட்சி செய்த மன்னர்களில் மிகச் சிறந்த ஆட்சியாளர் முதலாம் இராஜராஜ சோழன் ஆவார்
முதலாம் இராஜேந்திரன் (கி.பி. 1012 - 1044)
- வங்காளத்தின் மீது படையெடுத்த இராஜேந்திரன் அந்நாட்டு மன்னர் மகிபாலனை வென்றார்.இவ்வெற்றியின் நினைவாக கங்கை கொண்ட சோழபுரம் என்னும் நகரை நிறுவினார்
முதலாம் குலோத்துங்க சோழன் (கி.பி. 1071 - 1122)
- முதலாம் இராஜேந்திர சோழனின் மகளான அம்மங்காதேவி என்பவரின் மகனே முதலாம் குலோத்துங்க சோழன் ஆவார்
- இவர் நிலங்களை அளந்து வரி விதித்ததோடு, சுங்க வரியை நீக்கி வணிகத்தை எளிமைபடுத்தியதால் சுங்கம் தவிர்த்த சோழன் எனப் போற்றப்பட்டார்
சோழர்களின் ஆட்சி முறை
- சோழ நாட்டின் நிர்வாக அடிப்படை அலகு ஊர் என்பதாகும்
- பல ஊர்கள் சேர்ந்தவை வளநாடு என்றும், பல வளநாடுகள் சேர்ந்தது மண்டலம் என்றும், மண்டலங்கள் அனைத்தும் ஒருங்கே சேர்ந்ததாக சோழநாடு விளங்கியது
- கிராம சபை உறுப்பினர்கள் குடவோலை முறையின் படி தேர்ந்தெடுக்கப்பட்டனர்
வரி பொத்தகம்
- வரி விதிப்பு நடைமுறைகளை சோழர் காலத்தில் ஓலைச்சுவடிகளில் எழுதித் தொகுத்தனர். இது வரி பொத்தகம் (புத்தகம்) எனப்பட்டது
- இராஜராஜன் காலத்தில் (கி.பி. 1001) வரி விதிப்புக்கான கணக்கெடுப்புப் பணி சேனாதிபதி குரவன் என்பவரால் மேற்கொள்ளப்பட்டது
இலக்கியம்
- சேக்கிழாரால் பெரிய புராணமும் (திருத்தொண்டர் புராணம்), திருத்தக்கதேவரால் சீவக சிந்தாமணியும் எழுதப்பட்டன
- கம்பராமாயணத்தை கம்பரும், கலிங்கத்துப்பரணியை ஜெயங்கொண்டாரும் எழுதினர்
- சைவ நூலான பன்னிரு திருமுறைகளை நம்பியாண்டார் நம்பியும், வைணவ நூலான நாலாயிர திவ்யபிரபந்தத்தை நாதமுனியும் தொகுத்தனர்
- மூவருலா, குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ், தக்கயாகபரணி ஆகியவற்றை ஒட்டக்கூத்தர் எழுதினார்
பாண்டியப் பேரரசு
- பாண்டிய பேரரசு, இன்றைய மதுரை, திருநெல்வேலி மாவட்டங்களும், திருச்சிராப்பள்ளியின் ஒரு பகுதி மற்றும் திருவாங்கூரின் சில பகுதிகளை உள்ளடக்கியதாக இருந்தது
முதலாம் பாண்டியப் பேரரசு
- பாண்டிய அரசர் கடுங்கோன், களப்பிரர்களை வென்று கி.பி. 6 - ம் நூற்றாண்டின் இறுதியில் பாண்டியர்களின் ஆட்சியை மலரச் செய்தார்.இக்காலகட்டத்தையே (கி.பி. 550 - 950) முதலாம் பாண்டியப் பேரரசு காலம் என்பர்
இரண்டாம் பாண்டியப் பேரரசு
- கிபி 13 - ம் நூற்றாண்டில் பாண்டியர்கள் மெல்ல சோழரின் தலைமையிலிருந்து விடுபட்டு தங்களது தனி அரசை நிறுவினர்
முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் (கி.பி. 1216 - 1238)
- இவர் சோணாடு வழங்கியருளிய சுந்தரபாண்டியன் என்று புகழப்பட்டார்
முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் (கி.பி.1253 - 1268)
- இவர் எம்மண்டலமும் கொண்டருளிய சுந்தரபாண்டியன், மகாராஜாதிராஜா, ஸ்ரீ பரமேஸ்வரன், பொன் வேய்ந்த பெருமாள் என்றெல்லாம் சிறப்பிக்கப்பட்டார்
பாண்டியர்களின் நிர்வாகம்
- பாண்டிய நாடு முழுவதும் பாண்டிய மண்டலம் எனப்பட்டது
- மண்டலமானது பல வளநாடுகளாகவும்,வளநாடு பல ஊர்களாகவும் பிரிக்கப்பட்டது
தொழில்
- வேளாண்மை, வாணிபம் மக்களின் முக்கியத் தொழிலாக இருந்தது
- வேளாண்தொழில் செய்வோர் பூமி புத்திரர்கள் எனப்பட்டனர்
இலக்கியம்
- திருவாசகம் மாணிக்கவாசகரால் எழுதப்பட்டது
- ஆண்டாள் திருப்பாவையையும், நம்மாழ்வார் திருப்பல்லாண்டையும், வில்லிபுத்தூரார் மகாபாரதத்தையும், அதிவீரராம பாண்டியன் நைடதம் என்னும் நூலையும் எழுதினர்
- சேயூர் முருகன் உலா மற்றும் இரத்தினகிரி உலா ஆகிய நூல்களை ஸ்ரீகவிராயர் எழுதினார்
Comments
Post a Comment