Skip to main content

7 - ம் வகுப்பு சமூக அறிவியல் - தென்னிந்திய அரசுகள்



                தென்னிந்திய அரசுகள்

  • பண்டைய தமிழகம், சேர, சோழ, பாண்டிய நாடு என்ற முப்பெரும் அரசியல் பிரிவுகளைக் கொண்டதாக இருந்தது. அக்காலம் சங்க காலம் எனப்படும்

பல்லவப் பேரரசு
  • பல்லவ மரபை முற்காலப் பல்லவர்,பிற்காலப் பல்லவர் என பிரித்து வழங்குவர்
  • பல்லவர்களின் தலைநகரம் காஞ்சிபுரம் ஆகும்

பிற்காலப் பல்லவர்கள் (கி.பி. 570 - 903)

  • பிற்கால பல்லவ அரசர்களில் முதன்மையானவர் சிம்மவிஷ்ணு
  • இவர் களப்பிரர்களை வீழ்த்தி பல்லவர் ஆட்சியை தொண்டை மண்டலத்தில் தொடங்கி வைத்தார்
  • இவர் அவனிசிம்மன் அதாவது உலகின் சிங்கம் எனப் புகழப்பட்டார்

முதலாம் மகேந்திரவர்மன் (கி.பி. 600 - 630)

  • சிம்ம விஷ்ணுவின் மகன் முதலாம் மகேந்திரவர்மன் ஆவார்
  • மகேந்திரவர்மன் தமது ஆட்சியின் தொடக்கத்தில் சமண சமயத்தைப் பின்பற்றினார். பின்னர் சைவக்குரவர் அப்பர் என்பவரால் சைவ சமயத்திற்கு மாற்றப்பட்டார்

முதலாம் நரசிம்மவர்மன் (கி.பி.630 - 668)

  • முதலாம் மகேந்திரவர்மனின் மகன் முதலாம் நரசிம்மவர்மன் ஆவார்
  • இவர் மாமல்லன் என்று அழைக்கப்பட்டார். இதற்கு மற்போரில் சிறந்தவன் என்பது பொருளாகும்
  • சாளுக்கியர் தலைநகரான வாதாபிக்குப் படையெடுத்துச் சென்று வென்றதால் இவர் வாதாபி கொண்டான் எனவும் புகழப்பட்டார்
  • நரசிம்மவர்மன் ஆட்சியின் போதுதான் சீனப் பயணி யுவான் சுவாங் தலைநகர் காஞ்சிக்கு வருகை தந்தார்

இரண்டாம் நரசிம்மவர்மன் (இராஜசிம்மன்) (கி.பி. 691 - 728)

  • முதலாம் பரமேஸ்வரவர்மனின் மகன் இரண்டாம் நரசிம்மவர்மன் ஆவார்
  • இவரது ஆட்சிக் காலத்தில் பல்லவ நாடு அமைதியும், வளமும் கொண்டு விளங்கியது
  • காஞ்சிபுரத்தில் கைலாசநாதர் கோயில், மாமல்லபுரத்தில் கடற்கரைக் கோயில், பனைமலையில் தாளகிரீஸ்வரர் கோயில் போன்ற பல ஆலயங்களைக் கட்டியுள்ளார்

இரண்டாம் பரமேஸ்வரவர்மன் (கி.பி 728 - 731)

  • இரண்டாம் நரசிம்மவர்மனின் மகன் இரண்டாம் பரமேஸ்வரவர்மன் ஆவார்
  • கங்கர்களோடு நடைபெற்ற போரில் பரமேஸ்வரவர்மன் கொல்லப்பட்டார்
  • இவரது மரணத்துக்குப் பிறகு இவரின் மகன்கள் ஆட்சிக்கு வராத காரணத்தினால் சிம்மவிஷ்ணுவால் தொடங்கப்பட்ட பிற்கால பல்லவ மரபு முடிவடைந்தது

இரண்டாம் நந்திவர்மன் (கி.பி. 731 - 796)

  • இரண்டாம் பரமேஸ்வரனின் இறப்பிற்குப் பிறகு சிம்மவிஷ்ணுவின் தம்பியும், இரண்யவர்மனின் மகனுமான இரண்டாம் நந்திவர்மன் என்பவரை பல்லவ அமைச்சர்கள், கடிகைகளின் (கல்வி நிலையங்கள்) உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரால் பல்லவ அரசராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்
  • பல்லவ மன்னர்களில் குறிப்பிடத்தக்க மற்றொரு மன்னர் மூன்றாம் நந்திவர்மன் (கி.பி. 847 - 870)
  • இவர் தெள்ளாறு என்னுமிடத்தில் நடந்த போரில் பாண்டிய மன்னன் ஸ்ரீவல்லபனை வென்றதால் தெள்ளாறு எறிந்த நந்திவர்மன் என நந்திக்கலம்பகம் புகழ்கிறது

பல்லவப் பேரரசின் வீழ்ச்சி

  • கடைசி பல்லவ அரசன் அபராஜிதனை (கி.பி. 885 - 903) சோழ மன்னர் ஆதித்தன் தோற்கடித்தார்
  • அபராஜித்தனுக்குப் பிறகு தொண்டை மண்டலத்தில் பல்லவர்கள் ஆட்சி முடிவுற்றது

பல்லவர்களின் நிர்வாகம்

  • பல்லவ நாடு ராஷ்டிரம் எனப்படும் பல மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டது
  • மண்டலங்கள் பல விஷயங்களாகவும் (கோட்டங்களாகவும்), விஷயங்கள் பல நாடுகளாகவும், நாடுகள் பல ஊர்களாகவும் பிரிக்கப்பட்டன
  • நிர்வாகத்தின் அடிப்படை அலகு கிராமமாகும்
  • கிராமத்தை நிர்வகிக்க ஊர் அவை இருந்தது

இலக்கியம்

  • முதலாம் மகேந்திரவர்மன் மத்தவிலாச பிரகாசனம், பகவத்வியூகம் ஆகிய நூல்களை எழுதினார்
  • பாரவி கீதார்ஜுனியம் என்ற நூலை எழுதினார்
  • தண்டி என்பவர் அவந்தி சுந்தரி கதாசாரம் என்னும் நூலையும், பெருந்தேவனார் பாரத வெண்பாவையும் எழுதினார்
பல்லவர் கால கலைகள்
  • முதலாம் மகேந்திரவர்மன் இசையில் வல்லவராய் திகழ்ந்ததால் சங்கீரணஜாதி என்றும், அவரது ஓவிய ஆற்றலால் சித்திரக்காரப்புலி என்றும் புகழப்பட்டார்
  • பல்லவர் காலத்து அழகிய ஓவியங்கள் காஞ்சி கைலாசநாதர் கோயிலில் காணப்படுகின்றன
சோழப் பேரரசு

  • சங்க காலத்தில் சோழர்கள் திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர் ஆகிய பகுதிகளை ஆட்சி செய்துள்ளனர். அவர்களது தலைநகர் உறையூர்
  • முற்காலச் சோழர்களில் கரிகால சோழன் புகழ் பெற்றவர் 
  • இவர் நிலங்களை அளந்து விதித்ததோடு சுங்க வரியை நீக்கி வணிகத்தை எளிமை படுத்தியதால் சுங்கம் தவிர்த்த சோழன் என போற்றப்பட்டார்
  • இவர் காவிரி ஆற்றின் குறுக்கே கல்லணையை கட்டினார்
பிற்காலச் சோழர்கள்

  • விஜயாலயச் சோழன் (கி.பி. 850 - 871) முத்தரையர்களிடமிருந்து தஞ்சாவூரைக் கைப்பற்றினார். இதுவே பிற்கால சோழர்கள் ஆட்சி அமைக்க அடித்தளமாக அமைந்தது
  • தஞ்சாவூர் இவர்களின் தலைநகரமானது
  • ஆதித்திய சோழனின் மகன் முதலாம் பராந்தகன் (கி.பி. 907 - 955) பாண்டிய நாட்டின் மீது படையெடுத்து, அதன் தலைநகரான மதுரையை வென்றதால் மதுரை கொண்டான் என புகழப்பட்டார்
  • முதலாம் பராந்தகனுக்குப் பிறகு ஆட்சி செய்தவர்கள்
1. கண்டராதித்தன் (கி.பி. 949 - 957)
2. அரிஞ்சயன் (கி.பி. 956 - 957)
3. இரண்டாம் பராந்தகன் (கி.பி. 956 - 973)
4. ஆதித்தன் (கி.பி. 956 - 966)
5. உத்தமச்சோழன் (கி.பி. 965 - 985)
முதலாம் இராஜராஜசோழன் (கி.பி. 985 - 1014)

  • சோழ மரபில் ஆட்சி செய்த மன்னர்களில் மிகச் சிறந்த ஆட்சியாளர் முதலாம் இராஜராஜ சோழன் ஆவார்

முதலாம் இராஜேந்திரன் (கி.பி. 1012 - 1044)

  • வங்காளத்தின் மீது படையெடுத்த இராஜேந்திரன் அந்நாட்டு மன்னர் மகிபாலனை வென்றார்.இவ்வெற்றியின் நினைவாக கங்கை கொண்ட சோழபுரம் என்னும் நகரை நிறுவினார்

முதலாம் குலோத்துங்க சோழன் (கி.பி. 1071 - 1122)

  • முதலாம் இராஜேந்திர சோழனின் மகளான அம்மங்காதேவி என்பவரின் மகனே முதலாம் குலோத்துங்க சோழன் ஆவார்
  • இவர் நிலங்களை அளந்து வரி விதித்ததோடு, சுங்க வரியை நீக்கி வணிகத்தை எளிமைபடுத்தியதால் சுங்கம் தவிர்த்த சோழன் எனப் போற்றப்பட்டார்

சோழர்களின் ஆட்சி முறை

  • சோழ நாட்டின் நிர்வாக அடிப்படை அலகு ஊர் என்பதாகும்
  • பல ஊர்கள் சேர்ந்தவை வளநாடு என்றும், பல வளநாடுகள் சேர்ந்தது மண்டலம் என்றும், மண்டலங்கள் அனைத்தும் ஒருங்கே சேர்ந்ததாக சோழநாடு விளங்கியது
  • கிராம சபை உறுப்பினர்கள் குடவோலை முறையின் படி தேர்ந்தெடுக்கப்பட்டனர்

வரி பொத்தகம்

  • வரி விதிப்பு நடைமுறைகளை சோழர் காலத்தில் ஓலைச்சுவடிகளில் எழுதித் தொகுத்தனர். இது வரி பொத்தகம் (புத்தகம்) எனப்பட்டது
  • இராஜராஜன் காலத்தில் (கி.பி. 1001) வரி விதிப்புக்கான கணக்கெடுப்புப் பணி சேனாதிபதி குரவன் என்பவரால் மேற்கொள்ளப்பட்டது

இலக்கியம்

  • சேக்கிழாரால் பெரிய புராணமும் (திருத்தொண்டர் புராணம்), திருத்தக்கதேவரால் சீவக சிந்தாமணியும் எழுதப்பட்டன
  • கம்பராமாயணத்தை கம்பரும், கலிங்கத்துப்பரணியை ஜெயங்கொண்டாரும் எழுதினர்
  • சைவ நூலான பன்னிரு திருமுறைகளை நம்பியாண்டார் நம்பியும், வைணவ நூலான நாலாயிர திவ்யபிரபந்தத்தை நாதமுனியும் தொகுத்தனர்
  • மூவருலா, குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ், தக்கயாகபரணி ஆகியவற்றை ஒட்டக்கூத்தர் எழுதினார்

பாண்டியப் பேரரசு

  • பாண்டிய பேரரசு, இன்றைய மதுரை, திருநெல்வேலி மாவட்டங்களும், திருச்சிராப்பள்ளியின் ஒரு பகுதி மற்றும் திருவாங்கூரின் சில பகுதிகளை உள்ளடக்கியதாக இருந்தது

முதலாம் பாண்டியப் பேரரசு

  • பாண்டிய அரசர் கடுங்கோன், களப்பிரர்களை வென்று கி.பி. 6 - ம் நூற்றாண்டின் இறுதியில் பாண்டியர்களின் ஆட்சியை மலரச் செய்தார்.இக்காலகட்டத்தையே (கி.பி. 550 - 950) முதலாம் பாண்டியப் பேரரசு காலம் என்பர்

இரண்டாம் பாண்டியப் பேரரசு

  • கிபி 13 - ம் நூற்றாண்டில் பாண்டியர்கள் மெல்ல சோழரின் தலைமையிலிருந்து விடுபட்டு தங்களது தனி அரசை நிறுவினர்

முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் (கி.பி. 1216 - 1238)

  • இவர் சோணாடு வழங்கியருளிய சுந்தரபாண்டியன் என்று புகழப்பட்டார்

முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் (கி.பி.1253 - 1268)

  • இவர் எம்மண்டலமும் கொண்டருளிய சுந்தரபாண்டியன், மகாராஜாதிராஜா, ஸ்ரீ பரமேஸ்வரன், பொன் வேய்ந்த பெருமாள் என்றெல்லாம் சிறப்பிக்கப்பட்டார்

பாண்டியர்களின் நிர்வாகம்

  • பாண்டிய நாடு முழுவதும் பாண்டிய மண்டலம் எனப்பட்டது
  • மண்டலமானது பல வளநாடுகளாகவும்,வளநாடு பல ஊர்களாகவும் பிரிக்கப்பட்டது

தொழில்

  • வேளாண்மை, வாணிபம் மக்களின் முக்கியத் தொழிலாக இருந்தது
  • வேளாண்தொழில் செய்வோர் பூமி புத்திரர்கள் எனப்பட்டனர்

இலக்கியம்

  • திருவாசகம் மாணிக்கவாசகரால் எழுதப்பட்டது
  • ஆண்டாள் திருப்பாவையையும், நம்மாழ்வார் திருப்பல்லாண்டையும், வில்லிபுத்தூரார் மகாபாரதத்தையும், அதிவீரராம பாண்டியன் நைடதம் என்னும் நூலையும் எழுதினர்
  • சேயூர் முருகன் உலா மற்றும் இரத்தினகிரி உலா ஆகிய நூல்களை ஸ்ரீகவிராயர் எழுதினார்










Comments

Popular posts from this blog

6 - ம் வகுப்பு கணிதம் - விகிதம் மற்றும் விகித சமம்

6 - ம் வகுப்பு கணிதம் - விகிதம் மற்றும் விகித சமம் ஓர் அளவினை மற்றோர் அளவின் மடங்காக வெளிப்படுத்தி ஒப்பிடுவது விகிதம் எனப்படும் விகிதத்தைப் பின்னமாகவும் எழுதலாம். விகிதத்தைப் பெரும்பாலும் எளிய வடிவத்தில் எழுத வேண்டும் விகிதங்களின் பண்புகள் விகிதங்களுக்கு அலகு இல்லை. இது ஓர் எண் மதிப்பு. எடுத்துக்காட்டு: 8 கிலோமீட்டர்க்கும் 4 கிலோ மீட்டருக்கும் உள்ள விகிதம் 2 : 1 ஆகும் மற்றும் 2 கி. மீ : 1 கி.மீ அல்ல விகிதங்களின் இரு அளவுகளும் ஒரே அலகுடையதாக இருக்க வேண்டும்.எடுத்துக்காட்டு 4 கிலோ மீட்டர் மற்றும் 400 மீட்டர் ஆகியவற்றிற்கான விகிதம் காணும் போது அவற்றை (4×1000):400 = 4000:400=10:1 எனக் குறிப்பிடலாம் விகிதத்தில் ஒவ்வோர் எண்ணும் உறுப்பு என அழைக்கப்படும் விகிதத்தின் உறுப்புகளின் வரிசையை மாற்றி எழுத முடியாது 20:5 என்ற விகிதத்தை எளிய வடிவில் காண்க 20/5 = 4/1 =4:1 500கி மற்றும் 250 கி க்கும் உள்ள விகிதத்தை எளிய வடிவில் காண்க 500/250 = 2/1 =1 மாதவியும், அன்புவும் இரண்டு மேசைகளை முறையே ரூ.750 மற்றும் ரூ.900 க்கு வாங்குகின்றனர். அன்புவும், மாத...

6 - ம் வகுப்பு தமிழ் - பாடறிந்து ஒழுகுதல்

6 - ம் வகுப்பு தமிழ் - பாடறிந்து ஒழுகுதல் ஆசாரக்கோவை ஆசாரக்கோவை நூலை எழுதியவர் - பெருவாயின் முள்ளியார் இவர் பிறந்த ஊர் கயத்தூர். ஆசாரக்கோவை என்பதற்கு நல்ல ஒழுக்கங்களின் தொகுப்பு என்பது பொருள். இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. இந்நூல் நூறு வெண்பாக்களைக் கொண்டது தமிழர் பெருவிழா பொங்கல் விழா தமிழர் திருநாள் என்றும் போற்றப்படுகிறது கதிரவனுக்கு நன்றி கூறிச் சிறப்பு செய்யும் விழா பொங்கல் விழா. உழவர்கள் ஆடித்திங்களில் விதைப்பர். தைத்திங்களில் அறுவடை செய்து பயன் அடைவர். தைத் திங்களின் முதல் நாளில் பொங்கலிட்டு வழிபடுவர். எனவே இத்திருவிழாவை அறுவடைத் திருவிழா என்றும் அழைப்பர். உழவர்கள் இயற்கைக்கும் தம்முடன் உழைத்த கால்நடைகளுக்கும் இந்நாளில் நன்றி தெரிவித்து மகிழ்கின்றனர். எனவே இவ்விழாவை உழவர் திருநாள் என்றும் கூறுவர். போகித் திருநாள் பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பது ஆன்றோர் மொழி. வீட்டில் உள்ள பயனற்ற பொருள்களை நீக்கி வீட்டைத் தூய்மை செய்யும் நாள் போகித் திருநாள். இது மார்கழி மாதத்தின் இறுதி நாள் ஆகும் வாழ்க்கைக்கு வளம் தரும் மழைக் கடவுளை வழிப...

6 - ம் வகுப்பு கணிதம் - இயல் எண்கள், முழு எண்கள்

        Natural and Whole numbers         இயல் எண்கள், முழு எண்கள் இயல் எண்கள் அல்லது எண்ணும் எண்கள் அல்லது மிகை முழு எண்கள் N = {1,2,3,4,......} முழு எண்கள் அல்லது நிறைவெண்கள் W = {0,1,2,3,4......} எல்லா முழு எண்களுக்கும் தொடரி உண்டு பூஜ்ஜியத்தைத் தவிர எல்லா முழு எண்களுக்கும் முன்னி உண்டு எல்லா முழு எண்களையும் கூட்டவும், பெருக்கவும் முடியும் இயல் எண்ணினை அதைவிட சிறிய இயல் எண் அல்லது அதே எண்ணைக் கொண்டு கழிக்க முடியும் ஒரு பெரிய எண்ணை சிறிய எண்ணால் வகுக்க முடியும் அதிக இலக்கங்கள் உடைய எண்கள் நம் நாட்டில் 10,000            = பத்தாயிரம் 1,00,000         = ஒரு லட்சம் 10,00,000        = பத்து லட்சம் 1,00,00,000     =ஒரு கோடி 1,00,00,00,000 = நூறு கோடி உலகளவில் 10,000             = பத்தாயிரம் 100,000           = நூறாயிரம் 1,000,000        = ஒ...